Tuesday, June 01, 2004

கடலே!

இங்கு கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றிலே அண்மையில் வந்த கவிதை ஒன்று எனது மனதினைத்
தைத்தது.உங்களுடன்பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஈழத்தின்எழுச்சிக் கவிஏர் காசி ஆனந்தனின்
கவிதை வரிகள் இவை..

கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!


இந்நாள் இடிநகர் அலைகக் குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடி கரங்கள் ஒருநாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!


அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெலாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!


உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!


அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!


கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கிவிட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்.....
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

வலைப்பதிவுகளும் நானும்

சில நாட்களின் பின்னர் இங்கே எழுதுகிறேன்.பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக நேரம் கிடைக்கவில்லை.
இனி தொடர்ந்து எழுதுவேன். தமிழில் எழுதுவது கைகளுக்கு சிரமத்தினை கொடுத்தாலும், மனத்தினில் மகிழ்ச்சியை
க் கொடுக்கிறது. தமிழில் எழுதுவது என்பது கைகளினால் உணவையுண்பது போலவும் ஆங்கிலத்தில் எழுதுவது
என்பது கரண்டியினால் உணவை உண்பது போலவும் எனக்கு தெரிகிறது.உங்களுக்கும் இப்படியான உணர்வுகள்
, எண்ணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
முன்பு தமிழில் இணையம் அல்லது தமிழிணையம் பிரபலமாகிக்கொண்டிருந்த காலங்களில்
இணையத்தளங்கள் புதிது புதிதாக முளைவிட்டதுபோல இப்போது வலைப்பதிவுகள் திசைக்கொன்றாக
(எனக்கெனவோ வலைப்பூ என்பதனை விட வலைப்பதிவு என்பது தான் பிடிக்கிறது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?)
வந்து கொண்டுஇருக்கின்றன.இணையத்தில் பத்திரிகை படிப்பது எப்படி தவறாதோ அதே போல அண்மைக்காலங்களில் நான்
வலைப்பதிவுகளுக்கும் வருவதும் தவறாமல் நடக்கிறது தமிழ்நாட்டுத்தமிழ்(இதில் சென்னை
த்தமிழும் அடக்கம்),இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ் இப்படி பலப்பல தமிழ் பேசி வருகின்றன.எல்லாத்தமிழும் எனக்கு புரிந்தாலும் சத்தியமாக எனக்கு இந்த
சென்னைத்தமிழ் மட்டும் புரியவில்லை.மற்றவர்களுக்கு புரிகிறதா என்பதுவும் எனக்கு புரியவில்லை.
. சில வலைப்பதிவுகள் நண்பனுடன் உரையாடுவது போல
எம்முடன் வம்பளக்கின்றன.சில வலைப்பதிவுகள் காதல் மொழி
பேசி கிளுகிளுப்பூட்டுகின்றன.சில அடிமனத்து வேதனை
களை ,நிகழ்கால விடயங்களை பகிர்ந்து கொள்கின்றன.சில மொட்டாகி பூப்பதுக்கு முன்னரே கருகிநிற்பதையும் காண
முடிகிறது.மொத்தத்தில் வலைப்பதிவுகள் எல்லாமே எதோ!! ஒரு வகையில் சுவாரசியத்தினைத் தருகின்றன.

Monday, May 24, 2004

பிறப்பு

இந்தியாவின் 13வது பிரதமராக 71 வயதான திரு மன்மோகன் சிங்
சனிக்கிழமை மாலை பதவி ஏற்றுள்ளார். சோனியாகாந்தி பிரதமராக
மறுத்தமையினால் 82 சதவீதமான இந்துக்களைக் கொண்ட இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமூகத்தினைச் சேர்ந்த மன்மோகன்
சிங் பதவியேற்க முடிந்துள்ளது. இந்திராகாந்தி கொலை அதன் விளைவாக ஏற்பட்ட சீக்கியர்கள் மீதான வன்செயல்கள் காரணமாக
காங்கிரஸ் கட்சியின் மீது சீக்கியர்கள் கொண்டிருந்த வெறுப்பும் மறைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. மன்மோகன் சிங்
பிறந்தது பாகிஸ்தானில்(இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் முன்பு) என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள அவர் பிறந்த ஊரைச் சேர்ந்த மக்கள் பலர் மகிழ்சியுடன்
கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இங்கு ஒன்றைக்குறிப்பிடலாம். இந்தியாவின் புதிய பிரதமர் பாகிஸ்தானில் பிறந்ததுபோல் பாகிஸ்தான் அதிபர் பார்வேஸ் முஸ்ராப் பிறந்தது இந்தியாவில் உள்ள
டெல்லியில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, May 20, 2004

வாய்ச்சொல்லில் வீரரடி -2

உதவி பண்ணாவிட்டாலும் பரவாயிலை. உபத்திரம் பண்ணாதீர்கள் என்பது தான் இவர்கள் கொள்கை.
மதில் மேல் பூனை மாதிரி இருந்துவிட்டுப்போனாலும் பரவாயிலை. கடந்த வருடம் நடிகர்,தயாரிப்பாளர்,அரட்டை அரங்கம் புகழ் விசு அவர்கள் கனடா வந்து சூடு பட்டுக்கொண்டார்
புலிகளைப்பற்றியும்,தமிழர்களை பற்றியும்,போராட்டத்தினைப் பற்றியும் பல அவதூறு கருத்துக்களை அவரின் நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டிருந்த
நிலையில் அவரின் நிகழ்ச்சிகளிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

