'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.
எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.
எமது இனப்பிரச்சனை உருவாகிய ஆரம்ப காலங்களிலே வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்களும், உள்ளுரிலே வாழ்ந்த தமிழ் மக்களும், வாரம்தோறும் வெளிவந்த "Saturday Review" பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அழகிய ஆங்கிலத்தில் உண்மையைச் சுவையாக எழுதும் ஆற்றல் படைத்தவர் சிவநாயகம். அவருடைய பேனா, அரசியலின் ஆழங்களை அநாயாசமாக, அழகிய சொற்சித்திரங்களாக வடித்துத் தந்தது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சிங்களப் பத்திரிகையாளர்கள், பிறநாட்டு பத்திரிகையாளர்களின் மதிப்பையும் பெற்று உயர்ந்தவர். Saturday Review என்னும் பத்திரிகைச் செயலகத்தை தேடி யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கத் தூதுவர் முதல் பிறநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளரும் ஒரு காலத்தில் செல்வதற்கான நிலையை உண்டாக்கியவர் திரு சிவநாயகம்.
அவர் இன்று தமது எழுபத்தி ஐந்தாவது வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் 'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி". கிட்டத்தட்ட 57 வருடகால ஈழத்தமிழினத்தின் வரலாற்றை (இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல்) அவர் மிகவும் துல்லியமாக இந்நூலில் பதிய வைக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இனவிடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிப்பதைச் சரித்திர வாயிலாகப் பார்க்கலாம். நோர்வே, சுவீடன், ஐயர்லாந்து போன்றவை தமது தனித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் தனியாக பிரிந்து போயின. இந்த வரிசையிலேயே தமிழினத்தின் விடுதலையையும் திரு சிவநாயகம் இந்நூலில் ஆராய்கிறார்.
வரலாற்றாசிரியர் ஒருவர் தேதி வாரியாக, செய்திகளைப் பதியும்பொழுது, அவற்றின் தொகுதி, அவை கூறும் பாதிப்பு, காரணமாக வாசிப்பவர்களின் மனதிலே பாரத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும் தன்மை ஒன்று உள்ளது. ஆனாலும் வரலாற்றையும் சுவையாகக் கூறமுடியும் என்பதற்கு திரு சிவநாயகம் அவர்களின் எழுத்து சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
83 ஆம் ஆண்டுமுதல் தமது பத்திரிகையில் சிங்கள அரசைத் தாக்கி எழுதிய காரணத்தால் இரவோடிரவாக நாட்டை விட்டுக் கடல் வழியே இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் புகுந்தவர், அங்கேயிருந்த அரசின் ஆதரவுடன் Tamil Nation என்னும் பத்திரிகையை ஆரம்பித்து எமது விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தார். ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக வேலூர்ச் சிறையில் மூன்று வருட காலம் அல்லல்பட்டு இந்திய அரசால் நாடு கடத்தப்பட்டு பிரான்சில் தஞ்சம் புகுந்து அகதியாகப் பல இன்னல்களைச் சந்தித்தார். எனினும் மேல்நாட்டு நூல் நிலைய வசதிகளின் பயனாக, அரசியல் ஆவணங்களைப் பெற்று உண்மையான சரித்திரச் சான்றுகள் நிறைந்த இந்நூலை அவரால் எழுத முடிந்துள்ளது. புற்று நோயாளியான இவர், தமது முதுமைக் காலத்தை பிறந்த மண்ணிலே கழிப்பதற்காக இன்று நாடு திரும்பியிருக்கிறார்.
'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்னும் இந்நூலில் தானே ஒரு சாட்சியாக நின்று எழுதுவது போல எழுதுகிறார் - அரசியலும் இவர் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், இந்நூல் சுயசரிதை போலவும் சரித்திர நூல் போலவும் விளங்குவது தவிர்க்க முடியாதது.
1956 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தொடரூந்து மூலம் கொழும்பு நோக்கி வரும் இவர் நடுவழியிலே சிங்களக் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு, தொடரூந்திலிருந்து வெளியே தள்ளி விடப்பட்ட கதையோடு நூலை ஆரம்பிக்கிறார். இவர் மாத்திரமல்ல வேறு பல தமிழர்களும் தன்னோடு அடி வாங்கியதையும் பார்த்தபோதுதான், தனது பிறந்த மண்ணிலே வாழமுடியாத காரணம், தான் தமிழனாகப் பிறந்த குற்றம் ஒன்றே என்பதை உணர்ந்ததாகவும் எழுதுகிறார். அன்று அவர் ஓர் இளைஞன். அப்பொழுது ஏற்பட்ட இந்த வடு அவரை ஒரு தார்மீக எழுத்தாளனாக உருவாக்கியது என்பதை இந்நூல் மூலம் அறிகிறோம். டெய்லி நியூஸ், டெய்லி மிரர் பத்திரிகைகளிலே அவர் தொடர்ந்து செயலாற்றிய போதும், Saturday Review இன் பின்னரே இன விடுதலையைப் பற்றி எழுதும் வலுமிக்க எழுத்தாளராக மாறுகிறார்.
இந்தப் பதிவைப் பார்த்தபோது மகாத்மா காந்தியை இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக தென்னாபிரிக்க வெள்ளையர் ரயிலிலிருந்து வெளியே இழுத்துத் தள்ளிய நிகழ்வும், காந்திஜியின் வாழ்வில் அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பாரிய மாற்றமும் நினைவில் வந்தது. இன விடுதலைக்காகச் சிறை சென்ற நெல்சன் மண்டேலா, இனத்துக்காகப் போராடி உயிரிழந்த சேகுவேரா போன்றவர்களின் வரிசையிலே திரு சிவநாயகத்தின் எழுத்துக்களையும் சேர்த்துப் பார்க்க முடிகிறது. இவரின் ஆயுதம் பேனா ஒன்றே. இந்தப் பலம் பொருந்திய ஆயுதத்தை அவர் கையாளும் முறையை இந்நூலிலே பார்த்து அதிசயப்படுகிறோம்.
