Saturday, December 09, 2006

நான் ஒரு தடவை சொன்னா................

எனது மனதில் எழும் கருத்துக்களைப் மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்
வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.
அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்
தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)


இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்
தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று
நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)


மீண்டும் சந்திப்போம்.

சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.

சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்
இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க
நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம் பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.
சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்
பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ் நகரில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படையினரின் தடைகள்! -

(யாழின் மைந்தன்)/தினக்குரல்

யாழ்ப்பாண சமுதாயம் மூன்று சகாப்தமாக"போரின் வலி"யை தாங்கிய சமுதாயமாகவே இன்றும் உயர்ந்து நிற்கின்றது. காலம் முழுவதும் பசி,பட்டினி, சாவு போன்ற கொடுமைகளுக்கு முகம் கொடுத்து, இனத்தின் விடுதலைக்காக தன்னைக்காவு கொடுத்து வருகின்றது. யாழ்ப்பாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் எல்லாம், விடுதலையுணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கு அரசின் அடக்குமுறையால் நாளை என்ன நடக்கும் என்ற நினைவில் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால் தினம் தினம் வரும் செய்திகள் அவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அரசாங்கம், யாழ்ப்பாண மக்களுக்கான பிரதான வழங்கல் பாதையை மூடிவிட்டு அம் மக்களை பட்டினிச்சாவில் தள்ளியுள்ளது. அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்து அவர்களை சொந்த மண்ணிலே சிறை வைத்துள்ளது. உறவைப் பிரிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக ஏங்கி நீண்ட நாட்களாக கண்ணீர் வடிக்கின்றனர். காலை எழுந்தவுடனே பெட்டி படுக்கையுடன் இன்று கப்பல் பயணம் கிட்டுமா, விமானப் பயணத்துக்கு யாரை நாட வேண்டுமென பசி பட்டினியுடன் திரிவது சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. எது வேண்டுமானாலும் தருகின்றோம் எங்களை அனுப்பி விடுங்கள் என கெஞ்சிக் கேட்பது யாருக்கு கேட்கப் போகிறது.

அரசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை, உணவு மருந்து பரிசோதகர்கள் நிச்சயமாக வழங்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் பொருட்களை அரசாங்கத்துக்கு விற்பனை செய்பவர்கள் கொழும்பில் `குளுகுளு' அறைகளில் வாழும் யாழ்ப்பாண வியாபாரிகள் தான் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் காலம் காலமாக நாட்டரிசியை தமது மதிய உணவுக்கு பயன்படுத்தி வந்த கலாசாரம் அவர்களுடையது. தென்னிலங்கையில் ஒரு பிடி நாட்டரிசி கூட கிடைக்கவில்லையென்ற நினைப்பில், தரம் குறைந்த கோறா, சம்பா அரிசியையல்லவா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த அரிசிச் சோற்றை உண்டு பழகாத மக்களுக்கு தினம் தினம் வயிற்றோட்டத்தால் வாடும் நிலையே காணப்படுகின்றது.இதுவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை, தேயிலைத் தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையாக கிலோ முப்பது ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையாகும்.

பாதுகாப்பு பிரிவினருக்கு, பாவிப்பதற்கு மணப்புச் சவர்க்காரம் யாழ்ப்பாண மக்களுக்கு சொறி சிரங்குள்ளவர்கள் என காபோலிக் அமிலம் சேர்த்த லைபோய்தான் என்கிறார்கள். சாக்குக் கணக்கில் "சோயாமீற்" என தரம் குறைந்த உணவுப் பொருளே பங்கீட்டுக்கு என்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில், ஒரு போதும் சூரியா தீப்பெட்டியைத் தவிர வேறு எந்த தீப்பெட்டியையும் வாங்க மாட்டார்கள். காரணம் மற்றைய தீப்பெட்டிகள் பற்றாது என்பது நம்பிக்கை, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட தீப்பெட்டிகளோ இருபது குச்சுகள் கூட பற்றாது. ஆனால் அரசாங்கம் நானாவித பொருட்கள் தாராளமாக அனுப்புவதாக பிரசாரம் செய்கின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் லீற்றர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்ததால், அது கிடைக்குமா என நாய் போல் அலைந்து திரிவது எல்லோர் மனங்களையும் வருத்துவது யாருக்குத் தெரியும்.

குடாநாட்டில் அதிக மக்கள் நடமாடும் ஒரே நகரம் யாழ்ப்பாணம் தான். அதற்கும் முழுமையாக பாதுகாப்புப் பிரிவினர் வேட்டு வைத்து விட்டனர். முதலில் பிரதான வீதிகளில் இடைக்கிடை தடையைப் போட்டு மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர். எந்தவொரு வர்த்தக நிறுவனம் முன்னாலும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை நிறுத்தக் கூடாதென தடை விதித்தனர். உத்தரவை மீறியவர்களை தாக்கினர். இன்றைக்கு நகரமே சோபை இழக்கும் வகையில், திடீர் திடீரென யாழ்ப்பாண பஸ் நிலையத்தை புனரமைப்பதாகக் கூறி பேருந்து தரிப்பிடத்தை கழற்றி விட்டு பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் பண்ணைக்கு மாற்றப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது. இது நகருக்குள் நடமாடும் சகல மக்களுக்கும் ஆபத்து என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறார்கள். நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ மையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம். இது கோடிக்கணக்கான முதலீட்டை வைத்திருக்கும் நகர வர்த்தகர்களை தமது பொருட்களை நகரின் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு வழி செய்துள்ளது. அழுது புலம்புவதைத் தவிர வெள்ளம் வருமுன்னர் அணைகட்டுவது அவசியமானதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப்பாதையைத் திறக்க வேண்டுமென இணைத் தலைமை நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் கூடிய நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இந் நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாண சமுதாயம் முழுமுனைப்போடு செயல்பட்டது மட்டுமல்ல, அவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் பிரிவினர், இவ் வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட இரு மதகுருமாரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் விரோத உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். இம் மதகுருமார் உண்மையில் அப்படி நடந்து கொண்டனரா என விசாரணை நடாத்தி வருகின்றது. துன்பப்படும் மக்களுக்காக நீதியை நிலைநாட்ட மதகுருமார் செயல்படுவது தேச விரோத குற்றம் என யாழ்ப்பாண சமுதாயம் அழுதுபுலம்புகின்றது.
இதேவேளையில் யாழ்ப்பாண மாணவர் சமுதாயம் மீதும் கல்வியாளர்கள் மத்தியிலும் புதிதாக குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தவர்களை தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதை இந் நடவடிக்கை காட்டுகின்றது.அதிபர்கள், குடாநாட்டில் இடம்பெறும் அவலங்களுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு தோன்றி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களையும் தங்கள் வழிகாட்டலில் தான் செய்திகளை பிரசுரிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது உலகமே வெறுக்கும், மியன்மார் இராணுவ ஆட்சி முறைக்கு யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயகத்தை நேசிக்கும் யாழ். மக்கள் கருதுகின்றனர். குடாநாட்டில் விரைவில் "பத்திரிகை தணிக்கை" வரும் என்பதில் சந்தேகமில்லை. குடாநாடு பல தடவைகளில் செய்தித் தணிக்கைகளுக்குள் ஜனநாயகத்தின் குரலாக வெளிவந்த வரலாறு இருந்துதான் வந்துள்ளது.

Wednesday, November 15, 2006

அம்பலமாகும் இலங்கையின்" பொட்டுக்கேடு"


சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'!

லங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக். ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங் கள் படைக்குத் திரட்டுகின்றார்கள் என்று "ஆடு நனைகிறது எனக் கவலைப்பட்ட ஓநாய்கள்' போல முதலைக் கண்ணீர் வடித்த தென்னிலங்கை, இப்போது "தேள் கொட்டிய திருட னாக' துடிக்கின்றது. வயது குறைந்த தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலி கள் படைக்குச் சேர்க்கிறார்கள் என்றுதான் இதுவரை குற்றச் சாட்டுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இலங்கை அரசுப் படைகளோ தனது ஒட்டுப்படையான கருணா குழு மூலம் தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாக மடக்கிப் பிடித்து, கடத்திச் சென்று, படைக்குச் சேர்க்கின் றன என்ற உண்மையைச் சர்வதேச அமைப்பு இந்த விட யத்தில் உண்மையைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் தகுதியுடைய ஸ்தாபனம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகத் தென்னிலங்கை அரசின் போக்கு எத்தகையது, அதன் உண் மைச் சொரூபம் என்னவென்பவையெல்லாம், அதன் முகமூடி கிழிய இப்போது வரிசையாக அம்பலமாகத் தொடங்கிவிட் டன.

1990 களில் யாழ். நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி அகதிகள் 170 இற்கும் அதிகமானோரை விமானக் குண்டு வீச்சு மூலம் கூண்டோடு கொன்றொழித்துவிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று உண்மையைத் தென்னிலங்கை புதைகுழி தோண்டிப் புதைத் தமை போன்றதல்ல இப்போதைய நிலைமை.

சீருடையினரின் இரும்பு வேலிகளைத் தாண்டி, மறைப்புகளைக் கடந்து, கொடூர நெருக்குவாரங்களை மீறி, உண்மைகளும், நிகழ்வுகளின் மூலங்களும் அம்பலமாகும் நிலைமைக்குத் தொழில் நுட்பமும், வசதிகளும் வளர்ந்துவிட்டன. அதனால், சத்தியத்துக்கு வேலி போட்டு மூடும் தென்னி லங்கை முயற்சி தோற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களைச் சுற்றி வளைத்து கருணா குழு பிடிப்பதற்கு கிழக்கில் அரச படைகள் எப்படி உதவுகின்றன, எவ்வாறு சிறுவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கின்றன, மடக்கிப் பிடிக்கப்படும் சிறுவர்கள் பல படை முகாம்கள் மற் றும் தடைநிலைகளைத் தாண்டி, பாதுகாப்பான இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு பலவந்தமாக ஒட்டுப்படைகளில் இணைத்து ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத் தப்படுகிறார்கள், இத்தகைய அராஜகம் குறித்துச் செய்யப்படும் முறைப்பாடு களை அரசும், அரசுப் படைகளும், பொலிஸும் எவ்வாறு உதாசீனம் செய்கின்றன என்று எல்லா விடயங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் அலன் றொக்.

இந்த விவகாரங்களை நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துத் தாம் முறையிட்டார் எனவும், இது குறித்து முழு அளவில் விசாரணைகளை நடத்தி உண்மை களைக் கண்டறியவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் ஜனாதிபதி உறுதி யளித்தார் என்றும் கூட அலன் றொக் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உறுதி வழக்கங்களில் சர்வதேச சமூகத் துக்கு ஏதோ நம்பிக்கையிருக்குமோ என்னமோ, ஆனால் தமி ழர் தரப்புக்கு நம்பிக்கையே கிஞ்சித்தும் கிடையாது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனில் தொடங்கி ரவிராஜ் எம்.பி.படுகொலை வரை பல்வேறு அராஜகங்களுக்கு இவற்றில் பலவற்றுக்குக் குற்றச்சாட்டு விரல் அரசுப் படைகளை நோக்கி நீண்ட நிலையில் இத்தகைய நியாயமான விசாரணைகள் பற்றிய அறிவிப்புகள் ஜனாதிபதி மஹிந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டமையையும் அவற்றினால் ஏற்பட்ட பலன் யாதுமில்லை என்பதை யும் "விசாரணை எனும் மாயமான்' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இப்பத்தியில் விவரமாக விளக்கியிருந்தோம்.

இந்த விடயத்தில் விசாரணை அறிவிப்புக்கும் அது அப் படியே பொருந்தும். இன்னொரு விடயம். சிறுவர்களைப் பலவந்தமாக மடக் கிப் பிடித்துக் கடத்திச் சென்று ஆயுதப் படையில் சேர்க்கும் இந்தத் திருகுதாளம் தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. 1988 1989 ஆம் ஆண்டுகளில் "அமைதிப்படை' என்ற பெயரில் இந்தியத் துருப்புகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக் கிரமித்திருந்த சமயத்தில், அந்தப் படைகளுடன் சேர்ந்து வந்த குழுக்களும் கூட இதே மாதிரி அராஜகம் புரிந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.

இவ்வாறான பலவந்த கட்டாய ஆட்சேர்ப்பும், ஆயுதப்
பயிற்சியும் சண்டை என வரும்போது எவ்வாறு பொல பொலத்து எதிர்ப்பக்கமாகத் திரும்பின என்பதை 1989 நவம் பர், டிசம்பர் மற்றும் 1990 ஜனவரி அனுபவங்கள் மூலம் இலங்கை கண்டறிந்துள்ளது.

அந்தப் பட்டறிவிலிருந்து கற்ற பாடத்தை மறந்து, இராணுவத்தின் சதி வலையில் சிக்கி, அதே "மண் குதிரைத் திட்டத்தை' நம்பிப் போர் எனும் ஆற்றில் இறங்க முயலும் தரப்புகள் ஒன்றுக்கு இரண்டு தடவை இந்த உழுத் துப்போன முயற்சி குறித்து சிந்திப்பது நல்லது.

நன்றி:-யாழ் உதயன் ஆசிரிய தலையங்கம் (14-11-2006)





Saturday, November 11, 2006

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.

கதிரவெளிப் பகுதியிலிருந்து புதன்கிழமை புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை

* கண்காணிப்புக் குழு தெரிவிப்பு

இலங்கை அரசாங்கமும் படைத் தரப்பும் கூறுவதுபோல் கடந்த புதன்கிழமை கதிரவெளிப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் படை முகாம்களை நோக்கித் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியர் கூறுகையில்;

கதிரவெளியில் படையினரின் கடுமையான தாக்குதலுக்கிலக்கான பாடசாலைப் பகுதியில் புலிகளின் முகாம்கள் எதுவுமிருக்கவில்லை.
இதனை அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தியதுடன் அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினரும் புலிகளின் முகாம்கள் எதனையும் காணவுமில்லை.
புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான அறிகுறி எதுவுமில்லை.


பாடசாலையில் இருந்த அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தப் பாடசாலையின் மீதே தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தரப்பாயிருந்தாலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.


http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm

படுகொலை செய்யப்பட்ட தமிழ் M.Pயின் இறுதிப் பேட்டி.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்கள் சிங்களத் தரப்பின் பொய்மைகளுக்கு விளக்கமான சாடல்கள் என ஆணித்தரமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

"மாமனிதர்" ரவிராஜின் இறுதி நேர்காணல்":

ஏ-9 பாதை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இதனிடையே ஒக்ரோபர் 16 ஆம் நாள் வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டும் என்று அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அந்தத் தீர்ப்பில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. எமக்கு அரசியல் பிரச்சனை உள்ளது. வடக்கு -கிழக்கு மக்கள் இணைந்தே வாழ்கின்றனர். வடக்கு கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் அபிலாசையாகும். அந்த மக்களினது அடிப்படை மனித உரிமையும் அதுதான்.
முன்னைய காலத்தில் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் அரசுகள் இருந்தன. எங்கள் மக்களுக்கு இது புதியது அல்ல. வடக்கு - கிழக்கு பிரதேசங்கள் முன்னைய காலத்திலேயே தமிழ் பகுதிகளாக இருக்கின்றன. அதற்காக நாம் இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. வடக்கு கிழக்கு ஒரே அலகாக கருதப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் நிலையில் அதுதான் அடிப்படையானதாக இருக்கும்.

இந்த நாடு பிரிக்கப்படக்கூடாது என்று ஏன் நீங்கள் சொல்லுகிறீர்கள்?

ஏனெனில் இந்த நாடு பிரிக்கப்படாமல் இருக்கும்போது மக்களின் உணர்வுகள் வலுவானதாக இருக்கும் என கருதுகிறீர்கள். அதேபோல் வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கு வலுவானதாக கருதுகின்றனர். தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக அது இருக்கும். இரு மாகாணங்களும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும்.

அதே நேரத்தில் ஒற்றையாட்சி அரசாங்கக் கோட்பாடு என்பது நீண்டகாலமாக ஏற்கப்படாதது. அது பழைய நடைமுறை. அது இன்று செல்லுபடியாகாதது. நாம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தோம். எந்த ஒரு தமிழர் தலைவரும் தனியரசையோ கூட்டரசையோ அப்போது கோரவில்லை. ஆனால் ஏன் தற்போதைய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்?
பொன்னம்பலம் அவர்கள் 50-க்கு 50 விழுக்காடு கோரிக்கையை முன்வைத்தார் எனில் காரணம் உள்ளது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று மொகமெட் அலி ஜின்னா கோரினார். நாமோ 50-க்கு 50 விழுக்காடு மற்றும் கூட்டரசு கோரிக்கையை முன்வைத்து தற்போது தனியரசுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றனர். இருந்தபோதும் அரசியல்வாதிகளாகிய நாங்கள் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்று இப்போதும் நம்புகிறோம். யார் இந்த நிலைக்கு பொறுப்பு? சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டோம்.

