Friday, June 19, 2015

இன்றைய திகதியில் இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!!



சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படம் எனக்கு மெயிலில் கிடைத்தது.உண்மையில் எடுக்கப்பட்ட படம் என்பது பார்த்தவுடன் விளங்கினாலும் யார் எடுத்தது என்பது உடனடியாக புரியவில்லை .இணையத்தினை மேய்ந்ததில் நதி மூலம் கிடைத்தது .

மத்திய புளோரிடாவில்  வனப்பகுதியில் ரிச்சார்ட் ஜோனஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சவாரி  சென்றதை கண்டு  அதிர்வுற்று  அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார்.

கடந்த வாரம் இந்த  புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகி  வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது


Embedded image permalink

.
முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி கலக்கி வருகிறது . பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த வாரத்தில்  இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்ட் ஜோனஸ் அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறி உள்ளார்.

 இது இப்படியே இருக்க இணையத்தில் கிடைத்த இன்னும் சில இதே மாதிரி படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 இதில் மனிதனின் படம் மட்டும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறேன் .மற்றவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் மனிதனை அடித்துக்கொள்ள உலகில் ஆளே கிடையாது .அதுவும் தேவைபட்ட இடம் வரை முதுகில் சவாரி செய்துவிட்டு தேவை முடிந்தவுடன் குதித்து ஓடுவது மட்டும் அல்லாமல் சவாரி செய்தவனின்  காலை வாருவதிலும் மனிதனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

இன்னும் சில படங்களை  கிழே தந்திருக்கிறேன் பார்த்து ரசியுங்கள்





































நன்றி ! மீண்டும் சந்திப்போம்.

Monday, June 15, 2015

நான் எப்படி இந்து ஆனேன் ? ஒரு உண்மைக்கதை

அண்மையில் செய்திகளில் இடம்பெற்ற ஒருஜெர்மனியரின்  உண்மைக்கதை எனது கவனத்தினை ஈர்த்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன்.
சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். போதைப் பொருள்களுக்கு அடிமையாகினேன். அதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டு, ஓர் போதைப்பொருள் தடுப்பு மையத்தில் சேர்த்து விடப்பட்டேன்.

அந்த மையத்தில் தான் எனது வாழ்வின் ஒரு புது அத்தியாயம் துவங்கியது. அங்கு நிறைய பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் தந்தனர். சில நேரங்களில் எனக்கு போதைப் பொருள்களை உண்பதற்கு கைகள் துடிக்கும்; உடம்பெல்லாம் மிகவும் பலவீனமாகும். ஒரு பைத்தியக்காரனைப் போல் தவிப்பேன். எனக்கு ஆறுதலாக யாருமே இல்லை என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினேன்.


அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நான் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எனினும் எனக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தியானங்களையும் செய்ய துவங்கினேன். மூச்சுப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். எல்லா சமயநூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். பைபிள், குரான் என்று படித்தேன். பகவத் கீதையையும் புராணங்களையும் படித்தேன்.

பின், ஆதிசங்கரர் வாழ்க்கையைப் பற்றி படித்தேன். ஸ்வாமி சிவானந்தாவின் வழித்தடங்களை பின்பற்றினேன். சிவபெருமானின் புகழைப் படித்தேன். வேறு எந்த மதமும் அளிக்காத முழு ஆன்மீகத்தையும் சனாதன தர்மம் எனக்கு அளித்தது. இத்தனை காலமும் என்னுள்ளே இருந்த இறைவனை நான் அறியாமல் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினேன்.



எனக்கு யோகா பயிற்சி அளித்த குரு, என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். உனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் உன் இறைவனை நினைத்துக் கொள். அவரின் பெயரையே சொல். நீ செய்யும் காரியங்களை எல்லாம் அவருக்காக செய்வதாகவே எண்ணிக் கொள் என்றார். இறைவன் என்றவுடன் என்னையே அறியாமல் மஹாதேவன் தான் என் கண் முன் தோன்றினார். எனக்கு எப்போதெல்லாம் போதைப்பொருளின் எண்ணம் வருமோ அப்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று செப்புவேன். அப்படிதான் என் மனத்தை கட்டுப்படுத்த பழகினேன்.

ஆரம்பத்தில் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபெறவே நான் மஹாதேவரின் அருளை நாடினேன். காலப் போக்கில் தான், அவர் எப்போதும் என்னுள் தான் இருந்திருக்கிறார்; அதை இப்போது தான் நான் உணர்ந்தேன் என்பதை அறிந்தேன். தினமும் நான் வழிபாட்டின் மூலம் மஹாதேவரோடு பேசுகிறேன்; தியானத்தின் மூலம் அவர் பேசுவதை கேட்கிறேன். இதைவிட என் வாழ்க்கையின் வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது மஹாதேவர் தான். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், நான் முழுமையாக குணமடைந்து வெளியேறினேன். எனக்கு இனி எந்த பொருளின் மீதும் மோகம் இல்லை. மீண்டும் நிலையற்ற பொருளின் மீது மோகம் கொண்டு, மீண்டும் என்னுள் இருக்கும் மஹாதேவரை நான் மறக்க விரும்பவில்லை. எப்படியெல்லாம் வாழலாம் என்பதை சனாதன தர்மம் எனக்கு கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையில் சறுக்கும் போதெல்லாம் தூக்கிவிட மஹாதேவர் இருக்கிறார்.

