Tuesday, May 19, 2015

நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு தப்பிவரும் ஜெயலலிதா: மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குற்றச்சாட்டு!


நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு ஜெயலலிதா குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதாக மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்ட போது, அவர் கைதாகி சிறையில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் பெற்று தந்தவர் ஆவார்.அவர் தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.அந்த கட்டுரையில், நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெயலலிதா தப்பித்து இருக்கிறார்.டான்சி வழக்கு, லண்டன் ஹொட்டல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹொட்டல் வழக்கு, வருமான வரி வழக்கு என அத்தனை வழக்குகளிலும் குறுக்கு வழிகளில் ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார்.


தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்தும் தப்பித்து இருக்கிறார். இதற்காக அவர் நீதியை வளைத்த முயற்சிகள் சிறிதல்ல.2003ல் ஓய்வுப் பெறவிருந்த நீதிபதி பாலகிருஷ்ணனை நீதிபதியாக தொடர வைக்க முயற்சித்தார்.2015ல் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்த விதம் வியப்புக்குரியது.


கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணக்கியல் தவறுகள் திருத்தப்படுமாயின் தீர்ப்பே மாறுபடும்.10% வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வைத்துக்கொள்ளலாம் என கிருஷ்ணானந்து வழக்கை காட்டி ஜெயலலிதாவை விடுவித்திருப்பது சரியல்ல.கிருஷ்ணானந்த் கூடுதலாக வைத்திருந்த பணம் ரூபாய் 11,349 மட்டுமே.


தவறுகள் நிறைந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலே ஜெயலலிதாவின் கூடுதல் வருமானம் ரூபாய் 2,82,36,812.அதன் தற்போதைய மதிப்பு பணவீக்கம் காரணமாக இன்னும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.


கிருஷ்ணானந்த் வழக்கில் கூடுதல் வருமானம் மிக மிக குறைவு என்பதால் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.அந்த வழக்கின் சாராம்சங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் குவித்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சமும் பொருந்தாது.ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்படக் கூடியவர் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, May 17, 2015

வருங்கால முதல்வரே வருக! வருக !

டிவேலுவின் எலி படத்தின் முன்னோட்டம்  இரு தினங்களுக்கு
முன்னர் இருந்து இணையத்தில் காண முடிகிறது ,இதுவரை 203,644 பேர் பார்த்திருக்கிறார்கள் .வைகைப்புயலே உங்களை வரவேற்கிறேன் .

வடிவேல் செய்த அரசியலில் எனக்கு பிடித்தமில்லை ஆனால் அரசியல்
காரணமாக  ஒரு நல்ல திறமையான  நடிகனை புறக்கணிப்பதிலும் எனக்கு
உடன்பாடு இல்லை ,மேலே உள்ள தலைப்பு சும்மா நகைச்சுவைக்காக
மட்டுமே இதில் எந்த அரசியலும் இல்லை .










Saturday, May 16, 2015

கொத்து ரொட்டி -002

குமுதினி ஒரு குடும்பப்பெண் .கணவன்  மற்றும் இரண்டு பிள்ளைகள் கொண்ட அளவான குடும்பம் .கணவன் ஒரு கனரக வாகனம்  ஓட்டும் சாரதி மா தத்தில்அரைவாசி நாள் அமெரிக்காவில் இருப்பார் . மிகுதிநாள் தான் கனடாவில் வீட்டில் நிற்பார் .குமுதினிக்கு துணை பிள்ளைகளும் மாமியாரும் தான்  .மிகுந்த பக்தி கொண்ட குமுதினி பெரும்பாலான  நாட்களில் அருகில் உள்ள கோயிலுக்கு போவது ,தொண்டுகள் செய்வது  இப் படி  அவரின் காலங்கள் இனிமையாக  சென்றுகொண்டிருந்த நிலையில்  கோடை  காலம் வந்தது .

அந்த கோயிலுக்கு  சோதிடம் சொல்வதற்காக ஒரு  சோதிடரை தமிழகத்தில் இருந்து வரவழைத்து இருந்தார்கள் .அவரிடம் சோதிடம் கேட்பதற்காக பலரும் கட்டணம் செலுத்தி  சோதிடம் கேட்டுபோனார்கள் .சோதிடத்தில் ஆர்வமும்  நம்பி க்கையும் கொண்ட குமுதினி  சோதிடம் கேட்டபோது சோதிடர் ஒரு பெரிய குண்டை குமுதினியின் தலையில் போட்டார் .இன்னும்  மூன்று மாதங்களில் உனது கணவன் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைவார் என்று . இதைகேட்ட குமுதினி க்கு இரவெல்லாம் நித்திரை இல்லை .

மறுநாள்  சோதிடரிடம் சென்று கேட்டார்  இதற்கு ஏதாவது பரிகாரம் செய்து எனது கணவனின்  உயிரினை காப்பாற்ற முடியுமா  என்று கேட்க சோதிடர் அடுத்த குண்டை குமுதினியின் தலையில் போட்டார் . நான் சில பூஜைகள் செய்யவேண்டும் அத்துடன் ஒரே ஒரு நாள் என்னுடன் உறவு கொள்ளவேண்டும் இது தான் பரிகாரம்  இதை நீ செய்தால் நான் உனது கணவனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவேன் என்று சொன்னார் .

இரவு முழுவதும் குமுதினிக்கு நித்திரை இல்லை .மறுநாள் கணவனுக்காக ஒரே ஒரு முறை தானே பரிகாரம் செய்வது என்று முடிவெடுத்த குமுதினி சோதிடர்  இடம் சென்று சம்மதம்  சொல்ல ஒரு சுபநாளில் "பரிகாரம் " முடிந்தது .சில நாட்களின் பின்னர் குமுதினியை  அழைத்த  சோதிடர் முதல் முறை செய்த "பரிகாரம் " வெற்றி பெறவில்லை எனவே மீண்டும் ஒரு முறை "பரிகாரம் "செய்யவேண்டும் என் சொல்ல குமுதினி அரை மனதோடு சம்மதிக்கிறார் ."பரிகாரம்" நடந்து முடிந்தது  சில நாட்களின் பின்னர் கோயிலுக்கு வரும் குமுதினியிடம் மீண் டும்   சோதிடர்  இதே கதையை  சொல்ல  இப்போதுதான் குமுதினிக்கு சந்தேகம் வருகிறது .

இந்த விடையத்தினை கணவனிடம் சொல்ல மனைவியை கோபிக்கும் கணவன் காவல் துறையிடம் இந்த விடையத்தினை  கொண்டு செல்ல சோதிடர் கைதாகிறார் .இனி அவரின் தண்டனை காலம் முழுவதையும்  சிறையில் கழித்துவிட்டுஅதன் பின்னர்  அவரின் சொந்தநாட்டுக்கு அனுப்பப்படும் சோதிடர்  இனி  இந்தநாட்டுக்கு திரும்பி வர முடியாது .
இதில் யாரை நோவது  கனடா வந்து கூட இன்னமும் சோதிடம் அது இது  என்று நம்பிய குமுதினியையா? அல்லது கோடை காலம் பிறந்தால் இப்படியான சோதிடர்களை வரவழைத்து காசு பார்ப்பவர்களையா? இந்த சோதிடர்களை நம்பி  செல்லும் மக்களையா ?

இன்றைய தினம் ஒரு பத்திரிகையில் இப்படி இரு விளம்பரத்தினை பார்த்ததின் விளைவு இந்த பதிவு .


