Saturday, February 22, 2025

பார்த்தது ,படித்தது , கேட்டது !

 பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 


Wednesday, February 19, 2025

படித்ததில் பிடித்தது ! நீங்களும் படித்து பாருங்களேன்.

பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 



Tuesday, February 18, 2025

ரொரண்டோ -சற்று முன்னர் !

 ருடம் பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி காலங்கள் நேரங்கள் நாட்கள் விரைவாக பறக்கின்றன என்பதை நினைத்தால் வியப்புதான் வருகின்றது. கடந்த சில தினங்களாக இங்கு ரொரன்டோவில் காலநிலை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல்கள் ரொரண்ரோவை தாக்கி நிறைய பனியை கொட்டி விட்டு சென்றிருக்கிறது , இன்று நண்பரோடு கதைத்தபோது நண்பர் சொன்னார் இப்பொழுதுதான் ரொறொண்டோவை பழைய மாதிரி பார்க்க முடிகிறது

 அவர் சொன்னதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு 8,9 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் இப்படித்தான் பனி கொட்டும். பூமி  வெப்பம் அடைவதன் காரணமாக இப்பொழுதெல்லாம் கொட்டும் பனியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மதியத்துக்கு பின்னர் அமெரிக்கன் டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மினியாபொலிஸ் நகரிலிருந்து ரொறொன்றோ பியர்சன் விமான நிலையத்த்தில் தரையிறங்க முற்பட்ட  நிலையில் கடும் காற்று , பனி காரணமாக தலைகுப்புற கவிண்டதில் சிலர் காயம். எழுபத்துநாலு பயணிகள் நாலு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது விபரங்கள் பின்னர் தான் தெரியவரும்.