Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, November 06, 2012

நானும் ஒரு தாய் -----குறும்படம்

 

அண்மையில் ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது  .படத்தினை பார்த்த பின்பு தான் இயக்குனர் பற்றி தேடியபோது அவர் ஈழத்தினை சேர்ந்தவர், மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன்  இயக்குனர் பாலுமகேந்திராவின்  மாணவர் என்றும் அறிய முடிந்தது .அத்துடன் இக் குறும் படம் இந்தியாவில் பல விருதுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நான் படத்தினை பற்றி விமர்சனம் எழுதுவதை விட நிங்களே சில நிடங்களில் இப்படத்தினை பார்த்துவிட்டு விமர்சிக்க்லாமே.

நானும் ஒரு தாய்

 


கிழே இருக்கும்  இந்த வீடியோவினைப்பாருங்கள் இந்த மேற்கத்திய இசைக்கலைஞர் எவ்வளவு இலாவகமாக எமது தவிலை வாசிக்கின்றார் என்று .சினிமா இசையை தவிர வேறு இசைகளை ரசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதையும் ரசிப்பார்கள் ஏன் எதிர்பார்க்கலாம்.

 

தனிமையில் தவிலை எப்படி கையாளுகிறார் பாருங்கள் .

நன்றி /வணக்கம்

Saturday, October 27, 2012

பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு

 

ப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வமாகக் வந்திருப்பிர்கள். இக் கேள்விக்கெல்லாம் விடை தெரிந்தால் பலருடை குடும்ப வாழ்க்கை இனிதாகவே இருக்கும் .ஆனால் பெண்களின் மனதினை ஆழ்கடலுக்கு ஒப்பிடுவார்கள் .ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த ஆழ்கடலின் ஆழத்தினை அளவிட்டுப்பார்த்து விடலாம் .அதாவது பெண்களின் மனதை பற்றி அறிந்து கொள்ளலாம்

.

பெண்களின் மனதை அறிந்து கொள்ள தேவைபடுவது   எல்லாம் கொஞ்சம் அன்பும். பாசமும்,அக்கறையும் அத்துடன் நீங்கள் உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கின்றிர்கள் என்ற நம்பிக்கையுமே.இதைப்படிக்கும் .ஆண்களே சொல்லுங்கள் உங்களுக்கு உடல் நலம் இல்லாமல் போகும் பொது உங்கள் மனைவி உங்கள் மீது காட்டும் கரிசனைக்கும் ,உங்கள் மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போகும் போது நீங்கள் காட்டும் கரிசனைக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். இதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆவீர்கள் .

சரி விடையத்துக்கு வருகிறேன் .பெண்களைப்பற்றி சில உளவியலாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகளை இனி நான் சொல்லப்போகிறேன் .நான் சொல்லுவது சரிதானா என நீங்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்,