ஒரு காலத்தில் பாவங்கள் செய்து வாழ்ந்திருந்தாலும், என்னையும் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்தார். சிலவேளைகளில் நான் கடந்தகாலத்தை எண்ணி வருந்துவேன். அப்போது, நீ பாவியல்ல; நீ தெய்வீகமானவன் என்பதை முதலில் உணர்ந்து கொள். நீ பாவி என்று எண்ணும் எண்ணம் தான் உன்னை பலவீனமானவன் ஆக்குகின்றது என்று என்னுள் இருக்கும் மஹாதேவர் எனக்கு அடிக்கடி நினைவுறுத்துகிறார்.

என் குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள். என்னுடைய மாற்றங்களைக் கண்டு அவர்கள் மனம் மிகவும் பூரித்தனர். இன்று என் வீட்டிலே பூஜை அறை வைத்திருக்கிறேன். அங்கு கணபதி, மஹாதேவர், தேவி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய அனைவரும் இருக்கின்றனர். தினமும் நான் அவர்களுக்கு மலர்கள் தூவி வழிபடுவேன். என்னுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று என்னுடைய வாழ்க்கை முறையான பாதையில் போகின்றது. மஹாதேவரை காணும் பாதையை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை நான் சுயநினைவுகளை இழந்து போனாலும் கூட, என் மஹாதேவரை நான் என்றுமே மறவாது இருக்க என் பெயரிலே அவரை சேர்த்துவிட்டேன்.

உடலுக்கு வலிமையை தர யோகாசனங்கள், மனத்திற்கு வலிமையை தர தியானம், ஆரோக்கியமான வாழ்விற்கு சாத்வீகமான உணவுமுறை, அனைத்திற்கும் மேலாக ஒரு தந்தையாய், நண்பராய் எப்போதும் என்னோடு இருக்கும் மஹாதேவர்....

"உங்களிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், நீங்கள் பிறந்திருக்கும் இந்த சமயம், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் தோன்றியிருக்கிறான் என்பதை கற்று தருகின்றது. ஆகவே, இந்த உன்னதமான தத்துவத்தைப் போற்றி எல்லோரையும் சமமாக நேசியுங்கள்."

Wednesday, June 10, 2015

கொத்துரொட்டி --006

ண்மையில் சாருநிவேதிதாவின் நாவல்கள் சிலவற்றை  அண்மையில் தெரியாதனமாக படித்து தொலைத்துவிட்டேன் .நாவல்களை  படித்து முடித்ததும் உண்மையிலேயே கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது .எப்படி இவரின் நாவல்களை எல்லாம் படிக்கிறார்கள் .கிட்டத்தட்ட ஆபாசத்தின் எல்லை எதுவோ அதை தொட்டுவிடுகிறார் .நாவல்களில்

இடையிடையே உலகில் இருக்கும் பெயர் தெரியாத நாவலாசிரியர்கள் அல்லது இசைஅமைப்பாளர் அல்லது இசைக்கலைஞர்கள் இவற்றில் எதோ ஒன்று அல்லது எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார் .நாவலை படித்து முடித்ததும் ஒரு வெறுமையே மனதில் நின்றது .இவரின் எழுத்து புகழ் பெற்றது ஆபாசத்தினாலா  அல்லது அதில் சிறிதளவில் இருக்கும் விடயத்துக்காகவா?

இவரின் சில நாவல்களை  படித்தபின்னர்  எனக்கும் மனதினில் ஒரு தெம்பு நானும் ஒரு எழுத்தாளராக வரலாம் என்று .சரி நான் இங்கு சொல்லப்போவதை கவனமாக படியுங்கள் .ஒரு நாவலில் சொல்கிறார் தமிழ்நாட்டில்  பெரும்பாலான ஆண்களுக்கு சர்க்கரை வியாதி .பிரஷர் இரண்டுமே இருக்கிறது  அப்போது  எப்படி அவர்களின் மனைவிமார்கள் பாலியலில்  திருப்தி அடைவார்கள் என்று கேட்கிறார்  .என்ன செய்வது இந்திய பெண்கள் என்பதால் மனதினில் குமைந்தாலும் அவர்கள் வெளியில் அதுபற்றி கதைப்பதில்லை என்கிறார். எந்த நாவல் என்று மறந்துவிட்டேன் ,சாருவின் மூளை  எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சில தினங்களுக்கு முன்னர் நானும் நண்பரும் "ரிம் ஹோட்டனில்" இருந்து கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் .ரிம் ஹோட்டன் என்றால் புரியாதவர்களுக்காக இது    ரிம் ஹோட்டன் என்பது கனடாவின் பிரபல்யமான "காப்பி சாப்". கனடாவில் அமெரிக்காவின் ஸ்ரார் பக் எல்லாம் இதற்கு கிட்ட வரமுடியாது  .ஒவ்வொரு சந்திக்கு சந்தி இக்கடை இருக்கும்.பொதுவாகவே கனேடியர்கள் கோப்பி பிரியர்கள் விளக்கம் போதுமா .

இனி விட்ட இடத்தில இருந்து நாங்கள் இருவரும் கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா ?இப்படி இருக்கும் போது எமக்கு பக்கத்து மேசையில் மூன்று பேர்  வந்து அமர்ந்தார்கள் .மூவரும் இங்கு கனடாவில் இயங்கும் ஒரு வானொலி நிலையத்தினை சேர்ந்தவர்கள் .ஒருவர் அதில் அறிவிப்பாளர் மற்றவர்கள் அதன் உயர் அதிகாரிகள் .அவர்களின் வானொலி நிலையத்துக்குரிய வாகனம்  வெளியே நிற்பதையும் அவதானிக்க முடிந்தது

.முன்று பேரும்  சான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு  கோப்பியும் அருந்தியவாறு
அளவளாவிக்கொண்டிருந்தார்கள்.இதில் மறைய இருவரும் இயல்பாக இருக்க இந்த அறிவிப்பாளர் மட்டும் அடிக்கடி எம்மைப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது .

அவரால் இயல்யாக இருக்கவே முடியவில்லை .அவர்களுடன் கதைப்பது அடிக்கடி எம்மைப்பார்ப்பது இப்படியே போகவே அவரின் மனநிலை எனக்கு தெளிவாகவிளங்கியது .என்னடா எதிரில் இரண்டு தமிழர்கள் இருந்தும் பிரபல்யமான தன்னை கண்டு கொள்கிறார்கள் இல்லையே  என்பது தான் அவரின் பிரச்சனை .புகழ்பெற்ற
பலரின் பிரச்சனையும் அதுதான் .மற்றவர்கள் தம்மை கவனிக்கிறார்களா ,அங்கீகாரம் தருகிறார்களா என்பதை கவனிப்பதே அவர்களின் வேலை .இதில் முன்னாள் பிரபலங்கள் என்றால் இந்த பிரச்னையின் வேகம் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் .அறிவிப்பாளருக்கு ஒரு ஹாய் சொன்னதோடு சிரித்தும் வைத்தேன் .அதன் பின்னர் தான் அவரால் இயல்பாய் இருக்க முடிந்தது .

நடிகை பத்மினி ரொறன்ரோவில் வந்த போது நடந்த சம்பவங்களை வைத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் .படிக்காதவர்கள் படித்துப்பாருங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது  கடந்தவாரம் இலங்கையில் நடந்த சம்பவம் .
தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் ஒரு நபர் தனது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி  சண்டை பிடிப்பாராம் .இப்படியான சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் அவர்களின் வளர்ப்பு  நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டிம்  வந்துள்ளதாம்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் இந்த நபர்   மனைவியுடன் சண்டைபிடித்ததுடன் மனைவியை பலமாக தாக்கினாராம் இந்நிலையில்  குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.
படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக தெரிய வருகிறது .

இதனால் ஆகப்பட்டது நண்பர்களே .மனைவியுடன் ண்டைபோடும் அன்பர்களே நாய் மேல் கவனம்.முக்கியமாக கட்டி இருக்கிறதா என சண்டைக்கு முதல் உறுதிப்படுத்திக்கொண்டு சண்டை தொடங்கவும் .இரண்டாவதாக நாய்க்கு மனைவிதான் உணவு வைப்பார்கள் என்றால் இன்னும் கவனம் தேவை நல்ல சங்கிலியால் கட்டவும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துகொள்ளவும்.முக்கியமாக் இப்படியான செய்தியை மனைவியின் கண்களில் படாமல் மறைத்து வைக்கவும் .நல்ல காலம் எங்கட வீட்டில் நாய் இல்லை .ஒரு முறை மகன் கேட்டதுக்கு மனைவி  சொன்ன பதில் ஒன்றை வளக்குறது காணாதோ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


டெல்லியில்  ஒரு அமைச்சரை கைது செய்திருக்கிறார்கள் .போலியாக
 சான்றிதழ் கொடுத்ததுக்காக இங்கு கைது செய்தது  சரிதான் என்றாலும் எனது மனதில் ஒரு கேள்வி இந்தியாவில் அல்லது இலங்கையில் வேலைக்கு விண்ணப்பித்தால்  அடிப்படை தகுதி இருக்கவேண்டும் ,சான்றிதழ் காட்டவேண்டும் .ஆனால் அதே இலங்கை ,இந்தியாவில் ஒரு அரசியல்வாதி பாராளுமன்றம் ,அல்லது சட்டசபை  செல்ல  அல்லது அதற்கும் மேலே ஏதும் பதவி வகிக்க எந்த அடிப்படை தகுதியும் இருக்கவேண்டியதில்லை .(இங்கு கனடாவில்  பட்டதாரியாக இருக்கவேண்டும்) .ஏன் இப்படியான பதவிகளுக்கு வருபவர்களுக்கு (இலங்கை இந்தியாவில் ) அடிப்படை தகுதியை  நிர்ணயம்
செய்யக்கூடாது . எனது கேள்வி என்னவென்றால் அடிப்படை தகுதி தேவை இல்லை என்ற நிலையில் என் டெல்லி அமைச்சர்  போலி சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கொண்டார் ? வெறும் சவுடாலுக்கா ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கீழே இருக்கும் இந்த வீடியோவை பாருங்கள் .ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் படிப்பிக்கும் இந்த நபரை பாருங்கள்  சிரித்துவிட்டு வயிற்று வலிக்கு மாத்திரை அனுப்பவும் என்று எனக்கு பின்னூட்டம் இடக்கூடாது .இப்பவே சொல்லிப்போட்டேன் .இது உண்மையில் சிரிப்புக்கிடமாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அந்த நபரின் முயற்சியை,திறமையை ,துணிவை பாராட்டுகிறேன் .ஆங்கிலம் தெரியாது என தயங்காமல் தெரிந்தவரையில் கதைக்கும் அவரது துணிவுக்கு ஒரு பாராட்டு .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்துரொட்டி பலருக்கும்  ரசிக்கும்படியாக இருக்கிறது என நினைக்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
மேலும் விடையங்களுடன்  சந்திக்கறேன்




Monday, June 08, 2015

கொத்துரொட்டி 005

ன் தொலைகாட்சி  ஊடக வலையமைப்பு பற்றி வரும் செய்திகள் ஒரே ஒரு கருத்தை மட்டுமே எனக்குள் எழுப்புகின்றன .இன்று தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சிதான் அனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மாறன் சகோதரர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடையம்தான் .தங்கள் தொலைக்காட்சியை முன்னேற்றி கொண்டே  மற்றைய  சானல்களை எல்லாம் தலைதூக்க  விடாமல்  பல அடாவடிகளை செய்தார்கள் .

அரசியல் ,அதிகாரம் ,பணபலம் .அடியாட்கள்.குழிபறிப்பு  என வழிகளில் மற்றைய சானல்களை எல்லாம் "தூக்கி அடித்தார்கள் "திமுக பதவியில் இருக்கும் வரை அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பலவருடங்களின் முன்பு ஒரு சனலின் பொங்கல் ஒளிபரப்பினை நிறுத்த தெருவைக்
கிண்டி கேபிள்களை எல்லாம் துண்டித்து தங்கள் பராக்கிரமத்தை காட்டியவர்கள் .சுமங்கலி கேபிள்விசன்  தொடங்கிய கதை ,வளர்ந்த கதை,மற்றைய சானல்களை எல்லாம் ஒதுக்கிய கதை  எல்லாம் பழங் கதை .

ஆசியாவில் இன்று அவர்கள் பெரும் பணக்காரர்கள் .ஆனால் இன்று
அவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.வானொலிகளுக்கு அனுமதி மறுப்பு இப்போது தொலைக்காட்சிக்கும்   வந்து விட்டது .ஏற்கனவே சொத்து முடக்கம் .இனி என்ன நடக்கப்போகிறது  .பணம் பாதாளம் வரை பாயப்போகிறதா ? அல்லது நடுவண் .அரசு  நேர்மையுடன் நடந்து கொள்ளுமா? பொறுத்திருந்து பார்க்கலாம் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இன்றைய தினம் இங்குநான் வசிக்கும்  ரொரன்ரோ மாநகரில் ஒரு இசை வெளியீடு நடைபெறுகிறது .‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’  தமிழகத்தின் கடைக்கோடி கடலோர கிராமங்களில் ஒன்றான இடிந்தகரை. அங்குள்ள பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளின் விளையாட்டுத் திறனையும், அந்த ஐவரில் ஒருவரான கிருஷாந்தி குமாரசாமியின் ஈழத்துப் பின்னணியையும் சுற்றிச் சுழல்கிறது கடல் குதிரைகள்.

 ஈழத்து பெண்ணான  கிருஷாந்தி, இடிந்தகரைக்கு வந்து சேர்ந்த கதையை துயரத்துடன் சித்தரிக்கும் கடல் குதிரைகள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கனடா வருகை தந்துள்ளதாகவும் அறியமுடிகிறது

இசை வெளியீட்டு விழாவில், ‘கூண்டுக்குள்ள விடுதலையை அடைக்க முடியுமா’ பாடலை,சுப்பர் சிங்கர் புகழ்  செல்வி ஜெசிகா ஜுட் நேரடியாகப் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மகி நூடில்ஸ் விவகாரம் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாக  உருவெடுத்து இப்போது ஒரு நிலைக்கு வந்துவிட்டது .இங்கு  இந்திய ,இலங்கை கடைகளில் டொலருக்கு நாலு மகி நூடில்ஸ் என விற்பதை சில காலங்களுக்கு முன்னர் கடைகளுக்கு போனபோது கண்டு இருக்கிறேன்

.இப்போது எப்படியும் கடையில் இருந்து அகற்றி இருப்பார்கள் .அது அல்ல நான் சொல்ல வந்த விடயம் .சாராயம் ,சிகரெட் என்பவற்றில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்  என எழுதி  விற்பது போல மகி நூடில்ஸ் பக்கற்றின் மீதும் இதை சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கலாம் என பொறித்து விற்காமல் விட்டார்களே என எண்ணி சந்தோசம்
அடைகிறேன் .என்ன சொல்கிறீர்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கனடாவை   இன்று ஆளும் அரசாங்கம் ஆனது பாதுகாப்பு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .இதில் ஒரு அங்கமாக இனி நாட்டுக்குள் வருபவர்கள்
விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது  பயணிகள் பயோமற்றிக் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையானது குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது  . இந்த பயோமற்றிக் சோதனை ஒரு உடலியல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கியதாக அமையும். கைரேகை பதிவு, முக அடையாளம், கை வடிவியல், கருவிழி அங்கீகாரம், விழித்திரைக்குரிய ஸ்கான் போன்ற பல இதற்குள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து உள்ளிட்ட 30 நாடுகளின் பயணிகளிற்கு இந்த சோதனை நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எனினும்  மேலதிகமாக 148 நாடுகள் இந்த வரிசையில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோமற்றிக் சோதனை ஒருவர் கனடாவிற்குள் நுழைய முன்னர் செயற்படுத்தப்படும் எனவும் விசாக்களுடன் வரும் வெளிநாட்டு பிரசைகளிற்கு மாத்திரமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வர வேணும் என்றால் முகத்திரையை கழட்டித்தனே  தீரவேண்டும் 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் இந்தியாவுக்கு வந்த நாட்களில் எனக்கு ஆச்சரியம் அளித்த பல விடையங்கள்  இருந்தன .அதில் ஒன்று அப்போதெல்லாம் நான் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்.நான் படித்தது வசித்து எல்லாம் பெரும்பாலும் திருச்சிதான் .காலேஜில் படித்த காலங்களில் எல்லாம் நண்பர்களிடம் படங்கள் பற்றி விமர்சனம் கேட்டல் உடனடியாகவே ஒரு பதில் வரும் பாருங்கள் "ஒரு வாட்டி பார்க்கலாம் " 

அப்போது எல்லாம் நான் எண்ணிக்கொள்வேன் ஒரு படத்தை  ஒரு வாட்டிதானே பார்ப்பது எதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று .பின்னர் தான் எனக்கு விளங்கியது ஒரே படத்தினை பலதடவைகள் பார்க்கும் நபர்களும் இருக்கிறார்கள் என்று .உண்மையில் "அந்த "ஒரு வாட்டி பார்க்கலாம்" என்பதன் அர்த்தம் தான் என்ன ? இன்று ஆளும் வளர்ந்து அறிவும் வளர்ந்துவிட்டது தமிழ் படங்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதாகிவிட்டது என்னைப் பொறுத்தவரையில் .இப்போது எல்லாம் "ஒரு வாட்டி பார்க்கிறமாதிரி படம் எடுக்கிறார்களா என்ன ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவை பற்றிய சர்ச்சை ஓய்வுக்கு வந்தபின்னர் நான் எழுதுகிறேன் .உண்மையில் தப்பும் தவறுமா நாம் எழுதும் பதிவுகளையே !!!!!!! மற்றவர்கள் சுடும்போது எமக்கே கோபம் வரும் போது தான் இசையமைத்த பாடல்களை மற்றவர்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தும் போது படைப்பாளிக்கு வரும் கோபம் தார்மிக அடிப்படையில் நியாயம் ஆனதே .முன்னைய காலங்களில் விபரம் இல்லாமல் தான்   செய்த காப்புரிமை தவறுகளை இப்போது இளையராஜா சீர் செய்வதில் எந்த தவறும் இல்லை .தற்கால இசையமைப்பாளர்கள் புத்திசாலிகள் விபரமாக இருக்கிறார்கள் .சரி வேண்டுமானால் எம் .ஸ் .விசுவநாதனிடம் கேளுங்கள்  இளையராஜாவினைவிட பெரிய ஒரு பெரு மூச்சினை விடுகிறாரா இல்லையா பாருங்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராகுல் காந்தி புதுக்கச்சையோடு பாஜகா எதிராக களத்தில் குதித்திருக்கிறாராம் .உண்மையில் இந்தியாசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பெரும்பாலான காலங்களில் ஆட்சியில் இருந்தது கொங்கிரஸ் கட்சிதானே .இந்தியா இன்று இப்படி இருக்கிறது ,அப்படி இருக்கிறது என்று சொல்லும் ராகுல் காந்தி இந்த நிலைக்கு தனது
கட்சிதான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வாரா ? காந்தி சொன்னபடி கட்சியை கலைத்திருந்தால் இன்று இந்தியா இப்படி இருந்து இருக்குமா ஊழலை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தே உங்கள் கட்சிதானே  அய்யா ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் ஒரு அன்பர் என்னை கேட்டார் கொத்துரொட்டி என்றால் என்ன என்று ஈழத்தில் கொத்துரொட்டி என்பது தமிழகத்தில் கொத்து பரோட்டா .விளக்கம் சரியா 
ஆனால் காரம் மிக அதிகமாக இருக்கும் .சில வருடங்களுக்கு முன்னர் தாம்பரம் பகுதியில் ஒரு கடையில் இலங்கை சுவையில் கிடைத்தது.கடைக்கு வெளியே 
விளம்பரம் இருக்கும் சிலோன் கொத்து பரோட்டா என்று இப்பொது இருக்கிறதா என்று  தெரியவில்லை .திருச்சிக்கு சென்றால் சிறீனிவாச நகர் ,சுந்தர் நகர் பகுதிகளில் ஈழத்தவர்களின் கொத்துரொட்டி கடைகள் இப்போதும் இருக்கின்றன .சாப்பிடலாம் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி  மீண்டும் சந்திப்பேன் .புதுப்பதிவுடன் !

