Sunday, July 24, 2005

சில நேரங்களில் சில நினைவுகள்.





1983 ஜூலையில் இலங்கை எங்கினும் நடைபெற்ற தமிழர்கள் மீதான வன்முறைகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை.இப்போது இருக்கும் வசதிகள்அன்றைய நாட்களில் இருந்திருக்குமானால்இன்னும் நிறைய படங்கள்,விபரங்கள் எமது வருங்கால சந்ததிக்கு கிடைத்திருக்கும்.ஆனால் தூரதிர்ஸ்டமாக 83 இன வன்முறை தொடர்பான புகைப்படங்கள் அரிதாகவே இருக்கின்றன.செய்திகள் வந்த அளவு புகைப்படங்கள் பெரிதாக இல்லை.கொலைவெறிதாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எந்த தமிழனாவது கமராவைத் தூக்கிக்கொண்டுபோய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கமுடியாதல்லவா?அதுதான் 83 ம் ஆண்டு நடந்தது.

வெளிவந்த படங்கள்கூட பல பிறநாட்டு பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்டது என்பது அறிந்ததே.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையினர் நிறைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல புகைப்படங்களை சேர்த்துவைத்திருந்ததாகவும் ஆனால் பின்னாளில் இலங்கை,இந்தியப் படையினரினரால் ஈழநாடு பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டபோது நிறைய படங்கள் அழிந்து போனதாகவும் நான் கேள்விப்பட்டதகவல்கள் சொல்கின்றன.

நான் கூட நிறைய புகைப்படங்கள்இப்படியான சம்பவங்கள் தொடர்பாக சேர்த்துவைத்திருந்தேன்,ஆனால் ஊரைவிட்டோடி அகதியாகி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அந்த ஊரையும் விட்டோடி வேறு ஊரில் வாழ்ந்துபின்பு அங்கிருந்தும் இடம்பெயர்ந்து இப்படி நாடுகள் நகரங்கள் தாண்டி இப்போது இந்த தேசத்தில் என்னிருப்பு.இப்படி ஓடி,ஓடி வந்ததில் நான் சேகரித்த புகைப்படங்கள் யாவும் என்கை விட்டு போய்விட்டன.சிலவற்றினருமைஅவை எம்மிடம் இருக்கும் போது தெரிந்தாலும்நாம் அவற்றை சரியாக உணருவதில்லை.ஆனால் அவை எமை விட்டு அகன்றபின்னர் தான் அவற்றின் அருமை எம் மீது இருள் மாதிரி கவிகின்றது.இப்போது எனக்கு ஒரு பாடல் வரி ஞாபகத்தில் வருகிறது.
இது கூட.....................

"அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்"

No comments: