Friday, July 23, 2004

பி.சந்திரசேகரனின் பேட்டி

ஜூனியர் விகடன் 25.07.2004  இதழில் "இந்தியாவே கை கொடு" என்னும் தலைப்பில் ஒரு பேட்டி வந்துள்ளது.  பேட்டியை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களில் ஒருவராகிய ,இலங்கை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய திரு பி.சந்திரசேகரன் வழங்கி இருக்கிறார்.
தலைவர் பிரபாகரனை பல முறை சந்தித்து பேசியிருக்கும் சந்திரசேகரன் பல உண்மைகளை  உணர்ந்தவர் , பல உண்மைகளை இதில் தெரிவித்தும் இருக்கிறார். பாண்டவர்களின் நிலை போல் இன்று நிற்கும் விடுதலைப் புலிகளின் நிலை பற்றி மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.திரு பி.சந்திரசேகரன் முன்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: