Saturday, December 09, 2006

நான் ஒரு தடவை சொன்னா................

எனது மனதில் எழும் கருத்துக்களைப் மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்
வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.
அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்
தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)


இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்
தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று
நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)


மீண்டும் சந்திப்போம்.

2 comments:

கானா பிரபா said...

வணக்கம் கரிகாலன்

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்தும் படித்துவருகின்றேன், புதிய முயற்சியையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

Anonymous said...

நன்றி கானாபிரபா.