Tuesday, July 20, 2004

சந்திரிகாவின் கட்சி அங்கீகாரம் ரத்தா?

லங்கையில் தற்போது 51 அரசியல் கட்சிகள் தேர்தல்திணைக்களத்தில் அரசியல் கட்சியாப் பதிவுசெய்துள்ளன.இதில் 25 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்துசெய்வது குறித்து தேர்தல் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து  வருவதாக தெரியவருகிறது.கடந்த இரண்டுக்கும்மேற்பட்ட தேர்தல்களில் பங்கேற்காத 25 கட்சிகளின் அங்கீகாரமேஇரத்து செய்யப்பட உள்ளது.
 
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்இலங்கையின் ஒரு பிரதான கட்சியும்,இப்பொது ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் பிரதான கட்சியுமாகிய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்அங்கீகாரமும் கேள்விக்குறியாகி இருப்பதுதான்.பொது ஜன ஐக்கிய முன்ணணிஎன்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டமைத்து பல தேர்தல்களில் பங்குபற்றியதால் சிறீலங்கா சுதந்திரகட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பலகாலமாயிற்று.
 
அதே போல ஒரு நிலைதான் லங்கா சமசமாஜக் கட்சிக்கும்.அத்துடன் விடுதலைப்புலிகளின்  அரசியல் கட்சியாகிய விடுதலை புலிகள் மக்கள் முன்னணி, பேரியல் அஷ்ரபின் தேசிய ஐக்கியமுன்னணி  போன்றவற்றின் அங்கீகாரமும் இரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
90 களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலை புலிகளால்  விடுதலைப் புலிகள் மக்கள்முன்னணி  என்ற கட்சி உருவாக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தில்அரசியல் கட்சியாக பதியப்பட்டதும்.இதன் தலைவராக மாத்தையாஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments: