Friday, February 22, 2013

இலங்கை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து செய்த தமிழர் மீதான படுகொலை

 

ஒரு வரலாற்று பார்வை :-

அம்பாறை உடும்பன் குளப்படுகொலையின் 27 வது நினைவு தினம் கடந்த பத்தொன்பதாம்  திகதியாகும் சிறிலங்கா இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற சிறீலங்கா இராணுவத்தினரும் இஸ்லாமிய ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்

இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின் ,தலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்

இந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் . முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

சரி குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்கிறிர்களா? குசும்புதானே  உங்களுக்கு

எத்தனை எத்தனையோ படுகொலைகள்.ஒன்றிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையே இல்லை .இலங்கையில் நாயைக் கொன்றால் விசாரணை உண்டு .தண்டனை உண்டு .ஆனால் மனிதனை கொன்றால் எதுவுமே கிடையாது அந்த மனிதன் தமிழனாக இருக்கும் பட்சத்தில்.

இதுதான் இலங்கையின் உண்மை நிலை 

No comments: