Sunday, October 17, 2004

ஆனந்தசங்கரிக்கு தன்மானத்தமிழனின் மடல்

அன்புடன் ஆனந்தசங்கரி!

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நீங்கள் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகப் பத்திரிகை களில் வாசித்து அறிந்தேன்.பொதுத்தேர்தல் படுதோல்வியோடு, வெளிநாட்டுச் சுற்றுலா என்ற பெயரில் இங்கிலாந்து போன நீங்கள், மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரிலான கடிதத் தலைப்போடு உங் கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட் டீர்கள்.வெளிநாட்டில் ஏந்திய கைகளுக்குக் கிடைத்த சன்மானத்துக்கு கைமாற்றாக அங்கு ஏவப்பட்ட பணியை நீங்கள் ஆற்றுகின்றீர்கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது.

தலைவர் பிரபாகரனுக்கு அரசியல் விவகாரங் களில் ஆலோசனைக் கடிதம் வரையும் தகுதி யும், தைரியமும் உங்களுக்கு உள்ளதாக நீங் கள் கருதும் நிலை இருப்பது ஈழத்தமிழர்களின் துரதிஸ்டமேயன்றி வேறில்லை.கருணா என்ற தனிமனிதப் பிறழ்வுடன் - நம்பிக்கைத் துரோகியுடன் - ஒரு விடுதலைப் போராட்டத் தலைவரை இணங்கிப்போக ஆலோ சனை கூறுகின்றீர்கள்.கருணாவின் தரத்தில் இருக்கும் உங்களுக்கு ஜாரியான கருணாவுடன் நீங்கள் இணங்கிப் போவதன் வெளிப்பாடே இக்கோரிக்கையன்றி வேறில்லை.கருணாவின் கழுத்தில் விழக்கூடிய யமனின் பாசக் கயிற்றிலிருந்து கருணாவை விடுவித்தால், உங்கள் பக்கமும் யமனின் வருகை இருக்கும் என்ற பயத்திலிருந்து நீங்கி விடலாம் என நப்பாசை கொள்கின்றீர்கள் போலும்.

ஜயா சங்கரியாரே!
இப்போது நீங்கள் அரசி யலில் போக்கிடமற்ற அநாதை, வெறும் துரும்பு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கடிதத் தலைப் புத் தவிர, உங்களுக்குத் தடுப்புச்சுவர் வேறேது மில்லை. எனவே, உங்களுடன் மினக்கெடுவதற்கு புலிகளுக்கு தேவையோ, அர்த்தமோ, நேரமோ இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனவே, பயமின்றி உங்கள் பித்தலாட்டத்தை நீங்கள் தொடருங்கள், என்ன வேடிக்கை மனிதர் இவர்! என்று ஒரு விதூகனைப் பார்த்து, அனு பவிக்கும் வாய்ப்பு தமிழருக்குத் தொடரட்டும்.

கருணாவைப் போன்று பல துரோகங்களைத் தமது விடுதலைப் போராட்டத்தில் கண்டவர் தலைவர் பிரபாகரன், அந்தத் துரோகத் தூசு களின் பட்டியலில் மற்றொரு தூசாக வலம் வரும் தாங்கள், விடுதலை வேள்வியின் தாற் பரியம் புரியாமல் உங்களின் குள்ளநரித்தன மான அரசியலின் அங்கமாக அதைக் கருதி தத்துவம் பேச முனைகின்றீர்கள்.நீங்கள் கேட்பதை சிங்களவர்களும், முஸ் லிம்களும் தருவார்களா? என்று தலைவர் பிரபாவிடம் நீங்கள் உங்கள் கடிதத்தில் கேட் பதில் விந்தையில்லை.ஏனென்றால் கேட்டும், இரந்தும் பெறும் பிச்சைதான் உரிமை என நினைப்பவர் - கருதிச் செயற்படுபவர் - நீங்கள்.

இந்தியாவிடமும், பிற ஈழத்தமிழர் விரோத சக்திகளிடமும் ஏந்திப்பெற்ற பிச்சைக்காக நீங்கள் அப்படித்தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் கேட்பதற்கு உடன்படும் ஏதேனும் அரசு, அதன்பின் பதவியில் நிலைக்கமுடியுமா? என்று தலைவரைப் பார்த்து வினாவுவதன் மூலம் அவர்கள் தரக்கூடியதை மட்டும் கேளுங் கள் என்கிறீர்கள்.
நல்லது. சங்கரி ஐயோவே! கடந்த ஐம்பது ஆண்டு காலம் ஈழத்தமிழரை ஏமாற்றி, நீங்களும் உங்களைச் சார்ந் தோரும் நாடாளுமன்றை அலங்கரிப்பதற்காக காலத்துக்குக்காலம் முன்வைத்த கோரிக்கை கள் எவையேனும் அவ்வப்போது இருந்த அரசு களால் நிறைவேற்றப்பட்டனவா? தரப்பட்டனவா? அவை தரமாட்டா என்பதற்காக நீங்கள் கேட்காமல் விட்டீர்களா? இடைக்கால நிர்வாகமே இன்று எட்டமுடியாது என்று இப்போது கூறும் நீங்கள் தானே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் னர் தனித் தமிழீழம் என்று பெரும் கதை அளந்தீர் கள். 2001 தேர்தல் வரை அதே கயிற்றை அவிழ்த்து விட்டீர்கள்.

தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிக ளையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு நியா யமானதை அவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தவறினால் பிடுங்கி எடுக்கவும் முடியும்; எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அதை அவர்கள் கேட் கின்றார்கள்.இப்போது உயிரிழப்புப் பற்றி நீலிக்கண் ணீர் வடிக்கும் நீங்கள், அடுத்த மேதினம் தமி ழீழத்தில்! என்ற நிறைவேற்ற முடியாத விவ காரத்தை உங்களின் அந்நேரத் தலைவருடன் சேர்ந்து தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றலா கச் சுற்றிப் பேய்க்காட்டிய போது ஒரு தடவை சிந்தித்திருக்கலாம்.

உங்களைப்போன்று வாக்குகளுக்காக மணலைக் கயிறாகத் திரிக்கும் வாக்குறுதிகளை அவிழ்த்து விடுபவர்களல்லர் புலிகள்.சொன்னதைச் செய்யவும், செய்வதைச் சொல் லவும் திராணியும், வீரமும், வலுவும் பொருந்திய விடுதலைப் போராளிகள் அவர்கள்.அவர்கள் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளாக நினைத்து நீங்கள் பிரபலாபிப்பது உங்களின் அறியாத்தனத்தைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.உங்கள் கடிதத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நீங்கள் முதலைக் கண் ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய புலிகளின் திட்டம், இலங்கை அரசு பரிசீலிக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரே இந்த யோசனையைப் புலிகள் முன்வைத்து விட்டனர். அதுமட்டுமல்ல, அந்த யோசனையை தேர்தலில் ஒரு பிரேரணையாக முன்வைத்தே ஈழத்தமிழர் களின் பிரதிநிதிகள் போட்டியிட்டு தமிழ்மக் களின் ஏகோபித்த ஆதரவோடு தெரிவானார் கள். இந்தத் தன்னாட்சி அதிகாரசபை யோசனை ஈழத் தமிழர்களால் வாக்கெடுப்பு மூலம் அங் கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள். இன்று, அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருத்த மற்ற வியாக்கியானத்தை - தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கொடுத்திருப்பீர்களேயாயின், கடந்த பொதுத்தேர்தலில் உங்களுக்கு கிடைத்த ஐயாயி ரம் வாக்குகளும் ஐநூறாகியிருக்கும். தப்பி விட்டீர்கள் போங்கள்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்திய அரசமைப்பு மாதிரியில் தீர்வு என்பது பற்றியும் உங்கள் கடிதத்தில் கூறியிருக்கிறீர்கள். இந்தியத்தரப்பு வீசிய எலும்புக்கு நன்றியாக இதை யாவது நீங்கள் கூறாவிட்டால் உங்களுக்கா கத் தொடர்ந்து வேறு யார்தான் இருப்பார்கள்? எனவே, இனத்தை விற்றாவது உண்ட வீட்டுக்கு நன்றி செய்ய முயல்கிறீர்கள். வாழ்க உங்கள் நன்றிமறவாப் பண்பு!வீரர்களோடுதான் எட்டப்பர்களும் வளர்ந் தார்கள். அதுதான் சரித்திரம் நமக்குத் தரும் கடந்தகால அனுபவம்.தந்தை செல்வாவுடனும், ஜீ.ஜீ.பொன்னம்பலத் தோடும் உறவாடிப் பழகியதை நீங்கள் உங்க ளுக்குச் சான்றிதழாகப் பட்டியலிடும்போது எட்டப் பர் கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

இறுதியாக, நாம் பழைய விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண் டும் எனத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கின்றீர்கள்.அப்படிப் பேசுவதை நிறுத்தினால், உங்கள் துரோகச் செயல்களும் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணுகிறீர்;கள் போலும்.எத்தனை தடவை நீங்கள் மண்டியிட்டாலும் நீங்கள் புரிந்தசெயல்கள் - அதுவும் நீங்கள் அலங்கரித்த பதவி, உங்களுக்குத் தமிழினம் தந்த மரியாதை மற்றும் பொறுப்பு - ஆகியவற் றுக்கு மத்தியில் நீங்கள் செய்த வேலைகள், வரலாற்றில் என்றும் உங்களுக்கு மன்னிப்புத் தர இடமளிக்கா என்பதே உண்மை.

பிராயச்சித்தமே செய்யமுடியாத வகையில் பிழைமேல் பிழை - தவறு மேல் தவறு - புரிந்துவரும் நீங் கள், உங்களைப் பொறுத்தவரை ஆனந்தசங்கரி யாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழருக்கு துக்க சங்கடமே!

அன்புடன் தன்மானத் தமிழன்.

Sunday, October 03, 2004

ஈழத்தின் அழகு.

ஈழத்தின் அழகு தனி அழகு.

வந்திட்டேன்!


சில வாரங்களாக எனக்கும் இணையத்துக்குமான தொடர்பு முற்றாக அறுந்து
போய் இருந்தது சில காரணங்களால் .பத்திரிகைககள் ,புதினங்கள் ஒன்றும்
அறிய முடியாமல் எதோ ஒன்றை இழந்தது போல ஒரு உணர்வு.

நேற்றில் இருந்து மீண்டும் இணையத்துடன் தொடர்பு.
இனி எனது பதிவில் தொடர்ந்து நான் எழுதுவேன்.நான் ஒன்றும் எழுத்தாளன்
அல்ல. எனது மனதில் எழும் கருத்துக்கள் , நான் வாசித்தவைகள், கேட்டவைகள், என்னைப் பாதித்தவைகள்
இவற்றினையே "என் மனவெளியில்"மூலமாக பகிர்ந்து கொண்டேன்.இனியும்
பகிர்ந்து கொள்வேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன் கரிகாலன்

Monday, September 06, 2004

37 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வாழ்த்து மடல்


சில வேளைகளில் நடைபெறும் சில சம்பவங்கள் மனிதர்களை இன்ப அதிர்ச்சிக்குள் கொண்டுபோய் விடும்.அப்படிப் பட்ட ஒரு
சம்பவம் அமெரிக்காவில் வதியும் ஒரு தாய்க்கு கிடைத்திருக்கிறது. சம்பவம் இதுதான்.

37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் விடுமறையைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது தாயாருக்கு
அனுப்பிய வாழ்த்து மடல் 37 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் தாயாரிடம் சென்றடைந்திருக்கிறது.

ஓகஸ்ட் 19,1967 எனும் திகதியிடப்பட்ட இத் தபால் நியூஜேர்சி தபால் நிலையத்தில் தபால் தரம் பிரிக்கும் இயந்திரத்துக்கு பின்னால்
விழுந்துவிட்டது.சென்ற ஜூலை மாதம் மேற்படி இயந்திரத்தினை அகற்றி புது இயந்திரத்தினை பொருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட
தபால் ஊழியர்களால் மேற்படி தபால் கண்டெடுக்கப்பட்டது.

வெறும் 4 சதம் முத்திரை ஒட்டப்பட்டிருந்த தபாலுக்கு மேலும் 23 சத முத்திரை ஒட்டி உரிய முகவரிக்கு அனுப்பி வைத்தனர்
தபால் ஊழியர்கள்.37 ஆண்டுகளுக்கு முன்னர் மகள் அனுப்பிய வாழ்த்து மடல் ஜூலை 14,2004 ல் பெற்றுக் கொண்ட தாயார்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போயிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் தனது மகிழ்ச்சியில் பெரும் பங்கு
தபால் ஊழியர்களையே சாரும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதில் என்ன ஆச்சர்யம் எங்கள் நாடுகளில் தபால்கள் தொலைவதும்,பிந்திக் கிடைப்பதும் சர்வசாதாரணம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Sunday, September 05, 2004

கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்வுகள்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிகளவில் தமிழர்கள் வாழும் (3,00,000) நாடாக கனடா விளங்குகிறது. இங்கு வாழும் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த்த பல்வேறு இனக் குழுக்கள்தமது மொழி,பண்பாடு,கலை கலாச்சாரங்களை பேணிவருவதுடன் தமது இன அடையாளங்களைபேணிவருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் இங்கு "தமிழ் கனேடியர்" என்றே தம்மை அடையாளப்படுத்தி வருகின்றனர்.அந்த்த வகையில் தமது இருப்பை அடையாளப்படுத்தும் ஒன்றாகவே இப்பொங்கு தமிழ் நிகழ்வை கனடா தமிழ் மாணவர் அமைப்பு கனடாவில் உள்ள சகல பொது அமைப்புக்கள், மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் இப் பொங்குதமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

