இந்த செய்தியை படிக்கேக்க எனக்கு சின்ன வயதிலை படிச்ச "சீச்சீ இந்தப்
பழம் புளிக்கும்" எண்ட நரியின் கதைதான் ஞாபகம் வருது பாருங்கோ.
இந்தப்பழம் நரிக்கு புளிக்கதொடங்க நரி இப்ப புது பழத்துக்கு ஆசைப்படுது
எண்டெல்லோ செய்தி வருது.சரி பாப்பம் அந்தப் பழம் நரிக்கு இனிக்குமோ
புளிக்குமோ எண்டு.
செய்தி இதுதான் நீங்களும் படிச்சு பாருங்கோ.
இந்திய கூறுவதற்காக ஒற்றையாட்சிக்கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்க ஹெல உறுமய முட்டாள்களின் கட்சியல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்தியா கூறுவது போன்று நாம் நடப்பதற்கு இலங்கை, இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனையும், இலங்கை தொடர்பான அரசியல் முடிவுகளை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சி முறையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற தனது கொள்கையில் இருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ விலகுவாரே அனால் மறுகணமே அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Tuesday, January 03, 2006
Monday, December 26, 2005
இந்திய தூதரகத்தின் முன் மறியல் போராட்டம்?
இந்திய வம்சாவளி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் முன் மறியற்போராட்டம் - ரி.சென்னன்.
இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.
இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.
இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
சங்கதி.
இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.
இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.
இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
சங்கதி.
Wednesday, December 21, 2005
இந்தியப்பிரதமருக்கு வேண்டுகோள்
பலாலி விமான தளம்: இந்திய பிரதமருக்கு இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள்!
சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:
சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.
இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.
எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.
சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.
அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.
இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.
இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.
நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:
சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.
இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.
எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.
சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.
அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.
இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.
இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.
நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 07, 2005
காலம் வரும்......
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி.
கடந்த காலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்ட போது புலிகள் சொன்னார்கள் இது அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் வேலை என்று.
அரசு சொன்னது இது கருணா தரப்பு வேலை தமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று.கண்காணிப்பு குழு சொன்னது இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று.அப்போது ஏறியது புலிகளின் பி.பி
அப்படியே அந்த நிகழ்வுகள் யாழப்பாணம் நோக்கி நகர்ந்து தமிழ் இன உணர்வாளர்கள் கொல்லப்பட பதிலடியாக இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற அரசு சொல்கிறது புலிகள் தான் இச் சம்பவங்களுக்கு காரணம் என்று.புலிகள்சொல்கிறார்கள் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று. போர் நிறுத்த கண்காணிப்புகுழு சொல்கிறது இந்த தாக்குதல்கள் புலிகளால் செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று.
இப்போது ஏறிக்கொண்டிருப்பது அரசின் பி.பி
சும்மாவா சொன்னார்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று.
கடந்த காலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்ட போது புலிகள் சொன்னார்கள் இது அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் வேலை என்று.
அரசு சொன்னது இது கருணா தரப்பு வேலை தமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று.கண்காணிப்பு குழு சொன்னது இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று.அப்போது ஏறியது புலிகளின் பி.பி
அப்படியே அந்த நிகழ்வுகள் யாழப்பாணம் நோக்கி நகர்ந்து தமிழ் இன உணர்வாளர்கள் கொல்லப்பட பதிலடியாக இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற அரசு சொல்கிறது புலிகள் தான் இச் சம்பவங்களுக்கு காரணம் என்று.புலிகள்சொல்கிறார்கள் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று. போர் நிறுத்த கண்காணிப்புகுழு சொல்கிறது இந்த தாக்குதல்கள் புலிகளால் செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று.
இப்போது ஏறிக்கொண்டிருப்பது அரசின் பி.பி
சும்மாவா சொன்னார்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று.
Sunday, November 27, 2005
தேர்தல் பகிஷ்கரிப்பு!
சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட்டுள்ள தேர்தல் பகிஷ்கரிப்பு
* தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இனவாதக் கோஷத்தை சற்று அடக்கி
வாசிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஆளும் தரப்புக் கட்சிகள்!
ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழ்த் தேசம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ, சிறிய பெரும்பான்மையினால் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அணியினர் இனவாத அரசியலை முன்வைத்த அணியினராக இருந்தமையினால், தமிழ்த் தேசத்தின் பகிஷ்கரிப்பு காரணமாகத்தான் வெற்றியடைந்தோமென வெளியில் கூறுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தங்கள் இனவாதக் கோஷங்களைச் சற்று அடக்கியே வாசிக்கின்றார்கள் ஜே.வி.பி.யினர்.முழுமையாகவே மௌனமடைந்துவிட்டனர் போலவே தெரிகின்றது. புலிகள்-ஐ.தே.க. கூட்டுப் பற்றிக் கற்பனைக் கதைகளையெல்லாம் சிருஷ்டித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறு பக்கத்தில் வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையொப்பமிட்டுத் தருமென நினைத்து ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க அணியினர், கோபம் உச்சந்தலைக்கேறிய நிலையில் ஏதோவெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தனித்துப் போட்டியிடவில்லை. அவருக்குப் பின்னால் சர்வதேச ஆதிக்கச் சக்திகள் அனைத்தும் நின்றன. இந்திய-அமெரிக்க உறவின் காரணமாக இந்தியாவும் இறுதி நேரத்தில் ரணிலுக்குப் பின்னால் நின்றதாகவே செய்திகள் வந்தன.
கத்தோலிக்க மதபீடம் உட்பட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் பின்னால் நின்றன. இவையனைத்தும் தமிழ்த் தரப்பிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தும் தமிழ்த் தேசம் தனது கொள்கை வழிநின்று மாறவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பகிஷ்கரித்தன. விடுவிக்கப்படாத பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களிலிருந்தும் கூட பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர். கிழக்கில் பகிஷ்கரிப்புப் பிரசாரம் குறைவாகவிருந்தது. அதேவேளை, அழுத்தங்கள் வலிமையாகவிருந்தன. ஆனாலும், பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர்.
தமிழ்த் தேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியழுத்தங்கள் காரணமாகவும், தமிழ்த் தேசப் போராட்டத்தினை அவர்கள் பார்க்கும் பார்வைக் கோளாறு காரணமாகவும் பகிஷ்கரிப்பினைக் கைவிடுமாறு கோரியிருந்தனர்.ஆனால், பகிஷ்கரிப்புப் போராட்டம் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முயலவில்லை. இதனால், குடாநாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மன்னாரில் சிறியளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
கத்தோலிக்க ஆயர்களின் இந்தக் கருத்து பற்றி ஒரு சைவ முக்கியஸ்தர் என்னுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக வாதாடினார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் உட்பட தமிழ்த் தேசிய சக்திகள் கத்தோலிக்க ஆயர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தயங்குகின்றனரென்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அவர்கள் செய்தால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், சைவப் பிரமுகரொருவர் இவ்வாறு செய்தால் எல்லோரும் திரண்டு தாக்க வந்துவிடுவார்களென்ற வகையில் அவரது கருத்துக்கள் சென்றன. தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் சைவ-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றியே வாதம் சென்றதால் ஒரு கட்டத்தில் நான் தொலைபேசி உரையாடலைத் துண்டித்துவிட்டேன்.
கத்தோலிக்க ஆயர்கள் இந்த விடயங்களைப்பற்றிக் கவனத்திலெடுக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.
கத்தோலிக்க ஆயர்களென்றாலும் சரி, சைவ மதப் பெரியார்களென்றாலும் சரி தமிழ்த் தேசம் சம்பந்தமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானது. கிழக்கிலேற்பட்ட பிரதேசப் பிரச்சினைகள் போல மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவித்துவிடக் கூடாது. இந்த அக முரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நலனுக்குச் கீழ்ப்படுத்தி நட்பு முறையில் தீர்த்துக் கொள்வதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும்.பிரதேச முரண்பாட்டின் விளைநிலமாக மட்டக்களப்பும்,மத முரண்பாட்டின் விளைநிலமாக மன்னாரும், சாதி முரண்பாட்டின் விளைநிலமாக குடாநாடும் இன்று இருக்கின்றன. இவ்வக முரண்பாடுகள் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பினையழிக்கும் வெடி குண்டுகள். தமிழ்த் தேசிய சக்திகள் இவ்வெடி குண்டுகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பற்றிச் சிறிதும் அக்கறையற்று இவற்றினை மட்டும் தூக்கிப் பிடிப்பவர்கள் இன்றும் நம் மத்தியிலிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் இம் முரண்பாடுகளெதுவும் இல்லையென நாம் பூசி மெழுகவும் கூடாது. கோட்பாட்டு ரீதியாக இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அடித்தளங்களை நாம் கண்டாக வேண்டும். அதிகாரம் வந்ததன் பின்னர் இவற்றிற்கிடையேயுள்ள சமமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு முன்வரலாம்.தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகள் தமிழ்த் தேசத்தின் இராணுவ வலிமை பற்றித் தற்போது அதிகம் ஆய்வு செய்வதில்லை.தமிழ்ச் சமூகவமைப்புப் பற்றியும், அங்கு வலிமையாகவிருக்கின்ற அக முரண்பாடுகள் பற்றியுமே ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டு அதற்கூடாக நுழைந்து தமிழ்த் தேசிய அரசியல் மையத்தை அழிக்கப் பார்க்கின்றனர். அக முரண்பாடுகள் பற்றிய குரல்களனைத்தும் யாழ்-சைவ-வேளாளப் பிரிவினரையே நோக்கியிருப்பதால், இது விடயத்தில் முன்கையெடுத்துச் செயற்படும் பொறுப்பு இவர்களுக்கேயுண்டு. தமிழ்த் தேசிய அரசியற் தலைமையினால் மட்டுமே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பகிஷ்கரிப்புப் பற்றிய ஆயர்களின் கருத்துக்கள், நான் முன்னைய கட்டுரையில் கூறியது போல இலங்கைத் தேசியத்திலிருந்து விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்டவொன்றுதான். இலங்கைத் தேசியத்திற்குள் நின்று விடயங்களைப் பார்ப்பதென்பது ஐம்பதுகளிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் முன்வைக்கப்பட்ட அரசியல். அது காலாவதியாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்று தமிழ்த் தேசம் இலங்கைத் தேசியத்திற்கு வெளியே நின்றுதான் விடயங்களைப் பார்க்கின்றது.
தமிழ் மக்கள் தற்போது தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை.மாறாக, தமிழர்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமஷ்டி கூட தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையல்ல. அது சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கேற்ற சமஷ்டி முறையினைச் சிபார்சு செய்தால், அதனைப் பரிசீலிக்கலாமென்ற நிலையில்தான் தமிழ்த் தேசம் இருக்கின்றது. அதன் பின்னர்தான் நாம் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பது பற்றி யோசிக்கலாம். தற்போது எம்மால் தமிழர்களாக மட்டுமேயிருக்க முடியும்.
நாம் தமிழர்களாக மட்டும் இருப்பதற்காக இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து ஒவ்வொன்றாகக் கழன்று வருகின்றோம். தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்,தனியான நிர்வாகத்துறை, தனியான நீதித்துறை, தனியான காவல்துறை, தனியான முப்படைகளென்பன இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து கழன்று வந்த அம்சங்கள்தான்.
ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பையும் இக்கழன்று வரும் அம்சங்களிலொன்றாகவே பார்க்க வேண்டும். பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கோட்பாட்டுப் பின்னணி இதுதான்.
தமிழர்கள் இலங்கையரென்ற அடையாளத்திற்கு மீளவும் செல்வது சிங்கள தேசத்தின் பணியேயொழிய எமது பணியல்ல. நாம் அதற்காக உழைத்துக் களைத்துத் தான் தமிழர்களாக மட்டுமிருக்க முடிவெடுத்திருக்கின்றோம். எனவே, சிங்கள தேசம் செய்ய வேண்டிய பணியினை தமிழ்த் தேசம் தன் தலையில் சுமந்துகொண்டு திரியக்கூடாது. ஆயர்கள் அந்தச் சுமையினைத் தாங்கள் சுமக்க முற்படுகின்றனர். ஏதாவது தகுந்த உத்தரவாதங்களுடன் சுமக்க முற்பட்டாலும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், எந்தவித உத்தரவாதங்களுமில்லாமல் சுமக்க முற்படுகின்றனர். இந்தப் போக்கு ஆயர்களிடம் மட்டுமிருக்கின்றதெனக் கூறிவிட முடியாது. வேறு பல, கொழும்பு நலனைத் தளமாகக் கொண்ட தமிழர்களிடமும் ஐ.தே.கட்சி தொடர்பாகப் பிரமையிலுள்ளவர்களிடமும் இருக்கின்றது. பகிஷ்கரிப்புப் போராட்டம் இது பற்றிய பாடத்தினைத் தமிழ்த் தேசத்திற்குத் தந்திருக்கின்றதென்றே நினைக்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரும் அவரைச் சுற்றியுள்ள உள்நாட்டு,சர்வதேசக் கூட்டமும், அவர் ஜனாதிபதியாக வருவதை விரும்பிய அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் மக்கள் வாக்களிப்பதை தடைசெய்துவிட்டனரெனக் கூக்குரலிடுகின்றனர். முன்னைய தேர்தலில் கள்ள வாக்குப் போடப்பட்டதெனக் கூறினர். இத் தேர்தலில் வன்முறை மூலம் வாக்களிப்பதைத் தடுத்துள்ளனரெனக் கூறுகின்றனர். மக்கள் ஒரு போராட்டத்தினை நடாத்தும்போது உதிரிகள் அதனைக் குழப்ப முற்பட்டால், குறைந்தளவிலான வன்முறையைப் பயன்படுத்துவது உலகப் போராட்டங்களில் வழக்கம். அவ்வாறான சில வன்முறைகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதால் போராட்டத்தின் அரசியல் மறைந்துவிடுமென எவரும் நினைத்துவிடக் கூடாது.
இந்தக் கூக்குரலில் அதிகமீடுபடும் கூட்டம் ரணிலுக்குப் பின்னால் நின்ற ஐரோப்பிய அமெரிக்க முகாம்தான். அந்தக் கூட்டம் ரணிலுக்கல்ல, தமக்களிக்கப்பட்ட சவாலாகவே இப்பகிஷ்கரிப்பினைக் கருதுகின்றது. வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையெழுத்திட்டுத் தருமெனக் கனவு கண்டது ரணில் மட்டுமல்ல, இவர்களும்தான். தங்களுடைய அழுத்தங்களுக்கெல்லாம் ஒரு தேசமும், அதன் போராட்டமும் பணிந்துவிடுமென நினைத்தவர்கள் கோபம் உச்ச நிலைக்கேறிய நிலையில் புலம்பத் தொடங்கியுள்ளனர். எந்தத் தேசமும் இந்தச் சக்திகளுக்காகத் தன்னுடைய போராட்டத்தினைக் கைவிட்டது கிடையாது. வேண்டுமானால்,தற்காலிகமாகத் தோல்விகளைத் தழுவியிருக்கலாம். நிரந்தரத் தோல்வியை எந்தத் தேசமும் அடைந்துவிட முடியாது.
இந்தச் சக்திகளுக்குத் தமிழ்த் தேசம் "எம்மால் எதையும் செய்ய முடியும்" என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. எங்களை ஒடுக்க நினைத்தால், நீங்கள் இங்கு வர முடியாதென்பதைக் காட்டியிருக்கின்றது. இந்தியாவும் முதலில் இவ்வாறு நினைத்துத் தமிழ்த் தேசத்தை ஒடுக்கப் பார்த்தது. இன்று இனப்பிரச்சினைக்குள், தான் நுழைய வழியில்லாமல் வழிதேடிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை ஒடுக்க நினைத்த இந்தியா இன்று முழு இலங்கையையுமே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய முகாம் தள்ளப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசம் பகிஷ்கரிப்பென்ற பெயரில் எறிந்தது சிறிய கல்தான்.ஆனால், அக்கல் சர்வதேசச் சக்திகள் உட்பட ஸ்ரீலங்காவின் அனைத்து அணிகளின் நிகழ்ச்சி நிரல்களையும் குழப்பி விட்டிருக்கின்றது.
மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமேற்பட்டிருக்கின்றது. அது பண்டாரநாயக்க குடும்ப அணியாகவும், மகிந்த அணியாகவும் பிளவுபட்டிருக்கின்றது. அனுராவுக்கு முன்னர் கூறியதுபோல பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு ஒரு போட்டியாளராக இருக்கக் கூடாதென்பதற்காகவும் பாரம்பரிய இனவாதியான இரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக்கப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி. யினர் மிகவும் ஆடிப்போயுள்ளனர்.தாங்கள் வீணாகச் சிரமமெடுத்து உழைத்திருக்கின்றோமென அவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேசச் சக்திகள் ஐ.தே.கட்சியுடனிணைந்து சமாதானச் செயற்பாட்டினை முன்னெடுங்களென மகிந்தவிற்கு அழுத்தங் கொடுத்து வருவதால் ஜே.வி.பி.யினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் புலி ஐ.தே.க. கூட்டு என்ற பிரசாரம் நான் முன்னர் கூறியது போல கண்ணுக்கு முன்னாலேயே பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. இனிமேல் அவர்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை ஒதுக்க முற்படுவார்களென்பது அவர்களுக்குத் தற்போது கொஞ்சங் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.
சர்வதேசச் சக்திகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது தடுமாறுகின்றனர். சமாதானப் பொறிக்குள் தமிழ்த் தரப்பினை மாட்டி பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். பகிஷ்கரிப்பு அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுப்பை முழுமையாகக் குழப்பியுள்ளது. இன்று மகிந்தவினைப் பயன்படுத்தி அதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தச் செயற்பாடு இலகுவானதாகவிருக்கப் போவதில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தேசம் தனது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான காலம் கனிந்து வருகின்றதென்றே நினைக்கின்றேன்.
நன்றி:- சுப்பிரமணியம்,தினக்குரல்
* தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இனவாதக் கோஷத்தை சற்று அடக்கி
வாசிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஆளும் தரப்புக் கட்சிகள்!
ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழ்த் தேசம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ, சிறிய பெரும்பான்மையினால் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அணியினர் இனவாத அரசியலை முன்வைத்த அணியினராக இருந்தமையினால், தமிழ்த் தேசத்தின் பகிஷ்கரிப்பு காரணமாகத்தான் வெற்றியடைந்தோமென வெளியில் கூறுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தங்கள் இனவாதக் கோஷங்களைச் சற்று அடக்கியே வாசிக்கின்றார்கள் ஜே.வி.பி.யினர்.முழுமையாகவே மௌனமடைந்துவிட்டனர் போலவே தெரிகின்றது. புலிகள்-ஐ.தே.க. கூட்டுப் பற்றிக் கற்பனைக் கதைகளையெல்லாம் சிருஷ்டித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறு பக்கத்தில் வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையொப்பமிட்டுத் தருமென நினைத்து ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க அணியினர், கோபம் உச்சந்தலைக்கேறிய நிலையில் ஏதோவெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தனித்துப் போட்டியிடவில்லை. அவருக்குப் பின்னால் சர்வதேச ஆதிக்கச் சக்திகள் அனைத்தும் நின்றன. இந்திய-அமெரிக்க உறவின் காரணமாக இந்தியாவும் இறுதி நேரத்தில் ரணிலுக்குப் பின்னால் நின்றதாகவே செய்திகள் வந்தன.
கத்தோலிக்க மதபீடம் உட்பட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் பின்னால் நின்றன. இவையனைத்தும் தமிழ்த் தரப்பிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தும் தமிழ்த் தேசம் தனது கொள்கை வழிநின்று மாறவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பகிஷ்கரித்தன. விடுவிக்கப்படாத பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களிலிருந்தும் கூட பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர். கிழக்கில் பகிஷ்கரிப்புப் பிரசாரம் குறைவாகவிருந்தது. அதேவேளை, அழுத்தங்கள் வலிமையாகவிருந்தன. ஆனாலும், பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர்.
தமிழ்த் தேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியழுத்தங்கள் காரணமாகவும், தமிழ்த் தேசப் போராட்டத்தினை அவர்கள் பார்க்கும் பார்வைக் கோளாறு காரணமாகவும் பகிஷ்கரிப்பினைக் கைவிடுமாறு கோரியிருந்தனர்.ஆனால், பகிஷ்கரிப்புப் போராட்டம் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முயலவில்லை. இதனால், குடாநாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மன்னாரில் சிறியளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
கத்தோலிக்க ஆயர்களின் இந்தக் கருத்து பற்றி ஒரு சைவ முக்கியஸ்தர் என்னுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக வாதாடினார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் உட்பட தமிழ்த் தேசிய சக்திகள் கத்தோலிக்க ஆயர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தயங்குகின்றனரென்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அவர்கள் செய்தால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், சைவப் பிரமுகரொருவர் இவ்வாறு செய்தால் எல்லோரும் திரண்டு தாக்க வந்துவிடுவார்களென்ற வகையில் அவரது கருத்துக்கள் சென்றன. தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் சைவ-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றியே வாதம் சென்றதால் ஒரு கட்டத்தில் நான் தொலைபேசி உரையாடலைத் துண்டித்துவிட்டேன்.
கத்தோலிக்க ஆயர்கள் இந்த விடயங்களைப்பற்றிக் கவனத்திலெடுக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.