கடைசியில் அவரின் நிகழ்சி படுதோல்வியில் முடிந்தது.இலவசமாகநுழைவுசீட்டு வழங்கப்படும் என்று சில வானொலிகளில் அறிவித்தும் கூட கூட்டத்தினை திரட்ட முடியவில்லை.
வருகின்ற வாரங்களில் கூட பலதென் இந்திய கலைஏர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாக அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இனி கோடைமுழுவதும் இப்படியான நிகழ்வுகள் தான்.
யாராக இருந்தாலும் வருபவர்கள் ஈழபோராட்டம் சம்பந்தமாக ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு
வருவது அவர்களுக்கு நல்லது.உதவி செய்யாதவர்காளைக் கூட மன்னிக்கதயாராக இருக்கும் ஈழத்தமிழர்கள் உபத்திரம் செய்தவர்களை மன்னிக்க தயாராகவே இல்லை

Tuesday, May 18, 2004

வாய்ச்சொல்லில் வீரரடி

எங்கும் பச்சை பசேல் என்று பசும் புல் வெளிகள்.இடையிடையே கூடையை கவிழ்த்து கொட்டியது போல
மலர்கள்.மொட்டையாய் நின்ற மரங்கள் இலைகள் துளிர்த்து கிளை பரப்பி
நிற்கின்றன.பனிக்காலத்தில் பார்த்த தெருக்கள் கூட இப்போ கோலம் மாறி காட்சி தருகின்றன. இடை, தொடை தெரிய பெண்கள் உடை
உடை அணியதொடங்கினாலே கோடை தொடங்கி விட்டது என்று அர்த்தம்
எங்கும்,எல்லோருக்கும் மகிழ்ச்சி
ஆசிய நாடுகளில் வாழ்வோருக்கு சுட்டெருக்கும் வெய்யிலின் பின் வரும் மழை எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அதை விட ஒரு படி
ஒரு படி மேலே என்று கூட சொல்லலாம் காது மடல்களை மரத்துப்போகவைக்கும் கடும் குளிருக்கு பின்னர் வரும் இளவேனில்
காலம் அதற்குபின்னர் வரும் வசந்தகாலம் எல்லாமே மிக மிக மகிழ்சியை தரும்.இனி ஒரு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு
ஒரே கொண்டாடம் தான்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூடகதைப்பது ,உறவாடுவது எல்லாம் இனித்தான்.
சிலருக்கு பக்கத்து
வீட்டில் யார் இருக்கின்றனர் என்று தெரிவதே இந்த காலப்பகுதில் தான்
கேளிக்கைகள் ,விழாக்கள்,களியாட்டங்கள் என்று அமளிப்படும்.இந்தியாவில் இருந்து நானாவிதமான கலைஎர்களும் கனடா
வந்து போவார்கள்.அதை ஒட்டி வாதங்களும் பிரதிவாதங்களும் கிளம்பும்.அந்தவகையில் இந்த வருடம் முதன்முதலில் இங்கு வருகை தந்தவர்
எல்லோராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமா அவர்கள். கடந்த வாரம் இரு தினங்கள் இங்கு மேடை நிகழ்ச்களில் கலந்துகொ
ண்டார்.இங்கு இயங்கும் தமிழ் வானொலி ,தொலைக்காட்சிகளில் அவரின் செவ்விகள் மாறி,மாறி இடம் பெற்றன.ஒரு வானொலியில்
ஆச்சியின் செவ்வி இரவு 1.00 மணிகடந்தும் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. ரசிகர்கள் அந்த வேளையிலும் கூட அழைத்து
பேசியதை கேட்க முடிந்தது.
இரு வானொலி செவ்விகளை என்னால் செவி மடுக்க முடிந்தது ஈழப் போராட்டம் சம்பந்தம்மாகவும்
பலர் கேள்விகள் கேட்டதையும் மனோரமா அவர்கள் சாதுரியமா பதில் அளித்ததையும் கேட்க முடிந்தது. இங்கு வரும் சிலர் இங்கு
சொல்வது எல்லாம் அங்கு தெரியவாபோகுது என்ற நினைப்பில் அள்ளிவிடுவதும் சிலர் தமிழ்நாட்டு பொடா நிலமைகளை கூறி
ஒதுங்குவதும் வழமைதான். இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் ஆதங்கம் என்னவென்றால் எவ்வளவோ இன்னற்பட ,துயரப்பட
தங்களுக்கு ஆதரவாக இந்த கலைஎர்கள் குரல் தன்னும் கொடுக்கவில்லயே என்பதுதான்.

தொடரும்

Sunday, May 16, 2004

ஆகா!! கிளம்பிட்டேன் அய்யா!!! கிளம்பிட்டேன்!!!!

எனது வலைப்பதிவை தொடங்கியுள்ளேன்.எனது மனவெளி எல்லாவற்றையும் தொட்டுச்செல்லும். புயலும் வீசும்,தென்றலும் தவழும்
மொத்தத்தில் எல்லாமே வரும்.

அன்புடன்,உங்கள்

கரிகாலன்