சோல்பரி ஆணையத்தின் சரத்துகள் முதலில் நீக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கானது.

சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

அப்படியானால் எம்மை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?

இந்தியா சுதந்திரமடைந்தது 1947. இப்போது 22 மாநிலங்கள் உள்ளன. இருந்தபோதும் ஐக்கிய நாடாகத்தானே இருக்கிறது. ஏனெனில் அங்கே நிர்வாக அமைப்பு அப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
கூட்டரசு முறை என்பது நாட்டை பிளவுபடுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். நாம் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் கொள்ளலாம்.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியரசு அதிகாரங்கள் கோரப்பட்டன. இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களை கேட்டால் நாங்கள் இந்தியர்கள் என்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பட்டினிச்சாவில் உள்ளனர்.

நாம் ஒரே குடும்பத்தவர். ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட அல்லது இளையவர்கள் மீது அனுதாபம் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். ஆனால் ஏ-9 மூடப்பட்டதால் என்ன செய்துள்ளனர்?

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தினால் திறக்க முடியவில்லை என்று கூறப்பட்டால் அந்த மக்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்கிற தோற்றம்தானே வெளிப்படும். நாங்கள் கப்பலில் உணவுப் பொருட்களை தருகிறோம் எனில் எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது?

ஏ-9 பாதை மூடப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் அறவிடுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. என்னே ஒரு பொய்? ஏ-9 பாதை திறப்பு என்பது 2002 ஆம் ஆண்டு நடந்தது. அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தனர்? ஏ-9 திறப்புக்கு முன்னர் அவர்கள் நிதி பெறவில்லையா? அவர்களிடம் போதுமான உணவும் இதர வசதிகளும் இருந்தது இல்லையா? அரசாங்கத்தின் கீழ்த்தரமான பொய் இது.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று தான் திரும்பினேன். மக்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வரி விதிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் 1995 ஆம் ஆண்டு முதல் யாழ். மேயராக இருந்தபோது கப்பல்களில் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம். பெற்றோலின் விலை அப்போது 1இ000 ரூபாயாக இருந்தது. அப்போது வரி யாருக்குப் போனது?

நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ஏழை மக்களுக்கான இலவசமாக பிரதேச செயலகங்களினூடே விநியோகிக்கப்படுகின்ற அரசாங்கம் தருகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரி விதித்தது இல்லை. மேலும் எந்த மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்துகின்றனர்? மகிந்த ராஜபக்சவா? கேகலிய ரம்புக்வெலவா? ஏன் இந்த ரவிராஜ் கூட இல்லை... அவர்கள் பிரதேசத்தில் வாழும் மக்கள்தானே..
ஏ-9 பாதை திறக்கப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரி விதிப்புடன் கூட பெற்றோல் விலையின் விலை 10 ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது.

பூநகரிப் பாதையினூடாக கிளிநொச்சி செல்வது என்பது அதிக தொலைவும் கடினமான சாலையும் கொண்டதாகும். கடலிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில்தான் அந்தப் பாதை உள்ளது. இருந்தபோதும் அந்தப் பாதையை பார்வையிடச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? கண்காணிப்புக் குழுத் தலைவர் மயிரிழையில் உயிர்தப்பி பதுங்கு குழிக்குள் பதுங்க வேண்டியதாயிற்று? பூநகரிப் பாதையினூடாக சென்றால் வரி இருக்காதா?

மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்....

அம்பந்தோட்டைக்குச் செல்லும் பிரதான பாதையை மூடிவிட்டு கொழும்பிலிருந்து கப்பலினூடே பொருட்களை எடுத்துச் செல்லுங்களேன்...

அம்பந்தோட்டையில் பயங்கரவாத பிரச்சனை என்கிறீர்களே... ஏன் எப்போதுமே பயங்கரவாதம் தொடர்பிலான விவகாரத்தையே பேசுகிறீர்கள்?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.1. சரத்தில் தெளிவாக ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை அரசாங்கம் விரும்பவில்லை எனில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று அரசாங்கம் ஏன் சொல்லவில்லை?

யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிந்து போனால் யுத்தம் தொடங்கிவிடும். அப்பகுதி மக்களுக்கு அதனால் எதுவும் இல்லை. ஏ-9 பாதை மூடப்பட்டமையால் அப்பாவி மக்கள் சொல்லமுடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி விலங்குகள் கூட பட்டினியால் சாகின்றன.

அங்கே உள்ள இராணுவ முகாமிலிருந்து கொழும்புக்கு விசா வாங்கி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஏ-9 பாதையை தங்கள் பகுதிகள் புலிகள் மூடியிருப்பதாக சொல்வது என்னே ஒரு முட்டாள்தனம்! ஏன் நான் கிளிநொச்சிக்கும் பளைக்கும் அண்மையில்கூட சென்று வந்தேனே... எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்பியும் வந்திருக்கிறேன்.

யார் தாக்கியது என கேட்கிறீர்கள்?

வெளிப்படையாக....யுத்த காலத்தில் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நான் இருந்தபோது பதில் தாக்குதல் என்ற பெயரில் 50 முதல் 60 எறிகணைகளை இராணுவம் அடிக்கும்... தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒன்றிரண்டு எறிகணைகள் வந்து விழும்.

ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என சர்வதேச பார்வையாளர்கள் தலையீட்டுடன் விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
பொதுமக்களை கப்பலில் ஏற்றிச் சென்றபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக சொல்கிறீர்களே... ஏன் பொதுமக்களை கடலினூடே கப்பலில் அரசாங்கம் அழைத்துச் செல்ல வேண்டும்?

ஒரே கப்பலில் 1000 பேர் பயணித்தனரே..யார் அவர்கள்?

300 பேர்தான் பொதுமக்கள். மற்ற அனைவருமே பாதுகாப்புத் தரப்பினரே. பாதுகாப்புத் தரப்பினர் தங்களது உற்றார் உறவினர்களைப் பார்க்கச் செல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இராணுவத்தினரை கொண்டு செல்வதற்காக மகளையும் ஏற்றிக்கொண்டு அரசாங்கம் சென்றது. ஏ-9 பாதையை திறந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லையே.

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக "ஜயசிக்குறு" நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அரசாங்கம் ஏ-9 பாதையை மூடி வைத்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கான தீர்வு எனில் தனிப்பட்ட நபர்கள் பிரச்சனை உள்ளது... என்னுடைய நண்பர் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜாதிக ஹெல உறுமய ஏன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா என....
பௌத்தர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கின்றனர்.

இருந்தபோதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்த பிக்குகள் யாழ்ப்பாண மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏ-9 பாதையூடாக எடுத்துச் செல்ல எதிர்க்கின்றனர்.

ஏ-9 விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவது என்பது இந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும் என்று விமல் வீரவன்ச கூறுகின்றார்... இறைமையைப் பற்றி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? 1971 ஆம் ஆண்டு ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக யார் ஆயுதம் தூக்கியது? 1988-89 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்ணெணெய் விளக்கைக் கூட அவர்கள் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆகையால் அவர்களால் இன்று எப்படி இறைமையைப் பற்றி பேச முடிகிறது?

இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்திய பஞ்சாயத்து முறை பற்றி பேசப்படுகிறது. இந்தியப் பஞ்சாயத்து முறை என்பது ஒரு கிராம நிர்வாக அமைப்பு. உயர்நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர்... கிராமங்களுக்கு- சுயாட்சி அளிப்பது போன்றதானது. இலங்கையில் அது நடைமுறைப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படவில்லை.

சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம்- இரத்தக் களறியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை. நான் பேச்சுக்களை ஆதரிக்கிறேன். இதை நான் மட்டுமே சொல்லவில்லை. கலிங்கத்துப் போருக்குப் பின்னர் அசோக சக்கரவர்த்தி கூறியதுதான் இதற்கு முதல் உதாரணம்.

பட்டினியால் வாடும் மக்களுக்கு முதலில் உணவுப் பொருட்களை அனுப்பி நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை அளிக்கும் என்றார் ரவிராஜ்.

நன்றி-----புதினம்.

Sunday, November 05, 2006

சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும்.......

ஆடுகள் நனையுதெண்டு சில ஓநாய்கள் கவலைப்படுது.அனால ஓநாயின்
ஆட்டின் மீதான அக்கறை எப்படிப்பட்டது எண்டது எல்லோருக்கும் தெரிந்ததே.இந்த ஓநாய் இதைப்பற்றி என்ன சொல்லுது?

http://www.timesonline.co.uk/article/0,,3-2421834,00.html