Sunday, December 24, 2006

நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.......

ன் மனதினை கவர்ந்த பாடல்களில் ஒன்று.பாண்டவர் பூமி படத்தில் யுகேந்திரன் மற்றும் சித்திரா சிவராமன் பாடிய ஒரு அழகிய பாடல்.

கேட்டு ரசியுங்களேன் நீங்களும்.







Wednesday, December 13, 2006

தமிழ் குடில் -- இணைய வானொலி.

நீண்ட நாட்களாக உறை நிலையில் இருந்த "தமிழ் குடில்" இணைய வானொலி நவம்பர் 27 முதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது.

"தமிழால் உலகளக்க" தரணியெங்கும் முழங்கும் தமிழ் குடில் இணைய வானொலி தற்போது பதிவு செய்யப்பட்ட பல நிகழ்சிகளை வழங்கிவருகிறது.சித்திரைப் புத்தாண்டிலிருந்து பல்வேறுபட்ட பல நிகழ்சிகளை படைக்க இருக்கின்றது.

இன்னலுறும் மக்களினதும் தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட இவ்வானொலியின் உருவாக்கத்தில் திரு அ.மனோகரன்,அமல்ராஜ்,இல .சஞ்சீவ்கான்,ரி.ஞானரட்ணசிங்கம் மற்றும் ஏ.சி.தாசீசியஸ் போன்றோர் பங்களித்திருக்கின்றனர்.

நீங்களும் விரும்பினால் இவ் வானொலியுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க முடியும்.

தமிழ்குடில் இணைய வானொலி பற்றிய விளக்கம்

தமிழ் குடில் வானொலியின் அண்மைய அலசல் ஒன்று.

குட்டக் குட்டக் கணக்க குனிந்து விட்டோமோ?

--------------------------------------------------------------------------------------------

Tuesday, December 12, 2006

வல்லவன்.-மலேசியாவிலிருந்து தமிழ் குரல்

மலேசிய தமிழ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "வல்லவன்" ஒளித்தட்டில் இருந்து
இந்தப் பாடல்.எப்படி பாடல்? ரசித்தீர்களா?

Saturday, December 09, 2006

நான் ஒரு தடவை சொன்னா................

எனது மனதில் எழும் கருத்துக்களைப் மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்
வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.
அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்
தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)


இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்
தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று
நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)


மீண்டும் சந்திப்போம்.

சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.

சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்
இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க
நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம் பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.
சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்
பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ் நகரில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படையினரின் தடைகள்! -

(யாழின் மைந்தன்)/தினக்குரல்

யாழ்ப்பாண சமுதாயம் மூன்று சகாப்தமாக"போரின் வலி"யை தாங்கிய சமுதாயமாகவே இன்றும் உயர்ந்து நிற்கின்றது. காலம் முழுவதும் பசி,பட்டினி, சாவு போன்ற கொடுமைகளுக்கு முகம் கொடுத்து, இனத்தின் விடுதலைக்காக தன்னைக்காவு கொடுத்து வருகின்றது. யாழ்ப்பாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் எல்லாம், விடுதலையுணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கு அரசின் அடக்குமுறையால் நாளை என்ன நடக்கும் என்ற நினைவில் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால் தினம் தினம் வரும் செய்திகள் அவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அரசாங்கம், யாழ்ப்பாண மக்களுக்கான பிரதான வழங்கல் பாதையை மூடிவிட்டு அம் மக்களை பட்டினிச்சாவில் தள்ளியுள்ளது. அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்து அவர்களை சொந்த மண்ணிலே சிறை வைத்துள்ளது. உறவைப் பிரிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக ஏங்கி நீண்ட நாட்களாக கண்ணீர் வடிக்கின்றனர். காலை எழுந்தவுடனே பெட்டி படுக்கையுடன் இன்று கப்பல் பயணம் கிட்டுமா, விமானப் பயணத்துக்கு யாரை நாட வேண்டுமென பசி பட்டினியுடன் திரிவது சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. எது வேண்டுமானாலும் தருகின்றோம் எங்களை அனுப்பி விடுங்கள் என கெஞ்சிக் கேட்பது யாருக்கு கேட்கப் போகிறது.

அரசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை, உணவு மருந்து பரிசோதகர்கள் நிச்சயமாக வழங்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் பொருட்களை அரசாங்கத்துக்கு விற்பனை செய்பவர்கள் கொழும்பில் `குளுகுளு' அறைகளில் வாழும் யாழ்ப்பாண வியாபாரிகள் தான் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் காலம் காலமாக நாட்டரிசியை தமது மதிய உணவுக்கு பயன்படுத்தி வந்த கலாசாரம் அவர்களுடையது. தென்னிலங்கையில் ஒரு பிடி நாட்டரிசி கூட கிடைக்கவில்லையென்ற நினைப்பில், தரம் குறைந்த கோறா, சம்பா அரிசியையல்லவா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த அரிசிச் சோற்றை உண்டு பழகாத மக்களுக்கு தினம் தினம் வயிற்றோட்டத்தால் வாடும் நிலையே காணப்படுகின்றது.இதுவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை, தேயிலைத் தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையாக கிலோ முப்பது ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையாகும்.

பாதுகாப்பு பிரிவினருக்கு, பாவிப்பதற்கு மணப்புச் சவர்க்காரம் யாழ்ப்பாண மக்களுக்கு சொறி சிரங்குள்ளவர்கள் என காபோலிக் அமிலம் சேர்த்த லைபோய்தான் என்கிறார்கள். சாக்குக் கணக்கில் "சோயாமீற்" என தரம் குறைந்த உணவுப் பொருளே பங்கீட்டுக்கு என்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில், ஒரு போதும் சூரியா தீப்பெட்டியைத் தவிர வேறு எந்த தீப்பெட்டியையும் வாங்க மாட்டார்கள். காரணம் மற்றைய தீப்பெட்டிகள் பற்றாது என்பது நம்பிக்கை, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட தீப்பெட்டிகளோ இருபது குச்சுகள் கூட பற்றாது. ஆனால் அரசாங்கம் நானாவித பொருட்கள் தாராளமாக அனுப்புவதாக பிரசாரம் செய்கின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் லீற்றர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்ததால், அது கிடைக்குமா என நாய் போல் அலைந்து திரிவது எல்லோர் மனங்களையும் வருத்துவது யாருக்குத் தெரியும்.

குடாநாட்டில் அதிக மக்கள் நடமாடும் ஒரே நகரம் யாழ்ப்பாணம் தான். அதற்கும் முழுமையாக பாதுகாப்புப் பிரிவினர் வேட்டு வைத்து விட்டனர். முதலில் பிரதான வீதிகளில் இடைக்கிடை தடையைப் போட்டு மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர். எந்தவொரு வர்த்தக நிறுவனம் முன்னாலும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை நிறுத்தக் கூடாதென தடை விதித்தனர். உத்தரவை மீறியவர்களை தாக்கினர். இன்றைக்கு நகரமே சோபை இழக்கும் வகையில், திடீர் திடீரென யாழ்ப்பாண பஸ் நிலையத்தை புனரமைப்பதாகக் கூறி பேருந்து தரிப்பிடத்தை கழற்றி விட்டு பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் பண்ணைக்கு மாற்றப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது. இது நகருக்குள் நடமாடும் சகல மக்களுக்கும் ஆபத்து என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறார்கள். நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ மையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம். இது கோடிக்கணக்கான முதலீட்டை வைத்திருக்கும் நகர வர்த்தகர்களை தமது பொருட்களை நகரின் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு வழி செய்துள்ளது. அழுது புலம்புவதைத் தவிர வெள்ளம் வருமுன்னர் அணைகட்டுவது அவசியமானதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப்பாதையைத் திறக்க வேண்டுமென இணைத் தலைமை நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் கூடிய நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இந் நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாண சமுதாயம் முழுமுனைப்போடு செயல்பட்டது மட்டுமல்ல, அவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் பிரிவினர், இவ் வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட இரு மதகுருமாரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் விரோத உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். இம் மதகுருமார் உண்மையில் அப்படி நடந்து கொண்டனரா என விசாரணை நடாத்தி வருகின்றது. துன்பப்படும் மக்களுக்காக நீதியை நிலைநாட்ட மதகுருமார் செயல்படுவது தேச விரோத குற்றம் என யாழ்ப்பாண சமுதாயம் அழுதுபுலம்புகின்றது.
இதேவேளையில் யாழ்ப்பாண மாணவர் சமுதாயம் மீதும் கல்வியாளர்கள் மத்தியிலும் புதிதாக குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தவர்களை தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதை இந் நடவடிக்கை காட்டுகின்றது.அதிபர்கள், குடாநாட்டில் இடம்பெறும் அவலங்களுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு தோன்றி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களையும் தங்கள் வழிகாட்டலில் தான் செய்திகளை பிரசுரிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது உலகமே வெறுக்கும், மியன்மார் இராணுவ ஆட்சி முறைக்கு யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயகத்தை நேசிக்கும் யாழ். மக்கள் கருதுகின்றனர். குடாநாட்டில் விரைவில் "பத்திரிகை தணிக்கை" வரும் என்பதில் சந்தேகமில்லை. குடாநாடு பல தடவைகளில் செய்தித் தணிக்கைகளுக்குள் ஜனநாயகத்தின் குரலாக வெளிவந்த வரலாறு இருந்துதான் வந்துள்ளது.

Wednesday, November 15, 2006

அம்பலமாகும் இலங்கையின்" பொட்டுக்கேடு"


சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'!

லங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக். ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங் கள் படைக்குத் திரட்டுகின்றார்கள் என்று "ஆடு நனைகிறது எனக் கவலைப்பட்ட ஓநாய்கள்' போல முதலைக் கண்ணீர் வடித்த தென்னிலங்கை, இப்போது "தேள் கொட்டிய திருட னாக' துடிக்கின்றது. வயது குறைந்த தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலி கள் படைக்குச் சேர்க்கிறார்கள் என்றுதான் இதுவரை குற்றச் சாட்டுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இலங்கை அரசுப் படைகளோ தனது ஒட்டுப்படையான கருணா குழு மூலம் தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாக மடக்கிப் பிடித்து, கடத்திச் சென்று, படைக்குச் சேர்க்கின் றன என்ற உண்மையைச் சர்வதேச அமைப்பு இந்த விட யத்தில் உண்மையைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் தகுதியுடைய ஸ்தாபனம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகத் தென்னிலங்கை அரசின் போக்கு எத்தகையது, அதன் உண் மைச் சொரூபம் என்னவென்பவையெல்லாம், அதன் முகமூடி கிழிய இப்போது வரிசையாக அம்பலமாகத் தொடங்கிவிட் டன.

1990 களில் யாழ். நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி அகதிகள் 170 இற்கும் அதிகமானோரை விமானக் குண்டு வீச்சு மூலம் கூண்டோடு கொன்றொழித்துவிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று உண்மையைத் தென்னிலங்கை புதைகுழி தோண்டிப் புதைத் தமை போன்றதல்ல இப்போதைய நிலைமை.

சீருடையினரின் இரும்பு வேலிகளைத் தாண்டி, மறைப்புகளைக் கடந்து, கொடூர நெருக்குவாரங்களை மீறி, உண்மைகளும், நிகழ்வுகளின் மூலங்களும் அம்பலமாகும் நிலைமைக்குத் தொழில் நுட்பமும், வசதிகளும் வளர்ந்துவிட்டன. அதனால், சத்தியத்துக்கு வேலி போட்டு மூடும் தென்னி லங்கை முயற்சி தோற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களைச் சுற்றி வளைத்து கருணா குழு பிடிப்பதற்கு கிழக்கில் அரச படைகள் எப்படி உதவுகின்றன, எவ்வாறு சிறுவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கின்றன, மடக்கிப் பிடிக்கப்படும் சிறுவர்கள் பல படை முகாம்கள் மற் றும் தடைநிலைகளைத் தாண்டி, பாதுகாப்பான இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு பலவந்தமாக ஒட்டுப்படைகளில் இணைத்து ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத் தப்படுகிறார்கள், இத்தகைய அராஜகம் குறித்துச் செய்யப்படும் முறைப்பாடு களை அரசும், அரசுப் படைகளும், பொலிஸும் எவ்வாறு உதாசீனம் செய்கின்றன என்று எல்லா விடயங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் அலன் றொக்.

இந்த விவகாரங்களை நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துத் தாம் முறையிட்டார் எனவும், இது குறித்து முழு அளவில் விசாரணைகளை நடத்தி உண்மை களைக் கண்டறியவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் ஜனாதிபதி உறுதி யளித்தார் என்றும் கூட அலன் றொக் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உறுதி வழக்கங்களில் சர்வதேச சமூகத் துக்கு ஏதோ நம்பிக்கையிருக்குமோ என்னமோ, ஆனால் தமி ழர் தரப்புக்கு நம்பிக்கையே கிஞ்சித்தும் கிடையாது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனில் தொடங்கி ரவிராஜ் எம்.பி.படுகொலை வரை பல்வேறு அராஜகங்களுக்கு இவற்றில் பலவற்றுக்குக் குற்றச்சாட்டு விரல் அரசுப் படைகளை நோக்கி நீண்ட நிலையில் இத்தகைய நியாயமான விசாரணைகள் பற்றிய அறிவிப்புகள் ஜனாதிபதி மஹிந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டமையையும் அவற்றினால் ஏற்பட்ட பலன் யாதுமில்லை என்பதை யும் "விசாரணை எனும் மாயமான்' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இப்பத்தியில் விவரமாக விளக்கியிருந்தோம்.

இந்த விடயத்தில் விசாரணை அறிவிப்புக்கும் அது அப் படியே பொருந்தும். இன்னொரு விடயம். சிறுவர்களைப் பலவந்தமாக மடக் கிப் பிடித்துக் கடத்திச் சென்று ஆயுதப் படையில் சேர்க்கும் இந்தத் திருகுதாளம் தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. 1988 1989 ஆம் ஆண்டுகளில் "அமைதிப்படை' என்ற பெயரில் இந்தியத் துருப்புகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக் கிரமித்திருந்த சமயத்தில், அந்தப் படைகளுடன் சேர்ந்து வந்த குழுக்களும் கூட இதே மாதிரி அராஜகம் புரிந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.

இவ்வாறான பலவந்த கட்டாய ஆட்சேர்ப்பும், ஆயுதப்
பயிற்சியும் சண்டை என வரும்போது எவ்வாறு பொல பொலத்து எதிர்ப்பக்கமாகத் திரும்பின என்பதை 1989 நவம் பர், டிசம்பர் மற்றும் 1990 ஜனவரி அனுபவங்கள் மூலம் இலங்கை கண்டறிந்துள்ளது.

அந்தப் பட்டறிவிலிருந்து கற்ற பாடத்தை மறந்து, இராணுவத்தின் சதி வலையில் சிக்கி, அதே "மண் குதிரைத் திட்டத்தை' நம்பிப் போர் எனும் ஆற்றில் இறங்க முயலும் தரப்புகள் ஒன்றுக்கு இரண்டு தடவை இந்த உழுத் துப்போன முயற்சி குறித்து சிந்திப்பது நல்லது.

நன்றி:-யாழ் உதயன் ஆசிரிய தலையங்கம் (14-11-2006)