வலுவான ஒரு சமுதாயமாக,ஒரே தலைமையின் கீழ் தம்மைப் பிரகடனப்படுத்துவதுடன் ,தாயகத்தில்இருக்கும் தொப்பிழ்கொடி உறவுகளுடனான உறவை வலுப்படுத்துவதுடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க வேண்டிய கடப்பாடு கனடா தேசத்துக்கு உண்டு என்பதுடன் தமிழர் தேசியம்,தமிழர் தலைமை,தமிழர் தாயகம்,தமிழரின் சுயநிர்ணயம் போன்ற பொங்கு தமிழின் அடிப்படைகளை வலியுறுத்தும் ஒரு தமிழ் தேசிய நிகழ்வாகவும் இப் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இம் மாதம் 25 ம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள "குயின்ஸ் பார்க்"எனும் இடத்தில் இன் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கள் இங்கு வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் மூலம் வெளியிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.பெருமளவுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tuesday, August 31, 2004

குழந்தைகளும் கேள்விகளும்............

குழந்தைகள் உள்ளவர்களுக்கு தெரியும் குழந்தைகளின் கேள்வி கேட்கும் தன்மை பற்றி. என்னத்தில்,எங்கு சந்தேகம் வரும் என்று இல்லை. இடக்கு முடக்காக கேட்பார்கள்.தாய் தந்தையர் பதில் சொல்ல முடியாமல் சில வேளை திண்டாட வேண்டி வரும். இதுவும் அப்படிப்பட்டதுதான்.

தனது நாய் இறந்து விட்டதுக்காக அழுதுகொண்டிருக்கும் சிறுவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் "தம்பி எனது தாத்தா இறந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது நான் என்ன அழுது கொண்டா இருக்கிறேன் எழும்பி வேலையைப் பார் என்று"

அதற்கு அந்த சிறுவன் கேட்டான் ஒரு கேள்வி "நீங்கள் உங்கள் தாத்தாவை சிறுவயதில் இருந்தா வளர்த்தீர்கள்"? என்று?

சிறுவனுக்கு புத்தி சொன்ன பக்கத்து வீட்டுக்காரர் சப்தம் போடாமல் நகர்ந்துவிட்டார்.வாயையும் "எதையுமோ"பொத்திக்கொண்டு.

இது நேற்று டாக்டரிடம் போனபோது காத்திருந்த வேளையில் பத்திரிகையில் படித்தது.சரி நீங்களும்ரசிப்பீர்கள் என்பதற்காக தந்திருக்கிறேன் இங்கு.

Monday, August 23, 2004

உலகமுட்டாள்களுக்கான உயர்விருதுகள்-2004

ண்மையில் கனடாவில் இருக்கும் Lust For Laughs எனும் அமைப்பு மொன்றியல் நகரில் நடத்திய Comedy Festival இல் பல்வேறு தலைப்புக்களில் 2004 ம் ஆண்டிற்கான உலக முட்டாள்களை தெரிவுசெய்துள்ளது. உலகின் தலைசிறந்த முட்டாள்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முட்டாள்தனமான முயற்சிகளுக்கான உயர் வாழ்நாள் விருதினைப் பெறுகிறார் : சதாம் உசைன்


உலகின் மிக மோசமான முட்டாள்: ஜோர்ஜ் புஷ்


உலகின் மிக மோசமான முட்டாள் அரசு: அமெரிக்க அரசு


உலகின் முட்டாள் ஊடகம்: Fox news


பொறுப்பற்ற ஆபத்தான உலக முட்டாள்கள் விருது (இருவருக்கு): ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனி பிளையர்


மோசமான முட்டாள் திரைப்படம் : Passion Of The Christ மற்றும் Gigli


மோசமான முட்டாள் அறிக்கை: "ஈராக் மீதான மிக முக்கிய தாக்குதல்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவி ட்டன" - அறிவித்தவர் ஜோர்ஜ் புஷ்

தெரிவு செய்யப்பட்டவைகளில் முக்கியமானவை இவை. இவை தவிர ஒவ்வொரு விருதுக்கும் பிரேரிக்கப்பட்டவர்களின் விபரங்கள், மற்றும் மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லவும்.