Sunday, March 23, 2025

கனடாப் பிரதமரும்! கனடாவின் எதிர்காலமும் !

மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு வசனம் ஒன்று எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிட்டு இருப்பேன் .உண்மையில் அமெரிக் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்கும் வரையில் இங்கே கனடாவில் பெருமளவில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த ஆளுங்கட்சியா வரும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லிக்கொண்டுருந்தன .

மற்றும் பிரதமர் ஸ்ரின் ரூடோவின் மீதான அதிருப்தியும் பெருமளவு காரணமாக இருந்தது .ஆனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதியாக பதவியேற்ற பின்பு இந்த கருத்துக்களை கனேடிய மக்கள் மாற்றிக்கொண்டு விட்டர் . இப்போது தற்காலிக கனேடிய பிரதமராக , முன்னாள் பேங்க் ஆப் கனடா கனடாவின் தலைவராக இருந்த மார்க் கானி பதவியேற்று இரு கின்றார் இவரின் தெரிவு பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது .ட்ரம்பை சமாளிக்க கூடிய திறமை இவரிடம் இருப்பதாகவே பல கனடியர்கள் நம்புகின்றனர் என்பதை வெளிப்படையாக தெரிகின்றது.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மார்க் கானி தனது மந்திரி சபையை அறிவித்துள்ளார் இதில் இரு தமிழர்களும் அமைச்சராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் ஒருவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் .அடுத்தவர் ஹரி ஆனந்த சங்கரி இதில் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஒரு ஈழத் தமிழர் இலங்கைக்கு வெளியிலே உயர்ந்த பதவியில் இருப்பது சிங்கப்பூருக்கு பிறகு கனடாவில் தான் என்று நினைக்கின்றேன் .

அடுத்தது கடந்த இரண்டு தவணைகளாக பதவி வகித்த விபரல் கட்சி மீது மக்கள் கொண்டீ ருந்த அதிருப்தி .இதில் ஜஸ்டின் ரூடோ கடைபிடித்த ,குறிப்பாக அதிகளவான குடிவரவாளர்களை அனுமதித்தது, அடுத்தது கார்பன் வரி என்று ஒரு வரி கொண்டு வந்தது .இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வரி மார்க் கானியின் கருவில் உதித்து ரூடோவால் நிறைவேற்றப்பட்டது .இதன் மூலம் பெருமளவு பொருட்களின் விலை அதிகரித்தது .அதிக குடியேறிகள் ,அனைத்துலக மாணவர்களால் பெருமளவு பிரச்சனைகள் இங்கு ஏற்பட் .இவை யாவுமே ஜஸ்ட்டின் ரூடோவின் தலையிலேயே வீழ்ந்தன .

அடுத்தது ட்ரம்பை சமாளிப்பதற்கு மக்களின் தெரிவாக மார்க் காணி இருக்கலாம் .இவர் பாங் ஒவ் கனடாவின் தலைவராக இருந்தவர் ,பாங்க் ஒவ் இங்கிலாந்தின் தலைவராகவும் இருந்தவர் ஒரு சிறந்த பொருளியலாளர் இதன் காராணமாகவே லிபரல் கட்சிக்கான ஆதரவு மீண்டும் அதிகரித்து இருக்கிறது .இருந்தாலும் லிபரல் கட்சிக்கு அடுத்ததாக கன்சர்வேட்டிவ் கட்சி தான் இருக்கின்றது . இவரின் தலைவராக பியர் பொலிவியர் இருக்கிறார் . இருவருமே அரசியலுக்கு புதியவர்கள் .

எப்படியும் சில சில வாரங்களில் தேர்தல் ஒன்று நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மக்களைப் பொறுத்தவரையில் பல விடயங்கள் இன்று பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன .அமெரிக்காவை சமாளிப்பது அடுத்து சரிந்து வருகின்ற கனடிய பொருளாதரத்தை தூக்கி நிறுத்தி பழைய நிலைக்கு கொண்டு வருவது , விலைவாசி அதிகரிப்பு ,அதிக குடிவரவாளர்கள் வருகை ,சர்வதேச மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள் , வேலை வாய்ப்பு,பணவீக்கம் வீட்டு வாடகை உயர்வுகள் ,வீடற்றோர் பிரச்னைகள் .போதிய வீடுகள் இன்மை போன்ற பல பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியுள்ளன .

