Thursday, August 12, 2004

அமைதியை நிலைநாட்டும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றோ?



அன்று ஈழத்தில் எது நடந்ததோ அது இன்று நன்றாகவே நடக்கிறது மணிப்பூரில். நான் நினைக்கிறேன் மணிப்பூரிலும் ஒரு கையை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு அமைதியை நிலைநாட்டுகின்றனர் போலும்!

வாழ்க தீவிரவாத ஒழிப்புப் பணி!

வாழ்க தேசிய நீரோட்டம்!

வாழ்க ஜனநாயகம்!

Tuesday, August 10, 2004

இலங்கை; கிழக்கு மாகாண பதட்டமும், வல்லரசுகளின் சதிகளும்!

லங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவுகின்ற பதட்டமான சூழ்நிலையைப் பயன்படுத்தி ,தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழ் மக்களை அந்நியப் படுத்தும் நோக்குடன் இந்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட சக்திகள் செயற்பட்டு வருவதாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "சமாதான முயற்சிகளின் தடைகளும் உலக நாடுகளின் கொள்கை வகுப்புக்களும்" எனும் கருத்தரங்கின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை விரிவுரையாளரும், விமர்சகருமாகிய கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அதன் மூலம் தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தினை நசுக்குவதே அந்நிய சக்திகளின் குறிக்கோளாக இருப்பதாகவும், மேற்படி இரு நோக்கங்களும் நிறைவேறியதும் தமக்கு சார்பானவர்களை பதவியில் அமர்த்தி இலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கிறது எனும் ஒரு தோற்றப் பாட்டை ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி அமெரிக்கவும் ,இந்தியாவை போன்றே, இலங்கையின் வளங்களை, நலன்களை பயன்படுத்துவதற்கான வழி முறைகளைப் பிரயோகித்து வருவதாகவும், திருமலை எண்ணைக் குதங்களை இந்தியா குத்தகைக்கு பெற்றுக் கொண்டமை, அமெரிக்காவுக்கு திருகோணமலை துறைமுகம், விமானத்தளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அனுமதி போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வல்லரசுகளுக்கும் சமமான நலன்கள் வழங்கப்பட்டிருப்பத்தையும் காணமுடியும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இலங்கையில் போர் நடைபெறுவது அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்துள்ள அமெரிக்கா இலங்கையின் வடபகுதியில் இருந்து கிழக்கு பகுதியை தனிமைப் படுத்தி ஒரு தீர்வைக் கொண்டு வருவதின் மூலம் இந்து சமுத்திரம் மற்றும் ஆசியாவிலும் தனது கால்களை ஊன்றிக்கொள்ளமுயல்வதாகவும் திரு கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்திய புலனாய்வாளர்கள் யாழ் குடாவில் வியாபாரிகள் எனும் போர்வையிலும், வன்னியில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடாகவும் ஊடுருவி இருப்பதாக அண்மையில் இலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய இராணுவ வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட மேற்படி கண்ணிவெடி அகற்றும் இரண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள், தரம் பற்றி அதிருப்தி தெரிவித்த உலக வங்கியானது அவர்களுக்கான நிதி உதவியை வழங்க மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, August 05, 2004

இந்திய மைலாய் படுகொலை!



தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து
ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா
விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில்
தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.



இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி
இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன
மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று
பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.


  • 63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
  • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
  • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
  • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
  • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
  • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்
அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள்
,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!


லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை

.editorial The sunday telegraph 13.08.89


over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.


such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment


My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி"லைவ்" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு
காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ

வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து
வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு
சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில் அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.

Tuesday, August 03, 2004

"அதுக்கு" தயாரித்தது "இதுக்கு" கைகொடுக்கிறது.

வயது வந்தோருக்கானது

ண்மையில் திரு வெங்கட்டின் வலைப்பதிவில் ஆணுறைகள் பற்றிய ஒரு பதிவினைப் பார்க்கமுடிந்தது. ஆணுறைகள் பற்றியும், ஆணுறைகளின் வகைகள் பற்றியும், உபயோகிக்கும் முறைகள் பற்றியும் அதை வாங்குபவர்கள் கூச்சம் இன்றி வாங்கும் வழிவகைகள் பற்றியும், ஆணுறைகளின் இதர பயன்பாடுகள் பற்றியும் மிகவும் எளிய தமிழில் அழகாக விளக்கியிருக்கிறார் திரு வெங்கட் அவர்கள். தன்னுடைய பதிவில்ஆணுறைகளின் 04 பிற உபயோகங்கள் பற்றியும் கூறியிருக்கின்றார்.

இது இப்படியே இருக்க இன்றைய தினமலர் நாளிதழில்
(03-08-2004) ஆணுறைகளின் பயன்பாடு பற்றிய ஒரு புதிய செய்தி வெளி வந்திருக்கிறது செய்தி இதுதான் இந்தியாவின் புனித நகரான வாரணாசியில் ஒரு நாளைக்கு 6 இலட்சம் ஆணுறைகள் விற்பனை ஆகின்றனவாம்.ஆணுறைகள் அதிகம் விற்பதால் அங்கு சிறப்பு குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ என்று எண்ணுகிறீர்களோ? அதுதான் இல்லை. மேலே படியுங்கள்.

பனாரஸ் பட்டுப் புடவைகள் பற்றி உலகம் அறிந்ததே.அது போலவே வாரணாசி நகரும் பனாரஸ் பட்டுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏராளமான நெசவாளர்கள் மேற்படி சேலை தயாரிக்கின்றனர். நெசவுத் தறியில் இங்குங்கும் ஓடும் ஓடக்கட்டையில் ஆணுறைகளைத் தேய்க்கும் போது நல்ல மசகாக(lubricate) தொழிற்படுகிறது.இதனால் ஓடக்கட்டை மிக வேகமாக ஓட நெசவு விரைவாக ஆகின்றது. வாரணாசியில் இருக்கும் ஒன்றாரை லட்சம் முதல் 2 லட்சம் வரையான நெசவாளர்கள் தினசரி 3 முதல் 4 ஆணுறைகளை பயன்படுத்துகின்றனராம்.

இது போன்ற முறைகளைப் பயன் படுத்தி சேலை தயாரிக்கின்றனர் என்பது வெளியில் தெரிந்தால் சேலை வாங்குவோர் சேலையைப் புறக்கணிக்கக்கூடும் என்பதால் பல நெசவாளர்கள் உண்மையை மறைத்து விடுகின்றனராம். இதைப் போல நல்ல ஒரு பொருள் இந்த உபயோகத்துக்கு கிடைக்கும் என்றால் தாங்கள்ஆணுறை பாவிப்பதை நிறுத்தி விடுவதாக அங்குள்ள நெசவாளர்கள் சொல்கின்றார்களாம். "அதுக்கு" உருவாக்கியது எதுக்கெல்லாம் பயன்படுகிறது பார்த்தீங்களோ?

எனக்கென்னவோ வாரணாசி நெசவாளர்கள் வாசனையூட்டப்பட்ட ஆணுறைகளை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வாசத்துக்கு வாசமும் ஆச்சு ஓடக்கட்டைக்கு மசகும் ஆச்சு. அப்பிள்,ஒறேஞ் போன்றவிதவிதமான வாசனைகள், நெய்யும் புடவைகளிலும்,நெசவுத்தறிகளிலும், நெசவாளர்களின் மூக்குகளிலும், மணக்கும்.ஊதுபத்தி,சாம்பிராணி செலவும் மிச்சம். இனி சேலை வாங்குபவர்கள் யாராவது ஆணுறை பாவித்து நெய்த சேலையோ என்று கேட்டால் கூட ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த வாசனையூட்டப்பட்ட ஆணுறை பாவித்தது என்று சொல்லிக் கொள்ளலாம். யாருங்கோ நறு நறு என்று பல்லை நறுமிறது?

Sunday, August 01, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் - 2

இதே தலைப்பில் தமிழ்நாட்டில் இருந்து ரொரன்ரோ வருகை தந்து ஒரே மருந்தினையே எல்லா வியாதிகளுக்கும் கொடுத்து காசு பார்த்த ஒரு ஆயுள்வேத வைத்தியரைப் பற்றி எழுதியிருந்தேன்

சில வாரங்களுக்கு முன்னர். தமிழ் பத்திரிகைகளில் பார்த்தேன். கும்பகோணத்தில் இருந்து ஒரு சோதிடர் வந்திருக்கிறார் என்று பூனூல் சகிதம் போட்டோ
விளம்பரம். இப்போது தமிழ்நாட்டில் இருந்து நாடி சோதிடர்,எண் சோதிடர்,சாமியார்கள் இப்படி பலருக்கு
ரொரன்ரோ தான் சொர்க்கமாக மாறிவிட்டது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் முன்னேறிய கனடா போன்ற
நாட்டிற்கு வந்த பின்னரும் இப்படிப் பட்டவர்களிடம் ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது.

இப்போது ரொரன்ரோ வில் உள்ள மக்களுக்கு தெய்வீக தரிசனம் அளிக்க கேரளத்தில் இருந்து வந்திருப்பவர்
மாதா அமிர்தானந்தமாயி அம்மா. தனது நாட்டில்,மாநிலத்தில் எவ்வளவோ மக்கள் துன்பத்தில்,வறுமையில் உழன்று கொண்டுஇருக்கின்றனரே அவர்களை எல்லாம் விட பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு தரிசனம் தர வந்திருக்கும் அம்மாவின் கருணைதான் என்ன?

