Monday, June 22, 2015

தமிழ்நாட்டின் அதிசய உண்மைகள்:!!


1)  வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2)  ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3)  நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4)  தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5)  முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6)  கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7)  வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8)  கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா   இருந்தாலும் 100 மதிப்பெண்.

9)  பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10)  ஒரு சினிமாவ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதே பாணியில் படம் எடுப்பது.

11)  பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.



12)  மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது.

14)  கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15)  அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.

16)  பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17)  நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18)  இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும்பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19)  பரிட்சை எழுதாதவனுக்கு"பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20)  இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21)  Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.



22)  இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும், இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23)  கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

24)  இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.

25)  குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு, சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

26) மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.

27)  வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது, தெற்கே படிப்பவனுக்கு ஜான்சிராணி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.

28)  சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும், அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

29)  இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.

30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.

31)  பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.

32)  நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது...

33) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என போஸ்டர் அடிப்பது


34) கண்ட  கண்ட இடங்களில் எல்லாம் கூ ச்சம் இல்லாமல்  ஒண்ணுக்கு
அடிப்பது

35) பல் விழுந்த பாட்டியானாலும் பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்தால் கற்பே  பறிபோன மாதிரி கூ ச்சல் போடுவது


36) ஊழலில் ஊறித்திளைத்த  அதிமுகாவையும் ,திமுகாவையும்  இன்னமும்
நம்புவது .


37) எந்த வியாதிஎன்று  டாக்டரிடம் போனாலும்  ஊசி போட்டு அனுப்புவது .


38) வெத்திலையை போட்டுவிட்டு  பஸ்ஸின் ஜன்னல் வழியா துப்புவது


39) வருகின்ற படம் ஒன்னுவிடாம பாத்துட்டு  ஒரு வாட்டி பாக்கலாம்  என
அட்வைஸ் பண்ணுவது


40) காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்துவிட்டு மாலை ஆனதும் டாஸ்மார்க்கில்  ஏத்திக்கொண்டு தியேட்டர் வாசலில் படம் பார்க்க கியூவில் நிற்பது .


இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.. நான் இதோடு நிறுத்திக்கிறேன்.தேவைபட்டால் இன்னமும் வரும் 

Sunday, June 21, 2015

அப்பா!! எனக்கு இரண்டு டொலர் ($2) தருவீங்களா ?

நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடடுக்கு திரும்பினார்  ஒரு தந்தை வேலைக் களைப்பு மற்றும் குளிர் அவரை சோர்வடைய வைத்திருந்தது .கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த தந்தையை எதிர்கொண்டான் அவரது 12  வயதான மகன் .தந்தை எப்போது வருவார் என்ற தவிப்பும் நீண்ட நேரம் காத்திருந்தகோபமும் அவனது முகத்தில் இருப்பதை தந்தையால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

ஏன் அப்பா இவ்வளவு லேட் ?இன்றைக்கு என்றாலும் கொஞ்சம் வேளைக்கே வேலையால் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்றான் மகன்

"அலுவலகத்தில் ஒரு அவசரமான மீட்டிங் அதுதான் வர  தாமதம் ஆகி விட்டது" என்று சமாளித்தார் தந்தை.

உடனே மகன் கேட்டான் தந்தையிடம் அது சரி "நீங்கள் மீட்டிங்கில் இருக்கும் நேரத்துக்கும் உங்களுக்கும் சம்பளம் வருமா?" என்று

தந்தை சிறிது விறைத்த முகத்துடன் மகனை நோக்கி சொன்னார்  ஆம் என்றார்

உடனே மகன் கேட்டான் ஒரு மணித்தியாலத்துக்கு உங்கள் சம்பளம் என்ன அப்பா ?

ஏற்கனவே களைப்புடன் வந்த தந்தைக்கு மகனின் இக் கேள்வி கோபத்தை ஏற்படுத்தி விடவே மிகக் கோபத்துடன் சொன்னார் மகனைப் பார்த்து "இது உனக்கு தேவைஇல்லாத விடயம் .வயதுக்கு மீறி கதைக்கக்கூடாது இனி இப்படி என்னிடம் கேள்வி கேட்காதே என்று இரைந்தவர் சரி நேரம் ஆகிவிட்டது .படுக்கைக்கு போ ,நாளை உனக்கு பாடசாலை அல்லவா என்று சொல்லவே முகத்தினை தொங்கப்போட்ட வாறு எழுந்த மகன்  தனது அறைக்குள் புகுந்து கொண்டான் .

தந்தையார்  முகம் எல்லாம் கழுவிவிட்டு சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்த தந்தைக்கு மகனின் கேள்வியும் தான் சத்தம் போட்டதும் மீண்டும் மனதில் நிழலாடகொஞ்சநேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவர் .எழும்பி மகனின் அறைக்கு சென்றார் .அங்கே மகன் கட்டிலில்  குப்புற படுத்தபடி அழுதுகொண்டிருப்பதைகண்டவுடன் துணுக்குற்ற தந்தையார் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் மகனின் தலையை கோதிவிட்டவாறு கட்டிலில் அமர்ந்தபடி  சொன்னார்

மகனே நீ என்னுடைய மணித்தியால சம்பளம் பற்றிக்கேட்டவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது ,எனக்கு வேலைக்களைப்பு ,பசி வேறு அதனால் தான் அப்படி நடந்துகொண்டேன் என்றவர்.

அது சரிஎதற்காக அப்படிஎன்னிடம் கேள்வி கேட்டாய்? என்றார்.

எந்த ஒரு பதிலும் சொல்லாத மகன் எழுந்து தன்னுடைய அலுமாரியை திறந்து ஒரு உண்டியலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு "இப்போது சொல்லுங்கள் அப்பா

உங்கள் ஒரு மணித்தியால சம்பளம் என்ன" ? என்று கேட்டான் .

சரி மணித்தியாலத்துக்கு ஒரு இருபது டொலர் என்று வைத்துகொள் என்றார் தந்தை இரக்கத்துடன்

சரி அப்படி என்றால் எனக்கு ஒரு இரண்டு டொலர்கள் தருவீங்களோ அப்பா என்றான் மகன்

கண்டிப்பாக தருகிறேன் ,நீ எதுக்கென்று காரணம் சொன்னால் என்றார் தந்தை

இல்லை அப்பா ,எனது உண்டியலில்  வெறும் பதினெட்டு டொலர்தான்  இருக்கிறது.நீங்கள்  இன்னும் இரண்டு டொலர்கள் எனக்கு தருவீர்கள் அனால் நான்

எல்லாவற்றையும் சேர்த்து இருபது டொலர்களாக உங்களுக்கு தருவேன் என்றான் மகன்

சிரித்துக்கொண்டே தந்தை கேட்டார் "ஏன் எனக்கு நீ இருபது டொலர்கள் தரப்போகிறாய் என்பதை அறிந்துகொள்ளலாமா"?

இல்லை அப்பா. நாளைக்கு ஒரு மணித்தியாலம்  முன்பாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து என்னோடு சேர்ந்து  டின்னர் சாப்பிடவேண்டும்

செய்வீர்களா?அப்பா என்றான்  மகன் .

துணுக்குற்ற தந்தையின் கண்களில் இருந்து நீர் ததும்ப தொடங்கிற்று .தந்தை ஏன் கண்ணீர் விடுகிறார் என புரியாமல் திகைத்த மகனை அணைத்து முத்தமிட்டவாறே  தந்தை நீண்ட நேரம் அந்த கட்டிலில் அமர்ந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார் .






இது ஒரு ஆங்கில கதை நீண்டகாலத்துக்கு முன்னர் படித்தது .தமிழில் சிறிது மெருகூட்டி தந்திருக்கிறேன் .ஜூன் 21 திகதி தந்தையர் தினம் .

நீங்கள் ஒருதந்தையானால் கண்டிப்பாக இந்தக்கதை உங்களை பாதித்திருக்கும் .இந்த கதையை படித்த காலங்களில்  இதன் பாதிப்பு எனக்கு நிறையவே  இருந்தது .விளைவு நான் பிள்ளைகளுடன், மனைவியுடன் செலவளிக்கும்  நேரத்தினை அதிகரித்திருந்தேன் என்னை அறியாமலேயே .

இன்றைய காலங்களில் பெரும்பாலும், தாய் ,தகப்பன் இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலைதான் பெரும்பாலும் உலகெங்கும் .விளைவு பிள்ளைகளுடன்
செலவிடும் நேரம் குறைவடைகிறது .இதனை நிவர்த்திசெய்யஇதனால் ஏற்படும்   ஒரு குற்ற உணர்வுடன் பிள்ளைகள் எது கேட்டாலும் அல்லது கேட்காமலேயே பலதையும் பிள்ளைகளுக்கு  வாங்கிகொடுப்பதுடன் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக் பணத்தினையும் கொடுத்து பிள்ளைகளை பழுதாக்குகிறார்கள் .



நான் எனது பிள்ளைகள் கேட்பதை உடனடியாக வாங்கிக்கொடுப்பதில்லை அவர்களுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்தி ,பொருட்களின் பெறுமதியை உணர்த்தியபின்னரே வாங்கிக்கொடுப்பேன் .நாலு கடைகளுக்கு கூட்டிச்சென்று பொருட்களின் விலை வித்தியாசங்களை உணரச்செய்திருக்கிறேன் .மொத்தத்தில் பணத்தின் பெறுமதியை அவர்களை  உணரச செய்திருக்கிறேன் .என்பதில் பெருமிதம் அடைகிறேன் .

.அந்தந்த வயதில் கேட்டதை எல்லாம் நிறைவேற்றியே வந்திருக்கிறேன் .ஒரு பிள்ளை அந்தந்த பருவங்களில் கேட்பதை வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை .
அந்தந்த பராயங்களில் விளையாடுவதை அல்லது அனுபவிப்பதை வளர்ந்து பெரியவன் ஆனதும் அதை சொந்தமாக  வாங்க வசதி இருந்தாலும் அனுபவிக்க முடியாது அதை அதை அந்தந்த பராயங்களில் தான் செய்முடியும் .சிறு வயதில் பலூன் கேட்கும் பிள்ளைக்கு அந்த வயதில் தான் பலூன் வாங்கிகொடுக்கவேண்டும் .இருபது வயதில் பலூன்களை வாங்கிக்கொடுத்து விட்டு விளையாடு என்றால் எப்படி இருக்கும் ?

மொத்தத்தில் நான்  என் பிள்ளைகளிடம் கண்டது எத்தனை ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும் நாங்கள் பிள்ளைகளுடன் செலவளிக்கும்



மணித்துளிகள் தான் பிள்ளைகளை சந்தோசமாக வைத்திருக்கும் இது எனது அனுபவம் .மேலே உள்ள கதை உணர்த்துவதும் அதையே .

நீங்கள் எப்படி? ஒரு  நல்ல ஒரு தந்தையா? அல்லது கதையில் வரும் தந்தையை போன்றவரா ? எப்படி என்று கண்டிப்பாக  உங்களுக்கே தெரிந்திருக்கும் .இந்த கதையில் வரும் தந்தை போல என்றால்  கண்டிப்பாக உங்களை திருத்திக்கொள்ளுங்கள் .

இன்றைய தந்தையர் தினம் ஒரு ஆரம்பமாக  இருக்கட்டும் .நீங்கள் ஒரு நல்ல தந்தை என்றால் கண்டிப்பா நீங்கள் உங்கள் சட்டை கொலரை உயர்த்திவிட்டுக்கொள்ளலாம்.

இறுதியாக :எந்தக் குழந்தையும் நல்ல  குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் ,அது நல்லவராவதும் தீயராவதும் "தந்தை" வளர்ப்பினிலே

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் '

கரிகாலன்



 .

Friday, June 19, 2015

இன்றைய திகதியில் இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!!



சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படம் எனக்கு மெயிலில் கிடைத்தது.உண்மையில் எடுக்கப்பட்ட படம் என்பது பார்த்தவுடன் விளங்கினாலும் யார் எடுத்தது என்பது உடனடியாக புரியவில்லை .இணையத்தினை மேய்ந்ததில் நதி மூலம் கிடைத்தது .

மத்திய புளோரிடாவில்  வனப்பகுதியில் ரிச்சார்ட் ஜோனஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சவாரி  சென்றதை கண்டு  அதிர்வுற்று  அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார்.

கடந்த வாரம் இந்த  புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகி  வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது


Embedded image permalink

.
முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி கலக்கி வருகிறது . பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த வாரத்தில்  இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்ட் ஜோனஸ் அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறி உள்ளார்.

 இது இப்படியே இருக்க இணையத்தில் கிடைத்த இன்னும் சில இதே மாதிரி படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 இதில் மனிதனின் படம் மட்டும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறேன் .மற்றவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் மனிதனை அடித்துக்கொள்ள உலகில் ஆளே கிடையாது .அதுவும் தேவைபட்ட இடம் வரை முதுகில் சவாரி செய்துவிட்டு தேவை முடிந்தவுடன் குதித்து ஓடுவது மட்டும் அல்லாமல் சவாரி செய்தவனின்  காலை வாருவதிலும் மனிதனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

இன்னும் சில படங்களை  கிழே தந்திருக்கிறேன் பார்த்து ரசியுங்கள்





































நன்றி ! மீண்டும் சந்திப்போம்.

Monday, June 15, 2015

நான் எப்படி இந்து ஆனேன் ? ஒரு உண்மைக்கதை

அண்மையில் செய்திகளில் இடம்பெற்ற ஒருஜெர்மனியரின்  உண்மைக்கதை எனது கவனத்தினை ஈர்த்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன்.
சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். போதைப் பொருள்களுக்கு அடிமையாகினேன். அதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டு, ஓர் போதைப்பொருள் தடுப்பு மையத்தில் சேர்த்து விடப்பட்டேன்.

அந்த மையத்தில் தான் எனது வாழ்வின் ஒரு புது அத்தியாயம் துவங்கியது. அங்கு நிறைய பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் தந்தனர். சில நேரங்களில் எனக்கு போதைப் பொருள்களை உண்பதற்கு கைகள் துடிக்கும்; உடம்பெல்லாம் மிகவும் பலவீனமாகும். ஒரு பைத்தியக்காரனைப் போல் தவிப்பேன். எனக்கு ஆறுதலாக யாருமே இல்லை என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினேன்.


அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நான் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எனினும் எனக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தியானங்களையும் செய்ய துவங்கினேன். மூச்சுப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். எல்லா சமயநூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். பைபிள், குரான் என்று படித்தேன். பகவத் கீதையையும் புராணங்களையும் படித்தேன்.

பின், ஆதிசங்கரர் வாழ்க்கையைப் பற்றி படித்தேன். ஸ்வாமி சிவானந்தாவின் வழித்தடங்களை பின்பற்றினேன். சிவபெருமானின் புகழைப் படித்தேன். வேறு எந்த மதமும் அளிக்காத முழு ஆன்மீகத்தையும் சனாதன தர்மம் எனக்கு அளித்தது. இத்தனை காலமும் என்னுள்ளே இருந்த இறைவனை நான் அறியாமல் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினேன்.



எனக்கு யோகா பயிற்சி அளித்த குரு, என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். உனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் உன் இறைவனை நினைத்துக் கொள். அவரின் பெயரையே சொல். நீ செய்யும் காரியங்களை எல்லாம் அவருக்காக செய்வதாகவே எண்ணிக் கொள் என்றார். இறைவன் என்றவுடன் என்னையே அறியாமல் மஹாதேவன் தான் என் கண் முன் தோன்றினார். எனக்கு எப்போதெல்லாம் போதைப்பொருளின் எண்ணம் வருமோ அப்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று செப்புவேன். அப்படிதான் என் மனத்தை கட்டுப்படுத்த பழகினேன்.

ஆரம்பத்தில் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபெறவே நான் மஹாதேவரின் அருளை நாடினேன். காலப் போக்கில் தான், அவர் எப்போதும் என்னுள் தான் இருந்திருக்கிறார்; அதை இப்போது தான் நான் உணர்ந்தேன் என்பதை அறிந்தேன். தினமும் நான் வழிபாட்டின் மூலம் மஹாதேவரோடு பேசுகிறேன்; தியானத்தின் மூலம் அவர் பேசுவதை கேட்கிறேன். இதைவிட என் வாழ்க்கையின் வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது மஹாதேவர் தான். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், நான் முழுமையாக குணமடைந்து வெளியேறினேன். எனக்கு இனி எந்த பொருளின் மீதும் மோகம் இல்லை. மீண்டும் நிலையற்ற பொருளின் மீது மோகம் கொண்டு, மீண்டும் என்னுள் இருக்கும் மஹாதேவரை நான் மறக்க விரும்பவில்லை. எப்படியெல்லாம் வாழலாம் என்பதை சனாதன தர்மம் எனக்கு கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையில் சறுக்கும் போதெல்லாம் தூக்கிவிட மஹாதேவர் இருக்கிறார்.

ஒரு காலத்தில் பாவங்கள் செய்து வாழ்ந்திருந்தாலும், என்னையும் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்தார். சிலவேளைகளில் நான் கடந்தகாலத்தை எண்ணி வருந்துவேன். அப்போது, நீ பாவியல்ல; நீ தெய்வீகமானவன் என்பதை முதலில் உணர்ந்து கொள். நீ பாவி என்று எண்ணும் எண்ணம் தான் உன்னை பலவீனமானவன் ஆக்குகின்றது என்று என்னுள் இருக்கும் மஹாதேவர் எனக்கு அடிக்கடி நினைவுறுத்துகிறார்.

என் குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள். என்னுடைய மாற்றங்களைக் கண்டு அவர்கள் மனம் மிகவும் பூரித்தனர். இன்று என் வீட்டிலே பூஜை அறை வைத்திருக்கிறேன். அங்கு கணபதி, மஹாதேவர், தேவி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய அனைவரும் இருக்கின்றனர். தினமும் நான் அவர்களுக்கு மலர்கள் தூவி வழிபடுவேன். என்னுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று என்னுடைய வாழ்க்கை முறையான பாதையில் போகின்றது. மஹாதேவரை காணும் பாதையை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை நான் சுயநினைவுகளை இழந்து போனாலும் கூட, என் மஹாதேவரை நான் என்றுமே மறவாது இருக்க என் பெயரிலே அவரை சேர்த்துவிட்டேன்.

உடலுக்கு வலிமையை தர யோகாசனங்கள், மனத்திற்கு வலிமையை தர தியானம், ஆரோக்கியமான வாழ்விற்கு சாத்வீகமான உணவுமுறை, அனைத்திற்கும் மேலாக ஒரு தந்தையாய், நண்பராய் எப்போதும் என்னோடு இருக்கும் மஹாதேவர்....

"உங்களிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், நீங்கள் பிறந்திருக்கும் இந்த சமயம், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் தோன்றியிருக்கிறான் என்பதை கற்று தருகின்றது. ஆகவே, இந்த உன்னதமான தத்துவத்தைப் போற்றி எல்லோரையும் சமமாக நேசியுங்கள்."

Wednesday, June 10, 2015

கொத்துரொட்டி --006

ண்மையில் சாருநிவேதிதாவின் நாவல்கள் சிலவற்றை  அண்மையில் தெரியாதனமாக படித்து தொலைத்துவிட்டேன் .நாவல்களை  படித்து முடித்ததும் உண்மையிலேயே கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது .எப்படி இவரின் நாவல்களை எல்லாம் படிக்கிறார்கள் .கிட்டத்தட்ட ஆபாசத்தின் எல்லை எதுவோ அதை தொட்டுவிடுகிறார் .நாவல்களில்

இடையிடையே உலகில் இருக்கும் பெயர் தெரியாத நாவலாசிரியர்கள் அல்லது இசைஅமைப்பாளர் அல்லது இசைக்கலைஞர்கள் இவற்றில் எதோ ஒன்று அல்லது எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார் .நாவலை படித்து முடித்ததும் ஒரு வெறுமையே மனதில் நின்றது .இவரின் எழுத்து புகழ் பெற்றது ஆபாசத்தினாலா  அல்லது அதில் சிறிதளவில் இருக்கும் விடயத்துக்காகவா?

இவரின் சில நாவல்களை  படித்தபின்னர்  எனக்கும் மனதினில் ஒரு தெம்பு நானும் ஒரு எழுத்தாளராக வரலாம் என்று .சரி நான் இங்கு சொல்லப்போவதை கவனமாக படியுங்கள் .ஒரு நாவலில் சொல்கிறார் தமிழ்நாட்டில்  பெரும்பாலான ஆண்களுக்கு சர்க்கரை வியாதி .பிரஷர் இரண்டுமே இருக்கிறது  அப்போது  எப்படி அவர்களின் மனைவிமார்கள் பாலியலில்  திருப்தி அடைவார்கள் என்று கேட்கிறார்  .என்ன செய்வது இந்திய பெண்கள் என்பதால் மனதினில் குமைந்தாலும் அவர்கள் வெளியில் அதுபற்றி கதைப்பதில்லை என்கிறார். எந்த நாவல் என்று மறந்துவிட்டேன் ,சாருவின் மூளை  எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சில தினங்களுக்கு முன்னர் நானும் நண்பரும் "ரிம் ஹோட்டனில்" இருந்து கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் .ரிம் ஹோட்டன் என்றால் புரியாதவர்களுக்காக இது    ரிம் ஹோட்டன் என்பது கனடாவின் பிரபல்யமான "காப்பி சாப்". கனடாவில் அமெரிக்காவின் ஸ்ரார் பக் எல்லாம் இதற்கு கிட்ட வரமுடியாது  .ஒவ்வொரு சந்திக்கு சந்தி இக்கடை இருக்கும்.பொதுவாகவே கனேடியர்கள் கோப்பி பிரியர்கள் விளக்கம் போதுமா .

இனி விட்ட இடத்தில இருந்து நாங்கள் இருவரும் கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா ?இப்படி இருக்கும் போது எமக்கு பக்கத்து மேசையில் மூன்று பேர்  வந்து அமர்ந்தார்கள் .மூவரும் இங்கு கனடாவில் இயங்கும் ஒரு வானொலி நிலையத்தினை சேர்ந்தவர்கள் .ஒருவர் அதில் அறிவிப்பாளர் மற்றவர்கள் அதன் உயர் அதிகாரிகள் .அவர்களின் வானொலி நிலையத்துக்குரிய வாகனம்  வெளியே நிற்பதையும் அவதானிக்க முடிந்தது

.முன்று பேரும்  சான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு  கோப்பியும் அருந்தியவாறு
அளவளாவிக்கொண்டிருந்தார்கள்.இதில் மறைய இருவரும் இயல்பாக இருக்க இந்த அறிவிப்பாளர் மட்டும் அடிக்கடி எம்மைப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது .

அவரால் இயல்யாக இருக்கவே முடியவில்லை .அவர்களுடன் கதைப்பது அடிக்கடி எம்மைப்பார்ப்பது இப்படியே போகவே அவரின் மனநிலை எனக்கு தெளிவாகவிளங்கியது .என்னடா எதிரில் இரண்டு தமிழர்கள் இருந்தும் பிரபல்யமான தன்னை கண்டு கொள்கிறார்கள் இல்லையே  என்பது தான் அவரின் பிரச்சனை .புகழ்பெற்ற
பலரின் பிரச்சனையும் அதுதான் .மற்றவர்கள் தம்மை கவனிக்கிறார்களா ,அங்கீகாரம் தருகிறார்களா என்பதை கவனிப்பதே அவர்களின் வேலை .இதில் முன்னாள் பிரபலங்கள் என்றால் இந்த பிரச்னையின் வேகம் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் .அறிவிப்பாளருக்கு ஒரு ஹாய் சொன்னதோடு சிரித்தும் வைத்தேன் .அதன் பின்னர் தான் அவரால் இயல்பாய் இருக்க முடிந்தது .

நடிகை பத்மினி ரொறன்ரோவில் வந்த போது நடந்த சம்பவங்களை வைத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் .படிக்காதவர்கள் படித்துப்பாருங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது  கடந்தவாரம் இலங்கையில் நடந்த சம்பவம் .
தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் ஒரு நபர் தனது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி  சண்டை பிடிப்பாராம் .இப்படியான சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் அவர்களின் வளர்ப்பு  நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டிம்  வந்துள்ளதாம்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் இந்த நபர்   மனைவியுடன் சண்டைபிடித்ததுடன் மனைவியை பலமாக தாக்கினாராம் இந்நிலையில்  குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.
படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக தெரிய வருகிறது .

இதனால் ஆகப்பட்டது நண்பர்களே .மனைவியுடன் ண்டைபோடும் அன்பர்களே நாய் மேல் கவனம்.முக்கியமாக கட்டி இருக்கிறதா என சண்டைக்கு முதல் உறுதிப்படுத்திக்கொண்டு சண்டை தொடங்கவும் .இரண்டாவதாக நாய்க்கு மனைவிதான் உணவு வைப்பார்கள் என்றால் இன்னும் கவனம் தேவை நல்ல சங்கிலியால் கட்டவும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துகொள்ளவும்.முக்கியமாக் இப்படியான செய்தியை மனைவியின் கண்களில் படாமல் மறைத்து வைக்கவும் .நல்ல காலம் எங்கட வீட்டில் நாய் இல்லை .ஒரு முறை மகன் கேட்டதுக்கு மனைவி  சொன்ன பதில் ஒன்றை வளக்குறது காணாதோ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


டெல்லியில்  ஒரு அமைச்சரை கைது செய்திருக்கிறார்கள் .போலியாக
 சான்றிதழ் கொடுத்ததுக்காக இங்கு கைது செய்தது  சரிதான் என்றாலும் எனது மனதில் ஒரு கேள்வி இந்தியாவில் அல்லது இலங்கையில் வேலைக்கு விண்ணப்பித்தால்  அடிப்படை தகுதி இருக்கவேண்டும் ,சான்றிதழ் காட்டவேண்டும் .ஆனால் அதே இலங்கை ,இந்தியாவில் ஒரு அரசியல்வாதி பாராளுமன்றம் ,அல்லது சட்டசபை  செல்ல  அல்லது அதற்கும் மேலே ஏதும் பதவி வகிக்க எந்த அடிப்படை தகுதியும் இருக்கவேண்டியதில்லை .(இங்கு கனடாவில்  பட்டதாரியாக இருக்கவேண்டும்) .ஏன் இப்படியான பதவிகளுக்கு வருபவர்களுக்கு (இலங்கை இந்தியாவில் ) அடிப்படை தகுதியை  நிர்ணயம்
செய்யக்கூடாது . எனது கேள்வி என்னவென்றால் அடிப்படை தகுதி தேவை இல்லை என்ற நிலையில் என் டெல்லி அமைச்சர்  போலி சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கொண்டார் ? வெறும் சவுடாலுக்கா ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கீழே இருக்கும் இந்த வீடியோவை பாருங்கள் .ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் படிப்பிக்கும் இந்த நபரை பாருங்கள்  சிரித்துவிட்டு வயிற்று வலிக்கு மாத்திரை அனுப்பவும் என்று எனக்கு பின்னூட்டம் இடக்கூடாது .இப்பவே சொல்லிப்போட்டேன் .இது உண்மையில் சிரிப்புக்கிடமாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அந்த நபரின் முயற்சியை,திறமையை ,துணிவை பாராட்டுகிறேன் .ஆங்கிலம் தெரியாது என தயங்காமல் தெரிந்தவரையில் கதைக்கும் அவரது துணிவுக்கு ஒரு பாராட்டு .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்துரொட்டி பலருக்கும்  ரசிக்கும்படியாக இருக்கிறது என நினைக்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
மேலும் விடையங்களுடன்  சந்திக்கறேன்




Monday, June 08, 2015

கொத்துரொட்டி 005

ன் தொலைகாட்சி  ஊடக வலையமைப்பு பற்றி வரும் செய்திகள் ஒரே ஒரு கருத்தை மட்டுமே எனக்குள் எழுப்புகின்றன .இன்று தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சிதான் அனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மாறன் சகோதரர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடையம்தான் .தங்கள் தொலைக்காட்சியை முன்னேற்றி கொண்டே  மற்றைய  சானல்களை எல்லாம் தலைதூக்க  விடாமல்  பல அடாவடிகளை செய்தார்கள் .

அரசியல் ,அதிகாரம் ,பணபலம் .அடியாட்கள்.குழிபறிப்பு  என வழிகளில் மற்றைய சானல்களை எல்லாம் "தூக்கி அடித்தார்கள் "திமுக பதவியில் இருக்கும் வரை அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பலவருடங்களின் முன்பு ஒரு சனலின் பொங்கல் ஒளிபரப்பினை நிறுத்த தெருவைக்
கிண்டி கேபிள்களை எல்லாம் துண்டித்து தங்கள் பராக்கிரமத்தை காட்டியவர்கள் .சுமங்கலி கேபிள்விசன்  தொடங்கிய கதை ,வளர்ந்த கதை,மற்றைய சானல்களை எல்லாம் ஒதுக்கிய கதை  எல்லாம் பழங் கதை .

ஆசியாவில் இன்று அவர்கள் பெரும் பணக்காரர்கள் .ஆனால் இன்று
அவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.வானொலிகளுக்கு அனுமதி மறுப்பு இப்போது தொலைக்காட்சிக்கும்   வந்து விட்டது .ஏற்கனவே சொத்து முடக்கம் .இனி என்ன நடக்கப்போகிறது  .பணம் பாதாளம் வரை பாயப்போகிறதா ? அல்லது நடுவண் .அரசு  நேர்மையுடன் நடந்து கொள்ளுமா? பொறுத்திருந்து பார்க்கலாம் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இன்றைய தினம் இங்குநான் வசிக்கும்  ரொரன்ரோ மாநகரில் ஒரு இசை வெளியீடு நடைபெறுகிறது .‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’  தமிழகத்தின் கடைக்கோடி கடலோர கிராமங்களில் ஒன்றான இடிந்தகரை. அங்குள்ள பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளின் விளையாட்டுத் திறனையும், அந்த ஐவரில் ஒருவரான கிருஷாந்தி குமாரசாமியின் ஈழத்துப் பின்னணியையும் சுற்றிச் சுழல்கிறது கடல் குதிரைகள்.

 ஈழத்து பெண்ணான  கிருஷாந்தி, இடிந்தகரைக்கு வந்து சேர்ந்த கதையை துயரத்துடன் சித்தரிக்கும் கடல் குதிரைகள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கனடா வருகை தந்துள்ளதாகவும் அறியமுடிகிறது

இசை வெளியீட்டு விழாவில், ‘கூண்டுக்குள்ள விடுதலையை அடைக்க முடியுமா’ பாடலை,சுப்பர் சிங்கர் புகழ்  செல்வி ஜெசிகா ஜுட் நேரடியாகப் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மகி நூடில்ஸ் விவகாரம் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாக  உருவெடுத்து இப்போது ஒரு நிலைக்கு வந்துவிட்டது .இங்கு  இந்திய ,இலங்கை கடைகளில் டொலருக்கு நாலு மகி நூடில்ஸ் என விற்பதை சில காலங்களுக்கு முன்னர் கடைகளுக்கு போனபோது கண்டு இருக்கிறேன்

.இப்போது எப்படியும் கடையில் இருந்து அகற்றி இருப்பார்கள் .அது அல்ல நான் சொல்ல வந்த விடயம் .சாராயம் ,சிகரெட் என்பவற்றில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்  என எழுதி  விற்பது போல மகி நூடில்ஸ் பக்கற்றின் மீதும் இதை சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கலாம் என பொறித்து விற்காமல் விட்டார்களே என எண்ணி சந்தோசம்
அடைகிறேன் .என்ன சொல்கிறீர்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கனடாவை   இன்று ஆளும் அரசாங்கம் ஆனது பாதுகாப்பு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .இதில் ஒரு அங்கமாக இனி நாட்டுக்குள் வருபவர்கள்
விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது  பயணிகள் பயோமற்றிக் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையானது குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது  . இந்த பயோமற்றிக் சோதனை ஒரு உடலியல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கியதாக அமையும். கைரேகை பதிவு, முக அடையாளம், கை வடிவியல், கருவிழி அங்கீகாரம், விழித்திரைக்குரிய ஸ்கான் போன்ற பல இதற்குள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து உள்ளிட்ட 30 நாடுகளின் பயணிகளிற்கு இந்த சோதனை நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எனினும்  மேலதிகமாக 148 நாடுகள் இந்த வரிசையில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோமற்றிக் சோதனை ஒருவர் கனடாவிற்குள் நுழைய முன்னர் செயற்படுத்தப்படும் எனவும் விசாக்களுடன் வரும் வெளிநாட்டு பிரசைகளிற்கு மாத்திரமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வர வேணும் என்றால் முகத்திரையை கழட்டித்தனே  தீரவேண்டும் 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் இந்தியாவுக்கு வந்த நாட்களில் எனக்கு ஆச்சரியம் அளித்த பல விடையங்கள்  இருந்தன .அதில் ஒன்று அப்போதெல்லாம் நான் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்.நான் படித்தது வசித்து எல்லாம் பெரும்பாலும் திருச்சிதான் .காலேஜில் படித்த காலங்களில் எல்லாம் நண்பர்களிடம் படங்கள் பற்றி விமர்சனம் கேட்டல் உடனடியாகவே ஒரு பதில் வரும் பாருங்கள் "ஒரு வாட்டி பார்க்கலாம் " 