இந்நூலின் பிரதான அம்சம் எமது இளைஞர்களின் இன விடுதலைக்கான தார்மீகப் போராட்டம் - அவர்களின் தியாகம். புலிப்படை வீரரின் தியாக உணர்வு அவரின் எழுத்தில் புதியதோர் உத்வேகம் பெறுகிறது. ஆழமாக எமது உணர்வைத் தாக்கி, எம்மை மெல்ல மெல்ல உலுக்கி விடுகிறது இவருடைய எழுத்துத் திறன். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாம்" என்பதை அவரின் எழுத்தின் சத்தியத்தில் தரிசிக்கிறோம்;. பெரும்பான்மையினரின் தந்திரங்கள், படைபலத்திற்கு முன் எமது மூத்த அரசியல்வாதிகளின் சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியை, இயலாமையை, உணர்ந்து செயல்பட்ட இளைஞர்களின் எழுச்சியை, நியாயப்படுத்துவதன் மூலம், தேதி வாரியாக, போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இவர் பதிய வைத்துள்ள முறையில் இது சிறந்ததோர் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.
இந்தியாவிலே வாழ்ந்த காலத்திலே, அவருடைய அனுபவப் பதிவுகள், இன்றைய நிலையில் பின்னோக்கிப் பார்க்கும் போது பல செய்திகளை விளக்கி நிற்கிறது. தமிழ் மக்கள் இந்தியாவைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் எப்பொழுதும் நினைத்திருந்தமையையும், பின்னர் ஏமாற்றமடைந்ததையும் வேதனையோடு பதிகிறார். தமிழரின் இன்றைய நிலைக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார். இந்தியாவின் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராட்டம், ஒரு இக்கட்டான சூழலில் இன்று இருப்பதையும் வல்லரசுகள் சிறிய இனங்களைப் பகடைக் காய்களாகக் கருதுவதையும் அரசியலாளரான இவரின் எழுத்தில் பார்க்க முடிகிறது.
இந்தியாவிலே தன்னைச் சிறையிலே அடைத்த போது, அங்கே காரணமில்லாமல் பல இலங்கையர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைப் பற்றி இந்த மனிதாபிமானி வேதனையுடன் எழுதுகிறார். சிறைவாசத்தின் போது அவர் அனுபவித்த துன்பம் வாசிப்பவர்களின் மனதை உலுக்கி விடுகிறது. சிறையிலிருந்து தன்னை விடுவிக்கவும், பின்னர் தனக்கு அரசியல் தஞ்சம் பெற்றுத் தரவும், தன்னுடைய எழுத்துப் பணிக்குப் பல வழிகளிலும் உதவி அளித்த புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நன்றியுடன் இந்நூலில் நினைவுகூர்கிறார்.
யாழ்ப்பாணத்தில் IPKF இனரின் செயல்களைக் கண்டித்து எழுதுகையில், அவர்களின் தளபதிகள் சிலர் புலிப்படைத் தளபதிகள் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் இந்நூலில் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. அரசியல் காரணங்களால், இனவிடுதலை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஆராயும் வகையில் போராட்ட வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத பலருக்கும் இவரது விளக்கம்; தெளிவை ஏற்படுத்துகிறது.
யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்த கதை பற்றி எழுதும்போது ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழித்தால் அந்த இனத்தையே அழித்துவிடலாமென்று மனப்பால் குடித்தவர்களின் அறியாமையை எள்ளி நகையாடும் அவருடைய எழுத்து பல உண்மைகளை உணர்த்துகிறது. நூல் நிலையத்தின் நடு மாடியிலே புராதன ஏட்டுச் சுவடிகளும் அரிய ஆவணங்களுமிருந்தன என்றும் அவற்றிற்கே முதலில் இனவாதிகள் தீயிட்டனர் என்ற செய்தியை எழுதுகையில், ஏனைய நூல்களைக் காப்பாற்ற முடிந்தாலும், இவற்றை அழிக்க வேண்டும் என்பதே துவேச மனப்பான்மை கொண்டவர்களின் நோக்கம் என்ற உண்மையை உணர வைக்கிறார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழர்களான சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர்கள், இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் என்றும், ஆனாலும் அதே சிங்கள மக்களின் துரோகத்தைத் தமிழ் மக்கள் காலம் கடந்து உணர்ந்ததையும் காட்டும் சிவநாயகம் அவர்கள், பிரிட்டிசாரிடம் திரு ஜின்னா பாகிஸ்தானைப் பெற்றது போல தமிழ் மக்களும் சுதந்திரம் பெற்ற பொழுதே தமது உரிமைகளைப் பெற்றிருந்தால் இன்று இந்நிலை வந்திருக்காது என்று வருந்துகிறார். 'நம்பிக் கெட்டவர்கள்" தமிழர் என்ற வருத்தத்தைப் பதிவு செய்கையில், அனிதா பிரதாப் என்னும் இந்தியப் பத்திரிகையாளருக்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகத்தையும் இங்கே பதிவு செய்கிறார்.
'திரு ஜயவர்த்தனா ஒரு நல்ல பௌத்தராக இருந்திருந்தால், நான் இப்படி துப்பாக்கியோடு திரிய வேண்டியதில்லை" என்பதே தலைவரின் வாசகம்.
இவருடைய எழுத்தைப் பெரிதும் மதிக்கும் சிங்கள அறிஞர், திரு ஏட்றியன் விஜயமான (Adrianne Wijeyamanne) இந்த நூலுக்கு சிறந்ததோர் முன்னுரையை வழங்கி, எமது இன விடுதலையின் நியாயப்பாட்டை வலியுறுத்துவது நூலின் மதிப்பை உயர்த்திவிடுகிறது.
அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையைச் சுவைபட எழுதும். சிவநாயகம் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமம் பற்றிய அழகிய சொற் சித்திரம் ஒன்றை இங்கே பதிய வைத்திருப்பது இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
'கொக்குவில், யாழ்ப்பாண நகர எல்லையில் அமைந்திருக்கிறது. அது கிராமமுமில்லை நகரமுமில்லை. சிறு சிறு ஒழுங்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் போய் முடியும். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைகளுக்குள்ளால் சுற்றலாம். நினைத்தவுடன் யாழ்ப்பாண நகரத்திற்குப் போய் வந்து விடலாம். பின்னர் இந்தக் கிராமப் பண்பாட்டுக்குள் வந்து அமைதியாக இருக்கலாம்" என்று வர்ணிக்கிறார்.
யாழ்ப்பாணத்திலேயுள்ள எந்த ஒரு கிராமத்திற்கும் இவை பொருந்தும் என்றாலும், அவர் எழுதியுள்ள முறையில் அவருடைய கொக்குவிலைப் போன்ற அழகிய கிராமமே இல்லை என்பது அவருடைய ஊர்ப்பற்றையே காட்டுகிறது. இந்தப் பற்றே அவரின் இனப்பற்றாகவும் பின்னர் மலர்கிறது. கொக்குவிலிலே ஒரு பல்லினக் கலாச்சாரம் இருந்தது என்று எம்மை ஆச்சரியத்திலே ஆழ்த்துகிறார். வீடு வீடாகச் சென்று, சீனத்துப் பட்டு விற்ற சீன தேசத்து வியாபாரி, தலையிலே பெட்டியைச் சுமந்தபடி விசுக்கோத்து, சீனிப் பணிஸ், கேக் விற்ற சிங்கள பாண் வியாபாரி, பள்ளிகளிலே கர்நாடக இசை, ஆங்கிலம் கற்பித்த தென்னிந்திய தமிழ், மலையாளப் பட்டதாரிகள், சிங்களம் கற்பித்த பௌத்த பிக்கு என்று பலரைப் பற்றி எழுதுகிறார். இந்தப் பிக்கு தமிழை விரும்பிக் கற்று சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் பின்னர் சிங்களத்தில் மொழிபெயர்த்து எழுதிய செய்தியையும் அறிகிறோம். தமிழறிஞர் தனிநாயக அடிகளார், இப் பௌத்த அறிஞரரன தம்மரத்ன தேரரை முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழைத்துக் கௌரவித்த போது அவர் 'சிங்கள எழுத்துக்களில் தமிழ் மொழியின் பாதிப்பு" என்னும் பொருள் பற்றி உரையாற்றியவர் என்று அறிய வியப்பாக இருந்தது.
கொக்குவிலை ஒர் உலகக் கிராமம் Global Village போல உருவாக்கி விடுவது அவரின் எழுத்தின் சிறப்பு. பல்லினக் கலாச்சாரம் என்ற கருத்து இந்நாட்களில் ஏதோவொரு புதிய கருத்துப் போலத் தோன்றினாலும், அன்றே எம்மவர் இவற்றை இயல்பாக ஏற்று பண்புடன் வாழ்ந்ததை பெருமையோடு குறிப்பிடும் வகையில் அவரது இனப்பற்று தெரிகிறது. மேலும் இவருடைய முன்னோரான முதலியார் இராசநாயகம் அவர்கள் ஈழத் தமிழரின் பெருமையை விளக்கும் "பண்டைய யாழ்ப்பாணம்"Ancient Jaffna என்னும் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார் என்பதையும் இந்நூல் மூலம் அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்விடத்தில், சிவநாயகம் அவர்கள் இந்நூலில் குறிப்பிடும் ஒரு கதையைப் பற்றிக் கூறி இவ்விமர்சனத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
அமெரிக்க எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் The Old Man and the Sea (கிழவனும் கடலும்) என்ற ஒரு நாவலை எழுதியுள்ளார்.
ஒரு கிழவனுக்கு கடலிலே மீன் பிடிக்கும்பொழுது தூண்டிலிலே பெரிய மீன் ஒன்று சிக்கியது. அவனுக்கு அதனைக் கரைக்குக் இழுத்துவரும் சக்தி இருக்காததால், அதனை ஒரு சிறுவனின் உதவியோடு கரை சேர்க்கிறான். ஆனால் கரைக்கு வந்தபின் பார்த்தால், மீனைக், காணவில்லை - அங்கே மீனின் எலும்புக்கூடு மாத்திரமே இருந்தது. வலிய சுறா மீன்கள் மீனின் சதையை உண்டுவிட்டன. இந்த நூலை எழுதும்போதெல்லாம் இந்தக் கதை தனது மனதில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்ததாக சிவநாயகம் அவர்கள் எழுதுவதை வாசிக்க வேதனையாக இருந்தாலும், கதையில் வந்த முதியவரைப் போலல்லாமல், அவர், தனது முதுமையிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும், மனவலிமை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு, ஒரு சிறந்த பொக்கிசத்தைத் தமிழ் மக்களுக்கு, உலக வரலாற்றுக்கே தந்துவிட்டார் என்று நாம் பெருமைப்படலாம். அவருடைய ஆங்கில சொற்பிரயோகத்தின் வன்மை, அதனூடு இழையோடும் நகைச்சுவை, அரசியல் உண்மைகளை மனதில் பதியவைக்கும் திறமை ஆகியன இவ்வரலாற்று நூலை ஏனைய வரலாற்று நூல்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதால் இன்றைய எமது இளம் தமிழ்ச் சந்ததியினருக்கு இந்நூல் ஒரு சிறந்த கொடை என்பதில் சந்தேகமில்லை.
"Que Sera Sera
Whatever will be,will be,
நடப்பதுதான் நடக்கும்"
என்னும் பாடல் வரிகளோடு நூலை நிறைவு செய்யும் சிவநாயகம் அவர்கள் - தனது வாழ்வு 'பாம்பும் ஏணிப்படியும்" (Snake & The Ladder) போன்றது என்றும், ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று தன்னை வழிநடத்தியது என்றுதான் சொல்லலாம் என தனது கதையை முடிக்கும்போது
'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதிச் மேற் செல்லுமே"
என்ற உமர் கய்யாமின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
பராசக்தி சுந்தரலிங்கம் (அவுஸ்திரேலியா)/ தமிழ்நாதம்
Monday, September 19, 2005
எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 3
சரி அவர்களை விடுவோம். நாம் என்ன செய்கிறோம். எங்கள் உள்ளே எழுந்த காய்ச்சல் அடக்க மானுடத்துக்கு எதிராக பாடுகிறோம்.விடுதலைக்கு எதிராக வீறுகொள்கிறோம்.அப்போது தமிழ் இளைஞர் பேரவைக்கு தலைவராக இருந்த சி.புஷ்பராஜா எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும் நூல் எழும் தேவை ஏன் வந்தது? தன்னை மையப்படுத்திய அக்காலத்தைய தமிழீழ விடுதலைப் போர் பற்றி எழுதுகிறார்.தானே மணமகன்,தானே பிணம் என்கின்ற உளவியல் சிக்கல் அந்த நூலில் ஊடுபாவாக ஓடியது. அதே காலத்தில் போராளியாக இயங்கிய ஒரு சிலரிடம் நான் கதையாடியபோது "இது மிக போக்கிலிதனமான ஒரு புத்தகம்"என்று ஒருவர் சொன்னார். இப்போது அது குறித்து விரிவாக எழுதுவது என் நோக்கம் அல்ல.பொதுப் பார்வையிலும்,பொதுப்புத்தியிலும்,விமர்சனபூர்வமாகவும் ஒருநூல் வரவேண்டியதும் அவசியம்.
ஷோபாசக்தியின் "கொரில்லா","ம்" ஆகிய புதினங்களும் சில சிறுகதைகளும் ஈழ விடுதலைப் போர் மீது சேற்றை அள்ளிவீசும் செயலாகவே எனக்குப்படுகிறது."தேசத்துரோகி" என்றொரு சிறுகதை. அக்கதையில் அப்பாவித் தமிழர் அவலமாக கொல்லப்பட்ட துன்பவரி வந்ததுதான்.அனால் அதையும் விட துருத்திக்கொண்டு நின்றது வேறொரு செய்தி 'மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் வீரமும் தோய்ந்த குரலில்' அப்பாவி தமிழர்களை மிதிவெடிக்குள் விரட்டிக்கொன்ற ரணில் விக்கிரமசிங்க என்னும் முன்னைய சிறீலங்கா பிரதமரை தமிழீழவிடுதலைப் புலிகள் நம்புகின்றார்கள் என்பதே!இது அரசியல் ஆய்வாகவோ அல்லது இராணுவ ஆய்வாகவோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அச் செய்தி பார்வைக்குரியதே! ஆனால் ஒரு சிறுகதையில் அது சொல்லப்பட்டிருக்கும் மறைமையானது வலிந்து தாக்கும் முறையாகும்.ஒன்றைச் சொல்லலாம்.நமது தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் நமது தலைமையும் விலை போகக்கூடிய ஒன்றோ அல்லது ஏமாறக்கூடிய ஒன்றோ அல்ல. ஷோபாசக்திக்கு அந்தக்கவலை வேண்டாம்.
இப்படி ஒரு சிலரின் செய்கை இப்போது,இந்த விடுதலைப் போரில் மாத்திரம் நிகழ்வது அல்ல.எப்போதும்,எந்த விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலும்,இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எம் கடன் என்னவெனில் இப்படியானவர்களை இனம் காண்பதும்,இவர்களை உலகுக்கு அறிவிப்பதுமாகும்.அவ்வளவே!
அ.இரவி அவர்களால் எழுதப்பட்டு முழுமையான கட்டுரையாக வெளிவந்ததை இங்கு பகுதிகளாக்கி தந்தேன்.(எனது நேரம்,வசதி கருதி)
ஷோபாசக்தியின் "கொரில்லா","ம்" ஆகிய புதினங்களும் சில சிறுகதைகளும் ஈழ விடுதலைப் போர் மீது சேற்றை அள்ளிவீசும் செயலாகவே எனக்குப்படுகிறது."தேசத்துரோகி" என்றொரு சிறுகதை. அக்கதையில் அப்பாவித் தமிழர் அவலமாக கொல்லப்பட்ட துன்பவரி வந்ததுதான்.அனால் அதையும் விட துருத்திக்கொண்டு நின்றது வேறொரு செய்தி 'மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் வீரமும் தோய்ந்த குரலில்' அப்பாவி தமிழர்களை மிதிவெடிக்குள் விரட்டிக்கொன்ற ரணில் விக்கிரமசிங்க என்னும் முன்னைய சிறீலங்கா பிரதமரை தமிழீழவிடுதலைப் புலிகள் நம்புகின்றார்கள் என்பதே!இது அரசியல் ஆய்வாகவோ அல்லது இராணுவ ஆய்வாகவோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அச் செய்தி பார்வைக்குரியதே! ஆனால் ஒரு சிறுகதையில் அது சொல்லப்பட்டிருக்கும் மறைமையானது வலிந்து தாக்கும் முறையாகும்.ஒன்றைச் சொல்லலாம்.நமது தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் நமது தலைமையும் விலை போகக்கூடிய ஒன்றோ அல்லது ஏமாறக்கூடிய ஒன்றோ அல்ல. ஷோபாசக்திக்கு அந்தக்கவலை வேண்டாம்.
இப்படி ஒரு சிலரின் செய்கை இப்போது,இந்த விடுதலைப் போரில் மாத்திரம் நிகழ்வது அல்ல.எப்போதும்,எந்த விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலும்,இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எம் கடன் என்னவெனில் இப்படியானவர்களை இனம் காண்பதும்,இவர்களை உலகுக்கு அறிவிப்பதுமாகும்.அவ்வளவே!
அ.இரவி அவர்களால் எழுதப்பட்டு முழுமையான கட்டுரையாக வெளிவந்ததை இங்கு பகுதிகளாக்கி தந்தேன்.(எனது நேரம்,வசதி கருதி)
Monday, September 12, 2005
கோக் vs பெப்சி:- குடிக்கலாம்- இரசிக்கலாம்

மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் காணும் கட்டடத்தின்,இரண்டாவது மாடியில் கொக்கா கோலா மென்பான நிறுவனத்தினர் தமது அலுவலகத்தினை அமைத்தனர்.தமது விளம்பரப் பலைகையினையும் நாட்டினார். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவர்களின் விளம்பரப்பலகையின் கீழே பெப்சி கம்பனி தனது விளம்பரப் பலகையை நிறுவியது அதிரடியாக.அதிலே இடம் பெற்ற வாசகங்களை படத்தினைப் பார்த்துப் படித்துகொள்ளுங்கள்.சரியான நெத்தியடி கோக்கிற்கு.
சரி இந்த சம்பவம் எங்கு நடந்தது? படத்தில் தெரியும் தமிழ் எழுத்துக்கள்,ஆட்டோ,பெண் போன்றவற்றினை வைத்து பார்த்தால் எங்கு நடந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? கோக்கிற்கும் பெப்சிக்கும் இடையில் இப்படி ஆரோக்கியமான விளம்பர போட்டிகள் அடிக்கடி நடப்பது எல்லோரும் அறிந்ததே.மேலே குறிப்பிட்டதை போல பெப்சிக்கும் கோக்கிற்கும் இடையில் நடைபெற்ற மற்றுமொரு சுவாரசியமான விளம்பரப் போட்டி.
ஒரு முறை கோக் கம்பனியின் விளம்பரம் இப்படி இருந்தது.ஒரு குரங்கு ஒரு பெரிய மரப்பலகையினை ஒவ்வொரு ஆணிகளாக எடுத்து சுத்தியல் மூலம் அறைந்து கொண்டு இருந்தது.கருமமே கண்ணாக ஒவ்வொரு ஆணியாக அறைந்துகொண்டிருந்த குரங்கின் அருகில் கோக் போத்தல்கள்.உடனே தொலைக்காட்சி திரையில் இந்தவாசகங்கள்.
"கடமையே கண்ணாக இருப்பவர்கள் அருந்துவது கோக்"
பார்த்தார்கள் பெப்சி கம்பனிகாரர்கள்.உடனேயே அவர்களும்கொண்டுவந்தார்கள் பதிலடியாக ஒரு விளம்பரம்.ஒரு கடற்கரை, குளியல் உடையில் ஆண்கள் பெண்கள்.ஒரு ஜீப் வருகிறது.அதில் நீச்சல் உடையில் இளம்பெண்கள்அமர்ந்திருக்க அவர்களின் மத்தியில் தொப்பி அணிந்தபடி கோக் விளம்பரத்தில் வந்தது போல ஒரு குரங்கு அதிரடி இசை ஒலிக்க. இப்போது திரையில் தெரிந்தன இந்த வாசங்கள்
"வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள் அருந்துவது பெப்சி"
இது எப்படி இருக்கு? நான் பார்த்தவரையில் கோக்கின் தோற்றம் ,விளம்பரம் போன்றவற்றினை பார்த்தால் 35 வயது பெண்ணை பார்ப்பது போல ஒர் பிரமையும்.பெப்சியின் விளம்பரங்களை பார்த்தால்16 பெண்ணைபார்ப்பது போல் ஒரு பிரமையும் தெரிகின்றது.
ஹி.ஹீ,ஹீ . உங்களுக்கு எப்படி?
காதைக் கிட்ட கொண்டு வாங்கோ ஒரு ஜோக்.
ஒரு ஆராச்சியாளர் அடிக்கடி ஆராய்சிக்காக வடதுருவத்துக்கு போவார்.ஆனால் தனது உதவியாளார்கள் இருவரை மட்டும் அழைத்துப் போவார்.அதில் ஒருவர் 50 வயது பெண். கடிகாரம்,கலண்டர் எதுவும் எடுத்துப்போகமாட்டார் பேராசிரியார்.ஆனால் சரியாக ஆறாவது மாதம் தனது ஆராய்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்.இப்படி அடிக்கடி நடக்க ஆச்சரியம் தாளாத ஆராச்சியாளரின் நண்பர் கேட்டார்.என்னப்பா நீ கலண்டர் ,கடிகாரம் கொண்டு போவதில்லை ஆனால்எப்படி சரியாக 6வது மாதம் வீடுதிரும்ப முடிகிறது என்று?ஆராச்சியாளர் சொன்னார் எல்லாம் அந்த 50 வயது பெண் உதவியாளார் மூலம் தான் என்று. நண்பருக்கு சந்தோஷம் தாளமுடியவில்லை.ஒரு கிளுகிளுப்பான கதை கிடைக்கப்போகிறதே என்று?ஆராச்சியாளார் சொன்னார் நண்பனே எப்போது அந்த 50வயது பெண் அழகாக எனக்கு தெரிகிறாளோ அப்போது நான் முடிவு செய்து கொள்வேன்,எனது ஆராய்ச்சியை முடித்து வீடு திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது என்று.
Friday, September 09, 2005
எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 2
இப்படி எல்லாம் நான் இங்கு எழுதுவது யாரையும் கிண்டலடிக்கவோ நோகடிக்கவோ அல்ல.ஒரு கோபம் அவ்வளவுதான்.ஒரு சமூகம்
உயிருக்கு அல்லாடிக்கொண்டு இருக்கிறது.வாழ்வுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.அடையாளம் யாவும் அகற்றப்பட்டிடுமோ என்று கதறிக்கொண்டிருக்கிறது.வானில் எங்கும் வல்லூறுகள் வட்டமிடுகின்றன.அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் தமது பென்னாம் பெரிய சிறகை விரித்துப் பறப்பு செய்கின்றன.சிங்கள தேசம் என்னும் பருந்தும் கூடவே பறந்து கொத்துகின்றது.கோழிக்குஞ்சுகள் நாம் காக்கப்படவேண்டும்.வளரவேண்டும்.வாழவேண்டும்.சமாதானம் பற்றி,
அமைதி பற்றி,மனிதஉரிமை பற்றி பேசிப்பேசியே இந்த வல்லூறுகள்
நம்மை சாவுக்கு இரையாக்கிவிடும்.எம்மவரும் ஏதும் அறியாது அல்லது ஏதும் அறியாதுபோல் நடித்து தமது சொந்தக் "காய்ச்சலை" தீர்த்துக்கொள்ள பேனாவை தூக்கிவிடுவர்.
