Monday, April 13, 2020

தமிழன்டா!!

இலங்கை, இந்தியாவில் லாக்டவுன் காரணமாக சாராய கடைகள் பூட்டி இருக்கின்றன. தமிழகத்தில் குடிமக்கள் பலர் காலையில் கண் விழிப்பதே சாராய கடையில்தான்.

ஒருநாள் கூட சாராயம் இல்லாமால் இருக்க முடியாதவர்கள் இவர்கள். பலருக்கு காலையிலேயே கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்.சாராயம் உள்ளே போனால்தான் நிதானத்துக்கே?? வருவார்கள்.

இப்போது மது கிடைக்காத படியால் பல வீடுகளில் குடும்பத்தகராறுகள், கொலைகள் நடக்க தொடங்குகின்றன.

அத்துடன் "குடிமக்கள்" பலர் மன உளைச்சல், உடல் வலிகள் காரணமாக தற்கொலைகளும் செய்கிறார்கள்.

இப்படி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் இருப்பவர்களில் நடிகை மனோரமாவின் மகனும் ஒருவர். அவர் ஒரு பெரும் குடிமகன்.

அடுத்து நேற்று ஒருவர் hand sanitizer அருந்தி இறந்து விட்டார். இன்னும் இருவர் வித்தியாசமாய் சிந்தித்து After Shaving Lotion அருந்தி வெற்றிகரமாக உயிரை விட்டிருக்கிறார்கள்.

இன்னும் இருவர் வார்னிசை எடுத்து குடித்து மேலோகம் போய் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை.

இங்கு கனடாவில் LCBO எனப்படும் சாராய கடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பிரிவினுள் கொண்டு வந்து , திறந்து வைத்திருக்கின்றனர். என்ன திறந்திருக்கும் நேரத்தினை மட்டும் குறைத்திருக்கிறார்கள்.

ங் , மேற்படி கடைகள் அரசுக்கு உரியவை. பூட்டினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்

கஞ்சா விற்பனை கடைகளையும் அத்தியாவசியம் என்று சொல்லி திறந்து வைத்திருந்தவர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பவை தனியார் கடைகள். கடைகளை பூட்டி விட்டு ஆன்லைனில் விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

நேற்று பார்த்தேன் லொட்டொவும்(லாட்டரி ) இணையத்தில் வாங்கலாமாம்... இனி என்ன இணையத்தில் வாங்கி, இணையத்தில் முடிவை பார்த்து பொழுதை கழிக்கலாம்.

 நன்றி .....

2 comments:

KILLERGEE Devakottai said...

இப்படிப்பட்டவர்கள் மரணிப்பதே நல்லது பூமியின் பாரம் குறையட்டும்.

சிகரம் பாரதி said...

தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 33 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

33ஆவது வலைத்தளம்: என் மன வெளியில்!

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்

தங்கள் பதிவு - எமது திரட்டியில்: தமிழன்டா!!

முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி!

-வலை ஓலை