Showing posts with label அனுபவம்இஸ்லாம்.முஸ்லிம். Show all posts
Showing posts with label அனுபவம்இஸ்லாம்.முஸ்லிம். Show all posts

Friday, February 22, 2013

இலங்கை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து செய்த தமிழர் மீதான படுகொலை

 

ஒரு வரலாற்று பார்வை :-

அம்பாறை உடும்பன் குளப்படுகொலையின் 27 வது நினைவு தினம் கடந்த பத்தொன்பதாம்  திகதியாகும் சிறிலங்கா இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற சிறீலங்கா இராணுவத்தினரும் இஸ்லாமிய ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்

இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின் ,தலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்

இந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் . முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

சரி குற்றவாளிகள் என்ன ஆனார்கள் என்கிறிர்களா? குசும்புதானே  உங்களுக்கு

எத்தனை எத்தனையோ படுகொலைகள்.ஒன்றிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையே இல்லை .இலங்கையில் நாயைக் கொன்றால் விசாரணை உண்டு .தண்டனை உண்டு .ஆனால் மனிதனை கொன்றால் எதுவுமே கிடையாது அந்த மனிதன் தமிழனாக இருக்கும் பட்சத்தில்.

இதுதான் இலங்கையின் உண்மை நிலை 

Wednesday, February 20, 2013

முஸ்லிம் பதிவரின் ம(த)னக்குமுறல் !!!!!!!!!

அண்மையில் வலையில் எதிர்பாராமல் ஒரு பதிவரின் மத (ன) குமுறலை படிக்க நேர்ந்தது மத வெறி எப்படி மனிதத்தினை கொல்கிறது பார்த்திர்களா?

முஸ்லிம் பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கைகளும் இது அவரின் பதிவு .எப்படி எப்படி மதவெறி இஸ்லாமியர்களை ஆட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்

இனி அவரின் பதிவு :-------

பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா & சுப்ரமணியன் எஸ்.பி., யிடம் மனு.

கடலூர்:(( JULY – 2010)  சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25).சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள்பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் சுப்ரமணியன், பர்வானா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.

மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி M.PHIL  படித்து வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல் தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து. ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!  எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.  வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ்,ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே,ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.

“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD  பிளேயர்கள் with USB-PORT.

வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>   DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>

லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >>  பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

  • மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.
  • யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.
  • மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?
  • தனி அறையில் இருந்து T.V  யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
  • கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
  • இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்…

என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று திட்டமிட்டு செயல்படும் நாசகார கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி, நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து வலையில் சிக்கவைப்பது எப்படி, மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக இருந்து எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில் சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த குழுமத்தில் பார்த்து இருக்கிறோம்.

நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஈமானுக்கு சோதனையான காலம் இது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த பின் மணமுடியுங்கள்.

தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.இது அல்லாஹ்வின் வாக்கு.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் – நாகரிகத்தையும், கவுரவத்தையும்,  அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக!  ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

உங்கள் மார்க்க சகோதரன்,

S.N.அப்துல் அலீம் ( சவூதி ஓஜர் –ரியாத் )  அய்யம்பேட்டை

எங்கள் இயக்கமும்+மார்க்கமும் தீனுல் இஸ்லாமாகும்,அதன் உறுப்பினர்களாகிய நாங்கள் முஸ்லிம்கள்.

மார்க்க கல்வியை தேடுவது (கற்பது) அனைத்து முஸ்லிம்கள் ( ஆண்-பெண் ) மீதும் (கட்டாய) கடமையாகும்.

அவரின் கருத்து இது. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Monday, November 19, 2012

துப்பாக்கி -- ஸிலிப்பர் கில்லர் - -சிறுவர்கள்

 

Terror: Children train with pistols

நன்றி ---மிரர்

ன்று வெளியான இங்கிலாந்தின மிரர் பத்திரிகையில் வெளிவந்த படத்தினையே மேலே பார்க்கிறீர்கள் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வாஸிரிஸ்தான் பகுதியில் சுமார் 5 வயதான இளம் சிறுவர்களை  மூளைச் சலவை செய்து, ஜிகாதி எனப்படும் தற்கொலைப் படையினராக அல்குவைதா தீவிரவாதிகள் மாற்றும் படமே இதுவாகும் .இந்தப்பகுதி ஆப்கானுக்கு மிகவும் அருகில் இருக்கும் பகுதியாகும்  

ஏற்கனவே இறந்த தீவிரவாதிகளின் ஆதரவற்ற குழந்தைகளை , தந்தையர் வழியிலேயே(ஜிகாதி) அவர்களும் செல்ல வேண்டும் என்று போதிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்களுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி தரப்படுகிறது. .

தலிபான்களுக்காகப் போராடும் கூலிப் படையினரைத் தயார் செய்து அனுப்பும் அமைப்பாக அல்குவைதா மாறியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதச் சதிச் செயல்கள் இந்த அமைப்பினால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அல்குவைதா அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்ப சிறுவர்களைத் தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தீவிரவாதம் குறித்த ஆய்வுப் பிரிவின் தலைவர் நீல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான இந்த செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துலக ஊடகங்களில்  இடம்பெற்றுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது .உணமையில் இது ஒரு கண்டிக்கப்பட வேண்டிய செயல்.உணமையில் இவ் சிறுவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாதவர்கள் .எது சரி எது  பிழை என உணரமுடியாதவர்களை தீவிரவாதிகள் தமது நலன்களுக்காக,மதத்திற்காக பயன்படுத்துவது என்பது அவர்கள் வணங்கும் இறைவனாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது .இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு செயல் ஆகும் .

மதம் என்பது மனிதனை வழிப்படுத்துவதற்கே  அன்றி மதமே வாழ்க்கை அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?

Sunday, November 04, 2012

முஸ்லிம்களின் சாபமா சான்டி புயல் ???

 

ட்வீடரில் கருத்து தெரிவித்துள்ள சில முஸ்லிம் மதப்பெரியவர்கள் அமெரிக்காவை தாக்கிய சாண்டி சுறாவளி முஸ்லிம்களின் சாபம் எனவும் அல்லாவை அவமதித்ததால் தான் சான்டி அமெரிக்காவை தாக்கியதாக கருத்து வெளியிட்டுள்ளனர் .

ஏற்கனவே அல்லவை பற்றி படம் எடுத்து அதனால் உலகெங்கும் அமெரிக்கா வினை எதிர்த்து கலவரங்கள் ஏற்பட்டதும் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதும் கடந்தகால சம்பவங்கள். இதனை மனதில் வைத்து சில மதப்பெரியவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர் ட்விட்டரில் .

எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் : அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்,ஆச்சரியப்படுகின்றனர் . நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் அமெரிக்கவை பழிவாங்கினான்?? என்பதே எனது கருத்து.

இவரது டுவீட்டுக்கு ஒருவர்  பதில்  தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும்  இந்தப் புனிதப் புயல்??? என்று கூறியுள்ளார்.

அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். எனவும் அவர் அந்த ட்வீட்டில் சொல்லியிருக்கிறார் .இனி இன்னொரு மத குருவின் செய்தி

சவுதியை   சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் ?என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.ஆனால்  அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி இறந்தவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் இதற்கு பதில்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது, என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதப்பெரியவர்களா?.

Saturday, October 06, 2012

த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த "ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு (Shahin Najafi) ஈரானிய ஷியா  முஸ்லிம்கள்  ம்ரணதண்டனை விதித்துள்ளனர்.
அவரது  த(கொ)லைக்கு 100,000 டொலர் விலை வைத்துள்ளனர். ஈரானிய மதகுருக்களுக்கு எதிராகப் பாட்டெழுதிப் பொது மேடைகளில் பாடி வருவதால் நாஜாஃபி மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் இத் தண்டனையானதுத ஈரானிய  ஷியா முஸ்லிம் சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய  இமாம்களைப்(மதகுரு) பற்றி கேலி செய்யும் பாடல்களை நாஜாஃபி பாடியதால் அவரிற்கு  ஈரானின் ஷியா சமயத் தலைவரான அயாதுல்லா சாஃபி (Ayatollah Safi) கோல்படுயகானி  மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. வெகுகாலமாக ஈரானிய சமயப் பெருமக்களோடு கருத்து வேறுபாடு கொண்டதனால் நாஜாபி 2005 முதல் ஜெர்மனியின் கோலோனில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த வருடம் மே மாதத்தில் “nagi” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் ஷாஹின் நாஜாஃபி. இப் பாடல் தொகுப்பில்  ஈரானிய சமூகத்தைப் பற்றியும் ஈரானிய அரசியலைப் பற்றியும் விமர்சித்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்தே ஃபத்வா எனப்படும் சமயத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியத் தீவிரவாதி யாராவது நாஜாஃபியைக் கொல்லும் ஆபத்து உள்ளது.
எனவே இவர் தற்போது  காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறார். ஈரானின் ஷியா மதகுருவான சஃபி மீது காவல்துறையில் முறையீடும் செய்துள்ளார். 

இது தொடர்பாக நாஜாஃபி  கூறும் பொழுது  தனக்கு சமயத்தை(இஸ்லாத்தினை) இழிவுபடுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றும், சமூக நடப்பையே தனது பாடலில் வெளிப்படுத்தியதாகவும், இதனைத் திரித்துக் கூறி தன் மீது வெறுப்பைப் பரவ விட்டிருப்பதாகவும் கூறினார்.
நான் இளைஞன், என்னால் இசைநிகழ்ச்சி நடத்தாமல் சும்மா இருக்க இயலாது என்றும்  ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் கருத்துக்களை வாளால் எதிர்கொ(ள்)ல்லும் சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.

இது தொடர்பாக பத்திரிகையில் ( Newyork Times) வந்த செய்தியின் சுட்டி:-

http://www.nytimes.com/2012/05/15/world/middleeast/shanin-najafi-iranian-born-rapper-faces-death-threats-over-song.html?_r=0