Tuesday, May 26, 2015

கொத்து ரொட்டி-- 004





அ ண்மையில் இங்கு கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில சஞ்சிகை கனடாவில்  இருக்கும் பெரும்தொழில் அதிபர்களை பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது .பலருடைய பேட்டிகள் பலவிதமான பின்னணிகள் ,சுவாரசிகமான சம்பவங்கள் அந்த பேட்டிகளின் இடையே இறைந்து கிடந்தது .அந்த சம்பவங்களை எல்லாம் நான் இங்கு எழுதப்போவது இல்லை .

எல்லாப் பேட்டிகளிலும் ஒரு மைய இழையான ஒரு கருத்தினை காணமுடிந்தது .பெரும்பாலான தொழிலதிபர்கள் தெரிவித்தது
தாங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியில் இறங்கும் போது தங்கள் மனதில் தொழிலில் வெற்றிபெறுவோம் என்ற மனநிலையை விட தோல்வியடைந்தால் அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும் என்பதுடன் எப்போதும் எச்சரிக்கையுடன் தான் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும்
அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார்கள் .உண்மையில் தோல்வி அடைந்துவிட கூடும் என்ற எச்சரிக்கையே அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியிருந்தது .

உண்மையில் நீங்களே நினைத்துப்பாருங்கள்  வளைவில் திரும்பும்போது  எதிரே வாகனமோ, மனிதர்களோ ,இல்லை வேறு ஏதாவதோ எதிர்ப்படும் என எண்ணி எந்தநேரமும் பிரேக்கில் கால் வைக்க தயாராக செல்பவன் சிறந்த சாரதியா அல்லது இவற்றை எல்லாம் எண்ணாமல் அலட்சியமாக சென்று விபத்தில் சிக்குபவன் சிறந்தவனா ?ஒரு போர் வீரன் சண்டைக்கு போனால் எப்போதும் தன்னை நோக்கி குண்டுகள் வரும் என்று எதிர்பார்த்து எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் அவதானிப்பவனே வீட்டுக்கு மீண்டு வரமுடியும் .இப்படி பல உதாரணங்களை காட்டமுடியும் .

முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் பலரையும்  பல சமயங்களில் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது .இதற்கு உதாரணமாக ஓசோ சாமியார் (ரஜனிஸ்) சொன்ன கதை ஒன்று .புத்திசாலித்தனமான ஒரு
முன்னெச்சரிக்கை எப்படி ஒரு உயிரை காப்பாற்றியது சரி கதையை பார்ப்போமா?

கொரில்லா குரங்குகளை பிடித்து விற்பவர் ஒருவர் ஆபிரிக்காவுக்கு போனார் குரங்குகளை பிடிப்பதற்காக .அங்கு ஒரு  பெரிய வேடைக்காரனை சந்தித்து தனது தேவையை சொல்லி ஒரு கொரில்லாவை பிடித்துக்கொடுக்க எவ்வளவு காசு  என்று கேட்டார் .

அதற்கு அந்த வேட்டைக்காரன் சொன்னான் எனக்கு 500 டொலரும் என்னுடன் துப்பாக்கியுடன் வரும் குள்ளனுக்கு 500 டொலரும் அடுத்து என்னுடன் வேட்டைக்கு வரும் என்னுடைய நாய்க்கு 500 டொலருமாக
1500 டொலர் தரவேண்டும் என்றான் இதைகேட்ட குரங்குகளை பிடித்து விற்பவர் குழம்பிப்போனார் எதற்கு 500 டொலர் நாய்க்கு என்று யோசித்தவாறே 1500 கொடுக்கப்போகிறோம் எப்படி பிரித்தால் எனக்கென்ன என்று வேட்டைக்காரன் சொன்ன தொகைக்கு சம்மதம் தெரிவித்தார் .அத்துடன் வேட்டைக்கு வந்து தானும் பார்வை இடப்போவதாக சொல்ல வேட்டைக்காரன் சம்தித்தான்.

வேட்டைக்கு சென்றார்கள் ஒரு மரத்தில் கொரில்லா அமர்ந்திருந்ததை கண்ட வேட்டைக்காரன் மெதுவாக மரத்தில் ஏறி குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் ஓங்கி அடித்தான் .குரங்கு சுருண்டு  தரையில் விழுந்தது .மறுகணம் வேட்டைக்காரனின் நாய்  ஓடி வந்து குரங்கின் பால் உறுப்பை இறுக்கி கவ்விப்பிடித்து குரங்கை அசையாமல் செய்ய மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரன் கொரில்லாவை பிடித்து ஒரு கூண்டில் அடைத்தான் .

இதைக்கண்டு ஆச்சரிய்ம்டைத்த குரங்கு விற்பவன் .இதைப்போல ஒரு ரெக்னிக்கை நான் இதுவரையில் பார்த்தே இல்லை உனக்கும் நாய்க்கும் தலா 500 டொலர்கள் தருவது நியாயம் தான் ஆனால் அந்த குள்ளனுக்கு என்ன வேலை அவனுக்கு எதற்கு 500 டொலர் என்று கேட்க வேட்டைக்காரன் சொன்னான் .அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் .பிறகு உங்களுக்கு புரியும் என்றான் .வேட்டைக்காரன் .


                                   



கொரில்லா வேட்டை இப்படியே தொடர்ந்து அந்தக்காட்டில் நடந்துவந்தது .இவர்கள் இப்படி குரங்குகளை பிடிப்பதை ஒரு புத்திசாலி குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது .வழக்கம் போல வேட்டைக்காரன் மரத்தில் ஏறி அந்தக்குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் அடிக்கப்போகும் போது  குரங்கு முந்திக்கொண்டு வேட்டைக்காரனின் தலையில் அடித்து அவனை தரையை நோக்கி தள்ளிவிட்டது .

தரையை நோக்கி விழுந்துகொண்டே வேட்டைக்காரன் துப்பாக்கி ஏந்திய குள்ளனை நோக்கி கத்தினான் ."விரைவாக  அந்த நாயை சுடு " என்று

இதுதான் வழிமுறைகளை உண்டாக்கும் மனத்தின் புத்திசாலித்தனம் .அது சகல பரிணாமத்தினையும் முன் கூட்டியே சிந்தித்து வைத்துவிடும்  என்கிறார் ஓசோ

இதுதான் ஓசோவின் அந்தக் கதை .இனி நீங்களும் வாழ்க்கையில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பிர்கள் என நம்புகிறேன்



**********************************************************************************


இதை படிக்கும் நீங்கள்  எப்படியும் புத்தகப்பிரியர்கள் ஆக இருப்பீர்கள் என நம்புகிறேன்.புத்தகங்களை பற்றி சில விடயங்கள்

1 என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.

2 மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

3 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

4 பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று 5 மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

6 ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

7 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.


***********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானி தனது பதவியிலிருந்து ஒய்வு பெறுகின்றார்

                                  pilot                                               


கடந்த 37 வருடங்களாக எயர் கனடாவில் விமானியாக தொழில்செய்த  ஜூடி கமரன் என்ற இவர் தனது 24வயதில் 1978ல் விமானியாக பதவி ஏற்றார். அந்த காலகட்டத்தில்  முதல் பெண் விமானியாக கமரன் பதவி ஏற்றது ஒரு திருப்பு முனையாக அமைந்ததால் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. கடந்த ஞாயிற்றுகிழமை Munich ல் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானத்தை  தரையிறங்கிய கமரன் தனது இறுதி மரியாதைக்கு அறிகுறியான தலைவணக்கத்தை தெரிவித்தார்.அத்துடன் அவரது விமானத்துக்கு நீரால் (water cannon salute) மரியாதையும் செலுத்தப்பட்டது


                                 pilot1



பின்னர் விமானநிலையத்தில் திரண்டிருந்த நண்பர்கள் மத்தியில் பேசும் போது தான்  தனது 37வருடகால பதவியை தான் மிக பெரிய அளவில் நேசித்ததாகவும் வேலையின் அருமையை தான் இப்போது உணர்வதாகவும் குறிப்பிடதுடன்   . எதிர்வரும் காலங்களில் அதிக அளவிலான பெண் விமானிகள் உருவாக வேண்டும் என விரும்புவதாக கமரன் கூறினார். தற்சமயம் 5 சதவிகிதமான பெண் விமானிகளே  உள்ளதாக கூறப்படுகின்றது.


**********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்த்தீர்கள் .இந்தியாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்க்க ஆவலா? 


இவர்தான் இந்தியாவின் முதல் விமானம் செலுத்தும் அனுமதியைப் பெற்றவர் .



*******************************************************************************

Wednesday, May 20, 2015

கொத்துரொட்டி -003 (தொழில்நுட்பம்)

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும்இந்தப் பதிப்பே விண்டோசின் இறுதிப்பதிப்பு என்பதுடன் இனி அப்டேட்கள் மடடுமே காலத்திற்கு காலம் வரும் எனவும் சொல்லியிருக்கிறார்கள் .இந்நிலையில் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமானது ஒரே நேரத்தில் 7 வகையான பதிப்புக்களாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