அப்போது எல்லாம் நான் எண்ணிக்கொள்வேன் ஒரு படத்தை  ஒரு வாட்டிதானே பார்ப்பது எதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று .பின்னர் தான் எனக்கு விளங்கியது ஒரே படத்தினை பலதடவைகள் பார்க்கும் நபர்களும் இருக்கிறார்கள் என்று .உண்மையில் "அந்த "ஒரு வாட்டி பார்க்கலாம்" என்பதன் அர்த்தம் தான் என்ன ? இன்று ஆளும் வளர்ந்து அறிவும் வளர்ந்துவிட்டது தமிழ் படங்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதாகிவிட்டது என்னைப் பொறுத்தவரையில் .இப்போது எல்லாம் "ஒரு வாட்டி பார்க்கிறமாதிரி படம் எடுக்கிறார்களா என்ன ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவை பற்றிய சர்ச்சை ஓய்வுக்கு வந்தபின்னர் நான் எழுதுகிறேன் .உண்மையில் தப்பும் தவறுமா நாம் எழுதும் பதிவுகளையே !!!!!!! மற்றவர்கள் சுடும்போது எமக்கே கோபம் வரும் போது தான் இசையமைத்த பாடல்களை மற்றவர்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தும் போது படைப்பாளிக்கு வரும் கோபம் தார்மிக அடிப்படையில் நியாயம் ஆனதே .முன்னைய காலங்களில் விபரம் இல்லாமல் தான்   செய்த காப்புரிமை தவறுகளை இப்போது இளையராஜா சீர் செய்வதில் எந்த தவறும் இல்லை .தற்கால இசையமைப்பாளர்கள் புத்திசாலிகள் விபரமாக இருக்கிறார்கள் .சரி வேண்டுமானால் எம் .ஸ் .விசுவநாதனிடம் கேளுங்கள்  இளையராஜாவினைவிட பெரிய ஒரு பெரு மூச்சினை விடுகிறாரா இல்லையா பாருங்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராகுல் காந்தி புதுக்கச்சையோடு பாஜகா எதிராக களத்தில் குதித்திருக்கிறாராம் .உண்மையில் இந்தியாசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பெரும்பாலான காலங்களில் ஆட்சியில் இருந்தது கொங்கிரஸ் கட்சிதானே .இந்தியா இன்று இப்படி இருக்கிறது ,அப்படி இருக்கிறது என்று சொல்லும் ராகுல் காந்தி இந்த நிலைக்கு தனது
கட்சிதான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வாரா ? காந்தி சொன்னபடி கட்சியை கலைத்திருந்தால் இன்று இந்தியா இப்படி இருந்து இருக்குமா ஊழலை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தே உங்கள் கட்சிதானே  அய்யா ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் ஒரு அன்பர் என்னை கேட்டார் கொத்துரொட்டி என்றால் என்ன என்று ஈழத்தில் கொத்துரொட்டி என்பது தமிழகத்தில் கொத்து பரோட்டா .விளக்கம் சரியா 
ஆனால் காரம் மிக அதிகமாக இருக்கும் .சில வருடங்களுக்கு முன்னர் தாம்பரம் பகுதியில் ஒரு கடையில் இலங்கை சுவையில் கிடைத்தது.கடைக்கு வெளியே 
விளம்பரம் இருக்கும் சிலோன் கொத்து பரோட்டா என்று இப்பொது இருக்கிறதா என்று  தெரியவில்லை .திருச்சிக்கு சென்றால் சிறீனிவாச நகர் ,சுந்தர் நகர் பகுதிகளில் ஈழத்தவர்களின் கொத்துரொட்டி கடைகள் இப்போதும் இருக்கின்றன .சாப்பிடலாம் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி  மீண்டும் சந்திப்பேன் .புதுப்பதிவுடன் !

Tuesday, May 26, 2015

கொத்து ரொட்டி-- 004





அ ண்மையில் இங்கு கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில சஞ்சிகை கனடாவில்  இருக்கும் பெரும்தொழில் அதிபர்களை பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது .பலருடைய பேட்டிகள் பலவிதமான பின்னணிகள் ,சுவாரசிகமான சம்பவங்கள் அந்த பேட்டிகளின் இடையே இறைந்து கிடந்தது .அந்த சம்பவங்களை எல்லாம் நான் இங்கு எழுதப்போவது இல்லை .

எல்லாப் பேட்டிகளிலும் ஒரு மைய இழையான ஒரு கருத்தினை காணமுடிந்தது .பெரும்பாலான தொழிலதிபர்கள் தெரிவித்தது
தாங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியில் இறங்கும் போது தங்கள் மனதில் தொழிலில் வெற்றிபெறுவோம் என்ற மனநிலையை விட தோல்வியடைந்தால் அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும் என்பதுடன் எப்போதும் எச்சரிக்கையுடன் தான் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும்
அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார்கள் .உண்மையில் தோல்வி அடைந்துவிட கூடும் என்ற எச்சரிக்கையே அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியிருந்தது .

உண்மையில் நீங்களே நினைத்துப்பாருங்கள்  வளைவில் திரும்பும்போது  எதிரே வாகனமோ, மனிதர்களோ ,இல்லை வேறு ஏதாவதோ எதிர்ப்படும் என எண்ணி எந்தநேரமும் பிரேக்கில் கால் வைக்க தயாராக செல்பவன் சிறந்த சாரதியா அல்லது இவற்றை எல்லாம் எண்ணாமல் அலட்சியமாக சென்று விபத்தில் சிக்குபவன் சிறந்தவனா ?ஒரு போர் வீரன் சண்டைக்கு போனால் எப்போதும் தன்னை நோக்கி குண்டுகள் வரும் என்று எதிர்பார்த்து எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் அவதானிப்பவனே வீட்டுக்கு மீண்டு வரமுடியும் .இப்படி பல உதாரணங்களை காட்டமுடியும் .

முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் பலரையும்  பல சமயங்களில் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது .இதற்கு உதாரணமாக ஓசோ சாமியார் (ரஜனிஸ்) சொன்ன கதை ஒன்று .புத்திசாலித்தனமான ஒரு
முன்னெச்சரிக்கை எப்படி ஒரு உயிரை காப்பாற்றியது சரி கதையை பார்ப்போமா?

கொரில்லா குரங்குகளை பிடித்து விற்பவர் ஒருவர் ஆபிரிக்காவுக்கு போனார் குரங்குகளை பிடிப்பதற்காக .அங்கு ஒரு  பெரிய வேடைக்காரனை சந்தித்து தனது தேவையை சொல்லி ஒரு கொரில்லாவை பிடித்துக்கொடுக்க எவ்வளவு காசு  என்று கேட்டார் .

அதற்கு அந்த வேட்டைக்காரன் சொன்னான் எனக்கு 500 டொலரும் என்னுடன் துப்பாக்கியுடன் வரும் குள்ளனுக்கு 500 டொலரும் அடுத்து என்னுடன் வேட்டைக்கு வரும் என்னுடைய நாய்க்கு 500 டொலருமாக
1500 டொலர் தரவேண்டும் என்றான் இதைகேட்ட குரங்குகளை பிடித்து விற்பவர் குழம்பிப்போனார் எதற்கு 500 டொலர் நாய்க்கு என்று யோசித்தவாறே 1500 கொடுக்கப்போகிறோம் எப்படி பிரித்தால் எனக்கென்ன என்று வேட்டைக்காரன் சொன்ன தொகைக்கு சம்மதம் தெரிவித்தார் .அத்துடன் வேட்டைக்கு வந்து தானும் பார்வை இடப்போவதாக சொல்ல வேட்டைக்காரன் சம்தித்தான்.

வேட்டைக்கு சென்றார்கள் ஒரு மரத்தில் கொரில்லா அமர்ந்திருந்ததை கண்ட வேட்டைக்காரன் மெதுவாக மரத்தில் ஏறி குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் ஓங்கி அடித்தான் .குரங்கு சுருண்டு  தரையில் விழுந்தது .மறுகணம் வேட்டைக்காரனின் நாய்  ஓடி வந்து குரங்கின் பால் உறுப்பை இறுக்கி கவ்விப்பிடித்து குரங்கை அசையாமல் செய்ய மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரன் கொரில்லாவை பிடித்து ஒரு கூண்டில் அடைத்தான் .

இதைக்கண்டு ஆச்சரிய்ம்டைத்த குரங்கு விற்பவன் .இதைப்போல ஒரு ரெக்னிக்கை நான் இதுவரையில் பார்த்தே இல்லை உனக்கும் நாய்க்கும் தலா 500 டொலர்கள் தருவது நியாயம் தான் ஆனால் அந்த குள்ளனுக்கு என்ன வேலை அவனுக்கு எதற்கு 500 டொலர் என்று கேட்க வேட்டைக்காரன் சொன்னான் .அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் .பிறகு உங்களுக்கு புரியும் என்றான் .வேட்டைக்காரன் .


                                   



கொரில்லா வேட்டை இப்படியே தொடர்ந்து அந்தக்காட்டில் நடந்துவந்தது .இவர்கள் இப்படி குரங்குகளை பிடிப்பதை ஒரு புத்திசாலி குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது .வழக்கம் போல வேட்டைக்காரன் மரத்தில் ஏறி அந்தக்குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் அடிக்கப்போகும் போது  குரங்கு முந்திக்கொண்டு வேட்டைக்காரனின் தலையில் அடித்து அவனை தரையை நோக்கி தள்ளிவிட்டது .

தரையை நோக்கி விழுந்துகொண்டே வேட்டைக்காரன் துப்பாக்கி ஏந்திய குள்ளனை நோக்கி கத்தினான் ."விரைவாக  அந்த நாயை சுடு " என்று

இதுதான் வழிமுறைகளை உண்டாக்கும் மனத்தின் புத்திசாலித்தனம் .அது சகல பரிணாமத்தினையும் முன் கூட்டியே சிந்தித்து வைத்துவிடும்  என்கிறார் ஓசோ

இதுதான் ஓசோவின் அந்தக் கதை .இனி நீங்களும் வாழ்க்கையில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பிர்கள் என நம்புகிறேன்



**********************************************************************************


இதை படிக்கும் நீங்கள்  எப்படியும் புத்தகப்பிரியர்கள் ஆக இருப்பீர்கள் என நம்புகிறேன்.புத்தகங்களை பற்றி சில விடயங்கள்

1 என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.

2 மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

3 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

4 பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று 5 மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

6 ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

7 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.


***********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானி தனது பதவியிலிருந்து ஒய்வு பெறுகின்றார்

                                  pilot                                               


கடந்த 37 வருடங்களாக எயர் கனடாவில் விமானியாக தொழில்செய்த  ஜூடி கமரன் என்ற இவர் தனது 24வயதில் 1978ல் விமானியாக பதவி ஏற்றார். அந்த காலகட்டத்தில்  முதல் பெண் விமானியாக கமரன் பதவி ஏற்றது ஒரு திருப்பு முனையாக அமைந்ததால் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. கடந்த ஞாயிற்றுகிழமை Munich ல் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானத்தை  தரையிறங்கிய கமரன் தனது இறுதி மரியாதைக்கு அறிகுறியான தலைவணக்கத்தை தெரிவித்தார்.அத்துடன் அவரது விமானத்துக்கு நீரால் (water cannon salute) மரியாதையும் செலுத்தப்பட்டது


                                 pilot1



பின்னர் விமானநிலையத்தில் திரண்டிருந்த நண்பர்கள் மத்தியில் பேசும் போது தான்  தனது 37வருடகால பதவியை தான் மிக பெரிய அளவில் நேசித்ததாகவும் வேலையின் அருமையை தான் இப்போது உணர்வதாகவும் குறிப்பிடதுடன்   . எதிர்வரும் காலங்களில் அதிக அளவிலான பெண் விமானிகள் உருவாக வேண்டும் என விரும்புவதாக கமரன் கூறினார். தற்சமயம் 5 சதவிகிதமான பெண் விமானிகளே  உள்ளதாக கூறப்படுகின்றது.


**********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்த்தீர்கள் .இந்தியாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்க்க ஆவலா? 


இவர்தான் இந்தியாவின் முதல் விமானம் செலுத்தும் அனுமதியைப் பெற்றவர் .



*******************************************************************************