இவற்றை மார்கானியால் திறம்பட திறம்பட சமாளிக்க முடியும் என்று மக்கள் நம்புவதாக தெரிகின்றது பொதுவாக கனடா படித்தவர்கள் நிறைந்த நாடு எனவே பெரும்பாலான மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சிந்திப்பதில்லை . எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து தான் இங்கே பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன இப்போது ட்ரம்ப் பால் விடப்படுகின்ற பல நெருக்கடிகள் கத்தி போல கனடாவின் தலை மேலே தொங்கிக்கொண்டு கொண்டிருக்கின்றன மார்க் அணியின் முதலாவது விஷயம் கூட அமெரிக்காவை தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல ஒப்பந்தங்களை செய்திருக் கின்றார். அமெரிக்காங்களை உதாசீனம் செய்தாலும் ரோப் பியர்கள்ங்களுக்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவுக்கு சொல்லும் ஒரு உத்தி தான் .இங்கு இன்னொரு விடயம் என்றால் கனடா ஒரு கொமன்வெல்த் நாடு .

எது இருந்தாலும் வெகு விரைவில் நடைபெறும் தேர்தலிலே தெரிவு செய்யப்படுகிறவர் அமெரிக்காவை எதிர்த்து கனடாவை வழிநடத்த வேண்டும் .கனடாவின் 70 வீதமான உற்பத்திகள் அமெரிக்காவுக்கு போகும் நிலையில் வரி விதிப்பு என்பது இரு பகுதியினருக்குலி . கனடாவில் இங்கே பல அங்காடிகளில் இருந்துமெரிக்க பொருட்களை தூக்கி விட் டார்கள்.இருப்பவையும் மக்களால் வாங்கப்படுவதில்லை .மக்கள் கனேடிய தயாரிப்புகளையே பார்த்துப் பார்த்து வாங்குகின்றனர் .வரி விதிப்புக்கள் வரும் நாட்களில் தான் விளைவுகளை உண்டாக்க தொடங்கும் .புதிதாக தெரிவு செய்யப்படும் அரசு என்ன செய்யப்போகிறது இதுதான் மக்கள் முன்னர் உள்ள கேள்வி ?


Saturday, March 08, 2025

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !

 

உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள் .இந்த நாளை ஒட்டி கூகுள் வெளியிட்டு இருக்கும் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்து .இதனையே மேலே காண்கிறீர்கள் .அறிவியல், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான குறியீடுகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.


Sunday, March 02, 2025

எலன் மாஸ்க்கும் கனேடிய குடியுரிமையும் !

 



ஈலன் மாஸ்க்கினை தெரியாதவர்கள் இன்றைய காலத்தில் இருக்க மாட் டார்கள் .டெஸ்ல்லா கார்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல ஸ்ரார் லிங் ,ஸ்பேஸ் எக்ஸ் , எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் .. இவர் டிரம்புக்குடனான அரசியலுக்கு வரும் வரையில் இவர் ஒரு தீவிர வலதுசாரி என்ற விபரம் பலருக்கும் தெரியாத உண்மை ...

தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் இவரின் தாய் கனடாவை சேர்ந்தவர் என்பதால் இவர் கனடாவின் ஒரு பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதாவது அமெரிக்க,கடா நாடுகளின் குடியுரிமையை இவர் வைத்தது இருக்கிறார் .

பிரச்சனை இங்கு எப்படி வந்தது என்றால் ட்ரம்பின் ஆதரவாளராக இவர் செயற்பட தொடங்கிய பின்னர், கடாவை பற்றி விமர்சனம் செய்த பின்னர்தான் கனேடிய மக்கள் கொதித்துழுந்து இருக்கிறார்கள் .

