Friday, February 03, 2006

புனர்வாழ்வு கழகம்- ஒரு தகவல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு
வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் உத்தியோகத்தினர் சிலர் கடத்தப்பட்டமை தெரிந்ததே.அவர்கள் தொடர்பான செய்தியை அறிந்து கொள்ள http://www.freengoworkers.blogspot.com/ செல்லவும்.

Sunday, January 29, 2006

மும்பையில் காத்திருந்த பயங்கரம்!

*பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள்.

* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள "றோ" புலனாய்வு அதிகாரிகள்...

* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'

மிகுதி விபரங்களைப் படிக்க இங்கு செல்லவும்.

http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/29/Article-9.htm

Wednesday, January 18, 2006

பரிசோதனை.

சும்மா. ஒரு பரிசோதனை மட்டுமே

Tuesday, January 03, 2006

சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்.

இந்த செய்தியை படிக்கேக்க எனக்கு சின்ன வயதிலை படிச்ச "சீச்சீ இந்தப்
பழம் புளிக்கும்" எண்ட நரியின் கதைதான் ஞாபகம் வருது பாருங்கோ.
இந்தப்பழம் நரிக்கு புளிக்கதொடங்க நரி இப்ப புது பழத்துக்கு ஆசைப்படுது
எண்டெல்லோ செய்தி வருது.சரி பாப்பம் அந்தப் பழம் நரிக்கு இனிக்குமோ
புளிக்குமோ எண்டு.

செய்தி இதுதான் நீங்களும் படிச்சு பாருங்கோ.

இந்திய கூறுவதற்காக ஒற்றையாட்சிக்கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்க ஹெல உறுமய முட்டாள்களின் கட்சியல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இந்தியா கூறுவது போன்று நாம் நடப்பதற்கு இலங்கை, இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனையும், இலங்கை தொடர்பான அரசியல் முடிவுகளை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சி முறையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற தனது கொள்கையில் இருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ விலகுவாரே அனால் மறுகணமே அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Monday, December 26, 2005

இந்திய தூதரகத்தின் முன் மறியல் போராட்டம்?

ந்திய வம்சாவளி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் முன் மறியற்போராட்டம் - ரி.சென்னன்.


லங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.

இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.


இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

சங்கதி.


Wednesday, December 21, 2005

இந்தியப்பிரதமருக்கு வேண்டுகோள்

பலாலி விமான தளம்: இந்திய பிரதமருக்கு இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.

இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.

எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.

சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.

இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.

நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 07, 2005

காலம் வரும்......

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி.

கடந்த காலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்ட போது புலிகள் சொன்னார்கள் இது அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் வேலை என்று.
அரசு சொன்னது இது கருணா தரப்பு வேலை தமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று.கண்காணிப்பு குழு சொன்னது இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று.அப்போது ஏறியது புலிகளின் பி.பி

அப்படியே அந்த நிகழ்வுகள் யாழப்பாணம் நோக்கி நகர்ந்து தமிழ் இன உணர்வாளர்கள் கொல்லப்பட பதிலடியாக இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற அரசு சொல்கிறது புலிகள் தான் இச் சம்பவங்களுக்கு காரணம் என்று.புலிகள்சொல்கிறார்கள் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று. போர் நிறுத்த கண்காணிப்புகுழு சொல்கிறது இந்த தாக்குதல்கள் புலிகளால் செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று.
இப்போது ஏறிக்கொண்டிருப்பது அரசின் பி.பி

சும்மாவா சொன்னார்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று.