கத்தோலிக்க ஆயர்களென்றாலும் சரி, சைவ மதப் பெரியார்களென்றாலும் சரி தமிழ்த் தேசம் சம்பந்தமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானது. கிழக்கிலேற்பட்ட பிரதேசப் பிரச்சினைகள் போல மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவித்துவிடக் கூடாது. இந்த அக முரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நலனுக்குச் கீழ்ப்படுத்தி நட்பு முறையில் தீர்த்துக் கொள்வதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும்.பிரதேச முரண்பாட்டின் விளைநிலமாக மட்டக்களப்பும்,மத முரண்பாட்டின் விளைநிலமாக மன்னாரும், சாதி முரண்பாட்டின் விளைநிலமாக குடாநாடும் இன்று இருக்கின்றன. இவ்வக முரண்பாடுகள் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பினையழிக்கும் வெடி குண்டுகள். தமிழ்த் தேசிய சக்திகள் இவ்வெடி குண்டுகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பற்றிச் சிறிதும் அக்கறையற்று இவற்றினை மட்டும் தூக்கிப் பிடிப்பவர்கள் இன்றும் நம் மத்தியிலிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் இம் முரண்பாடுகளெதுவும் இல்லையென நாம் பூசி மெழுகவும் கூடாது. கோட்பாட்டு ரீதியாக இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அடித்தளங்களை நாம் கண்டாக வேண்டும். அதிகாரம் வந்ததன் பின்னர் இவற்றிற்கிடையேயுள்ள சமமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு முன்வரலாம்.தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகள் தமிழ்த் தேசத்தின் இராணுவ வலிமை பற்றித் தற்போது அதிகம் ஆய்வு செய்வதில்லை.தமிழ்ச் சமூகவமைப்புப் பற்றியும், அங்கு வலிமையாகவிருக்கின்ற அக முரண்பாடுகள் பற்றியுமே ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டு அதற்கூடாக நுழைந்து தமிழ்த் தேசிய அரசியல் மையத்தை அழிக்கப் பார்க்கின்றனர். அக முரண்பாடுகள் பற்றிய குரல்களனைத்தும் யாழ்-சைவ-வேளாளப் பிரிவினரையே நோக்கியிருப்பதால், இது விடயத்தில் முன்கையெடுத்துச் செயற்படும் பொறுப்பு இவர்களுக்கேயுண்டு. தமிழ்த் தேசிய அரசியற் தலைமையினால் மட்டுமே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பகிஷ்கரிப்புப் பற்றிய ஆயர்களின் கருத்துக்கள், நான் முன்னைய கட்டுரையில் கூறியது போல இலங்கைத் தேசியத்திலிருந்து விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்டவொன்றுதான். இலங்கைத் தேசியத்திற்குள் நின்று விடயங்களைப் பார்ப்பதென்பது ஐம்பதுகளிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் முன்வைக்கப்பட்ட அரசியல். அது காலாவதியாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்று தமிழ்த் தேசம் இலங்கைத் தேசியத்திற்கு வெளியே நின்றுதான் விடயங்களைப் பார்க்கின்றது.
தமிழ் மக்கள் தற்போது தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை.மாறாக, தமிழர்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமஷ்டி கூட தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையல்ல. அது சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கேற்ற சமஷ்டி முறையினைச் சிபார்சு செய்தால், அதனைப் பரிசீலிக்கலாமென்ற நிலையில்தான் தமிழ்த் தேசம் இருக்கின்றது. அதன் பின்னர்தான் நாம் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பது பற்றி யோசிக்கலாம். தற்போது எம்மால் தமிழர்களாக மட்டுமேயிருக்க முடியும்.
நாம் தமிழர்களாக மட்டும் இருப்பதற்காக இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து ஒவ்வொன்றாகக் கழன்று வருகின்றோம். தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்,தனியான நிர்வாகத்துறை, தனியான நீதித்துறை, தனியான காவல்துறை, தனியான முப்படைகளென்பன இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து கழன்று வந்த அம்சங்கள்தான்.
ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பையும் இக்கழன்று வரும் அம்சங்களிலொன்றாகவே பார்க்க வேண்டும். பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கோட்பாட்டுப் பின்னணி இதுதான்.
தமிழர்கள் இலங்கையரென்ற அடையாளத்திற்கு மீளவும் செல்வது சிங்கள தேசத்தின் பணியேயொழிய எமது பணியல்ல. நாம் அதற்காக உழைத்துக் களைத்துத் தான் தமிழர்களாக மட்டுமிருக்க முடிவெடுத்திருக்கின்றோம். எனவே, சிங்கள தேசம் செய்ய வேண்டிய பணியினை தமிழ்த் தேசம் தன் தலையில் சுமந்துகொண்டு திரியக்கூடாது. ஆயர்கள் அந்தச் சுமையினைத் தாங்கள் சுமக்க முற்படுகின்றனர். ஏதாவது தகுந்த உத்தரவாதங்களுடன் சுமக்க முற்பட்டாலும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், எந்தவித உத்தரவாதங்களுமில்லாமல் சுமக்க முற்படுகின்றனர். இந்தப் போக்கு ஆயர்களிடம் மட்டுமிருக்கின்றதெனக் கூறிவிட முடியாது. வேறு பல, கொழும்பு நலனைத் தளமாகக் கொண்ட தமிழர்களிடமும் ஐ.தே.கட்சி தொடர்பாகப் பிரமையிலுள்ளவர்களிடமும் இருக்கின்றது. பகிஷ்கரிப்புப் போராட்டம் இது பற்றிய பாடத்தினைத் தமிழ்த் தேசத்திற்குத் தந்திருக்கின்றதென்றே நினைக்கின்றேன்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரும் அவரைச் சுற்றியுள்ள உள்நாட்டு,சர்வதேசக் கூட்டமும், அவர் ஜனாதிபதியாக வருவதை விரும்பிய அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் மக்கள் வாக்களிப்பதை தடைசெய்துவிட்டனரெனக் கூக்குரலிடுகின்றனர். முன்னைய தேர்தலில் கள்ள வாக்குப் போடப்பட்டதெனக் கூறினர். இத் தேர்தலில் வன்முறை மூலம் வாக்களிப்பதைத் தடுத்துள்ளனரெனக் கூறுகின்றனர். மக்கள் ஒரு போராட்டத்தினை நடாத்தும்போது உதிரிகள் அதனைக் குழப்ப முற்பட்டால், குறைந்தளவிலான வன்முறையைப் பயன்படுத்துவது உலகப் போராட்டங்களில் வழக்கம். அவ்வாறான சில வன்முறைகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதால் போராட்டத்தின் அரசியல் மறைந்துவிடுமென எவரும் நினைத்துவிடக் கூடாது.
இந்தக் கூக்குரலில் அதிகமீடுபடும் கூட்டம் ரணிலுக்குப் பின்னால் நின்ற ஐரோப்பிய அமெரிக்க முகாம்தான். அந்தக் கூட்டம் ரணிலுக்கல்ல, தமக்களிக்கப்பட்ட சவாலாகவே இப்பகிஷ்கரிப்பினைக் கருதுகின்றது. வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையெழுத்திட்டுத் தருமெனக் கனவு கண்டது ரணில் மட்டுமல்ல, இவர்களும்தான். தங்களுடைய அழுத்தங்களுக்கெல்லாம் ஒரு தேசமும், அதன் போராட்டமும் பணிந்துவிடுமென நினைத்தவர்கள் கோபம் உச்ச நிலைக்கேறிய நிலையில் புலம்பத் தொடங்கியுள்ளனர். எந்தத் தேசமும் இந்தச் சக்திகளுக்காகத் தன்னுடைய போராட்டத்தினைக் கைவிட்டது கிடையாது. வேண்டுமானால்,தற்காலிகமாகத் தோல்விகளைத் தழுவியிருக்கலாம். நிரந்தரத் தோல்வியை எந்தத் தேசமும் அடைந்துவிட முடியாது.
இந்தச் சக்திகளுக்குத் தமிழ்த் தேசம் "எம்மால் எதையும் செய்ய முடியும்" என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. எங்களை ஒடுக்க நினைத்தால், நீங்கள் இங்கு வர முடியாதென்பதைக் காட்டியிருக்கின்றது. இந்தியாவும் முதலில் இவ்வாறு நினைத்துத் தமிழ்த் தேசத்தை ஒடுக்கப் பார்த்தது. இன்று இனப்பிரச்சினைக்குள், தான் நுழைய வழியில்லாமல் வழிதேடிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை ஒடுக்க நினைத்த இந்தியா இன்று முழு இலங்கையையுமே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய முகாம் தள்ளப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசம் பகிஷ்கரிப்பென்ற பெயரில் எறிந்தது சிறிய கல்தான்.ஆனால், அக்கல் சர்வதேசச் சக்திகள் உட்பட ஸ்ரீலங்காவின் அனைத்து அணிகளின் நிகழ்ச்சி நிரல்களையும் குழப்பி விட்டிருக்கின்றது.
மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமேற்பட்டிருக்கின்றது. அது பண்டாரநாயக்க குடும்ப அணியாகவும், மகிந்த அணியாகவும் பிளவுபட்டிருக்கின்றது. அனுராவுக்கு முன்னர் கூறியதுபோல பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு ஒரு போட்டியாளராக இருக்கக் கூடாதென்பதற்காகவும் பாரம்பரிய இனவாதியான இரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக்கப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி. யினர் மிகவும் ஆடிப்போயுள்ளனர்.தாங்கள் வீணாகச் சிரமமெடுத்து உழைத்திருக்கின்றோமென அவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேசச் சக்திகள் ஐ.தே.கட்சியுடனிணைந்து சமாதானச் செயற்பாட்டினை முன்னெடுங்களென மகிந்தவிற்கு அழுத்தங் கொடுத்து வருவதால் ஜே.வி.பி.யினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் புலி ஐ.தே.க. கூட்டு என்ற பிரசாரம் நான் முன்னர் கூறியது போல கண்ணுக்கு முன்னாலேயே பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. இனிமேல் அவர்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை ஒதுக்க முற்படுவார்களென்பது அவர்களுக்குத் தற்போது கொஞ்சங் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.
சர்வதேசச் சக்திகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது தடுமாறுகின்றனர். சமாதானப் பொறிக்குள் தமிழ்த் தரப்பினை மாட்டி பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். பகிஷ்கரிப்பு அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுப்பை முழுமையாகக் குழப்பியுள்ளது. இன்று மகிந்தவினைப் பயன்படுத்தி அதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தச் செயற்பாடு இலகுவானதாகவிருக்கப் போவதில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தேசம் தனது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான காலம் கனிந்து வருகின்றதென்றே நினைக்கின்றேன்.
நன்றி:- சுப்பிரமணியம்,தினக்குரல்
Thursday, November 24, 2005
கருத்துக்களுக்கான"கருத்து" இணையத்தளம்
கருத்துரிமைக்காக "கருத்து" அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.கடந்த நவம்பர் 13 ந்திகதி தொடக்கிவைக்கப்பட்ட கருத்து என்ற அமைப்பும் அதன் இணையத்தளமும் தமிழ்நாட்டில் யாரும் சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லலாம் என்ற நோக்கிலே உருவாக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் கவிஞர் கனிமொழி.கருத்துரிமைக்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் யாரும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தமதுகருத்துக்களை சொல்லலாம்.குஸ்பு,சுகாசினி பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த் நேரத்தில் இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பார்ப்போம் கருத்து அமைப்பின் எதிர்காலம் எப்படிஇருக்கப்போகின்றது என்பதை.கருத்தினை எதிர் கொள்ளப்போகின்றவர்கள் "கருத்தினை" கருத்துக்களால் எதிர்கொள்வார்களா அல்லது கத்தி துடைப்பம் செருப்புக்களால் எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதை.ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது தற்போது தமிழனுக்கு இல்லாமல் போய்வெகு காலம் ஆகிவிட்டதே.சரி நீங்களும் கருத்து கொல்லப்போறீங்களா?இங்கேயே கருத்துக்கள் சொல்லி அடிச்சுக்கொள்வது போதாதா.இது எதற்கு வேறு என்கிறீர்களா?ஒரே இடம் போர் அடிக்கும் அதுக்குதான் புது இடம்.
தளம் இதுதான்.
http://www.karuthu.com
நேரடியாக கருத்துகளுக்கு செல்ல
http://www.karuthu.com/forum/forum_topics.asp?FID=4
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் கவிஞர் கனிமொழி.கருத்துரிமைக்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் யாரும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தமதுகருத்துக்களை சொல்லலாம்.குஸ்பு,சுகாசினி பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த் நேரத்தில் இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பார்ப்போம் கருத்து அமைப்பின் எதிர்காலம் எப்படிஇருக்கப்போகின்றது என்பதை.கருத்தினை எதிர் கொள்ளப்போகின்றவர்கள் "கருத்தினை" கருத்துக்களால் எதிர்கொள்வார்களா அல்லது கத்தி துடைப்பம் செருப்புக்களால் எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதை.ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது தற்போது தமிழனுக்கு இல்லாமல் போய்வெகு காலம் ஆகிவிட்டதே.சரி நீங்களும் கருத்து கொல்லப்போறீங்களா?இங்கேயே கருத்துக்கள் சொல்லி அடிச்சுக்கொள்வது போதாதா.இது எதற்கு வேறு என்கிறீர்களா?ஒரே இடம் போர் அடிக்கும் அதுக்குதான் புது இடம்.
தளம் இதுதான்.
http://www.karuthu.com
நேரடியாக கருத்துகளுக்கு செல்ல
http://www.karuthu.com/forum/forum_topics.asp?FID=4
Wednesday, November 23, 2005
தடுமாறும் தமிழோசை?!
தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்.
அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.
அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.
மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்
மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது.
(''……Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." . நன்றி: சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005 )
அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.
இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? 'இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?
தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?
முன்னொரு காலத்தில் சங்கர
மூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.
பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.
உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?
''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்?
வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.
அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது.
'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர்
இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.
ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.
தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.
அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?
இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?
இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.
திருமகள் (ரஷ்யா)
அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.
அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.
மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்
மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது.
(''……Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." . நன்றி: சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005 )
அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.
இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? 'இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?
தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?
முன்னொரு காலத்தில் சங்கர
மூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.
பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.
உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?
''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்?
வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.
அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது.
'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர்
இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.
ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.
தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.
அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?
இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?
இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.
திருமகள் (ரஷ்யா)
Subscribe to:
Posts (Atom)