------------------------------------------------------------------------------------------------------------------------------

எனது வலைபதிவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்கள் என்னும் தலைப்பில் சிலபதிவுகளை நீங்கள் பார்க்கமுடியும் .இதில் நான் இட்ட பதிவுகள்  அதிகமாக பார்க்கப்பட்டவை  மாறி மாறி தோன்றிக்கொண்டு இருப்பதை காணலாம் .இதை கவனித்தவர்களுக்கு  தெரியும் இதில் ஒரு பதிவு நான் எழுதிய நாட்களில் இருந்ததே முன்னணியில் இருக்கிறது .ஆபாச பின்னூட்டங்கள்! ஒரு பார்வை! என்னும் பதிவுதான் அது .

இது நான் எழுதி  கிட்ட தட்ட  பதினைந்து வருடங்கள் ஆகப்போகிறது JULY -05-2005 இல் எழதி இருந்தேன் .இன்று மட்டுமா  முன்னணியில்,இனிவரும் காலங்களிலும் முன்னணியில் தான் இருக்கும் .எப்படி என்கிறீர்களா  ?  காமலோகம், அந்தரங்கம் இந்த இரண்டு  சொற்களை கூகிளில் தமிழில்  தேடுபவர்களுக்கு எனது அந்த பதிவு  சிக்குகிறது .இதை நான் எழுத கூடாது எனத்தான் எண்ணியிருந்தேன் .இப்போது எழுதி விட்டேன்  இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது  என்னவென்றால் இனி அந்த தளங்களை தேடுபவர்களுக்கு  கூகிள்  இந்த பதிவையும்  காட்டப் போகிறது .இனி இந்த பதிவும் அதிகம் பார்கப்ப்ட்டவையின் கீழ் வரப்போகின்றது.

சரி  கூகிளில் தமிழ் என தேடினால் கொஞ்சக்காலங்களின் முன்னர்  என்ன வந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் .இப்போது பரவாயில்லை ,உங்கள் தரமான பதிவுகளுக்கு தமிழ் என  அடையாளங்கள்(லேபல் ) வையுங்கள். தமிழ் என தேடினால் தரமானவை முன்னணியில் வந்து நிற்கும் .



*********************************************************************************


எனது பதிவுகளை பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாமல் சுத்த தமிழில்தான்  எழுதி வருகிறேன் .ஒரு நாளில் கிட்டதட்ட பதினாலு மணித் தியாலங்கள் ஆங்கிலத்தில் தான் உறவாடுகிறேன் .அலுவலகத்தில் ,வெளியில். .ஆங்கிலத்தினை ஆங்கிலமாகவும் தமிழை தமிழாகவும் தான் கதைப்பேனே  ஒழிய இரண்டையும் இணைப்பதில்லை .பாவம் அவை ,இரண்டும் பிழைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா .எனவே  தமிழை தமிழாகவே கதையுங்கள் .ஆங்கிலமும் வேண்டாம் ,இந்தி "ஜி "யும் வேண்டாம் . பாவம் தமிழ் பிழைத்துக் கொள்ளட்டும் .


***********************************************************************************

கடந்த வருடம் எனது மாமனார் இந்தியாவில் இருந்து வந்து  இருந்தார் .எனவே அவருக்காக  தமிழ் தொலைக்காட்சி எடுப்போம் என்று தீர்மானித்தபோது என்ன சனல் எடுப்பது என்ற போது ஏற்கனவே இருந்த  கனேடிய தமிழ் தொலைகாட்சிகளுடன் விஜய் தொலைக்காட்சியையும் மேலதிகமாக எடுப்போம் என்று முடிவெடுத்தோம் .அவர் போனபின்பும்  விஜய்  தொலைகாட்சி ஓடிக்கொண்டிருக் கின்றது
விஜய் தொலைக்காட்சி வெளிநாடுகளுக்கு என்று சிங்கப்பூரில் இருந்து ஒளிபரப்புகின்றனர் என நினைக்கிறேன் .எந்த ஒரு விளம்பரங்களும் இல்லை .ஒன்று இரண்டு நல்ல நிகழ்ச்சிகளை தவிர மற்றவை எல்லாம்
சினிமா சினிமா தான் .

நான் பார்ப்பவை சுப்பர் சிங்கர் ,நீயா நானா ,டொக்டர் டொக்டர்  இதில் சுப்பர் சிங்கர் முடிந்து விட்டது ..H.D தரத்தில் இல்லை .இதனால் தெளிவாகவும் இல்லை .நான் விஜய் தொலைகாட்சி எடுத்தபோது ஆகா விளம்பரங்கள் பார்க்கலாம் என்றுதான் எடுத்தேன் ,விளம்பரங்கள் இல்லை என்பதில் எனக்கு ஏமாற்றம் தான் சன்னில் விளம்பரம் வருகிறது என சொன்னாலும் சன் தொ.காட்சி பார்க்க விருப்பம் இல்லை .

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நண்பரோடு கதைத்தபோத விஜயில் விளம்பரங்கள் இல்லை என்று சொன்னபோது அவரும் சொன்னார் தனக்கு விளம்பரங்கள் பார்க்கத்தான் விருப்பம் என்று
அகா என்னைபோல ஒருவர் இருக்கிறாரே என்று எனது மனதில் ஒரு சந்தோசம் .


**********************************************************************************


இது சில காலங்களுக்கு முன்னர் நடந்தது எனது நண்பனின் மகன் நண்பனின் சாரதி அனுமதிப்பத்திரத் தினை எடுத்து பார்த்துவிட்டு சொன்னாராம் உங்கள் சாரதி அனுப்திபத்திரத்தில் ஒரு  கெட்ட வார்த்தை இருக்கிறது என்று குழம்பிப்போன நண்பன் கேட்டிருக்கிறார் .அது என்ன என்று மகன் சொல்லியிருக்கிறார் செக்ஸ் என்று போட்டு இருக்கு என்று தலையில்அடித்துக்கொண்டு  யார் சொன்னது என்று  நண்பன் கேட்க

.தனது நண்பன் சொன்னான் என்றாராம் நண்பனின் மகன் இது நடந்தது நன்பனின் மகன் முதலாவது தரம் படிக்கும் போது .காலம் எப்படி எல்லாம் மாறுகிறது பார்த்திர்களா ?

இதை என் இங்கு சொல்லியுள்ளேன் என்றால் தரம் மூன்றில் இருந்து பாலியல் கல்வியை கட்டாயமாக்கப்போகிறது நான் வதியும் ஒன்ராறியோ மாநில அரசு
இப்போதும் பாலியல் கல்வி தரம் ஆறில் இருந்து இருக்கிறது .ஆனால் இப்பொழுது  தெரிவு  பெற்றோர்களின் கைகளில்  விளைவு பெரும்பாலான பெற்றோர் பாடசாலையில்  அனுமதி .கேட்டு கடிதம் வரும்போது  பிள்ளை கள்
படிக்க அனுமதி கொடுப் பதில்லை .இதனால் அரசு கட்டாய பாலியல் கல்வியை கொண்டுவர யோசிக்கிறார்கள் .இதில் தன்னின சேர்க்கை,இயற்கைக்கு மாறான உறவு இப்படி பலவும் உள்ளடக்கம் .இதனால்
பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .கடந்த வாரம் சில இடங்களில் பாடசாலை
பகிஸ்கரிப்பும்  இடம்பெற்றது .

நேரம் கிடைக்கும் போது .இதைபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன் .


**********************************************************************************

வாசியுங்கள் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்தும் .கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி .

Wednesday, May 13, 2015

இன்றைய தேதிக்கு இன்ர நெட்டை கலக்கும் புகைப்படம்




சொத்துக் குவிப்பு வழக்கில் , நிரபராதி என்று ஜெயலலிதா வெளியே வந்தது கூட பெரிய விடயம் அல்ல. அவரை விடுவித்த நீதிபதி குமாரசாமி பெயர் தான் பெரும் பரபரப்பாக அடிபடுகிறது. அதிமுகா காரர்கள் கும்பிட்ட எல்லா சாமியும் சேர்ந்துதான் குமாரசாமியாக உருவாகியுள்ளது என்று சிலர் செய்தி எழுதியுள்ளார்கள். அது ஒரு புறம் இருக்க மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் , கனிமொழிக்கு கலைஞர் ஆறுதல் கூறுவது போன்ற ஒரு படம் தற்போது வெளியாகி இன்ர நெட்டையே கலக்கி வருகிறது.

அதில் கனிமொழியைப் பார்த்து பார்த்து கருணாநிதி சொல்வது தான் கொமடியிலும் கொமடி 

தமிழகத்தை  கடவுள் தான்  காப்பாற்ற வேண்டும் .

சரி படம் இதுதான் 







Saturday, May 02, 2015

கொத்துரொட்டி 001


ண்மையில் ஆப்கானிஸ்தானை பற்றிய ஒரு விவரண சித்திரம் ஒன்றினை பார்த்துக்கொண்டிருந்தேன் அங்கு முன்னர் தொண்டாற்றிய ஒரு பெண்மணி சொன்ன ஒரு விடையத்தினை பார்த்ததும் நான்
அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் ,அவர் சொன்னது பொதுவாகவே ஆப்கான் கிராமங்களில் கணவனும் மனைவியும்  சரிசமமாக நடந்து வரமாட்டார்களாம் ,பொதுவாகவே ஆண்கள் முன்னால் நடந்து வர
பெண்கள் பின்னால் நடந்துவருவார்களாம் ,என்ன சுமை என்றாலும் பெண்கள் தான் தூக்கி வருவார்கள் ,தூக்கவேண்டும் .பிள்ளைகளையும் தூக்கிகொண்டு சுமைகளையும் தூக்கிக்கொண்டு பெண்கள் நடந்து வர ஆண்கள் இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடந்து வருவதையுமே கண்டிருந்த தனக்கு ஒரு நாள் ஒரு கிராமத்துக்கு போய்க்கொண்டிருந்த போது ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக ஒரு பெண்  சுமைகளை
தூக்கிக்கொண்டு முன்னேவர அவளின் கணவன்  சிறிது இடைவெளிவிட்டு பின்னே வந்து கொண்டிருப்பதை கண்டவுடன் ஆச்சரியம் தாளாமல் வாகனத்தினை நிறுத்திவிட்டு இறங்கி  அந்த மனிதனிடம்
சொன்னாராம் நீதான் உணமையான ஆண் மகன் உனது மனைவிக்கு இப்படி ஒரு சரிசமமான அந்தஸ்தினை கொடுத்திருக்கிறாயே என்று .


அதற்கு அந்த மனிதன் சொன்னானான் .அந்தஸ்தாவது புடலங்காயாவது இந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அதிகம் அதனால் தான் எனது பாதுகாப்புக்காக எனது  மனைவியை முன்னால்  நடக்க சொல்லிவிட்டு நான் பின்னால் நடந்து வருகிறேன் என்றானாம் .இதை கேட்ட அந்த பெண்மணி மட்டுமல்ல நானும் கூட அதிர்ந்து தான் போனேன்

