Saturday, July 08, 2006

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.

இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.

தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.

தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.

கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.

சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.

நன்றி:--- இளங்கோ (இலண்டன்) http://www.webeelam.com/

Wednesday, June 21, 2006

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி!

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி மல்யுத்த களமாகியது சபா மண்டபம்

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை

கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி

கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.

ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை

ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.
அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?

ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?

விவாதம் கோரிய கரு ஜயசூரிய

இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் M.P மீது தாக்குதல்

இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.

இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.

அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.


ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்

இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.


தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன் M.P

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்

அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.


களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ

இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.

பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்

எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.

கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.
மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.

சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்

சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.

சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.

சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித

இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.

அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.

மீண்டும் சபை கூடியது


நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Sunday, June 11, 2006

சின்னமாமியே.... உன் சின்ன மகள்.........

ஈழத்து பைலா பாடல்கள் பற்றி ஒரு பதிவினை மே 12,2005 இல் எழுதியிருந்தேன்.

இப்போது சில பாடல்கள் mp3 வடிவில் கிடைக்கப்பெற்றேன்.அதில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி stickam player பதிந்து தந்துள்ளேன்.( 4 பாடல்கள்)

Stickam player எனது வலைப்பதிவின் முதற் பக்கத்தில் மட்டும் தெரிகிறது. மேலும் அப்படியே சில படங்களையும் இணைத்திருக்கிறேன். எனது கமெராவில் சுட்டது . எப்படி எண்டு சொல்லுங்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்.

Monday, May 22, 2006

நீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......

னடாவைப் பொறுத்தவரை குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம்.சைபர் வீதம் ஆல்ககோல் உடலில் இருந்தாலே போதும் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம் .அல்லது இவை இரண்டுமே நடைபெறலாம்.இங்கு வாகனம் ஓட்டுவதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரம்
எடுக்கும் சிரமம் பலருக்கும் தெரிந்ததே.

அப்படியும் எத்தனையோ பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அமெரிக்காவைப் போலல்லாது
கனடாவில் ரோட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு குறைவு என்பதால் பலரின் தலை தப்புகிறது.

1999 ம் ஆண்டு புதுவருட தினத்தன்று இரவு விருந்தொன்றில் பங்கு பற்றிவிட்டு வந்த இருவரின் கார்கள் விபத்துக்குள்ளானதில்
ஒரு காரில் வந்தவர் இறந்துவிட அவரின் நண்பி நடமாடமுடியாதபடி காயம்பட்டார்.

இரண்டாவது வாகனத்தில் வாகனத்தை செலுத்தி வந்தவர் மதுபோதையில் இருந்தபடியால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விபத்தில் உயிர்தப்பிய பெண் தான் 17வது முதல் சக்கர நாற்காலியில் நடமாடுவதற்கு காரணம் குடிபோதையில்
வந்த சாரதி மட்டுமல்ல அவரை விருந்துக்கு அழைத்து குடிக்க கொடுத்த வீட்டுக்காரரும் தான் என்றும் கூரி அவர்களிடம் இருந்து நட்ட ஈடு
கேட்டு வழக்கு தொடந்திருந்தார்.

அந்த வழக்கு முன்னரே ஒட்டாவா நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றம் கொண்டு சென்றார்.
மேல் நீதிமன்ற தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர்வந்தது .அதாவது வழக்கு தொடுத்த பெண்மணிக்கு பாதகமாக
"விருந்தை நடத்தியவர்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது" என்று .

அதாவது மதுபோதையில் விபத்து நடந்தால்
அதற்கு விருந்து வைத்தவர் பொறுப்பு அல்ல என்று.

இங்கு இப்படி நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்பது என்பது சாதாரண விடயமே.ரிம் கோட்டன் என்பது கனடா ,அமெரிக்காவில்
உள்ள ஒரு கோப்பிக்க்டையின் பெயர்.இங்கு ஒரு பெண்மணி கோப்பி( காப்பி) வாங்கியிருக்கிறார் .கோப்பி கொண்டுவந்து
கடைச் சிப்பந்தி வைக்கும் போது அப் பெண்ணின் தொடையில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுவிட்டதாம்.அதன் பின்னர் அப்பெண்மணி
அக்கடைக்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து பெரும் தொகையை பெற்றதாகவும் ஒரு கதை.
இப்போது கோப்பி கப்புகளில் எச்சரிக்கை- மிகவும் சூடானது என்று ஒரு வாசகம் பொறிக்கப்பாட்டிருப்பதை காணலாம்.

இப்படிதான் எனது உறவினர் ஒருவர் எப்படியாவது ஏதாவது ஒன்றின் மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாம் என்று
கனடா வந்ததில் இருந்து அலைகிறார்.ஆனால் இன்னமும் ஒன்றும் மாட்டவில்லை அவருக்கு.

