அண்மையில் ஆப்கானிஸ்தானை பற்றிய ஒரு விவரண சித்திரம் ஒன்றினை பார்த்துக்கொண்டிருந்தேன் அங்கு முன்னர் தொண்டாற்றிய ஒரு பெண்மணி சொன்ன ஒரு விடையத்தினை பார்த்ததும் நான்
அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் ,அவர் சொன்னது பொதுவாகவே ஆப்கான் கிராமங்களில் கணவனும் மனைவியும் சரிசமமாக நடந்து வரமாட்டார்களாம் ,பொதுவாகவே ஆண்கள் முன்னால் நடந்து வர
பெண்கள் பின்னால் நடந்துவருவார்களாம் ,என்ன சுமை என்றாலும் பெண்கள் தான் தூக்கி வருவார்கள் ,தூக்கவேண்டும் .பிள்ளைகளையும் தூக்கிகொண்டு சுமைகளையும் தூக்கிக்கொண்டு பெண்கள் நடந்து வர ஆண்கள் இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடந்து வருவதையுமே கண்டிருந்த தனக்கு ஒரு நாள் ஒரு கிராமத்துக்கு போய்க்கொண்டிருந்த போது ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக ஒரு பெண் சுமைகளை
தூக்கிக்கொண்டு முன்னேவர அவளின் கணவன் சிறிது இடைவெளிவிட்டு பின்னே வந்து கொண்டிருப்பதை கண்டவுடன் ஆச்சரியம் தாளாமல் வாகனத்தினை நிறுத்திவிட்டு இறங்கி அந்த மனிதனிடம்
சொன்னாராம் நீதான் உணமையான ஆண் மகன் உனது மனைவிக்கு இப்படி ஒரு சரிசமமான அந்தஸ்தினை கொடுத்திருக்கிறாயே என்று .
அதற்கு அந்த மனிதன் சொன்னானான் .அந்தஸ்தாவது புடலங்காயாவது இந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகம் அதனால் தான் எனது பாதுகாப்புக்காக எனது மனைவியை முன்னால் நடக்க சொல்லிவிட்டு நான் பின்னால் நடந்து வருகிறேன் என்றானாம் .இதை கேட்ட அந்த பெண்மணி மட்டுமல்ல நானும் கூட அதிர்ந்து தான் போனேன்
மேலும் அந்த விவரணத்தில் பல விடையங்களை சொன்னார்.ஒரு முறை அப்போதைய அப்கான் அதிபரைசந்தித்தபோது இப்பெண்மணி பெண்களின் கல்வி ,சுகாதாரம் என்று கதைத்தபோது அதிபர் சலிப்புடன் சொன்னாராம் நாங்கள் இங்கு பெண்களை உயிருடன் வாழவைக்கவே பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றாராம் .ஆப்கன் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் நிலை என்பது மிகவும் பரிதாபம் தான் .சமைக்கவும் பிள்ளை பெறவும் ,உடல் தேவைக்கு மட்டும் தான் பெண்கள் தேவை என்பது அங்குள்ள ஆண்களின் கொள்கை பெண்கள் கல்வி என்பது அவர்களால் அனுமதிக்க முடியாத ஒன்று .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இங்கே கனடாவில் கடைகளில் விற்கப்படும் பழங்கள் மரக்கறிகளின் மீது விதவிதமான ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன் ,
.நான் இவைகள் பிஎல்யு கோட் என்றே இதுவரையில் எண்ணி இருந்தேன் .சில் நாட்களுக்கு முன்னாள் ஒரு இணைய தளத்தினை பார்த்தபோது அதில் ஸ்ரிக்கர்களை வைத்து அந்த பழங்கள் எந்த முறையில்விளைவித்துள்ளனர் என்று காணமுடியும் என கூறப்பட்டிருந்து .அதாவது இயற்கையாக உரங்கள் பாவிக்காது விளைந்ததா அல்லது மரபணு மாற்றபட்ட
பழங்களா? அல்லது முற்றுமுழுதாக இரசாயன உரங்களை கொண்டு விளைவித்ததா என்பதை அறியமுடியுமாம்
01) பிஎல்யு கோட்டில் நாலு இலக்கம் இருந்தால் அது பாரம்பரியமுறையில் ஆனால் முற்று முழுதாக இரசாயன உரங்கள் இட்டு விளைவிக்கப்பட்டது
02) பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது எட்டு என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது
03) பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது ஒன்பது என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது முற்றும் முழதாக இயற்கை முறையி விளைவிக்கப்பட்டது
இப்போது உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் .இனி நீங்கள் வாங்கும் போது என்ன பழங்கள் வாங்கும் போது எப்படி விளைவிக்கப்பட்டது என் பார்த்து வாங்குவதுடன் உங்கள் உடல் நலத்தினையும்
பாதுகாத்து கொள்ளுங்கள் .சரி நீங்கள் பழங்களை சாப்பிடும் போது பொதுவாக அந்த ஸ்ரிக்கர்களை உரித்து எறிந்துவிட்டுதானே சாப்பிடுவீர்கள் .சில வேளைகளில் அந்த ஸ்ரிக்கர்களை அகற்ற முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் ? ஒரு செலோ டேப் துண்டினை அந்த ஸ்ரிக்க்ரின் மீது ஒட்டி விட்டு பின்னர் செலோடேப்பினை அகற்ற ஸ்ரிக்கரும் சேர்த்து வரும் .பின்பு நன்றாக் கழுவிவிட்டு சாப்பிடலாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பொதுவாக இங்கு கனடாவில் லிப்ட் கேட்பது என்பது மிக மிக குறைவு ,சில வேளைகளில் பெருந்தெருக்களில் (High way,Free way) நுழையும் போது சிலர் கட்டை விரலை உயர்த்திப்பிடித்தபடி நிற்பதை கண்டிருக்கிறேன் .
ஆண்கள் பெண்கள் பொதுவாக இளம் வயதினர் அப்படி கேட்பதை கண்டிருக்கின்றேன்,பொதுவாக நான் இப்படி லிப்ட் கொடுப்பதை விரும்புவதும் இல்லை .சில தினங்களுக்கு முன்னர் இப்படி தான் பெரும்
தெருவில் உள் நுழைய எனது ஜீப்பினை திருப்புகிறேன் .ஒரு வெள்ளை இனத்தவர் மாணவனை மாதிரி தோற்றம் கொண்டவர் கட்டைவிரலை உயர்த்தியபடி, சரி மாணவன் தானே என எண்ணியபடி அவசரகால
விளக்குகளை எரிய விட்டபடி அவரருகில் நிறுத்துகிறேன் .தான் செல்லவேண்டிய இடத்தினை சொல்லி அங்கு தன்னை இறக்கிவிடுவாயா எனக் கேட்டார் .அவர் கேட்ட இடத்தினை தாண்டி தான் நான்
போகவேண்டும் அதனால் அவருக்கு நான் சொன்னேன் .சரி நான் உன்னை நீபோக வேண்டிய இடத்துக்கு அண்மையில் பெருந்தெருவில் இருந்து வெளிய வந்து இறக்கி விட்டுவிட்டு மிண்டும் பெருந்தெருவுக்குள்
போய்விடுவேன் சம்மதமா என்றேன் .அவரும் சம்மதித்து ஏறினார் .
எனது பக்கத்துக்கு இருக்கையில் இருந்து கதைத்துக்கொண்டு வந்தார் இங்கு ரொறொன்ரோவுக்கு அலுவலாக வந்ததாகவும் காசை மிச்சம் பிடிப்பதற்காக லிப்ட் கேட்டதாகவும் சொன்னதுடன் தான் தனது ஊரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார் .இறங்க வேண்டிய இடம் வந்தது வாகனத்தினை அவசரகால விளக்குகளை
போட்டுவிட்டு ஓரமாக நிறுத்துகிறேன்.
உங்கள் உதவிக்கு நன்றி என சொன்னவர் ஒரு துண்டு காகிதத்தினை எடுத்து தனது செல்பேசி இலக்கத்தினை எழுதி என்னிடம் நீட்டிக்கொண்டே எனது தொடையில் மெதுவாக தடவிகொண்டே சொன்னார் உங்கள் உதவிக்கு நன்றி, என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் உங்களுக்காக செய்வேன் என்றார் .நான் சிரித்துவிட்டு பாய் சொன்னேன் இறங்கிவிட்டார் .
எனது வாகனம் நகர பின் கண்ணாடியில் பார்த்தேன் ,எந்தவித சலனமும் இல்லாமல் அவர் தனது பையை எடுத்துக்கொண்டு போய்கொண்டிருந்தார் .ஓ அவனா நீ ????
வாகனம் ஓடிகொண்டிருக்க எனது மனதிலும், ஒரு சந்தேகம் எதை பிடிப்பதற்காக வாகனத்தில் ஏறினார் காசையா? ஆளையா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சரி சரி ஒரு நகைச்சுவை மனதினை லேசாக வைத்திருப்பதற்காக் மனைவிமார் மன்னிக்கவும்
*அண்ணே நீங்க எந்த கடவுளை கும்புடுவீங்க
*கல்யாணத்துக்கு முன்னாடியா? பின்னாடியா?
*சரி கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்
*கல்யாணதுக்கு முன்னாடி முருகனைதன் பிடிக்கும்
*அப்போ கல்யாணத்துக்கு பின்னாடி?
*அதை என் கேக்கிறிங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத
தெய்வங்களே இல்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் சந்திக்கிறேன் .அதுவரையில் அன்புடன் கரிகாலன்.