Tuesday, May 29, 2012

ஆப்கானில் பெண்கள் பள்ளியில் விஷவாயு பரப்பி தலிபான்கள் தாக்குதல்: 600 பள்ளிகள் மூடல்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளியில் விஷவாயுவை பரப்பி தலிபான்கள் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
கடந்த 24ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகாணத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை பரவவிட்டனர். இதனால் 3 பள்ளி ஆசிரியைகள் உள்பட 122 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
தற்போது இதே போன்ற ஒரு கொடூரச் செயலை தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். இதே மாகாணத்தில் உள்ள பெண்கள் பயிலும் பள்ளி ஒன்றில் விஷவாயுவை பரவ விட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட 160 மாணவிகளுக்கு மூச்சு திணறலும், மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் தீவிரவாதிகள் தடையாக உள்ளனர். பெண்கள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்து வருகின்றனர்.
அதையும் மீறி அங்கு பெண்கள் கல்வி கற்கின்றனர். எனவே சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தனர். அதை குடித்த மாணவிகள் வாந்தி- மயக்கத்தால் அவதிப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமாகினர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து, சுமார் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



www.

Monday, May 21, 2012

இந்தியாவில் மட்டுமே நடக்கும் - புகைப்படங்கள் -பகுதி 3


இங்கே சில புகைப்படங்கள் தந்திருக்கிறேன் .இந்தியாவுக்கே உரித்தானவை .நகைச்சுவைக்காக மட்டுமே. தரப்பட்டிருக்கிறது.








Saturday, May 12, 2012

இந்தியாவில் மட்டுமே நடக்கும் - புகைப்படங்கள் -பகுதி 2


இங்கே சில புகைப்படங்கள் தந்திருக்கிறேன் .இந்தியாவுக்கே உரித்தானவை .நகைச்சுவைக்காக மட்டுமே. தரப்பட்டிருக்கிறது.








Tuesday, May 01, 2012

அன்றும் இன்றும் -புகைப்படங்கள்


அன்று ---






------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று





Monday, April 30, 2012

இந்தியாவில் மட்டுமே நடக்கும் - புகைப்படங்கள்

சில புகைப்படங்கள் .இந்தியாவுக்கே உரித்தானவை .நகைச்சுவைக்காக மட்டும்.





இன்னும் வரும் .........

Friday, April 27, 2012

செய்தி தளங்களா? ஆபாச செய்தி தளங்களா?

லண்டனை செர்ந்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு தமிழ் செய்தி இணையத்தளம் (அமெரிக்காவின் ஒரு பிரபலமான ஊடகத்தின் பெயரை கொண்டது).கடந்த மாதம் முதல் கனடாவினை சேர்ந்த்த ஒரு தொழிலதிபரால் வாங்கப்பட்டு புதிய
நிர்வாகத்தின் கீழ் என்று சொல்லி புது பொலிவுடன் இயங்கத்தொடங்கியுள்ளது.தொழிலதிபருக்கு சொந்தமானடையின் வினியோக வாகனங்களில் எல்லாம் அந்த இணையத்தளத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள்துடன் பல த்மிழ் ஊடகங்க்ளில் எல்லாம் விளம்பரம் வேறு தடல்புடல்களாக. உண்மையினை அறியஎமது இணையத்தள்த்தினை பாருங்கள் என்று.
.அந்த தொழில் அதிபருக்கு திடீரென ஏன் இப்படி ஒரு சமபந்தமில்லாத துறையில் ஆசை என்று அவருக்கு நெருங்கியவர்களிடம் கேட்டபோது விளம்பரங்கள் மூலம் நிறைய காசு வரும் என்றுயாரோ சொல்லியிருப்பார்கள்போலும் என்றார்கள்.அத்துடன் பழம் தின்று கொட்டை போட்ட இன்னொரு இணையதளத்திற்கு போட்டியாகதானும் நடத்துவதாக சொன்னாராம்.

என்னவாவது செய்யுங்கள் அய்யா.செத்தவீட்டு விளம்பரங்களை யார் அதிகம் பிரசுரித்து யார் அதிக பணம் சம்பாதிப்பதுஎன்பதில் நீங்கள் போட்டிபோடுங்கள்.செய்திகளை யார் முந்தித்தருவது என்பதில் போட்டி போடுங்கள்
ஆனால் அழகியின் மார்பை கடித்த பூனை ,பார்க்க வீடியோ, பதினாலை கற்பழித்த நாற்பத்தியைந்து பார்க்க வீடியோ
இப்படியான செய்திகளை யார் முந்தித தருவது என்பதில்போட்டி போடாதீர்கள். தமிழ் கூறும் செய்தி உலகு நாறிவிடும். இப்பொது மட்டும் என்ன வாழுது என்கிறீர்களா?

இப்போது பார்க்கப் போனால் ப்ல தளங்கள் இப்ப்டியான செய்திகளை தருவதற்கே ஒரு பகுதியை ஒதுக்கிவைத்திருப்பதையும் காணமுடிகிறது.கேட்டால சொல்வார்கள் வாசகர்கள் இதைத்தான் விருமபுகிறார்கள்,அதுதான் நாம் பிரசுரிக்கிறோம் என்று.அப்படியான வாசகர்களுக்காக நீங்கள் ஏன் இப்படியான் ஆபாச செய்திகள்,ஆபாச வீடியோக்கள்,அபாச போட்டோக்கள் கொண்ட ஒரு ஆபாச இணைய தளத்தினை வடிவமைத்துஅவர்களின் ஆபாசமான ஆசைகளை நிறைவேற்றகூடாது. சிந்திப்பீர்களாக.தயவு செய்து மற்றவர்களை
சங்கடப்படுத்தாதீர்கள்.
இங்கு அப்படியான இணையத்தள்ங்கள் நடத்த எந்தவிதமான தடையும் இல்லை. சிறப்பாக செய்யலாமநான் சொல்லுவது உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.


அடுத்து யாரைப்பார்த்து யார் கொப்பி பண்ணுகிறார்கள் என்று தெரியாதவாறு ஒரே செய்திகள்தான் சகல இணையதளங்களிலும் பார்க்க முடிகிறது.
யாரோ சிலர் கஷ்டப்பட்டு பணம் செலவிட்டு செய்தி திரட்ட மற்றவர்கள் நோகாமல் நொங்கு குடிக்கிறார்கள்.அவரின்செய்தியை இவர் போட இவரின் விடையத்தினை அவர் போட மொத்தத்தில் யாரையும் யாரும் குற்றம் சொல்ல
முடியாதவாறு இருக்கீறது நிலமை.

ஆனால் பல் இணையத்தளங்கள்(செய்திதளங்கள்) தனித்தன்மையோடு ,இலாபநோக்கின்றி குறிப்பிட்ட நோக்கம் கருதி சிறப்பாக அன்று முதல் இன்று வரை இயங்கிவ்ருவதனையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

Friday, April 20, 2012

வணக்கம் கராமா? இல்லையா?

மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லைப் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட வரவேற்பு பெயர்ப்பலகை மை ஊற்றி சேதமாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.









மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாநகர ஆணையாளர் சிவநாதன், உதவி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் மீரா ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான அல்காஜ் சுபைர், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்வர், மீரா ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.சபீர் உட்பட பள்ளிவாசல், மட்டக்களப்பு மாநகரசபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




இதன்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பெயர்ப்பலகை இனந்தெரியாத விஷமிகளால் அகற்றப்பட்டு அது மீண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அந்த வரவேற்பு பெயர்ப்பலகை மீது கறுப்பு மை ஊற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் மீண்டும் அதே இடத்தில் புதிய வரவேற்பு பலகை நிறுவுவதெனவும் அதற்கு காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தும் இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், யார் தடுத்தாலும் அவ்விடத்தில் வரவேற்பு பலகை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 30 வருடகாலத்தில் இரு சமூகமும் பல்வேறுபட்ட முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு இன்று ஒரு சிறந்த நிலையினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் அதனை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே நோக்கவேண்டியுள்ளது.

ஒரு சில விசமிகளால் மஞ்சந்தொடுவாய் எல்லையில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்டிருந்த “வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது. வணக்கம் என்ற வார்த்தை கராம் என்று கூறியே அந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது.

என்றாலும் பல இஸ்லாமிய சகோதரர்கள் அது குறித்து ஆதங்கப்பட்டனர். அவ்வாறு வணக்கம் என்றும் சொல்லும் வார்த்தை கராம் இல்லை. இது சில விஷமிகளின் விடயமாக உள்ளது. இதனை ஒரு சமூகத்தின் பெரியவர்கள் என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது என்று என்னிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் காத்தான்குடியில் உள்ள பல்வேறு அமைப்பினருடனும் கதைத்து காத்தான்குடி நகரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்து ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் “வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது” என்ற பெயர்ப்பலகை மீண்டும் நடப்பட்டது.

எனினும் மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் அந்த பெயர்ப்பலகையில் மை ஊற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதானது மிகவும் வருந்தத்தக்க செயலாகவுள்ளது என்றார்.



இது ஒரூ செய்தி இன்னொமொரு செய்தியை பாருங்கள் .

http://www.tamilwin.com/show-RUmqyERUOUhs2.html


இரண்டினையும் பற்றி என்ன நினைக்கிறீர்க ள்?