இவரின் கனேடிய குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருதி அண்ணளவாக 250,000 பேர் பாராளுமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள் .பொதுவாக இப்படியான மனுவை பாராளுமன்றம் பரிசீலிக்க 500பேர் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலையில் இங்கு 250,000 பேர் கையொப்பம் இட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .குற்றச்சாட்டுக்களாக 25% வரி விதிப்பு ,கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைக்க திட்டமிடல் ,கனேடிய தேர்தல்களில் பாதிப்பை ஏற்ப்படுத்த முயற்சித்தது போன்றவை இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,

இனி பாராளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் ,குடியுரிமை பறிக்கப்பட போகிறதா ? இது தேச துரோக குற்றசாட்டுக்களில் அல்லது தகவல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கும் போதுதான் ஒருவரின் குடியுரிமையை பறிக்க முடியும் .இலகுவாக அவரது குடியுரிமையை பறிக்க முடியாதுன்றேட்வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள் ..

இருந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது ,கீரியும் பாம்புமான ரஸ்யாவும் ,அமெரிக்காவுமே கைகுலுக்கி கொண்டுஇருக்கின்றன.இப்படி ஒரும்பவம் நடக்கும் என்று சில காலங்களுக்கு முன்னால் நினைத்து தான் பார்த்து இருக்க முடியுமா ?

மாற்றம் ஒன்றே மாறாதது




Saturday, February 22, 2025

பார்த்தது ,படித்தது , கேட்டது !

 பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 


Wednesday, February 19, 2025

படித்ததில் பிடித்தது ! நீங்களும் படித்து பாருங்களேன்.

பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 



Tuesday, February 18, 2025

ரொரண்டோ -சற்று முன்னர் !

 ருடம் பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி காலங்கள் நேரங்கள் நாட்கள் விரைவாக பறக்கின்றன என்பதை நினைத்தால் வியப்புதான் வருகின்றது. கடந்த சில தினங்களாக இங்கு ரொரன்டோவில் காலநிலை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல்கள் ரொரண்ரோவை தாக்கி நிறைய பனியை கொட்டி விட்டு சென்றிருக்கிறது , இன்று நண்பரோடு கதைத்தபோது நண்பர் சொன்னார் இப்பொழுதுதான் ரொறொண்டோவை பழைய மாதிரி பார்க்க முடிகிறது

 அவர் சொன்னதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு 8,9 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் இப்படித்தான் பனி கொட்டும். பூமி  வெப்பம் அடைவதன் காரணமாக இப்பொழுதெல்லாம் கொட்டும் பனியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மதியத்துக்கு பின்னர் அமெரிக்கன் டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மினியாபொலிஸ் நகரிலிருந்து ரொறொன்றோ பியர்சன் விமான நிலையத்த்தில் தரையிறங்க முற்பட்ட  நிலையில் கடும் காற்று , பனி காரணமாக தலைகுப்புற கவிண்டதில் சிலர் காயம். எழுபத்துநாலு பயணிகள் நாலு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது விபரங்கள் பின்னர் தான் தெரியவரும். 

Monday, November 11, 2024

வினை விதைத்தவன் தினை அறுப்பான் - கனடா-ஜஸ்டின் ரூடோ

           தமிழில் ஒரு பழமொழி  இருக்கிறது தலை போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று ,கிட்டத்தட்ட 

அதே  போல ஒரு நிலைதான் கனேடிய மக்களுக்கு  எவ்வளவு சேதத்தை உண்டாக்க  முடியுமோ எல்லாவற்றையும் செய்தாகி

விட்டது .இப்போது கடுப்பாடுகள் .யாரை ஏமாற்ற இதை செய்கிறார்கள் ?மக்கள் எல்லாவற்றையும் 

பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .பதில் வரும் வருடம் கடுமையாக, கண்டிப்பாக கிடைக்கும் ,