Saturday, April 20, 2013

நீரிழிவு பற்றிய சில தவறான புரிதல்கள் !

 

லகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்து இருக்கிறேன் . சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!

உண்மை -1

"சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2

"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3

"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை - 4

"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உண்மை - 5

"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,

உண்மை - 6

"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை - 7

"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை - 8

"குழந்தைகளுக்கு டைப்-2  நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை - 9

"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்.

உண்மை - 10

"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நன்றி -இணையம்

Thursday, April 18, 2013

அழகாய் இருக்கிறீர்கள் !! பயமாய் இருக்கிறது!!!!!!!!திருவிழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்கள்

 

அழகாக இருந்ததால் திருவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமீரக ஆண்கள்

வுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.

ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டதுடன் பல்வேறு பிரதிநிதிகளும் நிறுத்தப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் செய்திகள் அறிய முடிகிறது.பேசாமல் கண்களையும் மறைத்து விடலாமே .

Sunday, April 14, 2013

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே ! ,கனேடியர்கள் வெளியே இந்தியர்கள் உள்ளே !!

 

ன்ன இது தலையங்கம் என் எண்ணுகிறீர்களா ?அண்மையில் உலகில் நடைபெற்ற இரு சம்பவங்களின்,,நிகழ்வுகளின் தலைப்பு தான் இது .இனி விடையத்துக்கு வருகிறேன்.

 

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே!

இது நடைபெற்றது இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் டோக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன .டோக்யார்ட்டில் கப்பல்கள் புதிதாக் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு அந்த இடங்களிற்கு இலங்கை பணியாளர்களை நியமிக்கப் போவதா இலங்கை சொன்னாலும் அந்த இடங்களில் சீனர்கள் வந்து அமர்வார்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகள் .அத்துடன் கொழும்பு துறைமுக விரிவாக்கப் பணிகளில் சீனர்களே ஈடுபடப்போகிறார்கள்.எனவே ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே .

 

கனேடியர்கள் வெளியே ! இந்தியர்கள் உள்ளே!

இது நடைபெறுவது கனடாவில் .இங்கு கனடாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று ரோயல் வங்கி .இங்கு பணியில் இருந்த பல கனேடியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களின் இடத்துக்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களைக் கொண்டு வந்து இருக்கிறது இந்த வங்கி  இந்த விடையமே கடந்த வாரங்களின் சூடான விவாத பொருளாய் இருக்கிறது கனேடிய  ஊடகங்களில் .அதுவும் இவர்களுகான பயிற்சியினை முன்னாள்  ஊழியர்களை கொண்டு செய்ய சொன்னது வேறு பெரும் பிரச்சனையை கிளப்பியது .கனேடிய மக்களின் பணத்தில் இலாபம் கொழிக்கும் இந்த கனேடிய வங்கிக்கு கனேடிய ஊழியர்கள் வேண்டாமா என்ற வகையில் விவாத சென்றது .

பின்பு ரோயல் வங்கி பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து ஒரு அறிக்கை மூலம் விளக்கம் தந்தது இப்படி

45  கனேடிய ஊழியர்களின்  பணியிடங்களை IGATE என்ற இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருப்பதை உறுதி செய்ததுடன்  வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 கனடிய மக்களின் தகவல் தொழில்நுட்பப் பணிகளை இனி குறைந்த அளவிலான தற்காலிக இந்திய பணியாளர்களை கொண்டே செய்து முடித்து விட முடியும் என வங்கி கூறி உள்ளதுடன் .

இந்த நடவடிக்கையினை கனடியர்களின் பணிகளை பிற நாட்டினருக்கு கொடுப்பதாக விமர்சிப்பது பெருந்தவறு எனக் கூறியுள்ள றோயல் வங்கி , ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு மக்களை றோயல் வங்கியின் பணியாளர்களாக மாற்றவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

மேலும் தற்போது வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 பேருமே ஓய்வு பெறும் வயதினர் என்பதையும் , இவர்களில் சிலர் விருப்ப  ஓய்வு பெற சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதையும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் அரசு விதிமுறைப்படியே நடைபெறுவதை உறுதி செய்த பின்னரே மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது அந்த வங்கி. அதாவது பந்தினை தூக்கிப கனேடிய குடிவரவு துறையின் மீதே போட்டுள்ளது வங்கி .இதனால் கனேடிய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது கனேடிய குடிவரவு துறை .

இதற்கு இடையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு மகாநாட்டில் உரையாற்றிய iGATE  ன் தலைவர் ப .முர்த்தி என்பவர் தாங்கள் பல் நாடுகளில் பல சவால்களை சந்தித்தாலும் தாங்கள் தங்கள் தொழிலில் முன்னேறி வருவதாகவும் கனடாவில் 500 வேலை வாய்ப்புக்களை உருவாக்க்ப்போவதாகவும் சொல்லி இருக்கிறார் .

சரி அந்த 500 வேலைகளுக்கும் பணிக்கு அமர்த்த போவது வெளிநாட்டவரையா ?அல்லது கனேடியர்களையா?

அது சரி ஏன் வங்கி இப்படி  செய்யவேண்டும் என்கிறிர்களா?

கனேடியர்களுக்கு கொடுப்பதை விட குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் .தமது கொமிசன் போக மிகுதியைதான் IGATE பணியாளர்களுக்கு கொடுக்கும் அத்துடன் எந்த நேரமும் வேலை இல்லை என்று வீட்டிற்கு அனுப்பலாம் .அத்துடன் பணியாளர்,மருத்துவப காப்புறுதி இன்ன பிற விடையங்கள் தொடர்பாக வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை..இப்பொது புரிகிறதா விடையம் ?

இருந்தாலும் கனேடிய்ர்களால் இலாபம் ஈட்டும் இவ் வங்கி கனேடியர்கள் பணிக்கு தேவை இல்லை என சொல்லுவதாகவே  மக்கள் பலர் கருதுகிறார்கள் .சரி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ?

மீண்டும் வருவேன் ---கரிகாலன்---