பார்த்தது ,படித்தது , கேட்டது
திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.
நன்றி -தினமலர்