Sunday, May 21, 2006

"உலகத் தமிழர் தலைவரும் ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பும்"

லங்கையில் அமைதி திரும்பி தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும். அதற்குரிய சகல விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது தடவையாகப் பதவியேற்றிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளதுடன், சமாதானத்தை ஏற்படுத்தத் தேவையேற்படின் தலையிடுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து முழு விபரத்தையும் அறிந்த பின்பு மத்திய அரசு தலையிடவேண்டிய தேவையிருந்தால் அது குறித்து வலியுறுத்துவோம் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதேதினம் இலங்கையின் வட,கிழக்கிலிருந்து 102 மக்கள் ஒரே தினத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்த வருட ஆரம்பத்திலிருந்து வட, கிழக்குப் பகுதியிலிருந்து 1019 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 20 வருடகாலமாக பாக்கு நீரிணையைப் பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் கடந்துசென்று தமிழ்நாட்டில் தஞ்சமடையும் வட, கிழக்குத் தமிழர்களின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டியிருந்தது. தற்போதும் 60 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய (யூ.என்.எச்.சி.ஆர்.) புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளியன்று வந்த 102 அகதிகளும் தமிழர் தாயகமான வட,கிழக்கில் மிகவும் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமையாலேயே படகுகள் மூலம் தமிழகத்தை நாடி வந்திருப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் ஜெனிபர் பகோனிஸ் ஜெனீவாவில் கூறியிருக்கிறார்.

`அகதிகளின் பயணம் அதிகரித்துவருகிறது. நிலைமையை நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்' என்றும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இலங்கை நிலைவரத்தை முழுமையாக அறிந்துகொள்ளவில்லையென தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் மத்தியில் அவதியுறும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவு ஆறுதலளிக்கும் வார்த்தையாகத்தானும் இல்லை.

`உலகில் எந்த மூலையில் வாழுகின்ற தமிழனும் துன்பப்படும்போது அவனுக்காக குரல் கொடுப்பேன்' என்று கலைஞர் வெளியிட்டுவந்த கருத்துகளை வெறும் அறிக்கைகள் என்று கருதாமல் தன் உள்ளுணர்வை வார்த்தைகளால் வடித்திருக்கிறாரே என்று பரவசப்பட்ட, தற்போதும் பரவசப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களும் உள்ளனர்.

இப்போது கலைஞருக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் 6 கோடி தமிழர்களின் தலைவராக மட்டுமன்றி இந்திய மத்திய அரசாங்கத்திலும் கலைஞரின் `அதிகாரபலம்' கணிசமான அளவில் உள்ளது. இந்த அதிகாரபலத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் இலங்கைத் தமிழர்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலமைச்சராக பதவியேற்றபின்பு முதற்தடவையாக கலைஞர் இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது கலைஞர் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு கூட்டுச்சம்மேளன முறைமையிலான தீர்வே சிறந்தது என்று கலைஞர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். வட,கிழக்கில் தமிழர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்திருந்ததாலேயே இந்தக் கூட்டுச்சம்மேளன முறைமையிலான அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தற்போ
து நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு சமஷ்டி முறையிலானது (Federal) என்று கூறப்பட்டாலும் அதனை முழுமையற்ற சமஷ்டி முறைமை (Quasi Federalism) என்ற அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பாரதத்தில் தற்போதைய அரசியலமைப்பு முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வைக் கொண்டதே கூட்டுச்சம்மேளன (Confederation) முறைமையாகும். இந்த முறைமையிலான தீர்வே வட,கிழக்கு தமிழர்களின் நெருக்கடிக்குத் தீர்வு தரும் என்று மனதார விரும்பும் கலைஞர் கருணாநிதி அதனை ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

ஒற்றையாட்சி முறைமைக்குள் தீர்வுகாண முடியாதென்பதை தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் தலைமைத்துவங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சமஷ்டி முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது மீண்டும் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தான் யாவும் என்று அதிகாரபீடம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வட,கிழக்கில் மோதல்கள் மோசமாக வெடித்துள்ளதுடன், தமிழகத்திற்கான `படகு அகதிகள்' படையெடுப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலைஞர் வெறுமனே வார்த்தைகளால் மட்டும் `இலங்கையில் தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும்' என்று கூறுவதுடன் நிறுத்திவிடாமல் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தனது செல்வாக்கு, அதிகார வரம்பெல்லைக்குள்ளேயே மேற்கொள்ள முடியுமென்பதே இலங்கையிலுள்ள குறிப்பாக வட, கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உலகத் தமிழரின் தலைவரெனக் கருதப்படுபவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும்.

நன்றி- தினக்குரல்

Tuesday, March 28, 2006

கிழக்கில் உதயமாகிறது "ஜிகாத்" குழு!

கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!

சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:

இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும்.
இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.

இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.

புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.

கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:
தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.

இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது.
மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.

1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.

தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.
1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.
பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.
முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.

இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.

அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:

சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.

அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.
அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.

ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.

சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.

மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க,

கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.

சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.

இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அப்போது சிறிலங்கா
வுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.

இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.

"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.

இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.

இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.
ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.

அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.
முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.
அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-
உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-
"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நன்றி:-www.puthinam.com

Sunday, March 05, 2006

பொடா நாயகனின் "மெகா பிளான்"

"க்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்''. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

''தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்''.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.


''தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்..'' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே 'பொடா நாயகன்' வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.
திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.


ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.
வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.


அவரது கட்சியின் கொள்கை வரிகளான 'லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை' என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்....................................................................


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://thatstamil.oneindia.in/news/2006/03/05/plan.html

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்