Friday, July 03, 2015
முஸ்லிம் பெண்களின் குவளையில் தண்ணீர் அருந்திய கிறிஸ்த்துவ பெண்: உயிருக்கு போராடும் பரிதாபம்
Monday, November 19, 2012
துப்பாக்கி -- ஸிலிப்பர் கில்லர் - -சிறுவர்கள்
நன்றி ---மிரர்
இன்று வெளியான இங்கிலாந்தின மிரர் பத்திரிகையில் வெளிவந்த படத்தினையே மேலே பார்க்கிறீர்கள் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வாஸிரிஸ்தான் பகுதியில் சுமார் 5 வயதான இளம் சிறுவர்களை மூளைச் சலவை செய்து, ஜிகாதி எனப்படும் தற்கொலைப் படையினராக அல்குவைதா தீவிரவாதிகள் மாற்றும் படமே இதுவாகும் .இந்தப்பகுதி ஆப்கானுக்கு மிகவும் அருகில் இருக்கும் பகுதியாகும்
ஏற்கனவே இறந்த தீவிரவாதிகளின் ஆதரவற்ற குழந்தைகளை , தந்தையர் வழியிலேயே(ஜிகாதி) அவர்களும் செல்ல வேண்டும் என்று போதிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்களுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி தரப்படுகிறது. .
தலிபான்களுக்காகப் போராடும் கூலிப் படையினரைத் தயார் செய்து அனுப்பும் அமைப்பாக அல்குவைதா மாறியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதச் சதிச் செயல்கள் இந்த அமைப்பினால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அல்குவைதா அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்ப சிறுவர்களைத் தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தீவிரவாதம் குறித்த ஆய்வுப் பிரிவின் தலைவர் நீல் டோய்ல் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான இந்த செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துலக ஊடகங்களில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது .உணமையில் இது ஒரு கண்டிக்கப்பட வேண்டிய செயல்.உணமையில் இவ் சிறுவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாதவர்கள் .எது சரி எது பிழை என உணரமுடியாதவர்களை தீவிரவாதிகள் தமது நலன்களுக்காக,மதத்திற்காக பயன்படுத்துவது என்பது அவர்கள் வணங்கும் இறைவனாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது .இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு செயல் ஆகும் .
மதம் என்பது மனிதனை வழிப்படுத்துவதற்கே அன்றி மதமே வாழ்க்கை அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?
Wednesday, October 10, 2012
மதவாதிகளின் வெறிச்செயல்! பெண் கல்வியை ஊக்குவித்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு !!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சேர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்தவரும், சமாதானத்துக்கான சர்வதேச விருது ஒன்றுக்காக பரிந்துரை செய்யப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இச் சிறுமி தனது சேவையினால் பாகிஸ்தானில் மட்டும் ல்ல ,உலகெங்கிலும் புகழ்பெற்றவர்.
இந்நிலையில் சம்பவத்தினை தாமே செய்தோம் என்று இஸ்லாமிய கடும் கோட்பாளர்கள் ஆகிய தலிபான்கள் சொல்லி இருக்கின்றனர் .அவர் ஒரு தலிபான் எதிர்ப்பாளர் மேற்கத்திய ஆதரவாளர் அதனால் தான் சுட்டோம் என்று காரணம் சொல்லிருக்கின்றனர்.அனால் என் இச்சிறுமி சுடப்பட்டார் என்பதன் காரணத்தினை வாய்க்குள் விரலை வைத்திருக்கும் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் .
பெண்கள் கல்வி கற்பதனை எதிர்க்கும் தீவிர மத வெறியரான தலிபான்கள் பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் சிறுமியை சுட்டதன் பின்ணணி யாருக்கும் விளங்க முடியாது அல்ல .ஏற்கனவே ஆப்கானில் பெண்கள் பள்ளிகளை மூடி,இயங்கும் பள்ளிகளில் விஷம் கலந்து பெண் பள்ளிப் பிளைகளை,ஆசிரியைகளை கொன்று இப்படி பல வழிகளில் பெண்கள் கல்வியை முடக்கும் தலிபான்கள் பெண்களை முக்காடு இட்டு வீட்டுக்குள்ளே முடக்கவே இதனையும் செய்திருக்கின்றனர்.எனது முன்னைய பதிவு ஓன்றினை பார்க்கவும் மேலதிக தகவல்களுக்கு.
சரி நடந்த சம்பவம் இதுதான்
ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளிக்கூடத்திலிருந்து பெண் குழந்தைகள் வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கி ஏந்திய தாடி வளர்த்த மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து, மலாலா யூஸுஃப்ஸாய் இருக்கிறாரா என்று கேட்டு விட்டு பின்னர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலையில் காயம் பட்டுள்ளதாகவும் , ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இச்செயல் பலத்த கண்டனத்தினை எழுப்பியுள்ளதுடன் பலரும் இச்சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்..நாமும் மதவாதிகளால் சுடப்பட்ட இச்சிறுமி பூர்ணகுணமடைய இறைவனை வேண்டுவோம்
மேலாதிக வாசிப்புக்கு சுட்டிகள் :-
http://www.guardian.co.uk/world/2012/oct/09/taliban-pakistan-shoot-girl-malala-yousafzai