"மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்''. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.
''தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்''.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.
''தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்..'' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே 'பொடா நாயகன்' வைகோ பேசியது.
எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.
திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.
ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.
வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.
அவரது கட்சியின் கொள்கை வரிகளான 'லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை' என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.
கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்....................................................................
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://thatstamil.oneindia.in/news/2006/03/05/plan.html
நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்
Sunday, March 05, 2006
Tuesday, February 28, 2006
நாட்காட்டியில் கண்ட நல்வாசகங்கள்.
நாட்காட்டியில் நாம் நாட்களை பார்ப்பதற்கும் மற்றும் நல்ல நேரம் பிற காரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.சில நாட்காட்டிகளில் சில பல நல்ல வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.இந்த அவசர உலகில் அதை நின்று நிதானித்து படிப்பதற்கு கூட முடிவதில்லை.நானும் இங்கு அவற்றை பதிய வேண்டும் என்று நினைத்து பல நாட்களாக முடியவில்லை. இன்று அவற்றில் சிலவற்றை தருகிறேன்.உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும் கூட.
மனைவி பற்றி சில வாசகங்கள்.
மனைவிக்கு உலகமாய் இரு: ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்து விடாதே!
மனைவி உனக்காக எதையும் இழப்பாள், எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
நெஞ்சில் வஞ்சகம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப்பார்,உன் தெய்வம் பூஜை அறையில் இல்லை,படுக்கை அறையில் தான்.
ஆணுக்கு கிடைக்கும் சீதனம் உழைத்துப் பெற முடியாத் பெண்ணின் குண நலன்களே தவிர, உழைத்துச் சம்பாதிக்கும் காசு பணம் அல்ல.
அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு:அதை புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு.
மனைவி பற்றி சில வாசகங்கள்.
மனைவிக்கு உலகமாய் இரு: ஆனால் மனைவிதான் உலகம் என்று இருந்து விடாதே!
மனைவி உனக்காக எதையும் இழப்பாள், எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
நெஞ்சில் வஞ்சகம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப்பார்,உன் தெய்வம் பூஜை அறையில் இல்லை,படுக்கை அறையில் தான்.
ஆணுக்கு கிடைக்கும் சீதனம் உழைத்துப் பெற முடியாத் பெண்ணின் குண நலன்களே தவிர, உழைத்துச் சம்பாதிக்கும் காசு பணம் அல்ல.
அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு:அதை புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு.
Friday, February 03, 2006
புனர்வாழ்வு கழகம்- ஒரு தகவல்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு
வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் உத்தியோகத்தினர் சிலர் கடத்தப்பட்டமை தெரிந்ததே.அவர்கள் தொடர்பான செய்தியை அறிந்து கொள்ள http://www.freengoworkers.blogspot.com/ செல்லவும்.
வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் உத்தியோகத்தினர் சிலர் கடத்தப்பட்டமை தெரிந்ததே.அவர்கள் தொடர்பான செய்தியை அறிந்து கொள்ள http://www.freengoworkers.blogspot.com/ செல்லவும்.
Sunday, January 29, 2006
மும்பையில் காத்திருந்த பயங்கரம்!
*பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள்.
* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள "றோ" புலனாய்வு அதிகாரிகள்...
* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'
மிகுதி விபரங்களைப் படிக்க இங்கு செல்லவும்.
http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/29/Article-9.htm
* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள "றோ" புலனாய்வு அதிகாரிகள்...
* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'
மிகுதி விபரங்களைப் படிக்க இங்கு செல்லவும்.
http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/29/Article-9.htm
Wednesday, January 18, 2006
Tuesday, January 03, 2006
சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்.
இந்த செய்தியை படிக்கேக்க எனக்கு சின்ன வயதிலை படிச்ச "சீச்சீ இந்தப்
பழம் புளிக்கும்" எண்ட நரியின் கதைதான் ஞாபகம் வருது பாருங்கோ.
இந்தப்பழம் நரிக்கு புளிக்கதொடங்க நரி இப்ப புது பழத்துக்கு ஆசைப்படுது
எண்டெல்லோ செய்தி வருது.சரி பாப்பம் அந்தப் பழம் நரிக்கு இனிக்குமோ
புளிக்குமோ எண்டு.
செய்தி இதுதான் நீங்களும் படிச்சு பாருங்கோ.
இந்திய கூறுவதற்காக ஒற்றையாட்சிக்கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்க ஹெல உறுமய முட்டாள்களின் கட்சியல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்தியா கூறுவது போன்று நாம் நடப்பதற்கு இலங்கை, இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனையும், இலங்கை தொடர்பான அரசியல் முடிவுகளை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சி முறையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற தனது கொள்கையில் இருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ விலகுவாரே அனால் மறுகணமே அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பழம் புளிக்கும்" எண்ட நரியின் கதைதான் ஞாபகம் வருது பாருங்கோ.
இந்தப்பழம் நரிக்கு புளிக்கதொடங்க நரி இப்ப புது பழத்துக்கு ஆசைப்படுது
எண்டெல்லோ செய்தி வருது.சரி பாப்பம் அந்தப் பழம் நரிக்கு இனிக்குமோ
புளிக்குமோ எண்டு.
செய்தி இதுதான் நீங்களும் படிச்சு பாருங்கோ.
இந்திய கூறுவதற்காக ஒற்றையாட்சிக்கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்க ஹெல உறுமய முட்டாள்களின் கட்சியல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்தியா கூறுவது போன்று நாம் நடப்பதற்கு இலங்கை, இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல என்பதனையும், இலங்கை தொடர்பான அரசியல் முடிவுகளை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சி முறையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற தனது கொள்கையில் இருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ விலகுவாரே அனால் மறுகணமே அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Monday, December 26, 2005
இந்திய தூதரகத்தின் முன் மறியல் போராட்டம்?
இந்திய வம்சாவளி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் முன் மறியற்போராட்டம் - ரி.சென்னன்.
இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.
இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.
இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
சங்கதி.
இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் தெரிவித்துள்ளார்.
இலங்கைளிலுள்ள ஓட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் மற்றும் விருப்புகள் ஆகியவற்றினை கருத்திற் கொண்டு செயற்படாத இலங்கைக்கான இந்திய தூதரகம் மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இந்திய வம்சாவளி மக்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்து முகமாக இலங்கையின் இந்திய தூதுவராலயத்தின் முன் பாரிய மறியற் போராட்டம் ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணி தலைவர் ரி.சென்னன் முன்னணியின் பணிமனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய தூதரகம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் இந்திய தூதராலயம் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அம் மக்கள் இன்று யாருமற்ற அநாதைகளாக இருந்து வருகின்றனர். அம் மக்களுக்கு குரல் கொடுக்க எவருமில்லை.
இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு இ.தொ.க மட்டுமல்ல. மேலும் பல் வேறு அமைப்புகள் மலையகத்தில் உள்ளதென்பதை இந்தியத் தூதுவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய தூதுவர் இ.தொ.கவை தவிர்ந்த எனைய இந்திய வம்சாவளி அமைப்புகளை புறக்கணித்து வருகின்றார். இப் புறக்கணிப்பு நீண்ட காலமாகவே இடம் பெற்று வருகின்றது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
சங்கதி.
Subscribe to:
Posts (Atom)