  • பெண்கள் பல திறன்  கொண்டவர்கள் .அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும்..போனில் பேசிக்கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்து கொண்டு பொஸ் வருகின்றாரா எனவும் கவனிக்க அவர்களால் முடியும்.ஒரே நேரத்தில் அடுப்பில் நாலு கறி வைத்து  சரியாக உப்பு, புளி,காரம் போட்டு சமைக்க முடியும் .அவர்களின் முளையும் அதற்கேற்ப பல்முகத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஆண்களால் இப்படி  ஒரே நேரத்தில் எல்லாவறையும் செய்ய முடியாது.
  • ஆண்கள் பொய் பேசினால் பெண்களால் உடனேயே  கண்டுபிடித்துவிடமுடியும்.ஆண்களின் முகபாவனை ,அங்க அசைவுகள் ,வார்த்தை உச்சரிப்பு இவரை வைத்து பொய் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் .ஆண்கள் பெண்களுடன் இருக்கும் போது இவற்றை எங்கு கவனிக்கிறார்கள் .விளைவு அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று சொல்லிகொண்டு தாடி வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள் .இதிலும் ஆண்கள் சொதப்பல் தான் .
  • குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டு இருப்பார்கள் ,ஆனால் பெண்கள் பிரச்சைகளை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அன்புக்குரியவ்ர்களிடம் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவார்கள் .
  • ஆண்களின் சிந்தனை, செயல் எல்லாம் மதிப்பு ,வெற்றி ,தீர்வு பரறறியே இருக்கும் பொதுவாக சுயநலவாதிகள் ,அனால் பெண்களின் சிந்தனைகள் எல்லாம் குடும்பம் ,நண்பர்கள்,உறவுகள் இப்படிதான் இருக்கும் .
  • பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ,ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள் .
  • உறவுக்குள் ஒரு பிரச்சனை என்றால் பெண்களால் அவர்களின் எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாது .ஆண்கள் அப்படியல்ல .
  • ஒரு ஆண் சந்தோசமா இருக்க நல்ல வேலை வேண்டும் கூடுதலாக சந்தோசமாக இருக்க மது ,மாது ஏதாவது வேண்டும் .அனால் பெண்களுக்கு கணவன்,பிள்ளைகள் ,நல்ல உறவு நல்ல உறவினர்கள் ,நல்ல பொழுது போக்கு,நல்ல சந்தோசம் இப்படி எல்லாமே நல்லாகை இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அடைவார்கள்
  • பெண்கள் எதனையும் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்.ஆசைகளையும் ஒளிவு மறைவாகவே வெளிப்படுத்துவார்கள் ஆண்கள் நல்லதோ கெட்டதோ விடையத்தை பட்டேன போட்டு உடைத்துவிடுவார்கள்.ஆசையையும் கொட்டித்தீர்த்து விடுவார்கள் .
  • பெண்கள் இதயத்தால் சிந்தித்தால் ஆண்கள் மூளையால் சிந்திப்பார்கள்

இப்படிப்பட்ட, பெண்களை புரிந்து கொண்டவர்களை நாம் என்ன பெயரால் அழைக்கிறோம் தெரியுமா? “காதல் மன்னன் “என்று .அதாவது பெண்களின் மனதை புரிந்து கொண்டவன், பல பெண்களை வசிகரிப்பவனை பாருங்கள் என்னத்தை பார்த்து பெண்கள் இவனிடம் மயங்குகிறார்கள் என்ற கேள்வி நம்மிடம் எழும் .பெண்களை வசிகரிக்க,ஆழகு ,அந்தஸ்து ,பணம், படிப்பு தேவை இல்லை .தேவையானவை பெண்களின் மனதை புரிந்து கொள்ளும் ஆற்றல் மட்டுமே ..பெண்களே என்ன சொல்கின்றீர்கள் ?  

.இப்போது காதல் மன்னன் ஆக நீங்கள் தயாரா?இதை வாசித்த பின்னர் உங்கள் மனைவியின் அல்லது காதலியின் மனதினை புரிந்து கொள்ள நிங்கள் முயற்சி செய்வீர்களாயின் நீங்கள் காதல் மன்னன மட்டும் அல்ல நீங்கள் ஒரு மன்மத ராஜாவும் கூட .

சரி இங்கே ஒருவர் எமக்கு சொல்லித்தருகின்றார் எப்படி பெண்களை “பிக்கப் பண்ணுவது “என்று .படித்தும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதாவது பெண்களை புரிந்து கொள்ளமுடியாதவர்கள் அதன் காரணமாக பெண்களை “பிக்கப்”பண்ண முடியாதவர்கள் இவ் வீடியோவை பார்த்து பெண்களை “பிக்கப்" பண்ண  கற்றுக்கொள்ளலாம். எது வசதியோ அதனைப் பின்பற்றலாம் .முயற்சி திருவினையாக்கும் .

கரிகாலன் எப்படி என்று கேட்கலாம் ,நான் எங்கேயும் எப்போதும் ராஜா தான் அதாகப்பட்டது மன்மத ராஜா தான்!!!! 

வீடியோ :-