தமிழ்நாதம் இணையதளம் ஈழத்தவர் மத்தியில்ஒரு பிரபல்யமான இணைய தளம்.
உலகெங்கிலும் இருந்து வெளிவரும் பல்வேறு இணையத்தளங்களையும் ,வானொலி,பத்திரிகைதொலைக்காட்சிகள்,சஞ்சிகைகள் போன்றவற்றின் இணைப்புக்களையும் ஒருங்கே தரும் ஒரு இணைய தளம். பல ஒலி வடிவிலான செய்திகளையும் தருவது அதன் சிறப்பம்சம்.
அண்மையில் அத்தளத்தில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வீரகேசரி வாரவெளியீட்டில் "நிலாந்தன்" எழுதிய "ஈழத்தமிழர்களின் போராட்டமும் மாறிவரும் தமிழக ஊடகச்சூழலும்" என்ற கட்டுரையே அது.
அதற்கு சில தினங்கள் கழித்து அக்கட்டுரைக்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் இருந்து "சேவியர் அந்தோனி" என்பவர் எழுதி அனுப்பிய "தமிழக ஊடகங்களின் நிலையினை புரிந்துகொண்டு அடக்கி வாசியுங்கள்" கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாதம்.
தமிழ் நாட்டின் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன.அதன் நோக்கங்கள்,செய்தி நிறுவனங்களின் தன்மைகள்,அங்குள்ள ஊடகவியலாளர்களின் மனநிலை போன்றவற்றினை புட்டுப் புட்டு வைத்திருக்கின்றது அக்கட்டுரை.
தமிழ்நாட்டு ஊடகங்களின் தன்மைபற்றி பலரும் பலவற்றை எழுதியிருக்கின்றனர். அண்மையில் வசந்தன் கூட ஒரு பதிவு போட்டிருந்தார். நானும் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
1500 கிலோ மீற்றர் தாண்டியிருக்கும் கனடாவில் கூட சரியான செய்திகள் கிடைக்கும் போது 25 கிலோ மீற்றரில் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களில்" கொழும்புக்கு அருகே இருக்கும் வல்வெட்டித்துறை"என்று செய்தி வருவது சென்னைக்கு அருகே இருக்கும் ராமேஸ்வரம் என்று எழுதுவதற்கு ஒப்பானது .
எப்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படி செய்திகள் திரி?வடைகின்றன? தூங்குகின்றவனை எழுப்பலாம்.ஆனால் தூங்கின்றவன் மாதிரி நடிப்பவனை........
Sunday, July 16, 2006
Saturday, July 15, 2006
இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"
இருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"
தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம்
வரலாறு வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. தோல்வியுற்றவர்களைப் பற்றி அது கவலை கொள்வதில்லை. ஆனால், வென்றவர்களில் ஒரு பகுதியினராக இருந்தும் தங்களது வரலாற்றை இழந்தவர்களை என்ன சொல்வது? தமது சரித்திரத்தை பதிவு செய்யாமல் அல்லது அதற்கு உரிய இடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தாமல் விட்டமைக்கான அவர்களின் அக்கறையின்மையையும் அசட்டையையுமே நாம் குற்றஞ்சாட்ட முடியும்.
இந்திய வரலாற்றைப் பதிவு செய்யும் பொழுது வடஇந்தியா எப்பொழுதும் தென்இந்திய நிகழ்வுகளை புறக்கணித்தே வருகின்றது என்பது தென்னக வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நீண்டகால குமுறலாக இருந்து வருகின்றது. ஆனால், அதனை உரிய இடத்தில் வைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா என்பது கேள்விக்குறிதான்.
இந்தியா கிறிஸ்துவிற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசியாவிலிருந்து வந்த மொகலாயர்களிடம் அடிமைப்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இக்காலப் பகுதியிலும் தென்னகம் தனது சுதந்திரத்தை காப்பாற்றியே வந்துள்ளது.
அதற்குப் பின்னர், பிரஞ்சுக்காரர்களிடமும் போத்துக்கீசரிடமும் பாரத தேசத்தின் சில பகுதிகள் அடிமைப்பட்டுக் கொண்டன. ஆயினும், ஒட்டுமொத்த இந்தியப் பெருநிலப்பரப்பும் அடிமைப்பட்டுக் கொண்டது ஆங்கிலேயரிடம்தான்.
வியாபாரம் செய்வதற்காக உள்நுழைந்தவர்கள், படைபலத்தையும் பல்வேறு யுத்திகளையும் பயன்படுத்தி படிப்படியாக இந்திய பெருநிலத்தை கைப்பற்றிக் கொண்டனர்.
ஆயினும், அவர்களினால் அதை இலகுவாக செயற்படுத்த முடியவில்லை. ஹைதர் அலி, திப்புசுல்தான், புலித்தேவர், சென்னம்மாள், வேலு நாச்சியார், சின்ன மருது, பெரிய மருது போன்ற மன்னர்களினதும் இராணிகளினதும் கடுமையான எதிர்ப்பை முறியடித்தே தென்னிந்தியாவை அவர்களால் கைப்பற்ற முடிந்தது.
இவ்வாறாக, இந்தியாவெங்கும் ஆதிக்கத்தை பரப்பி வேரூன்றிய ஆங்கிலேயர்களிற்கு எதிராக அவர்களின் கீழ் பணிபுரிந்த இந்தியச் சிப்பாய்கள் இறந்தொழிந்தனர். 1857 இல் வடஇந்தியாவில் கல்கத்தாவிலிருந்து மீரட் வரை பரவிய சிப்பாய்களின் கிளர்ச்சியையே பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்களும் இந்திய அரசாங்கமும் "சிப்பாய் கலகம்" அல்லது முதலாவது விடுதலைப் போர் என்று அழைக்கின்றனர்.
இந்திய அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் 150 ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தற்பொழுது தீட்டி வருகின்றது. ஆனால், 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகம் வரலாற்று இருளிற்குள் மறைந்து கிடக்கின்றது.
1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 130 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேலூரில் இடம்பெற்ற சிப்பாய் கலகம், வடஇந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைவிட 51 ஆண்டுகள் முந்தையதாகும். வரலாற்றில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் வழக்கப்படி இது "முதலாவது சிப்பாய் கலகம்" என்றும் வடஇந்தியாவில் நடைபெற்றது" "இரண்டாவது சிப்பாய்க் கலகம்" என்றே கூறப்பட வேண்டும்.
வடஇந்திய சிப்பாய் கலகத்திற்கு அடிப்படையாக சிப்பாய்களின் துப்பாக்கிகளில் பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பை பிரிட்டிஷ் பேரரசு பயன்படுத்தியமை அமைந்தது.
இதனால், ஆத்திரமுற்ற இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் கிளர்ச்சியில் குதித்தனர்.
வேலூர் சிப்பாய் கலகத்திற்கு பிரிட்டிஷாரின் ஆடை அணிகலன் தொடர்பான உத்தரவுகள் அடிப்படையாக அமைந்தன.
1799 இல் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியர் வேலூர் கோட்டையில் தடுத்துவைத்தனர்.
1806 இல் பிரித்தானியர் படையினரிற்கான புதிய ஆடை விதிமுறைகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்தியச் சிப்பாய்கள் சாதிக் குறியீடுகள், காதணிகள் மற்றும் தாடி என்பன அகற்ற வேண்டும். இதற்குப் பதிலாக தோலால் அலங்கரிக்கப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட தலைப்பாகைகளை அணியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான இந்தியப்படை வீரர்கள் இதனை எதிர்த்தனர். மறைவில் குமுறிக் கொண்டிருக்கும் எதிர்ப்பை, 1806 ஆம் ஆண்டு மே மாதமளவில் சென்னையிலிருந்த பிரித்தானிய அதிகாரிகள் அறிந்தனர்.
எதிர்ப்பை வெளிப்படுத்திய சில படையினரை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களிற் சிலரை பகிரங்கமாக அடித்ததுடன் வேறு சிலரை பணியை விட்டு நீக்கினர்.
ஆனால், கிளர்ச்சிப் படைவீரர்கள் பணியவில்லை.
ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் கிளர்ச்சி படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் திகதி காலை மூன்று மணிக்கு ஆரம்பமான தாக்குதலில் 1,500 பேரைக் கொண்ட வலுவான இந்தியச் சிப்பாய்களிடம் வேலூர் கோட்டை வீழ்ந்தது.
அங்கிருந்த 350 வெள்ளையர்களில் 100 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிப்பாய்கள் பாரிய தவறை இழைத்தனர். வெற்றிக் களிப்பிலிருந்த அவர்கள் கோட்டை வாயில்களை பாதுகாப்பாக மூடத் தவறினர். வேலூரிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலிருந்த ஆட்காட்டில் தளத்தைக் கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் சென்னை குதிரைப்படையினர் பிந்திய காலைப் பொழுதில் திறந்திருந்த வாயில்களினூடாக உள்ளே புகுந்தனர். தாக்குதல் தொடங்கியது.
350 கிளர்ச்சிப் படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்தனர். பிரிட்டிஷார் இறுதியில் கோட்டையை மீளக் கைப்பற்றினர்.
மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சியை தூண்டியதாக சந்தேகப்பட்ட பிரித்தானியர்கள் அவர்களை கல்கத்தாவிற்கு இடம்மாற்றினர்.
இருளிற் கிடந்த வரலாற்றின் 200 ஆவது ஆண்டு நிறைவு இம்மாதம் 11 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியத் தபால் துறை முத்திரை வெளியிட முன்வந்தது. இதை "இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கு" இறுதியில் கிடைத்த உரிய அங்கீகாரம் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
தபால்தலையில் வரலாறு பதியப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள் மனதில் பதியும் வகையில் பணி முன்னெடுக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.
நன்றி-என்.சிவேந்திரன்/தினக்குரல்
தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம்
வரலாறு வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. தோல்வியுற்றவர்களைப் பற்றி அது கவலை கொள்வதில்லை. ஆனால், வென்றவர்களில் ஒரு பகுதியினராக இருந்தும் தங்களது வரலாற்றை இழந்தவர்களை என்ன சொல்வது? தமது சரித்திரத்தை பதிவு செய்யாமல் அல்லது அதற்கு உரிய இடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தாமல் விட்டமைக்கான அவர்களின் அக்கறையின்மையையும் அசட்டையையுமே நாம் குற்றஞ்சாட்ட முடியும்.
இந்திய வரலாற்றைப் பதிவு செய்யும் பொழுது வடஇந்தியா எப்பொழுதும் தென்இந்திய நிகழ்வுகளை புறக்கணித்தே வருகின்றது என்பது தென்னக வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நீண்டகால குமுறலாக இருந்து வருகின்றது. ஆனால், அதனை உரிய இடத்தில் வைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா என்பது கேள்விக்குறிதான்.
இந்தியா கிறிஸ்துவிற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசியாவிலிருந்து வந்த மொகலாயர்களிடம் அடிமைப்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இக்காலப் பகுதியிலும் தென்னகம் தனது சுதந்திரத்தை காப்பாற்றியே வந்துள்ளது.
அதற்குப் பின்னர், பிரஞ்சுக்காரர்களிடமும் போத்துக்கீசரிடமும் பாரத தேசத்தின் சில பகுதிகள் அடிமைப்பட்டுக் கொண்டன. ஆயினும், ஒட்டுமொத்த இந்தியப் பெருநிலப்பரப்பும் அடிமைப்பட்டுக் கொண்டது ஆங்கிலேயரிடம்தான்.
வியாபாரம் செய்வதற்காக உள்நுழைந்தவர்கள், படைபலத்தையும் பல்வேறு யுத்திகளையும் பயன்படுத்தி படிப்படியாக இந்திய பெருநிலத்தை கைப்பற்றிக் கொண்டனர்.
ஆயினும், அவர்களினால் அதை இலகுவாக செயற்படுத்த முடியவில்லை. ஹைதர் அலி, திப்புசுல்தான், புலித்தேவர், சென்னம்மாள், வேலு நாச்சியார், சின்ன மருது, பெரிய மருது போன்ற மன்னர்களினதும் இராணிகளினதும் கடுமையான எதிர்ப்பை முறியடித்தே தென்னிந்தியாவை அவர்களால் கைப்பற்ற முடிந்தது.
இவ்வாறாக, இந்தியாவெங்கும் ஆதிக்கத்தை பரப்பி வேரூன்றிய ஆங்கிலேயர்களிற்கு எதிராக அவர்களின் கீழ் பணிபுரிந்த இந்தியச் சிப்பாய்கள் இறந்தொழிந்தனர். 1857 இல் வடஇந்தியாவில் கல்கத்தாவிலிருந்து மீரட் வரை பரவிய சிப்பாய்களின் கிளர்ச்சியையே பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்களும் இந்திய அரசாங்கமும் "சிப்பாய் கலகம்" அல்லது முதலாவது விடுதலைப் போர் என்று அழைக்கின்றனர்.