மேலும் அந்த விவரணத்தில் பல விடையங்களை  சொன்னார்.ஒரு முறை அப்போதைய அப்கான் அதிபரைசந்தித்தபோது இப்பெண்மணி பெண்களின் கல்வி ,சுகாதாரம் என்று கதைத்தபோது அதிபர் சலிப்புடன் சொன்னாராம் நாங்கள் இங்கு பெண்களை உயிருடன் வாழவைக்கவே பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றாராம் .ஆப்கன் பாகிஸ்தான் போன்ற நாடுகளில்  பெண்களின் நிலை என்பது மிகவும் பரிதாபம் தான் .சமைக்கவும் பிள்ளை பெறவும் ,உடல் தேவைக்கு மட்டும் தான் பெண்கள் தேவை என்பது அங்குள்ள ஆண்களின்  கொள்கை பெண்கள் கல்வி  என்பது அவர்களால் அனுமதிக்க முடியாத ஒன்று .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இங்கே கனடாவில் கடைகளில் விற்கப்படும்  பழங்கள் மரக்கறிகளின் மீது விதவிதமான  ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன் ,
.நான் இவைகள்  பிஎல்யு கோட் என்றே இதுவரையில் எண்ணி இருந்தேன் .சில் நாட்களுக்கு முன்னாள் ஒரு  இணைய தளத்தினை பார்த்தபோது  அதில் ஸ்ரிக்கர்களை வைத்து அந்த பழங்கள் எந்த முறையில்விளைவித்துள்ளனர் என்று காணமுடியும் என கூறப்பட்டிருந்து .அதாவது இயற்கையாக உரங்கள் பாவிக்காது விளைந்ததா அல்லது மரபணு மாற்றபட்ட 
 பழங்களா? அல்லது முற்றுமுழுதாக இரசாயன உரங்களை கொண்டு விளைவித்ததா என்பதை அறியமுடியுமாம் 

01)  பிஎல்யு கோட்டில் நாலு இலக்கம் இருந்தால்  அது பாரம்பரியமுறையில் ஆனால் முற்று முழுதாக இரசாயன உரங்கள் இட்டு விளைவிக்கப்பட்டது 

02)  பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது எட்டு என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது 

03)  பிஎல்யு கோட்டில் ஐந்து இலக்கங்கள் இருந்து அது ஒன்பது  என்னும் முதல் எழுத்தில் ஆரம்பித்தால் அது முற்றும் முழதாக இயற்கை முறையி விளைவிக்கப்பட்டது 

இப்போது உங்களுக்கு ஒரு  தெளிவு கிடைத்திருக்கும் .இனி நீங்கள் வாங்கும் போது என்ன பழங்கள் வாங்கும் போது எப்படி விளைவிக்கப்பட்டது என் பார்த்து வாங்குவதுடன் உங்கள் உடல் நலத்தினையும்
பாதுகாத்து கொள்ளுங்கள் .சரி நீங்கள் பழங்களை சாப்பிடும் போது பொதுவாக அந்த ஸ்ரிக்கர்களை உரித்து  எறிந்துவிட்டுதானே சாப்பிடுவீர்கள் .சில வேளைகளில் அந்த ஸ்ரிக்கர்களை அகற்ற முடியாவிட்டால் என்ன செய்வீர்கள் ? ஒரு செலோ டேப்  துண்டினை அந்த ஸ்ரிக்க்ரின் மீது ஒட்டி விட்டு பின்னர் செலோடேப்பினை அகற்ற ஸ்ரிக்கரும் சேர்த்து வரும் .பின்பு  நன்றாக் கழுவிவிட்டு சாப்பிடலாம் 


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



பொதுவாக இங்கு கனடாவில் லிப்ட் கேட்பது என்பது மிக மிக குறைவு ,சில வேளைகளில் பெருந்தெருக்களில் (High way,Free way) நுழையும் போது சிலர் கட்டை விரலை உயர்த்திப்பிடித்தபடி நிற்பதை கண்டிருக்கிறேன் .
ஆண்கள் பெண்கள் பொதுவாக இளம் வயதினர்  அப்படி கேட்பதை கண்டிருக்கின்றேன்,பொதுவாக நான் இப்படி லிப்ட் கொடுப்பதை விரும்புவதும் இல்லை .சில தினங்களுக்கு முன்னர் இப்படி தான் பெரும் 

தெருவில் உள் நுழைய எனது ஜீப்பினை திருப்புகிறேன் .ஒரு வெள்ளை இனத்தவர் மாணவனை மாதிரி தோற்றம் கொண்டவர் கட்டைவிரலை உயர்த்தியபடி, சரி மாணவன் தானே என எண்ணியபடி அவசரகால 
விளக்குகளை எரிய விட்டபடி அவரருகில்  நிறுத்துகிறேன் .தான் செல்லவேண்டிய இடத்தினை சொல்லி அங்கு தன்னை இறக்கிவிடுவாயா எனக் கேட்டார் .அவர் கேட்ட இடத்தினை தாண்டி தான் நான் 
போகவேண்டும் அதனால் அவருக்கு நான் சொன்னேன் .சரி நான் உன்னை நீபோக வேண்டிய இடத்துக்கு அண்மையில் பெருந்தெருவில் இருந்து வெளிய வந்து இறக்கி  விட்டுவிட்டு மிண்டும் பெருந்தெருவுக்குள் 
போய்விடுவேன் சம்மதமா என்றேன் .அவரும்  சம்மதித்து ஏறினார் .

 எனது பக்கத்துக்கு இருக்கையில் இருந்து கதைத்துக்கொண்டு வந்தார்  இங்கு ரொறொன்ரோவுக்கு அலுவலாக வந்ததாகவும் காசை மிச்சம் பிடிப்பதற்காக லிப்ட் கேட்டதாகவும் சொன்னதுடன் தான் தனது ஊரில் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார் .இறங்க வேண்டிய இடம் வந்தது  வாகனத்தினை  அவசரகால விளக்குகளை
போட்டுவிட்டு ஓரமாக நிறுத்துகிறேன். 

உங்கள் உதவிக்கு நன்றி என சொன்னவர் ஒரு துண்டு காகிதத்தினை எடுத்து தனது செல்பேசி இலக்கத்தினை எழுதி என்னிடம் நீட்டிக்கொண்டே எனது தொடையில் மெதுவாக தடவிகொண்டே  சொன்னார் உங்கள் உதவிக்கு நன்றி, என்ன உதவி வேண்டும் என்றாலும்  கேளுங்கள் உங்களுக்காக செய்வேன் என்றார் .நான் சிரித்துவிட்டு பாய் சொன்னேன் இறங்கிவிட்டார் .
எனது வாகனம் நகர பின்  கண்ணாடியில் பார்த்தேன் ,எந்தவித சலனமும் இல்லாமல் அவர் தனது பையை எடுத்துக்கொண்டு போய்கொண்டிருந்தார் .ஓ அவனா நீ ????

வாகனம் ஓடிகொண்டிருக்க எனது மனதிலும், ஒரு சந்தேகம் எதை பிடிப்பதற்காக வாகனத்தில் ஏறினார் காசையா? ஆளையா?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சரி சரி ஒரு நகைச்சுவை மனதினை லேசாக வைத்திருப்பதற்காக்  மனைவிமார் மன்னிக்கவும் 

*அண்ணே நீங்க எந்த கடவுளை கும்புடுவீங்க 

*கல்யாணத்துக்கு முன்னாடியா? பின்னாடியா?

*சரி கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன் 

*கல்யாணதுக்கு முன்னாடி முருகனைதன் பிடிக்கும் 

*அப்போ கல்யாணத்துக்கு பின்னாடி?

*அதை என் கேக்கிறிங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான்  வேண்டாத  
தெய்வங்களே இல்லை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மீண்டும் சந்திக்கிறேன் .அதுவரையில் அன்புடன் கரிகாலன்.















Friday, May 01, 2015

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….!

11200808_551839561623148_7292822590549398262_n


விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு…
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு…
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது…
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு…
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது…
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு…
ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்…
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாதிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?
முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க…
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.!!!!!!!!
நன்றி -இணையம் 

Monday, April 13, 2015

நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையிலேயே தங்கம்தானா?

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியாவில்  ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே.

தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம்.

பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று.

எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,
 ''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர், தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.