வெவ்வேறு சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு Home, Mobile, Pro, Enterprise, Education, Mobile Enterprise மற்றும் IoT எனும் 7 பதிப்புக்களாக இவ் இயங்குதளம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விண்டோஸ் இயங்குதளம் உள்ள  கணனிகளின் தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி ஏற்கனேவே  தரப்பட்டுள்ளமை அறிந்ததே.இக்கடவுச் சொற்கள் இன்றைய கால  தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.அதாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் Windows Hello எனும் புதிய கடவுச் சொல் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது கருவிழி, கைவிரல் அடையாளம் அல்லது முகத்தினை வைத்து   விண்டோஸ் 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனி அல்லது ஏனைய சாதனங்களினுள் நுழையும் முறையாகக் காணப்படுகின்றது .இன்னும் சில காலங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இன்றைய கால  கட்டத்தில் இணையம் இல்லை என்றால் தினசரி வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு .உலகமே வந்து விட்டது .ஆனால் 
இணையம் பற்றிய பல சுவாரசியமான  தகவல்கள் பலருக்கும் தெரியாதவை.அவற்றில் சிலவற்றை நான் இங்கு தொகுத்திருக்கிறேன் .

* இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4 பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.

* உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.

* தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் (Spam) ஆகும்.

* உலகின் முதல் ட்வீட்டினை அதன் நிறுவனர் ஜாக் டார்சீ (Jack Dorsey)2006 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி பதிந்தார். தற்போது தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் பதியப்படுகின்றன.

* தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும் (Website), 250 மில்லியன் வலைப்பதிவுகளும்  (Blog) பயன்பாட்டில் இருக்கின்றன.

* ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் (Domain) பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது.

* பேஸ்புக் தளத்தில் உறுப்பினர் எண்ணிக்கை  1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது. பதினேழு வீத  மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.

* இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை “What is”

* GIF format ஸ்டீவ் வில்கே (Steve wilke)என்ற கணனி சேவை பொறியாளரால் 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

“Gangnam Style” என்ற பாடல் யூடியூப்பில் அதிக பேர் பார்த்த வீடியோவாக இருக்கிறது. இதுவரை 2 பில்லியன் பேர் இதை பார்த்துள்ளனர்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது அன்றோயிட் போன்கள் ஆகும் .இதில் தற்போது வந்துள்ள 
 லிபாப் 5.0 பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் 

கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று பல பதிப்புகள் 
  வந்துவிட்டன.இதில் செய்யப்பட்டிருக்கும்  சில் மேம்பாடுகள் ஆவன 

* உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பரிமாறிக்கொள்ளலாம்  

* ஆப் நோட்டிபிகேஷன் (App notification) சென்று எந்த அப்ளிகேஷன்கள் (APP)  உங்களை தொந்தரவு செய்யும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

* ஆப்ஸ் செட்டிங்ஸ்க்கு (App settings) ஏற்ப லொக்  ஸ்கிரீனிலும் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

* நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் போனை வழங்கும் போது  Guest mode பயன்படுத்தலாம்.

* Do not disturb என்ற  Option மூலம் இரவு நேரங்களில் பயனாளிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க ஆன்டிராய்டு 5.0 அனுமதிக்கின்றது.

* ஸ்மார்ட்வாட்ச் (Smart watch) முதல் ஸ்மார்ட் டிவி (Smart TV) வரை அனைத்து கருவிகளுடனும் புதிய அப்டேட் மூலம் இணைக்க முடியும்.

*தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட் மூலம் பேட்டரி பயன்பாடு அதிகமாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நீங்கள் காசு கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை இலவசமா பெற வேண்டுமா .இந்த தளத்திற்கு செல்லுங்கள் .பெரும்பாலும் நல்ல தரமான மேன்பொருடகளை தருகின்றனர் .அனால் ஒரு மென்பொருள் அந்த நாள் மட்டுமே இலவசம் இன்று Ashampoo Media Sync 1.0.2 எனும் மென் பொருளை இலவசமாக கொடுக்கின்றனர் 

ஒவ்வொரு நாளும் வேறு வேறு மென்பொருட்கள் .தேவைப்பட்டதை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் .உங்கள் மின் அஞ்சலோ வேறு எதுவுமே கொடுக்க தேவை இல்லை .பயன்படுத்துங்கள் .நல்ல தரமான வைரஸ் எதிர்ப்பு மென் பொருளை  உங்கள் கணினியில் வைத்திருங்கள் .வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் ஒன்றே ஒன்றுதான் உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் .அனால் மல்வெயர் .அட்வெயர் எதிர்ப்பு மென்பொருட்கள் எத்தனையும் நிறுவி நீங்கள் பயன்படுத்தலாம் .

மீண்டும் சந்திக்கிறேன் .

முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை!


விகடன் தளத்தில்   வாசகர் பக்கம் எனும் பகுதியில் சிவா ( திருத்தணி)  என்னும் வாசகர் எழுதிய ஒரு விடயத்தினை இங்கு பகிர்ந்திருக்கிறேன் .
அனந்த விகடன் மற்றும் வாசகர் சிவா (திருத்தணி) அவர்களுக்கு   எனது நன்றிகள் .

மூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் பலரும் சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும், புதுப்புது கோணங்களில் கூறி தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த வாட்ஸ் அப் மெசேஸ் ஒன்று இது. 

முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள். 

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம். 

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம். 

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.
தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. 
    
- சிவா ( திருத்தணி)