Thursday, May 20, 2004

வாய்ச்சொல்லில் வீரரடி -2

உதவி பண்ணாவிட்டாலும் பரவாயிலை. உபத்திரம் பண்ணாதீர்கள் என்பது தான் இவர்கள் கொள்கை.
மதில் மேல் பூனை மாதிரி இருந்துவிட்டுப்போனாலும் பரவாயிலை. கடந்த வருடம் நடிகர்,தயாரிப்பாளர்,அரட்டை அரங்கம் புகழ் விசு அவர்கள் கனடா வந்து சூடு பட்டுக்கொண்டார்
புலிகளைப்பற்றியும்,தமிழர்களை பற்றியும்,போராட்டத்தினைப் பற்றியும் பல அவதூறு கருத்துக்களை அவரின் நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டிருந்த
நிலையில் அவரின் நிகழ்ச்சிகளிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

கடைசியில் அவரின் நிகழ்சி படுதோல்வியில் முடிந்தது.இலவசமாகநுழைவுசீட்டு வழங்கப்படும் என்று சில வானொலிகளில் அறிவித்தும் கூட கூட்டத்தினை திரட்ட முடியவில்லை.
வருகின்ற வாரங்களில் கூட பலதென் இந்திய கலைஏர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாக அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இனி கோடைமுழுவதும் இப்படியான நிகழ்வுகள் தான்.
யாராக இருந்தாலும் வருபவர்கள் ஈழபோராட்டம் சம்பந்தமாக ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு
வருவது அவர்களுக்கு நல்லது.உதவி செய்யாதவர்காளைக் கூட மன்னிக்கதயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் உபத்திரம் செய்தவர்களை மன்னிக்க தயாராகவே இல்லை

1 comment: