Monday, November 12, 2012

வந்துட்டேன்யா…..வந்துட்டேன்யா …. மீண்டும் “வைகைப்புயல்” வடிவேலு

 

மிழ் சினிமாவுக்கு  1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமான வடிவேலு,கொஞ்சக்காலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் .ஆபாசமில்லாத அப்பாவி கிராமத்தானாக பல படங்களில் நடித்து பலருடைய  இதயங்களில் நகைசுவையால் கோலோச்சியவர்.வடிவேலுவின் மொழி நடை ,நடையுடை பாவனைகள் பலரையும் கவர்ந்தவை ,அவரின் நகைச்சுவை காரணமாகவே மதுரைத்தமிழ் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது .

இப்படி தமிழ் திரையுலகில் கோலோச்சிய வைகைப்புயலின் வாழ்வில் ஏற்பட்ட   அரசியல் தொடர்பால்  அவரின் திரை உலக பயணம் ஒரு முடிவிற்கு வந்தது .இது உண்மையில் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அடியாகும் .உண்மையில் அவர் கிழே உள்ள பேட்டியில் கூறியபடி அவருக்கு போட்டி அவர்தான் .இது உண்மையும்  கூட. அவரின் அரசியல் அவரின் தனிப்பட்ட விடையம் .நல்லதொரு நகைச்சுவை கலைஞன் அரசியலில் ஈடுபட்டு அரசியல் பண்ணப்பட்டதில் நொந்து போனது அவரின் நகைசுவையினை ரசித்த  ரசிகர்கள் தான் .அந்த ரசிகர்களின் வாதத்தினை போக்க வந்திருக்கும் ஒரு செய்தி இதுதான்

நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலு கூறுகையில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என்ற காமெடி கதையுடன் என்னை அணுகினார். அப்படத்தில் முக்கிய கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

கதை ஆப்பிரிக்காவில் நடப்பதுபோல் இருக்கும். எனவே படப்பிடிப்புக்காக அங்கு செல்ல இருக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதிலும் நான் நடிக்கிறேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல.

பூபதிபாண்டியன் இயக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.

அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை என்றும் சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

உணமையில் இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.இப்போதே  மேற்படி இரு படங்களை பற்றிய கற்பனை மனதினில் விரிகின்றது .வைகைப்புயலை மீண்டும் தமிழ்த்திரையுலகம் அழைத்துவரும் .எஸ் .ரவிக்குமாருக்கும் ,சிம்புதேவனுக்கும் வடிவேலுவின் ரசிகன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் .உண்மையில் எனது மனம் சோர்வுறும் வேளைகளில் எல்லாம் நான் எனது சோர்வை போக்க செய்வது வடிவேலுவின் நகைச்சுவைகளை பார்ப்பது ஆகும் .

நல்ல நடிகன் மட்டும் அல்ல நல்லதொரு பாடகனுமாகிய வடிவேலு பாடிய பல பாடல்கள் எம் மனதை மகிழ்விக்க வல்லன.அப்படிப்பட்ட சில பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன .கேட்க விரும்பின் இங்கே சுட்டவும் .

நன்றிகள்  .

Friday, November 09, 2012

குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை

 

சில தினக்களுக்கு முன்னர் படித்த ஒரு ஜென் கதை எனது மனதுக்கு மிகவும் பிடித்தது .நல்லதொரு தத்துவத்தினை சொல்லும் அக்கதையினை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன் .

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

நிச்சயமான உண்மை .

Tuesday, November 06, 2012

நானும் ஒரு தாய் -----குறும்படம்

 

அண்மையில் ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது  .படத்தினை பார்த்த பின்பு தான் இயக்குனர் பற்றி தேடியபோது அவர் ஈழத்தினை சேர்ந்தவர், மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன்  இயக்குனர் பாலுமகேந்திராவின்  மாணவர் என்றும் அறிய முடிந்தது .அத்துடன் இக் குறும் படம் இந்தியாவில் பல விருதுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நான் படத்தினை பற்றி விமர்சனம் எழுதுவதை விட நிங்களே சில நிடங்களில் இப்படத்தினை பார்த்துவிட்டு விமர்சிக்க்லாமே.

நானும் ஒரு தாய்

 


கிழே இருக்கும்  இந்த வீடியோவினைப்பாருங்கள் இந்த மேற்கத்திய இசைக்கலைஞர் எவ்வளவு இலாவகமாக எமது தவிலை வாசிக்கின்றார் என்று .சினிமா இசையை தவிர வேறு இசைகளை ரசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதையும் ரசிப்பார்கள் ஏன் எதிர்பார்க்கலாம்.

 

தனிமையில் தவிலை எப்படி கையாளுகிறார் பாருங்கள் .

நன்றி /வணக்கம்

Sunday, November 04, 2012

முஸ்லிம்களின் சாபமா சான்டி புயல் ???

 

ட்வீடரில் கருத்து தெரிவித்துள்ள சில முஸ்லிம் மதப்பெரியவர்கள் அமெரிக்காவை தாக்கிய சாண்டி சுறாவளி முஸ்லிம்களின் சாபம் எனவும் அல்லாவை அவமதித்ததால் தான் சான்டி அமெரிக்காவை தாக்கியதாக கருத்து வெளியிட்டுள்ளனர் .

ஏற்கனவே அல்லவை பற்றி படம் எடுத்து அதனால் உலகெங்கும் அமெரிக்கா வினை எதிர்த்து கலவரங்கள் ஏற்பட்டதும் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதும் கடந்தகால சம்பவங்கள். இதனை மனதில் வைத்து சில மதப்பெரியவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர் ட்விட்டரில் .

எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் : அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்,ஆச்சரியப்படுகின்றனர் . நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் அமெரிக்கவை பழிவாங்கினான்?? என்பதே எனது கருத்து.

இவரது டுவீட்டுக்கு ஒருவர்  பதில்  தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும்  இந்தப் புனிதப் புயல்??? என்று கூறியுள்ளார்.

அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். எனவும் அவர் அந்த ட்வீட்டில் சொல்லியிருக்கிறார் .இனி இன்னொரு மத குருவின் செய்தி

சவுதியை   சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் ?என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.ஆனால்  அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி இறந்தவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் இதற்கு பதில்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது, என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதப்பெரியவர்களா?.

கனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் !

 

கனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்சில் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்ட நேரமானது இன்று இரவு இரண்டு மணியாகும் போது மீண்டும் பழைய நிலைக்கு அதாவது ஒரு மணித் தியாலமானது பின்னகர்த்தப்படும் .அதாவது இரண்டு மணியாகும் போது ஒரு மணியாகும் .எமது கைபேசிகளில் , தொலைகாட்சிகளிலும் இனையத்துடன் இணைக்கப்ட்ட  சில வீட்டு உபகரணங்களிலும் இவ் நேர மாற்றம் தானியங்கியாக மாறறமடையும். ஒரு சில நாட்களுக்கு இம் நேர மாற்றம் ஆனது சங்கடமாக இருந்தாலும் பின்னர் பழகிவிடும்  குளிர்காலத்தின் போது இரவு நேரத்தின் அளவு இங்கு அதிகமாக இருக்கும் .பகல் பொழுது குறைவு .

எனவே இவ் நேர மாற்றத்தின் காரணமாக ஒரு மணித்தியாலம் அதிகமாக நித்திரை கொள்ளலாம்.இன் நேரமாற்றம் ஆனது மின்சக்தியை சேமிக்கவும் ,மனித வலுவை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில்   கொண்டுவரப்பட்டது .

இன்றைய தினம் இது கனடா மற்றும் அமேரிக்கா நாடுகளில் இன்னும் சில நிடங்களில் அமுலுக்கு வருகிறது,கனடாவில் ஆறு விதமான நேர வலயங்கள் இருப்பது பலருக்கு தெரியாத ஒன்று .ரொறன்ரோக்கும் வான்கூவருக்கும் இடையே நான்கு மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உண்டு . பரப்பளவில் பெரிய கனடாவில் ஆறு நேர வலயங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை தானே .

நேரமாற்றம் ஆனது எப்படி யாரால் என்ற விபரங்கள் பின்னர் ஒரு பதிவில் தருகிறேன் .

Wednesday, October 31, 2012

உங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.!

 

  1. அன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது
  2. தீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க  4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .
  3. ஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .
  4. வாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான  பொருளைக் கொண்டுள்ளது.
  5. கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது. 
  6. கட்டைவிரலின் நகத்தினைவிட  நடுவிரல் நகத்தின் வளர்ச்சி  அதிகமானது.
  7. குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .
  8. வெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .
  9. எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
  10. கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .
  11. நலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .
  12. 80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
  13. ஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .
  14. கேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener  கண்டு பிடிக்கப்பட்டன .
  15. ஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.
  16. தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .
  17. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17  சதுர மைல்கள்) சனத்தொகை  10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )
  18. ஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .
  19. 60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .
  20. வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .

Sunday, October 28, 2012

வெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்படும்!

வெண்டைக்காய் சாப்பிடும்படியும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் எனக்கு ஒரு மெயில் வந்தது .கண்டதையும் போர்வேட் செய்யும் நண்பர் அனுப்பிய மெயில் அது .உண்மைதான அது என சோதனை செய்து பார்க்க எனது தந்தைக்கு பரிந்துரைத்தேன் .அவரும் வெண்டைக்காய் உண்டு விட்டு இரத்தத்தில் வெல்லத்தின் அளவை பரிசோதித்துப்பார்த்த போது வெல்லத்தின் அளவு இரத்தத்தில் குறைந்து காணப்பட்டது .

சரி என்று சொல்லி அவர் சில தினங்கள் அம்முறையினை பின்பற்றி  வந்தபோது அவருக்கு தும்மல் தடிமன் வந்து விட்டது .எனவே அவர் இப்போது கிழமையில் முன்று தினங்கள் மட்டும் வெண்டைகாய் மருத்துவம் செய்து வருகிறார்.

சரி எப்படி அதைப்பின்பற்றுவது ? வழிமுறை இங்கே .உங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப எச்சரிக்கையோடு சொந்தப்பொறுப்பில் பின்பற்றவும். (ஹி..ஹி. நிதிமன்றம் கரிகாலனின் மனக்கண்ணில் )சரி ,இனி விபரங்கள்

  • ஒரு வெண்டைக்காய்  எடுத்து நன்கு கழுவிக் கொள்ள  வேண்டும். பின் அதன் இரு முனைகளையும்(அடி ,நுனி) நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வழவழ நீர் இருக்கும் , அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
  • அடிக்கடி உங்கள் இரத்தத்தினை பரிசோதிக்க வேண்டும் .இரத்தத்தில் சர்க்கரை கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை .

இதன் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை .அத்துடன் மருத்துவ ரீதியில் வைத்தியர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .வெண்டைக்காய் போலவே சிறு குறிஞ்சா .பாவக்காய் ,வெந்தயம் சின்ன சீரகம் போன்றவையும் இரத்தத்தில் வெல்லத்தின் அளவை குறைப்பதாக நீரிழிவு நோயாளிகள் சொல்கிறார்கள் .ஏன் கொய்யாப்பழம் கூட நீரிழிவை குறைப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் இதனால் ஏதாவது பின்விளைவுகள் வருமா என்பது பற்றி அலோபதி வைத்தியர்கள் தான் சொல்லவேண்டும் .பாவற்காய் அடிக்கடி சாப்பிடுவது உடலில் நீர்சத்தினை குறைக்கும் என்பதாக ஒரு தகவலும் உண்டு

நன்றி .உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்