பாரதியாரின் இருவரிகளைஇப்பொழுது நான் இவர்களுக்கு
சமர்ப்பிக்கின்றேன்.
"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"
கவிதைகள் சில எம் போரின் தேவையை இழித்துப் பாடி விட்டன.
அவைபற்றி சொல்லப்புகின்,அதிக ஒற்றைகளையும் அதிக நேரத்தினையும் நான் தேடவேண்டிவரும்.அப்படி தேடினாலும் இந்த எழுத்துக்களை அச்சுக்கோர்க்க என்னிடம் எழுதக்கேட்டோர் பஞ்சிப்படுவார்களோ என நினைத்து விடுகிறேன்.கவிதைகளை நாம் தவிர்த்தாலும் உரைநடையில்
கூட நமது போருக்கு எதிரான முக்கியமான பதிவுகளை நாம் காண்கிறோம்.முன்னர் ஒரு காலத்தைய "போராளி" என்று அறியப்பட்ட சி.புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும்(கிட்டத்தட்ட சுயசரிதைக்)குறிப்பு நூலும் ஷோபாசக்தி எழுதிய சில சிறுகதைகளும்,கொரில்லா, ம் என்கின்ற நாவல்களும் இந்த வகையில் சொல்லவேண்டியன. இனி வருவனவற்றினை வாசிக்க முன்னர்
முதலாம் பதிவில் முதலாம் பந்தியினை மீளவாசிக்கக் கடவீர்.
அவ்வாறு வாசித்து முடித்த பின்னால் ஒரு உண்மையை இப்போது ஒப்புக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நூல்களும் வேறு சில கவிதைகளும் தங்கள் காய்ச்சலை வெளிப்படுத்த எழுதப்பட்டவைதாம்.அப்படி எழுதுகிறபோது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மானுட
விடுதலைக்கு எதிரான பாடலையே பாடிவிடுகின்றன.அவர்கள் நோக்கமும் அதுதான் என தெள்ளென தெளிவாகின்றது.கோவிந்தன் "புதியதோர் உலகம்"எழுதுகின்றபோது,அது எதிரிக்குசாதகமாக அமைந்து விடுமோஎன் அஞ்சி அஞ்சி எழுதிய போக்கு இத்தகையோரிடம் காணக்கிடைக்கவில்லை.இவர்கள் தம்மை முன்னர் போராளிகளாக அறிவித்துக்கொண்டவர்கள்.சிறு துரும்பாவது போருக்கு போட்டிருக்கிறார்கள்.அனால் வெளியே வந்து,போராட்டத்தினை எள்ளி நகையாடுகிறார்கள்.
ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் அதன் உயர் நோக்கம் கருதி இருகரம் நீட்டி வரவேற்கலாம்.இது காய்சலாகவே அமைந்து விடுகின்றது.மேற்குறித்த நூல்கள் பற்றிய விமர்சனத்தை நான் இப்போது முன்வைக்கப்போவதில்லை.இவற்றை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் கருதுகிறேன்.கவனத்தில் எடுக்கவேண்டிய தீய சக்திகள் அவற்றை கவனத்தில் எடுத்தும் விட்டன.ஆகும் வேலையை அந்த சக்திகள் பார்த்துக்கொண்டும் இருக்கின்றன.இந்நூல்கள் பற்றிய சாதகமான விமர்சனங்கள்,தட்டிக்கொடுப்புக்கள்,முன்னெடுப்புக்கள்,
அறிமுகப்படுத்தல்கள்
என்று சகலகாரியங்களையும் இந்த சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன.இவர்கள் ஈழத்தில் ஒரு போர் நிகழவதைக்
கூட கணக்கில் எடுக்காதவர்கள்.ஈழத்து தமிழ்தேசிய விடுதலைப்
போரின் நியாயம் குறித்து ஒரு வரி பேசாதவர்கள்.அவை குறித்து எழுந்த இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.ஈழத்தில் கவிதை இந்தவிதமாக வளர்ந்திருக்கிறதே என்பதை கவனத்தில் கொள்ளாதவர்கள்.அவர்களது அங்கீகாரத்துக்காக ஈழத்தில் நாம் ஒன்றும் "பண்ணவில்லை". ஆனாலும் அவர்கள் யார் என்பதை
அடையாளப்படுத்தவே இவற்றைச் சொன்னேன்.
ஆனால் ஈழ விடுதலைக்கு எதிராக ஏதும் படைப்புக்கள் வந்தால் இத் தீயசக்திகள் அவற்றை எடுத்து ஏந்தி,ஏற்றிவைத்து தொழுது போற்றுவர்.எப்படியோ அவர்களின் கண்ணில் அவை பட்டுவிடும்.ஈழத்து இலக்கியம் என்றால் அவர்களுக்கு தெரிபவர்கள் யார் என்று பட்டியல் போட்டாலே அவர்களது கணக்கு புரிந்துவிடும்.அந்தபட்டியல் இரண்டு வகையானதாக இருக்கும்.ஒன்று ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எழுதுபவர்கள்.இரண்டு ஈழவிடுதலைப் போர் குறித்து ஏதும் கதையாதவர்கள் தப்பித்தவறி ஈழம் என்ற சொல்கூட வராது பார்த்துக்கொள்பவர்கள்.
தொடர்ந்து வரும்............