இங்குள்ள 5 நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருக்கும் அம்மா தனது பக்தர்களை ஆரத்தழுவி ஆசீர்வதிக்கிறார்.
இதற்கு கட்டணம் தலைக்கு 50 கனேடியன் டொலர்கள்.இப்படி பணம் கட்டி ஆசிர்வாதம் பெறத்துடித்த 5800 பக்தர்களை இரவு 10.00 மணி தொடங்கி காலை 6.45 வரை கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்த அம்மா
திரட்டிய பணம் எவ்வளவு என்று பார்த்தீர்களா? அமிர்தானந்தமாயி அம்மாவின் வருகையை ஒட்டி இங்கு
வெளிவரும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று தடல்புடல்தான்போங்கள். எல்லாம் டொலரின் மகிமைதான்.

அண்மையில் தான் சாயிபாபாவின் லீலைகள் பற்றி பி.பி.சி.யில் வெளிவந்து உலகமே சிரித்தது. அன்னை தெரேசாவை இன்றும் உலகம் மதிக்கிறது என்றால் அவர் தன்னைக் கடவுள் என்று சொல்லவில்லை
பணம் சேர்த்தார்,அனாதைகளுக்கு,நோயால் பாதிக்கப்படடவர்களுக்கு உதவிகள் செய்தார்.

சத்தியசாபி பாபா உதவிகள் செய்யவில்லையா என்று கேட்பீர்கள்.பாபாவைப் சுற்றி ஒரு மர்ம திரை இருப்பதை காலத்துக்கு காலம் நிகழும் சம்பவங்களும்,வரும் செய்திகளும் சொல்கின்றனவே.
அது என்னவோ தெரியவில்லை இப்படி சாமியார்களைச் சுற்றி இருக்கும் பக்தர்கள் யார் ஏன்று பார்த்தால் மெத்தப் படித்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் கல்கி சாமியாரிடம் படித்தவர்கள்
பலர் சீடரானதும் ,ஏற்பட்ட சர்ச்சைகளும் ஞாபகத்திற்கு வருகிறது.

எனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வெற்று நிலம் நீண்டகாலமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் பார்த்தபோது புள்டோசர்கள் அந்த நிலத்தினை துப்பரவாக்கிக் கொண்டு இருந்ததைக் காணமுடிந்தது.நேற்றுப்
பார்த்தேன். ஒரு விளம்பரப் பலகை ஒன்று காணப்பட்டது.இது சத்தியசாயி பாபா நிலையத்துக்காக ஒதுக்கப்பட நிலம் என்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் பளிச்சிட்டது.






Tuesday, July 27, 2004

அம்மாவும் நீயே! மம்மியும் நீயே!

 


 
.தி.மு.க வின் தலைமையகத்தில் போக்குவரத்து ஊழியருக்கு பரிசு வழங்கும் போது எடுத்த படம் இது .பரிசு வாங்கும் போக்குவரத்து ஊழியரைப் பாருங்கள். அவரில் தெரிவது  என்ன பயமா?   மரியாதையா?  பக்தியா?

சிங்கத்தின் முன்னால் நிற்கும் மானைப் போலத்தான் எனக்கு அந்த ஊழியர் தெரிகிறார்.அவரில் மரியாதையை விட பயத்தினைதான் அவதானிக்க முடிகிறது. அது என்னவோ தெரியவில்லை ஜெயலலிதாவுக்கு முன்னால்  நிற்கும் போது பெரும்பாலானோர் இப்படிதான் காணப்படுகின்றனர். "அம்மா" வின் தோற்றம் எதிரில் நிற்கும் போது mummy யின் தோற்றம் மாதிரி இவர்களின் கண்ணுக்கு தெரிகிறதோ தெரியவில்லை.

 எதுக்கும் ஜான் பொஸ்கோவின் வலைப்பதிவில் இருக்கும் "அம்மாவின்" தோற்றத்தினைப்   பாருங்கள். அம்மா வேறுமாதிரி தெரிந்தால்   நான் பொறுப்பில்லை.

Friday, July 23, 2004

பி.சந்திரசேகரனின் பேட்டி

ஜூனியர் விகடன் 25.07.2004  இதழில் "இந்தியாவே கை கொடு" என்னும் தலைப்பில் ஒரு பேட்டி வந்துள்ளது.  பேட்டியை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களில் ஒருவராகிய ,இலங்கை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய திரு பி.சந்திரசேகரன் வழங்கி இருக்கிறார்.
தலைவர் பிரபாகரனை பல முறை சந்தித்து பேசியிருக்கும் சந்திரசேகரன் பல உண்மைகளை  உணர்ந்தவர் , பல உண்மைகளை இதில் தெரிவித்தும் இருக்கிறார். பாண்டவர்களின் நிலை போல் இன்று நிற்கும் விடுதலைப் புலிகளின் நிலை பற்றி மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.திரு பி.சந்திரசேகரன் முன்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.