Monday, May 22, 2006

நீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......

னடாவைப் பொறுத்தவரை குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம்.சைபர் வீதம் ஆல்ககோல் உடலில் இருந்தாலே போதும் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம் .அல்லது இவை இரண்டுமே நடைபெறலாம்.இங்கு வாகனம் ஓட்டுவதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரம்
எடுக்கும் சிரமம் பலருக்கும் தெரிந்ததே.

அப்படியும் எத்தனையோ பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அமெரிக்காவைப் போலல்லாது
கனடாவில் ரோட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு குறைவு என்பதால் பலரின் தலை தப்புகிறது.

1999 ம் ஆண்டு புதுவருட தினத்தன்று இரவு விருந்தொன்றில் பங்கு பற்றிவிட்டு வந்த இருவரின் கார்கள் விபத்துக்குள்ளானதில்
ஒரு காரில் வந்தவர் இறந்துவிட அவரின் நண்பி நடமாடமுடியாதபடி காயம்பட்டார்.

இரண்டாவது வாகனத்தில் வாகனத்தை செலுத்தி வந்தவர் மதுபோதையில் இருந்தபடியால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விபத்தில் உயிர்தப்பிய பெண் தான் 17வது முதல் சக்கர நாற்காலியில் நடமாடுவதற்கு காரணம் குடிபோதையில்
வந்த சாரதி மட்டுமல்ல அவரை விருந்துக்கு அழைத்து குடிக்க கொடுத்த வீட்டுக்காரரும் தான் என்றும் கூரி அவர்களிடம் இருந்து நட்ட ஈடு
கேட்டு வழக்கு தொடந்திருந்தார்.

அந்த வழக்கு முன்னரே ஒட்டாவா நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றம் கொண்டு சென்றார்.
மேல் நீதிமன்ற தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர்வந்தது .அதாவது வழக்கு தொடுத்த பெண்மணிக்கு பாதகமாக
"விருந்தை நடத்தியவர்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது" என்று .

அதாவது மதுபோதையில் விபத்து நடந்தால்
அதற்கு விருந்து வைத்தவர் பொறுப்பு அல்ல என்று.

இங்கு இப்படி நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்பது என்பது சாதாரண விடயமே.ரிம் கோட்டன் என்பது கனடா ,அமெரிக்காவில்
உள்ள ஒரு கோப்பிக்க்டையின் பெயர்.இங்கு ஒரு பெண்மணி கோப்பி( காப்பி) வாங்கியிருக்கிறார் .கோப்பி கொண்டுவந்து
கடைச் சிப்பந்தி வைக்கும் போது அப் பெண்ணின் தொடையில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுவிட்டதாம்.அதன் பின்னர் அப்பெண்மணி
அக்கடைக்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து பெரும் தொகையை பெற்றதாகவும் ஒரு கதை.
இப்போது கோப்பி கப்புகளில் எச்சரிக்கை- மிகவும் சூடானது என்று ஒரு வாசகம் பொறிக்கப்பாட்டிருப்பதை காணலாம்.

இப்படிதான் எனது உறவினர் ஒருவர் எப்படியாவது ஏதாவது ஒன்றின் மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாம் என்று
கனடா வந்ததில் இருந்து அலைகிறார்.ஆனால் இன்னமும் ஒன்றும் மாட்டவில்லை அவருக்கு.

Sunday, May 21, 2006

"உலகத் தமிழர் தலைவரும் ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பும்"

லங்கையில் அமைதி திரும்பி தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும். அதற்குரிய சகல விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது தடவையாகப் பதவியேற்றிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளதுடன், சமாதானத்தை ஏற்படுத்தத் தேவையேற்படின் தலையிடுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து முழு விபரத்தையும் அறிந்த பின்பு மத்திய அரசு தலையிடவேண்டிய தேவையிருந்தால் அது குறித்து வலியுறுத்துவோம் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதேதினம் இலங்கையின் வட,கிழக்கிலிருந்து 102 மக்கள் ஒரே தினத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்த வருட ஆரம்பத்திலிருந்து வட, கிழக்குப் பகுதியிலிருந்து 1019 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 20 வருடகாலமாக பாக்கு நீரிணையைப் பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் கடந்துசென்று தமிழ்நாட்டில் தஞ்சமடையும் வட, கிழக்குத் தமிழர்களின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டியிருந்தது. தற்போதும் 60 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய (யூ.என்.எச்.சி.ஆர்.) புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளியன்று வந்த 102 அகதிகளும் தமிழர் தாயகமான வட,கிழக்கில் மிகவும் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமையாலேயே படகுகள் மூலம் தமிழகத்தை நாடி வந்திருப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் ஜெனிபர் பகோனிஸ் ஜெனீவாவில் கூறியிருக்கிறார்.

`அகதிகளின் பயணம் அதிகரித்துவருகிறது. நிலைமையை நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்' என்றும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இலங்கை நிலைவரத்தை முழுமையாக அறிந்துகொள்ளவில்லையென தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் மத்தியில் அவதியுறும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவு ஆறுதலளிக்கும் வார்த்தையாகத்தானும் இல்லை.

`உலகில் எந்த மூலையில் வாழுகின்ற தமிழனும் துன்பப்படும்போது அவனுக்காக குரல் கொடுப்பேன்' என்று கலைஞர் வெளியிட்டுவந்த கருத்துகளை வெறும் அறிக்கைகள் என்று கருதாமல் தன் உள்ளுணர்வை வார்த்தைகளால் வடித்திருக்கிறாரே என்று பரவசப்பட்ட, தற்போதும் பரவசப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களும் உள்ளனர்.

இப்போது கலைஞருக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் 6 கோடி தமிழர்களின் தலைவராக மட்டுமன்றி இந்திய மத்திய அரசாங்கத்திலும் கலைஞரின் `அதிகாரபலம்' கணிசமான அளவில் உள்ளது. இந்த அதிகாரபலத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் இலங்கைத் தமிழர்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலமைச்சராக பதவியேற்றபின்பு முதற்தடவையாக கலைஞர் இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது கலைஞர் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு கூட்டுச்சம்மேளன முறைமையிலான தீர்வே சிறந்தது என்று கலைஞர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். வட,கிழக்கில் தமிழர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்திருந்ததாலேயே இந்தக் கூட்டுச்சம்மேளன முறைமையிலான அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தற்போ
து நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு சமஷ்டி முறையிலானது (Federal) என்று கூறப்பட்டாலும் அதனை முழுமையற்ற சமஷ்டி முறைமை (Quasi Federalism) என்ற அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பாரதத்தில் தற்போதைய அரசியலமைப்பு முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வைக் கொண்டதே கூட்டுச்சம்மேளன (Confederation) முறைமையாகும். இந்த முறைமையிலான தீர்வே வட,கிழக்கு தமிழர்களின் நெருக்கடிக்குத் தீர்வு தரும் என்று மனதார விரும்பும் கலைஞர் கருணாநிதி அதனை ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

ஒற்றையாட்சி முறைமைக்குள் தீர்வுகாண முடியாதென்பதை தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் தலைமைத்துவங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சமஷ்டி முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது மீண்டும் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தான் யாவும் என்று அதிகாரபீடம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வட,கிழக்கில் மோதல்கள் மோசமாக வெடித்துள்ளதுடன், தமிழகத்திற்கான `படகு அகதிகள்' படையெடுப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலைஞர் வெறுமனே வார்த்தைகளால் மட்டும் `இலங்கையில் தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும்' என்று கூறுவதுடன் நிறுத்திவிடாமல் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தனது செல்வாக்கு, அதிகார வரம்பெல்லைக்குள்ளேயே மேற்கொள்ள முடியுமென்பதே இலங்கையிலுள்ள குறிப்பாக வட, கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உலகத் தமிழரின் தலைவரெனக் கருதப்படுபவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும்.

நன்றி- தினக்குரல்

Tuesday, March 28, 2006

கிழக்கில் உதயமாகிறது "ஜிகாத்" குழு!

கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!

சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:

இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும்.
இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.

இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.

புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.

கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:
தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.

இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது.
மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.

1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.

தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.
1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.
பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.
முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.

இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.

அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:

சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.

அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.
அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.

ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.

சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.

மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க,

கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.

சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.

இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அப்போது சிறிலங்கா
வுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.

இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.

"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.

இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.

இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.
ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.

அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.
முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.
அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-
உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-
"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நன்றி:-www.puthinam.com

Sunday, March 05, 2006

பொடா நாயகனின் "மெகா பிளான்"

"க்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்''. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

''தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்''.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.


''தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்..'' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே 'பொடா நாயகன்' வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.
திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.


ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.
வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.


அவரது கட்சியின் கொள்கை வரிகளான 'லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை' என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்....................................................................


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://thatstamil.oneindia.in/news/2006/03/05/plan.html

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

Tuesday, February 28, 2006

நாட்காட்டியில் கண்ட நல்வாசகங்கள்.

நாட்காட்டியில் நாம் நாட்களை பார்ப்பதற்கும் மற்றும் நல்ல நேரம் பிற காரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.சில நாட்காட்டிகளில் சில பல நல்ல வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.இந்த அவசர உலகில் அதை நின்று நிதானித்து படிப்பதற்கு கூட முடிவதில்லை.நானும் இங்கு அவற்றை பதிய வேண்டும் என்று நினைத்து பல நாட்களாக முடியவில்லை. இன்று அவற்றில் சிலவற்றை தருகிறேன்.உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும் கூட.


மனைவி பற்றி சில வாசகங்கள்.

மனைவிக்கு உலகமாய் இரு: ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்து விடாதே!

மனைவி உனக்காக எதையும் இழப்பாள், எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.

நெஞ்சில் வஞ்சகம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப்பார்,உன் தெய்வம் பூஜை அறையில் இல்லை,படுக்கை அறையில் தான்.

ஆணுக்கு கிடைக்கும் சீதனம் உழைத்துப் பெற முடியாத் பெண்ணின் குண நலன்களே தவிர, உழைத்துச் சம்பாதிக்கும் காசு பணம் அல்ல.

அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு:அதை புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு.

Friday, February 03, 2006

புனர்வாழ்வு கழகம்- ஒரு தகவல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு
வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் உத்தியோகத்தினர் சிலர் கடத்தப்பட்டமை தெரிந்ததே.அவர்கள் தொடர்பான செய்தியை அறிந்து கொள்ள http://www.freengoworkers.blogspot.com/ செல்லவும்.

Sunday, January 29, 2006

மும்பையில் காத்திருந்த பயங்கரம்!

*பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள்.

* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள "றோ" புலனாய்வு அதிகாரிகள்...

* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'

மிகுதி விபரங்களைப் படிக்க இங்கு செல்லவும்.

http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/29/Article-9.htm