நன்றி.அ.இரவி
உயிருக்கு அல்லாடிக்கொண்டு இருக்கிறது.வாழ்வுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.அடையாளம் யாவும் அகற்றப்பட்டிடுமோ என்று கதறிக்கொண்டிருக்கிறது.வானில் எங்கும் வல்லூறுகள் வட்டமிடுகின்றன.அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் தமது பென்னாம் பெரிய சிறகை விரித்துப் பறப்பு செய்கின்றன.சிங்கள தேசம் என்னும் பருந்தும் கூடவே பறந்து கொத்துகின்றது.கோழிக்குஞ்சுகள் நாம் காக்கப்படவேண்டும்.வளரவேண்டும்.வாழவேண்டும்.சமாதானம் பற்றி,
அமைதி பற்றி,மனிதஉரிமை பற்றி பேசிப்பேசியே இந்த வல்லூறுகள்
நம்மை சாவுக்கு இரையாக்கிவிடும்.எம்மவரும் ஏதும் அறியாது அல்லது ஏதும் அறியாதுபோல் நடித்து தமது சொந்தக் "காய்ச்சலை" தீர்த்துக்கொள்ள பேனாவை தூக்கிவிடுவர்.
பாரதியாரின் இருவரிகளைஇப்பொழுது நான் இவர்களுக்கு
சமர்ப்பிக்கின்றேன்.
"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"
கவிதைகள் சில எம் போரின் தேவையை இழித்துப் பாடி விட்டன.
அவைபற்றி சொல்லப்புகின்,அதிக ஒற்றைகளையும் அதிக நேரத்தினையும் நான் தேடவேண்டிவரும்.அப்படி தேடினாலும் இந்த எழுத்துக்களை அச்சுக்கோர்க்க என்னிடம் எழுதக்கேட்டோர் பஞ்சிப்படுவார்களோ என நினைத்து விடுகிறேன்.கவிதைகளை நாம் தவிர்த்தாலும் உரைநடையில்
கூட நமது போருக்கு எதிரான முக்கியமான பதிவுகளை நாம் காண்கிறோம்.முன்னர் ஒரு காலத்தைய "போராளி" என்று அறியப்பட்ட சி.புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும்(கிட்டத்தட்ட சுயசரிதைக்)குறிப்பு நூலும் ஷோபாசக்தி எழுதிய சில சிறுகதைகளும்,கொரில்லா, ம் என்கின்ற நாவல்களும் இந்த வகையில் சொல்லவேண்டியன. இனி வருவனவற்றினை வாசிக்க முன்னர்
முதலாம் பதிவில் முதலாம் பந்தியினை மீளவாசிக்கக் கடவீர்.
அவ்வாறு வாசித்து முடித்த பின்னால் ஒரு உண்மையை இப்போது ஒப்புக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நூல்களும் வேறு சில கவிதைகளும் தங்கள் காய்ச்சலை வெளிப்படுத்த எழுதப்பட்டவைதாம்.அப்படி எழுதுகிறபோது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மானுட
விடுதலைக்கு எதிரான பாடலையே பாடிவிடுகின்றன.அவர்கள் நோக்கமும் அதுதான் என தெள்ளென தெளிவாகின்றது.கோவிந்தன் "புதியதோர் உலகம்"எழுதுகின்றபோது,அது எதிரிக்குசாதகமாக அமைந்து விடுமோஎன் அஞ்சி அஞ்சி எழுதிய போக்கு இத்தகையோரிடம் காணக்கிடைக்கவில்லை.இவர்கள் தம்மை முன்னர் போராளிகளாக அறிவித்துக்கொண்டவர்கள்.சிறு துரும்பாவது போருக்கு போட்டிருக்கிறார்கள்.அனால் வெளியே வந்து,போராட்டத்தினை எள்ளி நகையாடுகிறார்கள்.
ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் அதன் உயர் நோக்கம் கருதி இருகரம் நீட்டி வரவேற்கலாம்.இது காய்சலாகவே அமைந்து விடுகின்றது.மேற்குறித்த நூல்கள் பற்றிய விமர்சனத்தை நான் இப்போது முன்வைக்கப்போவதில்லை.இவற்றை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் கருதுகிறேன்.கவனத்தில் எடுக்கவேண்டிய தீய சக்திகள் அவற்றை கவனத்தில் எடுத்தும் விட்டன.ஆகும் வேலையை அந்த சக்திகள் பார்த்துக்கொண்டும் இருக்கின்றன.இந்நூல்கள் பற்றிய சாதகமான விமர்சனங்கள்,தட்டிக்கொடுப்புக்கள்,முன்னெடுப்புக்கள்,
அறிமுகப்படுத்தல்கள்
என்று சகலகாரியங்களையும் இந்த சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன.இவர்கள் ஈழத்தில் ஒரு போர் நிகழவதைக்
கூட கணக்கில் எடுக்காதவர்கள்.ஈழத்து தமிழ்தேசிய விடுதலைப்
போரின் நியாயம் குறித்து ஒரு வரி பேசாதவர்கள்.அவை குறித்து எழுந்த இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.ஈழத்தில் கவிதை இந்தவிதமாக வளர்ந்திருக்கிறதே என்பதை கவனத்தில் கொள்ளாதவர்கள்.அவர்களது அங்கீகாரத்துக்காக ஈழத்தில் நாம் ஒன்றும் "பண்ணவில்லை". ஆனாலும் அவர்கள் யார் என்பதை
அடையாளப்படுத்தவே இவற்றைச் சொன்னேன்.
ஆனால் ஈழ விடுதலைக்கு எதிராக ஏதும் படைப்புக்கள் வந்தால் இத் தீயசக்திகள் அவற்றை எடுத்து ஏந்தி,ஏற்றிவைத்து தொழுது போற்றுவர்.எப்படியோ அவர்களின் கண்ணில் அவை பட்டுவிடும்.ஈழத்து இலக்கியம் என்றால் அவர்களுக்கு தெரிபவர்கள் யார் என்று பட்டியல் போட்டாலே அவர்களது கணக்கு புரிந்துவிடும்.அந்தபட்டியல் இரண்டு வகையானதாக இருக்கும்.ஒன்று ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எழுதுபவர்கள்.இரண்டு ஈழவிடுதலைப் போர் குறித்து ஏதும் கதையாதவர்கள் தப்பித்தவறி ஈழம் என்ற சொல்கூட வராது பார்த்துக்கொள்பவர்கள்.
தொடர்ந்து வரும்............
