Friday, July 02, 2004

வெளிவந்த உண்மைகள்

உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்தி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2001லிருந்து 2003 ஆண்டு இறுதிவரை மேற்கொண்ட இந்த ஆய்வில் மனநோயாளிகளை அதிகம் கொண்டநாடுகள் மற்றும் மனநோயாளிகள் எவ்வாறு தோன்றுகின்றனர் போன்ற
விபரங்களை திரட்டுவதற்காக 14 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அதிக மனநொயாளிகளைக் கொண்ட நாடு எது என்று கண்டுள்ளார்கள் தெரியுமா? நீங்கள் நினைக்கலாம் எதாவது ஒரு ஆசிய அல்லது ஆபிரிக்க நாடாக இருக்கும் என்று அதுதான் இல்லை.
எல்லாவிதத்தாலும் வளர்ச்சியடைந்த அமெரிக்காதான் அந்தநாடு. அமெரிக்காவில் மட்டும் 26.4 வீதமானவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக உக்ரேன் நாடு இரண்டாவது இடத்தினை வகிக்கிறது.மூன்றாவது இடம் பிரான்ஸ்க்கு கிடைத்துள்ளது.

14நாடுகளில் உள்ள மனநோயாளிகளின் விபரம்

1.அமெரிக்கா -26.4
2.உக்ரெயின் -20.5
3.பிரான்ஸ் -18.4
4.கொலம்பியா -17.8
5.லெபனான் -16.9
6.நெதர்லாந்து -14.9
7.மெக்சிக்கோ -12.2
8.பெல்ஜியம் -12.0
9.ஸ்பெயின் -9.2
10.சீனா -9.1
11.ஜேர்மனி -9.1
12.ஜப்பான் -8.8
13.இத்தாலி -8.2
14.நைஜீரியா -4.7


இந்த அறிக்கையினை பார்த்தால் பொருளாதார வளங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகளவான
மனநோயாளர் இருப்பதைக்காண முடிகிறது.இதற்கு காரணங்களாக பெரும்பாலும் தனிமை,போதை,வேலைவாய்ப்பின்மை,
தனிநபர்வன்முறைகள்.
குடும்ப உறவுகள் சீரின்மை,இயந்திரமயமான வாழ்க்கைமுறைகள்
என்பவற்றைக் கூறலாம். மேலைத்தேசத்தினரின் வாழ்க்கைமுறை பற்றி எங்கோ கேட்டது
"உனது பிள்ளையும்,எனது பிள்ளையும் சேர்ந்து எங்களுடைய பிள்ளைக்கு அடிக்கிறார்கள்"
இந்த ஒரே வரியில் அவர்களின் வாழ்க்கை முறைகள் புரிகிறது தானே.
எவ்வள்வுதான் வசதிகள்,பணம்
என்பன இருந்தாலும் மனதில் நிம்மதி வேண்டும்.கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையான உறவுகள் சீராக, பாசப்பிணைப்புடன் இருக்கவேண்டும்.எல்லாவற்றிலும் மேலைநாட்டவர்களை பின்பற்றும் எம்மவர்களுக்கு இவை சமர்ப்பணம்.


ஒரு முயற்சி

சில தினங்களுக்கு முன்னர் கூகிளில் ஒரு விடயம் சம்பந்தமாக தேடிக்கொண்டுஇருந்தேன்.பின்னர் கரிகாலன் என்றபெயரினை உள்ளிட்டு தேடிப்பார்த்தேன். முதலாவதாக எனது வலைபதிவையும்
பின்னர் வேறு பல தளங்களையும் பட்டியல் இட்டு காட்டியது.இரண்டாவது பக்கத்தில்
புகழ்பெற்ற தமிழர்கள் எனும் தலைப்பில் ஒரு தளத்தினையும் காணமுடிந்தது.தளத்தினுள் புகழ்பெற்றதமிழர்கள்
எனும் தலைப்பின் கீழ் பாரதியார்,கவிஞர் கண்ணதாசன்,பெரியார்,எம்.ஜி.ஆர்,வே.பிரபாகரன் போன்ற பலருடைய வாழ்க்கைவரலாறுகள் தொகுக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.சிலருடைய விபரங்கள் மேலோட்டமாக உள்ளது. தளத்தில் பல விடயங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சிவசோதி சதீஷன் என்னும் ஒரு மாணவனால் இந்த தளம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக விபரம் உள்ளது.
புகழ் பெற்றதமிழர்கள் தொடர்பாக விபரங்கள் தருமாறு வேண்டுகோளும் காணப்படுகிறது.ஒரு மாணவனால் இப்படி ஒரு தளம் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.பல குறைகள் காணப்படினும் கூட.

Tuesday, June 29, 2004

அமைதி




உலக அமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குகள் நூலிலிருந்து..........

Thursday, June 17, 2004

யுத்தம் இல்லாத பூமி வேண்டும்.



மேலே உள்ள படத்தினைப் பாருங்கள். இதற்கு விளக்கம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
யுத்தம் எப்படி ஈழத்தவரின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

Wednesday, June 16, 2004

100 எம்.பி வேணுமா?

நேற்றைய தினம் எனது யாகூ மெயிலைத் திறந்தபோது யாகூ புது வடிவம் காட்டிற்று
100 எம்.பி இடவசதி ,10 எம்.பி மெயில் அனுப்பும் பெறும் வசதி. அத்துடன் மேம்பட்ட
ஸ்பாம் எதிர்ப்பு வசதி இப்படி பல வசதிகளுடன் உள்ளடக்கத்திலும் சிறிது மாற்றங்களையும்
செய்திருக்கிறது.அத்துடன் மேம்பட்ட படங்கள் தேடும் வசதி¨யும் யாகூ செய்திருக்கிறது.
கூகிள், யாகூ என்பனவற்றிற்கிடையான போட்டியால் இது சாத்தியமாகி இருக்கிறது. உறங்கிக் கிடந்தவர்களை
எல்லாம்
கூகிள் தனது அறிவிப்பால் எழுப்பி விட்டுள்ளது. கூகிள் எல்லாத்துறைகளிலும் அகலக்கால் பரப்பத்தொடங்கி வருகிறதை
ப் பார்த்தால் இனி வரும் காலங்களில் கடும் போட்டிகள், மோதல்கள் இருக்கும் என நம்பலாம்.
அடுத்து "பந்து" இப்போது ஹொட்மெயில் பக்கம் போயிருக்கிறது.அவர்கள் இனி வரும்
நாட்களில் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.ஆனால் அவர்கள் எதாவது செய்து தான்
ஆகவேண்டும் என்று நினைக்கிறேன், இதற்குத்தான் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது
"கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று" எதிர்க்கடையானால் என்ன எதிரிக்கடை
யானால் என்ன "யார் குற்றினாலும் அரிசி வந்தால் சரிதான்" என்கிறீர்களா?
அது.. அது.. தாங்க எனது கொள்கையும். மொத்தில் கொண்டாட்டம் எங்களுக்கு.
திண்டாடம் யாருக்கு? அவங்களுக்கு தாங்க.

Tuesday, June 15, 2004

பதில் சொல்லலாமே!

எனது வலைப்பதிவு ஆரம்பித்த நாட்களில் எனக்கு சில படங்களை வலைஏற்றம் செய்யவேண்டும் என்று ஆசை.சரி
ப்ளாகரில் வழி சொல்லி இருக்காங்கதானே என்று ஹெல்ப்பை பார்த்துவிட்டு "ஹலோ" பதிவிறக்கம் செய்து
படத்தையும் எனது கருத்துக்களையும் எழுதிவிட்டு போஸ்ட் பணிவிட்டு எனது வலைப்பதிவில் போய் பார்த்தால்
படம் ஒழுங்காயும்,எழுத்துக்கள் எல்லாம் ????? யாகவும் தெரிந்தது. சரி என்ன பண்ணலாம் என்று யோசித்துவிட்டு
அந்த பதிவை அழித்துவிட்டு மீண்டும் ஒரு முறை போஸ்ட்
செய்து பார்த்தேன்.மீண்டும் அதே படம் ,எழுத்துக்கள் எல்லாம்??????. மீண்டும் ஙே..... .அத்தோடு படம் வலையேற்றும்
ஆசையை விட்டுவிட்டேன்.
பின்னர் இரண்டொரு நாளுக்கு முன்னர் கூகிள் போய் தேடிப்பார்த்தபோது சில வலைத்தளங்களை காணமுடிந்தது.
அவைகளில் படங்களை பதிவேற்றிவிட்டு அவற்றின் இணைப்பை மட்டும் எமது வலைபதிவில் போஸ்ட்ரில் போட்டால்
விடயம் சரி. கீழே உள்ள படம் அப்படிதான் இணைத்துள்ளேன்.
நான் நினைக்கிறேன் ஹலோவால் யுனிக்கோடில் தமிழை சரியாக காட்டமுடிவதில்லை என்று, நான் சொல்வது
சரியா அல்லது வேறு எதாவது செட்டிங் செய்யவேண்டுமா? வலைப்பதிவுலகில் போஸ்ட் பல அனுப்பி ஜீமெயில்
பெற்றவர்கள்( அதாங்க! பழம் தின்று கொட்டை போட்டவங்க!) இதற்கு பதில் சொல்லலாமே!

Sunday, June 13, 2004

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..



ஒன்றரை அடி உயரத்தில் குவளையைத்தூக்கி
ரீ ஆத்தி, ஒரு கிளாஸில் பாதி நுரையும் மீதி
ரீயும், இலவசமாய் ஊர் வம்பும் தரும் நாயர் கடையின் ரீயின் சுவை,
ஞாபகத்தில் வருகிறதே..... ஞாபகத்தில் வருகிறதே....