Friday, April 10, 2020

எப்படி பொழுதை போக்குவது ? இந்த நாட்களில்

 இந்த கொரோனா  காலங்களில் .
எப்படி பொழுதை கழிப்பது என்பது   ஆண்களாகிய எங்களுக்கு  கஸ்டம் தான்.

குதிரை மாதிரி இரண்டு பக்கமும் பார்வையை திருப்பாது ஒரே நேர்கோட்டில்  பார்வையை ஒட்டி ,வாழ்க்கைதேரை நகர்த்திக் கொண்டிருந்த எங்களுக்கு  இந்த "ஸ்தம்பிதம்" ஒரு    பெரும் வலிதான்.

இருந்தும் இந்த வலியும் கடந்து போகும்.போகவேண்டும்.  அதுதான் வாழ்க்கை. அதற்கு மத்தியில்  இந்த பொழுதுகளை எப்படி நகர்த்தலாம் என்பதுக்கு சில ஆலோசனைகள்.

வீட்டில் இருக்கும் பொழுதுகளில் தேவை இல்லாமல்  வாயை திறக்காதீர்கள்,சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறவுங்கள்,
மனைவி   கோபத்தில்  கத்துகிறாரா? 

 கண்டு கொள்ளளாதீர்கள். இன்றைய நாட்களில் மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.
ஒரு கை தட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.  எனவே நாவடக்கம் முக்கியம் இன் நாட்களில்.

பிடித்த புத்தகங்களை படிக்கலாம்,நிறைய புத்தகங்கள்  இணையத்தில் கிடைக்கின்றன . இல்லை சினிமா பார்க்கலாம். அல்லது நல்ல இசையை ரசித்து கேளுங்கள்  மனம் அமைதி அடையும்.

வீட்டு தோட்டத்தில் நேரம் செலவிடலாம். செடி,கொடி, வைத்து நீரூற்றுங்கள். மனம் அமைதி அடையும்.

உங்கள் வேலைக்கு தேவையான சில படிப்புகளை ஒன்லைன் மூலம் படிக்கலாம். இந்த இடைவெளியை பயன்படுத்தி வேலையில் ஒரு முன்னேற்றம்    ஏற்படுத்தலாம்.

 இன்னுமொரு நேரம் போவதும், மன அமைதியையும் கொண்டுவருவதுமான ஒரு விடையம்

 சமைப்பது  ,ஒரு ரெசிபியை   யூடியிப்பில் பாருங்கள் , பொருட்களை தயார் படுத்துங்கள் ,   பிள்ளைகளையும் துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்,
சமைத்து அசத்துங்கள். உங்கள்  மனைவியின் அன்பு உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.😁

வீட்டில் நிறைய கடிதங்கள் வந்து இருக்கும்.அவற்றை எடுத்து  தேவையானவற்றை வைத்து க் கொண்டு ,தேவை இல்லாதவைகளை  கிழித்து  ஏறியலாம்.
நேரமும் போகும் வீடும் சுத்தமாகும்.

உங்கள் போனில்  அல்லது மனைவியின் போனில் எடுத்த படங்கள் பல்லாயிர கணக்கில் இருக்கும். தேவையானவற்றை வைத்து கொண்டு
 தேவை இல்லாதவைகளை அழித்து விடுங்கள் .போனும் சுத்தமாகும் நேரமும் போகும்.

இவற்றை முயற்சி செய்து பாருங்கள் .பொழுது போகும்

தொடருவேன் 

Sunday, April 05, 2020

மீண்டும் கரிகாலன்!,எழுத வருகிறேன் !

நீண்ட நாட்களின் பின்னர் இன்று  எனது வலைபதிவில் எழுதுகிறேன் ,இனி தொடர்ந்து எழுதலாம் என நினைத்துக்கொண்டு இருக்கிறேன் . இடைபட்ட காலத்தில் உலகில் என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது  உங்களுக்கு தெரியும் .வாழ்க்கை மிகவும் அழகானது ,எங்கள் வாழ்கையை தீர்மானிப்பது நாங்கள் தான் .மற்றவர்களின் பங்கும் இதில் உள்ளது என்றாலும் பெரும்பகுதி எமது பங்குதான்

இன்றைய இந்த ஆபத்தான நேரத்தில் சரியான திட்டமிடல் மிகவும் அவசியும் ,பலருக்கு பொருள்  இழப்பு .,பணஇழப்பு  இருந்தாலும்  மிகவும் பெறுமதியானது உயிர் ,அது இருந்தால் எதனையும் சம்பாதித்து கொள்ளலாம் .
எனவே எமது உயிர் முக்கியம் அத்துடன் எமது குடும்பத்தினரின் உயிரும் முக்கியம் ,சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .எங்களை, ,குடும்பத் தினரை பாதுகாப்போம் ,இதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாப்போம் ,

இதுதான் இன்று உலகெங்கும் நிலை ,நான் வாழும் கனடாவிலும் இதுதான் நிலை .இங்கும் வீதிகள் வெறிச்சோடி இருக்கின்றன ,மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு ,கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும்  விரைவாக காலி ஆகின்றமை
பல் இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பு இப்படி பல,

வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத எண்ணி இருக்கிறேன் .
துவண்டது தமிழ்மணம் மட்டும் அல்ல நானும் தான்  இப்போது தமிழ்சரத்தின்வருகையோடு ,அதன் துணை கொண்டு பயணிக்க எண்ணி இருக்கிறேன். சிக்கல் இல்லாமல் தமிழ் சரத்தில்  இந்த பதிவு  வருகிறதா 
  என்னவோ தெரியவில்லை ......பார்ப்போம், 
.

அடுத்து நான் பல வருடங்களாக  கூகிள் தமிழ் எழுதிதான் பயன்படுத்தி வருகிறேன்   ,இருந்தும் அதில் ஒரு சிக்கல் ,சொற்களை அடித்து விட்டு என்டர் தட்டும்  போது சில வேளைகளில் வேறு சொல்லாக மாறிவிடுகிறது என்பதுடன்  அர்த்தமும்  மாறிவிடுகிறது ,கவனிக்காமல் அப்படியே விட்டால் சிக்கல் ஆகிவிடுகிறது .

எது பயன்படுத்துவதற்கு  மிகவும் எளிமையான ,வசதியான தமிழ் எழுதி என்பதை தெரியப்படுத்தினால்  நன்றி உடையவனாக இருப்பேன் ,


மீண்டும் சந்திப்போம்…..
கரிகாலன்