நன்றி.அ.இரவி
சந்திரமுகி "ராரா" பாடல்:- தெலுங்கா? தமிழா?
இங்கு ரொரண்டோவில் ஒலிபரப்பாகும் தமிழோசை வானொலியினை நான் அடிக்கடி கேட்பதுண்டு.இரவு 12.00 முதல் அதிகாலை 6.00மணிவரை இந்த வானொலி நிகழ்சிகள் இடம்இடம்பெறும். நேற்றைய தினம் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் அறிவிப்பில் 12.00 மணிதொடங்கி 1.00 மணிரையிலான நிகழ்சிகள் இளமைத்துடிப்புடன் களை கட்டியிருந்தன.இரவு 1.00 மணிவரை நல்ல பாடல்கள் பலவற்றை நேயர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.நானும்
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.
அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.
நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.
அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.
நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.
Tuesday, September 06, 2005
எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 1
நான் எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையினைவிட பதிக்க எண்ணியிருந்த போதினிலே திரு அ.இரவி அவர்களால் எழுதப்பட்டிருந்த இக் கட்டுரை கண்ணில் பட்டது. நான் எழுதிவைத்திருந்த சில விடயங்களை விட மிக அழகாக எழுதப்பட்டிருந்த இக் கட்டுரையினை இங்கு பதிக்கலாம் என்று எண்ணி இக் கட்டுரையினை இங்கு பதிக்கிறேன்.
என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.
யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி
-------------------------------------------------------------------------------------------
"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.
"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."
ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.
அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.
"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"
என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.
"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"
அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.
"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"
இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.
ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்
"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"
என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.
இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.
தொடரும்................
என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.
யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி
-------------------------------------------------------------------------------------------
"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.
"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."
ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.
அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.
"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"
என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.
"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"
அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.
"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"
இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.
ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்
"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"
என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.
இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.
தொடரும்................
Sunday, September 04, 2005
மதிமுக--- சன் ரீவி லடாய்!!!
சென்னையில் நேற்று நடைபெற்ற வைகோவின் "சிறையில் விரிந்த மடல்கள்" நூல் வெளியீட்டு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற சன் ரிவி குழுவினரை அனுமதிக்க மதிமுகவினர் மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக மதிமுகவினருக்கும், சன் ரிவி நிருபர்களுக்கும் இடையே பெரும் விவாதம் நடை பெற்றுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பந்தப்பட்ட செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதாக மதிமுக வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது வைகோவும் இதனை அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும், இந்த விஷயத்தில் தான் ஒன்றும் செய் வதற்கு இல்லையென்று அவர் கை விரித்து விட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய "சிறையில் விரிந்த மடல்கள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சன் ரிவிக்கு மதிமுக அனுப்பவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சன் ரிவி நிருபர் ஒருவர் மதிமுக நிர்வாகி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பிதழ் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதற்கு அந்த நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றிய செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதால் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை யென்று கூறி யிருக்கிறார். மேலும் சன் ரிவி சார்பில் நிருபர் கள் யாரும் வர தேவையில்லை யென்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் செய்தி சேகரிக்க வேண்டும்.
எனவே அழைப்பிதழ் தாருங்கள் என்று அந்த நிருபர் வலியுறுத்தி கேட்டதாகவும், இது எங்கள் கட்சி நிகழ்ச்சி, நீங்கள் வர தேவை யில்லை என்று அந்த நிர்வாகி திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிகிறது. நிர்வாகியின் பதிலால் சற்றே கோபமடைந்த நிருபர், கட்சி நிகழ்ச்சி என்றால் உங்கள் அலுவலகத்தில் நடத்த வேண்டியது தானே என்று கூறியதாகவும், இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் அதிகபிரசங்கித்தனமாக பேசாதீர்கள் என்றும் அந்த நிர்வாகி கூறியதுடன், தொலைபேசி உரை யாடலை துண்டித்து விட்டதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், சன் ரிவியின் மற்றொரு நிருபரும், கேமராமேனும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து செய்தி சேகரித்து சென்றனர்.
------மாலைசுடர்------------
இதன் காரணமாக மதிமுகவினருக்கும், சன் ரிவி நிருபர்களுக்கும் இடையே பெரும் விவாதம் நடை பெற்றுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பந்தப்பட்ட செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதாக மதிமுக வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது வைகோவும் இதனை அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும், இந்த விஷயத்தில் தான் ஒன்றும் செய் வதற்கு இல்லையென்று அவர் கை விரித்து விட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய "சிறையில் விரிந்த மடல்கள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சன் ரிவிக்கு மதிமுக அனுப்பவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சன் ரிவி நிருபர் ஒருவர் மதிமுக நிர்வாகி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பிதழ் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதற்கு அந்த நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றிய செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதால் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை யென்று கூறி யிருக்கிறார். மேலும் சன் ரிவி சார்பில் நிருபர் கள் யாரும் வர தேவையில்லை யென்றும் அவர் கூறியிருக்கிறார்.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் செய்தி சேகரிக்க வேண்டும்.
எனவே அழைப்பிதழ் தாருங்கள் என்று அந்த நிருபர் வலியுறுத்தி கேட்டதாகவும், இது எங்கள் கட்சி நிகழ்ச்சி, நீங்கள் வர தேவை யில்லை என்று அந்த நிர்வாகி திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிகிறது. நிர்வாகியின் பதிலால் சற்றே கோபமடைந்த நிருபர், கட்சி நிகழ்ச்சி என்றால் உங்கள் அலுவலகத்தில் நடத்த வேண்டியது தானே என்று கூறியதாகவும், இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் அதிகபிரசங்கித்தனமாக பேசாதீர்கள் என்றும் அந்த நிர்வாகி கூறியதுடன், தொலைபேசி உரை யாடலை துண்டித்து விட்டதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், சன் ரிவியின் மற்றொரு நிருபரும், கேமராமேனும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து செய்தி சேகரித்து சென்றனர்.
------மாலைசுடர்------------
Subscribe to:
Posts (Atom)