இந்திய அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் 150 ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தற்பொழுது தீட்டி வருகின்றது. ஆனால், 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகம் வரலாற்று இருளிற்குள் மறைந்து கிடக்கின்றது.
1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 130 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேலூரில் இடம்பெற்ற சிப்பாய் கலகம், வடஇந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைவிட 51 ஆண்டுகள் முந்தையதாகும். வரலாற்றில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் வழக்கப்படி இது "முதலாவது சிப்பாய் கலகம்" என்றும் வடஇந்தியாவில் நடைபெற்றது" "இரண்டாவது சிப்பாய்க் கலகம்" என்றே கூறப்பட வேண்டும்.
வடஇந்திய சிப்பாய் கலகத்திற்கு அடிப்படையாக சிப்பாய்களின் துப்பாக்கிகளில் பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பை பிரிட்டிஷ் பேரரசு பயன்படுத்தியமை அமைந்தது.
இதனால், ஆத்திரமுற்ற இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் கிளர்ச்சியில் குதித்தனர்.
வேலூர் சிப்பாய் கலகத்திற்கு பிரிட்டிஷாரின் ஆடை அணிகலன் தொடர்பான உத்தரவுகள் அடிப்படையாக அமைந்தன.
1799 இல் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியர் வேலூர் கோட்டையில் தடுத்துவைத்தனர்.
1806 இல் பிரித்தானியர் படையினரிற்கான புதிய ஆடை விதிமுறைகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்தியச் சிப்பாய்கள் சாதிக் குறியீடுகள், காதணிகள் மற்றும் தாடி என்பன அகற்ற வேண்டும். இதற்குப் பதிலாக தோலால் அலங்கரிக்கப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட தலைப்பாகைகளை அணியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான இந்தியப்படை வீரர்கள் இதனை எதிர்த்தனர். மறைவில் குமுறிக் கொண்டிருக்கும் எதிர்ப்பை, 1806 ஆம் ஆண்டு மே மாதமளவில் சென்னையிலிருந்த பிரித்தானிய அதிகாரிகள் அறிந்தனர்.
எதிர்ப்பை வெளிப்படுத்திய சில படையினரை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களிற் சிலரை பகிரங்கமாக அடித்ததுடன் வேறு சிலரை பணியை விட்டு நீக்கினர்.
ஆனால், கிளர்ச்சிப் படைவீரர்கள் பணியவில்லை.
ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் கிளர்ச்சி படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் திகதி காலை மூன்று மணிக்கு ஆரம்பமான தாக்குதலில் 1,500 பேரைக் கொண்ட வலுவான இந்தியச் சிப்பாய்களிடம் வேலூர் கோட்டை வீழ்ந்தது.
அங்கிருந்த 350 வெள்ளையர்களில் 100 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிப்பாய்கள் பாரிய தவறை இழைத்தனர். வெற்றிக் களிப்பிலிருந்த அவர்கள் கோட்டை வாயில்களை பாதுகாப்பாக மூடத் தவறினர். வேலூரிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலிருந்த ஆட்காட்டில் தளத்தைக் கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் சென்னை குதிரைப்படையினர் பிந்திய காலைப் பொழுதில் திறந்திருந்த வாயில்களினூடாக உள்ளே புகுந்தனர். தாக்குதல் தொடங்கியது.
350 கிளர்ச்சிப் படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்தனர். பிரிட்டிஷார் இறுதியில் கோட்டையை மீளக் கைப்பற்றினர்.
மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சியை தூண்டியதாக சந்தேகப்பட்ட பிரித்தானியர்கள் அவர்களை கல்கத்தாவிற்கு இடம்மாற்றினர்.
இருளிற் கிடந்த வரலாற்றின் 200 ஆவது ஆண்டு நிறைவு இம்மாதம் 11 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியத் தபால் துறை முத்திரை வெளியிட முன்வந்தது. இதை "இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கு" இறுதியில் கிடைத்த உரிய அங்கீகாரம் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
தபால்தலையில் வரலாறு பதியப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள் மனதில் பதியும் வகையில் பணி முன்னெடுக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.
நன்றி-என்.சிவேந்திரன்/தினக்குரல்
Friday, July 14, 2006
தமிழ்மணம் கடந்த சில நாட்களாக..
தமிழ்மணம் கடந்த சில நாட்களாக சூடாக இருக்கிறது என்றுதலைப்பிட்டு பாலச்சந்தர் கணேசன் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு ஒன்ரு இட்டிருந்தார்.அதில் அவருக்கு பிடித்த சில தமிழ் வரிகளை தந்திருந்தார்.7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லைஅது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.
சரி படியுங்கள் தமிழ் வரிகளை .
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.
தமிழா நீ பேசுவது தமிழா
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
மிக மிக அவசரத்தில் போட்டது.
சரி படியுங்கள் தமிழ் வரிகளை .
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.
தமிழா நீ பேசுவது தமிழா
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
மிக மிக அவசரத்தில் போட்டது.
தமிழ்மணம் கடந்த சில நாட்களாக.......
தமிழ்மணம் கடந்த சில நாட்களாக சூடாக இருக்கிறது என்று தலைப்பிட்டு பாலச்சந்தர் கணேசன் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு ஒன்று இட்டிருந்தார்.அதில் அவருக்கு பிடித்த சில தமிழ் வரிகளை தந்திருந்தார்.
7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லை அது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.
சரி படியுங்கள் தமிழ் வரிகளை.
7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லை அது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.
சரி படியுங்கள் தமிழ் வரிகளை.
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.
தமிழா நீ பேசுவது தமிழா?
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
மிக மிக அவசரத்தில் போட்டது.
Saturday, July 08, 2006
சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.
இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.
தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.
நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.
தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.
கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.
“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.
சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.
நன்றி:--- இளங்கோ (இலண்டன்) http://www.webeelam.com/
இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.
தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.
நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.
தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.
கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.
“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.
சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.
நன்றி:--- இளங்கோ (இலண்டன்) http://www.webeelam.com/
Wednesday, June 21, 2006
பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி!
பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி மல்யுத்த களமாகியது சபா மண்டபம்
தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை
கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.
கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.
ஒரு நிமிட மௌன அஞ்சலி
கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.
ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை
ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.
அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.
கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?
ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?
விவாதம் கோரிய கரு ஜயசூரிய
இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.
சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் M.P மீது தாக்குதல்
இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.
இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.
அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.
ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்
இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.
தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன் M.P
தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.
ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்
அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.
களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ
இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.
பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்
எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.
கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.
மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.
சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்
சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.
சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.
சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.
அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.
மீண்டும் சபை கூடியது
நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை
கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.
கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.
ஒரு நிமிட மௌன அஞ்சலி
கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.
ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை
ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.
அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.
கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?
ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?
விவாதம் கோரிய கரு ஜயசூரிய
இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.
சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் M.P மீது தாக்குதல்
இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.
இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.
அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.
ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்
இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.
தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன் M.P
தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.
ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்
அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.
களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ
இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.
பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்
எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.
கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.
மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.
சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்
சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.
சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.
சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.
அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.
மீண்டும் சபை கூடியது
நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Sunday, June 11, 2006
சின்னமாமியே.... உன் சின்ன மகள்.........
ஈழத்து பைலா பாடல்கள் பற்றி ஒரு பதிவினை மே 12,2005 இல் எழுதியிருந்தேன்.
இப்போது சில பாடல்கள் mp3 வடிவில் கிடைக்கப்பெற்றேன்.அதில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி stickam player பதிந்து தந்துள்ளேன்.( 4 பாடல்கள்)
Stickam player எனது வலைப்பதிவின் முதற் பக்கத்தில் மட்டும் தெரிகிறது. மேலும் அப்படியே சில படங்களையும் இணைத்திருக்கிறேன். எனது கமெராவில் சுட்டது . எப்படி எண்டு சொல்லுங்கள்.
மீண்டும் சந்திக்கிறேன்.
இப்போது சில பாடல்கள் mp3 வடிவில் கிடைக்கப்பெற்றேன்.அதில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி stickam player பதிந்து தந்துள்ளேன்.( 4 பாடல்கள்)
Stickam player எனது வலைப்பதிவின் முதற் பக்கத்தில் மட்டும் தெரிகிறது. மேலும் அப்படியே சில படங்களையும் இணைத்திருக்கிறேன். எனது கமெராவில் சுட்டது . எப்படி எண்டு சொல்லுங்கள்.
மீண்டும் சந்திக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)