* ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின்போது மயிரிழையில் உயிர் தப்பி கரைசேரும் மீனவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைக் கடற்படையே படுகொலைகளைச் செய்கின்றதென கூறிவருகின்ற நிலையில், அவர்களின் வேதனைகளையும் உணர்வுகளையும் சீண்டிப்பார்க்கும் விதமாக இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்கப்பார்க்கின்றனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மீனவர்கள் தயாரில்லை.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டும் மத்திய அரசோ, இலங்கை அரசோ அதனை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.
இதேவேளை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பில் தமிழக அரசும் மென்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே தெரிகிறது. நெய்வேலி அனல் மின் நிலையப் பிரச்சினையின்போது தனது ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டிய தமிழக அரசு, தினமும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் மென்போக்காகவே நடந்து கொள்கின்றது.
மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடுகளையும் அரச வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களை சாந்தப்படுத்த முனையும் தமிழக அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முன்வரவில்லை.
தம்மீது இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுவதாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிநின்றபோது இந்தியக் கடற்படைத் தளபதி இப் படுகொலைகளில் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமென கூறிய கருத்து தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது, தமிழக மீனவர்களை படுகொலை செய்யவேண்டிய தேவை இலங்கைக் கடற்படைக்கு இல்லையென, இலங்கை அரசின் பேச்சாளர் போன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மீனவர்களை சினமடைய வைத்துள்ளது.
இலங்கை அரசும் இந்திய - இலங்கை நட்புறவை சீர்குலைப்பதற்காக விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் தமது கடற்படை தமிழக மீனவருக்கெதிராக ஒரு `ரவை' கூட சுட்டதில்லையென்றும் கூறுகின்றது.
இந்திய மத்திய அரசும் இலங்கையரசும் இவ்வாறு புலிகளின் மீது பழிபோட முயற்சிக்கையில் தமிழக அரசோ, மீனவர்களின் குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக்குழு நியமிக்குமாறு கோருவது நகைப்புக்கிடமாகவுள்ளது.
தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் பழியை விடுதலைப் புலிகள் மீது போடவேண்டிய தேவை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நிறையவே உள்ளது.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ஆதரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது காலம் புலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாக இருந்தபோதும் தற்போது அது வெளிப்படத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் அண்மையில் இலங்கை கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானப் படை நடத்திய தாக்குதல் தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக தமிழகத்தின் ஊடகங்கள் விடுதலைப் புலிகள் பலம் தொடர்பில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. இவையெல்லாம் மத்திய அரசையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சுற்றியுள்ள எம்.கே.நாராயணன், சிவ்சங்கர்மேனன் போன்றோரையும் சினமூட்டியதன் விளைவே புலிகள் மீது பழிபோடும் இந்த முயற்சி.
தமிழக மீனவர்களை புலிகள்தான் படுகொலை செய்கிறார்களென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழகத்திலே புலிகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவை சீர்குலைக்க மத்திய அரசும் உளவுத் துறையும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றன. அதன் வெளிப்பாடே இந்தியக் கடற்படைத் தளபதியும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் விதமாக வெளியிட்ட கருத்துகளாகும்.
இலங்கையரசைப் பொறுத்தவரையில் புலிகள் மீது பழிபோட வேண்டிய தேவைகள் நிறையவேயுள்ளன. விடுதலைப் புலிகளிடம் உள்ள கடற்புலிகளை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இலங்கைக் கடற்படையினர் உள்ளனர். கடற்புலிகளை வெற்றிகொள்ள வேண்டுமானால் இந்தியக் கடற்படையின் உதவி இலங்கைக்கு இன்றியமையாதது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்தியா சற்று எட்டவே நிற்பதனால் இலங்கைக்கு நேரடியாக உதவ பின்னடித்தது.
இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தில் ஈடுபடுமாறு இலங்கை அரசு பலமுறை இந்தியாவிடம் வற்புறுத்திக் கேட்டபோதும் அதற்கு இந்தியா இணங்கவில்லை. இந்நிலையில் இந்தியாவை வழிக்குக் கொண்டுவர இலங்கை தெரிந்தெடுத்த வழிமுறையே தமிழக மீனவர் படுகொலை.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் தமிழக அரசினூடாக மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழக மீனவர்களை பாதுகாப்பதென்ற போர்வையில் கூட்டு ரோந்திற்கு இந்திய கடற்படையை இணங்கவைப்பதே இலங்கையரசின் நோக்கம். அதேவேளை, தம்மீது தமிழக அரசின் கோபப் பார்வை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே சிவிலுடைகளில் வந்து தமிழக மீனவர்களை தாக்கிவிட்டு விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடும் முயற்சி.
அத்தோடு, புதுடில்லியில் கூடிய சார்க் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் தமக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் நிலைப்பாடுகளை எடுக்க வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இந்த மாநாட்டில் இலங்கை நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. இலங்கை கூட்டு ரோந்திற்கு இந்தியா சம்மதிக்கும் என்ற பெரு நம்பிக்கையிலிருந்த இலங்கையரசு கூட்டுரோந்து தொடர்பில் இந்தியா சாதகமான பதிலை தந்துவிட்டதாக இலங்கையிலுள்ள அரச ஆதரவு ஊடகங்கள் மூலம் பெரிய பிரசாரத்தை முன்னெடுத்தது.
ஆனால், நெய்திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இணங்க வேண்டாமென மத்திய அரசை வலியுறுத்தினார். கருணாநிதியின் இந்த வலியுறுத்தலுக்கு பின்னணியில் மீனவர்களின் வாக்கு வங்கி இருந்ததே தவிர கூட்டு ரோந்தினால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளோ இருக்கவில்லை என்பது வேறு விடயம்.
இலங்கை அரசுடன் கூட்டு ரோந்துக்கு இணங்கும் நிலையிலிருந்த மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியது. இதனால் கூட்டு ரோந்துக்கு தயாரில்லையென தெரிவித்ததுடன் யுத்த மூலம் தீர்வுகாணும் முயற்சியை கைவிட்டுப் பேச்சு மூலம் தீர்வு காண முன்வரவேண்டுமென இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறி அனுப்பியது.
சார்க் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட உறுதி எடுக்கப்பட்டதே தவிர, புலிகளுக்கு எதிராகவோ அல்லது இலங்கை அரசுக்கு சார்பாகவோ எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால், சார்க் மாநாட்டை தமக்கு சார்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்த இலங்கையரசு தோல்வி கண்டது.
சார்க் மாநாடு முடிந்த சில தினங்களிலேயே இலங்கைக் கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. கூட்டு ரோந்து என்ற தமது சூழ்ச்சித் திட்டத்துக்கு இந்திய அரசு இணங்கும்வரை தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளை இலங்கையரசு தொடர்ந்து முன்னெடுக்குமென்பதே உண்மை.
இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு கூறுவதுபோல் தம் மீதான தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதேபோன்றே, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அந்த அமைப்பின் இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் ஆகியோர் இலங்கை, இந்திய அரசுகளின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர். தமிழக மக்களும் தமது உறவுகளென தெரிவித்துள்ள அவர்கள் தம்மை தமிழக மக்களிடமிருந்து வேறுபடுத்தவே இலங்கைக் கடற்படையினர் செய்யும் படுகொலைகளை தம்மீது இலங்கை அரசு சுமத்துவதாக விளக்கியுள்ளனர்.
தமிழகத்தில் தமக்கு அதிகரித்து வரும் ஆதரவினை இழக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இழந்த ஆதரவினை மீண்டும் பெறுவதற்கு புலிகள் பெரும் சிரமப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழகத்தில் தற்போது ஈழப் போராட்டத்திற்கு சார்பாக மீண்டும் ஏற்பட்டுள்ள எழுச்சியை சீரழிக்கும் முயற்சியில் புலிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இந்த எழுச்சியை சீர்குலைக்கும் தேவை இலங்கையரசுக்கும் இந்திய மத்திய அரசுக்குமே அதிகளவில் உண்டு.
தமிழக மீனவர்கள் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித தொடர்புகளுமில்லையென்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கையரசுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை பகடைக்காயாகப் பார்க்கின்றனர். ஆனால், இவர்களின் புலிகள் மீதான பழிப் பிரசாரங்கள் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. இதற்கு இங்கு அதிகரித்து வரும் இலங்கையரசுக்கும் அதன் கடற்படைக்கும் எதிரான தொடர் போராட்டங்களே எடுத்துக்காட்டாகும்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் கொல்லப்பட்ட மீனவர்களின் கிராமங்களுக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, `இலங்கைக் கடற்படையை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென' கூறியமை இந்திய அரசே உண்மை நிலையை உணர்ந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டாகும்.
தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை தமது ஜீவாதாரப் பிரச்சினையை அரசியலாக்காது அன்றாட வாழ்வுக்கு வழியேற்படுத்தி தரவேண்டுமென்பதே ஒரே கோரிக்கையாகும்.
கலைஞன்/thinakkural
Monday, April 16, 2007
Friday, March 30, 2007
தேவையா இது இந்தியாவுக்கு?
திவயின சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ( 28.03.2007)
இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்
இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.
முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து சிறிலங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.
ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.
1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.
2. பிரபாகரனின் தாயகக் கொள்கை
3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)
மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.)
ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.
இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.
அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.
கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.
தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).
இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.
இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்
இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.
முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து சிறிலங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.
ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.
1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.
2. பிரபாகரனின் தாயகக் கொள்கை
3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)
மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.)
ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.
இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.
அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.
கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.
தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).
இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.
Friday, March 23, 2007
''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது''
-மனோகரன்-
சமாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.
அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உள்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.
இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.
ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது
.
இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.
படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.
தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும் சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.
படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.
இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.
இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண்டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி பூர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.
ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.
இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.
படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தமை இங்கே கவனிக்கதக்கது.
மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காண
மறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.
தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.
மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக் கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.
மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறது.
அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும். சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.
இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன.
போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?
முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே நோக்கம்.
இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.
இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயுள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையை செய்வோர் அடக்குமுறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?
நன்றி--ஈழமுரசு
சமாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.
அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உள்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.
இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.
ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது
.
இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.
படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.
தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும் சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.
படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.
இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.
இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண்டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி பூர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.
ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.
இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.
படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தமை இங்கே கவனிக்கதக்கது.
மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காண
மறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.
தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.
மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக் கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.
மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறது.
அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும். சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.
இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன.
போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?
முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே நோக்கம்.
இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.
இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயுள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையை செய்வோர் அடக்குமுறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?
நன்றி--ஈழமுரசு
Labels:
அரசியல்
Thursday, March 22, 2007
Thursday, March 01, 2007
தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......
கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்
பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக
திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு
ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.
தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.
கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;
கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.
அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.
அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.
அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.
தினக்குரல்..
பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக
திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு
ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.
தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.
கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;
கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.
ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.
அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.
அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.
அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.
தினக்குரல்..
Labels:
அரசியல்.
Thursday, February 22, 2007
5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.
5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார் !!!
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.
இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.
சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.
ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.
மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.
இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.
விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.
அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.
இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.
இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.
சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.
ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.
மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.
இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.
விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.
அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.
இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.
Labels:
அரசியல்
Saturday, February 10, 2007
"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"
வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி
லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது
பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று
பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்
எண்டு நம்புகிறேன்.
சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு
பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று
யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.
பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.
வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ரேடியோ கேட்க:-http://www.oruradio.com/
கொசுறு:-
எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை
பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு
பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்
7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து
உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.
ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே
கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய
பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப
ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை
நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்
போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........
Labels:
விமர்சனம்
Subscribe to:
Posts (Atom)