Wednesday, June 04, 2025

வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து விடுவித்து காப்பாற்றிய கருணாநிதி

வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து

விடுவித்து காப்பாற்றிய

கருணாநிதி!


- மொழி ஞாயிறு பாவாணர் குற்றஞ்சாட்டி எழுதிய கட்டுரை!

(1970)

====================================

தமிழர்கள் மீது கன்னடர்கள் காட்டும் இனவெறிக் கொள்கை என்பது காவிரி நீர்ச் சிக்கலில் இருந்து தொடங்க வில்லை. 


அதற்கு முன்பே தமிழர் மீதான தாக்குதலை தொடங்கி விட்டார்கள். 1970இல் கருணாநிதி முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றார்.


அப்போது மைசூர் மாநிலத்தில் (1973இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது) கன்னட இனவெறியன் வட்டாள் நாகராசு தமிழ்நாட்டோடு இருந்த தளவாடிப் பகுதியை மைசூரோடு இணைக்கும்படி போராடி வந்தான்.


தமிழ்நாட்டிற்குள் வட்டாள் நாகராசு அத்துமீறி நுழைந்ததோடு தமிழர்கள் மீது வன்முறையை ஏவி விட்டான். அன்றைய கருணாநிதி அரசு வட்டாள் நாகராசு மீது கொலை வழக்கு தொடுத்தது.


மைசூர் மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீல் வேண்டுகோளுக்கும், கன்னட இனவெறியர்களின் அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து வட்டாள் நாகராசுவை கருணாநிதி விடுதலை செய்தார்.


இதுபற்றி மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் "அந்தோ வெங்காலூர்த் தமிழர்படும்பாடு" எனும் தலைப்பில் தென்மொழி ஏட்டில் கட்டுரை எழுதினார்.


அதில் கருணாநிதி அவர்கள் வட்டாள் நாகராசுவை குற்ற வழக்கிலிருந்து விடுவித்து ஒரு மணமகனை அனுப்புவது போல் கர்நாடகத்திற்கு அனுப்பி வைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கடுந்தாக்குதலுக்கு உள்ளான போது கருணாநிதி அரசு அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை என்றும் குற்றஞ் சாட்டினார்.


கருணாநிதி வட்டாள் நாகராசுவை தப்பிக்க விட்டதன் விளைவு இன்றும் வட்டாள் நாகராசு தமிழருக்கு எதிராக திமிரோடு பேசுவதை நிறுத்த வில்லை.


கருணாநிதியால் உருவான காவிரிச் சிக்கலும், அவரால் விடுவிக்கப்பட்ட வட்டாள் நாகராசுவின் தமிழர் மீதான வன்முறையும் இன்றுங்கூட தொடர்ந்தபடிதான் உள்ளது.


அது மட்டுமின்றி, பெ.சுந்தரனார் இயற்றிய "நீராருங் கடலுடுத்த' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கை வைக்கவும் கருணாநிதி தயங்க வில்லை. 


அதிலே உள்ள "கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்று ஒரு வரி இருக்கிறது. அந்த வரியை கன்னடர்களுக்கு பயந்து கொண்டு நீக்கி விட்டார்.


கருணாநிதியின் தமிழர் துரோக வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக அவசியம்.


நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, கருணாநிதியின் துரோகத்தையும், கன்னட மண்ணில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமையையும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தமது தூய தமிழ்நடையால் வெளிப்படுத்திய கட்டுரை

பின்வருமாறு:


அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு!


"தமிழ் நாகரிகத்தின் தனிநாயகத் தன்மையே " யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பொன்னெறி மொழியைத் தோற்றுவித்தது. இந்நெறி மொழிப்படியே , தமிழர் வெங்காலூரில் அண்மைக் காலம் வரை அக மகிழ்ந்து வந்தனர். ஆயின் இன்றோ வரலாற்றறிவும் பண்பாட்டியல்பும் இல்லாத சில கன்னடக் கயவரால் அந்நிலைமை கெட்டுள்ளது.


1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவு ஏற்பட்டதிலிருந்து கடந்த 13 ஆண்டுக்காலமாக , கோவை மாவட்ட க் கோபி வட்டத் தாளவாடிக் கூற்றம் தமிழ்நாட்டின் ஒருபகுதியாக இருந்து வருகின்றது. அதன் குடிவாணர்க்கு வேண்டிய தேவைப் பொருள்களும் வாழ்க்கையேந்துகளும் தரப்பட்டும் ஏற்பாடாகியும் வருகின்றன.


இந்நிலையில், வெங்காலூர்ச் சட்டப் பேரவையைச் சேர்ந்த வாத்தல் நாகராசு என்னும் தான்தோன்றிச் சிறுதலைவர், பெயர் பெறுதற்கும் மறுதேர்தலில் வெற்றியுறுவதற்கும் திட்டமிட்டுக் குறும்புத்தனமாக ஊர் காவலர் தடையுத்தரவை மீறித் தாளவாடி புகுந்து அதைக் கன்னட நாட்டோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்யுமாறு அங்குள்ள கன்னடியரைத் தூண்டி, சட்டப்படி தகைகக்கப்பட்டுச் சிறையிலிடப்பட்டார்.


உடனே அவரைச் சார்ந்த எதிர்க்கட்சியார் மைசூர் நாட்டுச் சட்டப்பேரவையில் துரும்பைத் தூணாக்கிப் பேராரவாரஞ் செய்தனர். இதைத் தூண்டுதலாகவுந் துணையாகவுங் கொண்டு வாத்தல் நாகராசு என்பவரைத் தலைவராகக் கொண்ட கிளர்ச்சிகாரர் ஆயிரவர், வெங்காலூர்ப் பெருந்தெருக்களூடும், ஆவண (கடைத்தெரு) மறுகு (வீதி), வழியாகவும், தங்கள் தலைவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கத்திக்கொண்டு சென்று, கன்னடப் பொதுமக்கள் அங்குள்ள களங்கமற்ற தமிழரைத் தாக்குமாறு ஏவாமல் ஏவினர்.


அதன்விளைவாக, மறுநாளே மதுரையினின்று சுற்றுலாச் சென்ற தமிழ் உழவர் கூட்டம் வெங்காலூரில் கன்னடியரால் வன்மையாகத் தாக்கப்பட்டு, ஊர்காவலர் துணையால் உயிர் தப்பி உடனே கன்னடநாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன்பின் தொடர்ந்து பலநாள் அங்குள்ள தமிழர் கன்னடக் கயவரின் கொள்ளைக்கும் தீவைப்பிற்கும் குத்திற்கும் வெட்டிற்கும் ஆளாயினர்.


திரு வாத்தல் நாகராசு தகைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவரை விடுதவை செய்யுமாறு மைசூர் முதலமைச்சர் திரு வீரேந்திர பட்டீல், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. கருணாநிதியார்க்குத் தொலை வரியடித்தார்.


திரு.கருணாநிதியாரும் வாழ்நாள் தண்டனைக்கேதுவான குற்ற வழக்கை நீக்கித் திரு வாத்தல் நாகராசை மனமகனை அனுப்பி வைப்பது போல் மதிப்பாக இன்னியங்கியிற் கொண்டு போய் அவரில்லஞ் சேர்க்குமாறு, கோவைத் தண்டலாளர்க்கு உடனே உத்தரவிட்டு விட்டார்.


அதன் நிறைவேற்றம் திரு வாத்தல் நாகராசையும் அவரால் ஏவப்பட்ட கன்னடக் குண்டரையும் திருத்துவதற்கு மாறாக, அவர் முன்னிலும் பன்மடங்கு தமிழரை இழிக்கவும் பழிக்கவும் அழிக்கவும் ஒழிக்கவும் தூண்டிவிட்டது.


1970 பிப்ரவரி 4ஆம் நாள் கன்னட நாட்டு முதலமைச்சர் அங்குள்ள தமிழர்க்குக் கன்னடர்க்குப் போன்றே முழுப்பாதுகாப்பும் அளிக்கப் படுமென்றும் , முன்போல் தீங்கு ஒருபோதும் நேராதென்றும் உறுதியளித்தார். ஆயின், அது சொல்லளவின்றிச் செயலளவில்லை. முன்பு வெளிப்படையாக நிகழ்ந்த அட்டூழியங்களெல்லாம் இன்றும், துணையற்ற நிலையிலும் இராக்காலத்தும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


தொலைபேசி நிலைய ஊழியர் இரவில் வேலைக்குச் சென்றாலும் வேலை முடிந்து வீடு திரும்பினாலும் தனித்த நிலையில் கத்திக்குத்து; இராக்காலத்தில் வீட்டில் படுத்திருந்தால் வெளியே தீ வைப்பு; வெளியே படுத்திருந்தால் கத்திக்குத்து; தனிப்பட்ட கடைகளில் இரவும் பகலும் கொள்ளையடிப்பு, திரு பழனி என்பவர் முதலமைச்சர் காப்புறுதி கூறிப் பன்னாட்குப் பின்னரே மண்டையில் வெட்டப்பட்டார். அடியுண்ட பேர், பற்பலர். அவருள் தன்மானமுள்ளவர் தாம் பட்டதை வெளிப்படுத்த வில்லை.


கன்னட நாட்டு முதலமைச்சர் வருகின்ற பொதுத் தேர்தல் விளைவு நோக்கிக் கயவரையுங் குண்டரையும் கட்டுப்படுத்த வியலாத நிலைமையிலிருப்பதாகத் தோன்றுகின்றது.


கன்னடக் கிளர்ச்சியாளர் என்றும், கன்னட சேனை என்றும், கன்னட நாட்டு எல்லைப்புறக் கிளர்ச்சிக் கூட்டம் என்றும், பல்வேறு கன்னட இன மொழி நாட்டு வெறியாளர் அமைப்புகள் இருக்கின்றன. அதனால், இதுவரை கன்னடர் எவருக்கும் எட்டுணைச் சேதமும் விளைந்ததில்லை. ஆயின், தமிழரோ பல்வகையில் அல்லற் பட்டதுடன் , இரவும் பகலும் அமைதியின்றி, அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.


அவருள் பெரும்பாலார் தி.மு.க. கட்சியினராயிருந்தும் , அது நோக்கியேனும் இற்றைத் தமிழ் நாட்டரசு அவர்க்குப் பாதுகாப்பு அளிக்க முன் வரவில்லை.


அண்மையில் வெங்காலூர்த் தமிழ்ச் சங்கக் கட்டடத் திறப்பிற்குச் சென்ற ஒரு பெருந்தமிழர் பேராசிரியரும் இச்செய்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை.


திரு. வாத்தல் நாகராசு தமிழர் சேனையைக் கலைக்குமாறு எச்சரிக்கின்றார். கன்னட சேனை தமிழரை அடங்கி நடக்குமாறு அச்சுறுத்துகின்றது. ஈழத்திலும், கடாரத்திலும், மலையாவிலும் தமிழன் வெளியேற்றப் பட்டதற்கு மேல் வெங்காலூரினின்றும் வெளியேற வேண்டுமோ?


மானங்கெட்ட மழுங்கல் தமிழா! இனியாகிலும் விழித்தெழுந்து இனத்தைக் கா.


-மொழி ஞாயிறு பாவாணர்

(தென்மொழி, சுவடி:7, ஓலை :12 , 1970)

"பாவாணர் பேருரைகள்"

நூலிலிருந்து.


- கதிர் நிலவன் 

Tamilthesiyan.wordpress.com

Sunday, March 23, 2025

கனடாப் பிரதமரும்! கனடாவின் எதிர்காலமும் !

மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு வசனம் ஒன்று எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிட்டு இருப்பேன் .உண்மையில் அமெரிக் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்கும் வரையில் இங்கே கனடாவில் பெருமளவில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த ஆளுங்கட்சியா வரும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லிக்கொண்டுருந்தன .

மற்றும் பிரதமர் ஸ்ரின் ரூடோவின் மீதான அதிருப்தியும் பெருமளவு காரணமாக இருந்தது .ஆனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதியாக பதவியேற்ற பின்பு இந்த கருத்துக்களை கனேடிய மக்கள் மாற்றிக்கொண்டு விட்டர் . இப்போது தற்காலிக கனேடிய பிரதமராக , முன்னாள் பேங்க் ஆப் கனடா கனடாவின் தலைவராக இருந்த மார்க் கானி பதவியேற்று இரு கின்றார் இவரின் தெரிவு பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது .ட்ரம்பை சமாளிக்க கூடிய திறமை இவரிடம் இருப்பதாகவே பல கனடியர்கள் நம்புகின்றனர் என்பதை வெளிப்படையாக தெரிகின்றது.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மார்க் கானி தனது மந்திரி சபையை அறிவித்துள்ளார் இதில் இரு தமிழர்களும் அமைச்சராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் ஒருவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் .அடுத்தவர் ஹரி ஆனந்த சங்கரி இதில் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஒரு ஈழத் தமிழர் இலங்கைக்கு வெளியிலே உயர்ந்த பதவியில் இருப்பது சிங்கப்பூருக்கு பிறகு கனடாவில் தான் என்று நினைக்கின்றேன் .

அடுத்தது கடந்த இரண்டு தவணைகளாக பதவி வகித்த விபரல் கட்சி மீது மக்கள் கொண்டீ ருந்த அதிருப்தி .இதில் ஜஸ்டின் ரூடோ கடைபிடித்த ,குறிப்பாக அதிகளவான குடிவரவாளர்களை அனுமதித்தது, அடுத்தது கார்பன் வரி என்று ஒரு வரி கொண்டு வந்தது .இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வரி மார்க் கானியின் கருவில் உதித்து ரூடோவால் நிறைவேற்றப்பட்டது .இதன் மூலம் பெருமளவு பொருட்களின் விலை அதிகரித்தது .அதிக குடியேறிகள் ,அனைத்துலக மாணவர்களால் பெருமளவு பிரச்சனைகள் இங்கு ஏற்பட் .இவை யாவுமே ஜஸ்ட்டின் ரூடோவின் தலையிலேயே வீழ்ந்தன .

அடுத்தது ட்ரம்பை சமாளிப்பதற்கு மக்களின் தெரிவாக மார்க் காணி இருக்கலாம் .இவர் பாங் ஒவ் கனடாவின் தலைவராக இருந்தவர் ,பாங்க் ஒவ் இங்கிலாந்தின் தலைவராகவும் இருந்தவர் ஒரு சிறந்த பொருளியலாளர் இதன் காராணமாகவே லிபரல் கட்சிக்கான ஆதரவு மீண்டும் அதிகரித்து இருக்கிறது .இருந்தாலும் லிபரல் கட்சிக்கு அடுத்ததாக கன்சர்வேட்டிவ் கட்சி தான் இருக்கின்றது . இவரின் தலைவராக பியர் பொலிவியர் இருக்கிறார் . இருவருமே அரசியலுக்கு புதியவர்கள் .

எப்படியும் சில சில வாரங்களில் தேர்தல் ஒன்று நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மக்களைப் பொறுத்தவரையில் பல விடயங்கள் இன்று பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன .அமெரிக்காவை சமாளிப்பது அடுத்து சரிந்து வருகின்ற கனடிய பொருளாதரத்தை தூக்கி நிறுத்தி பழைய நிலைக்கு கொண்டு வருவது , விலைவாசி அதிகரிப்பு ,அதிக குடிவரவாளர்கள் வருகை ,சர்வதேச மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள் , வேலை வாய்ப்பு,பணவீக்கம் வீட்டு வாடகை உயர்வுகள் ,வீடற்றோர் பிரச்னைகள் .போதிய வீடுகள் இன்மை போன்ற பல பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியுள்ளன .

இவற்றை மார்கானியால் திறம்பட திறம்பட சமாளிக்க முடியும் என்று மக்கள் நம்புவதாக தெரிகின்றது பொதுவாக கனடா படித்தவர்கள் நிறைந்த நாடு எனவே பெரும்பாலான மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சிந்திப்பதில்லை . எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து தான் இங்கே பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன இப்போது ட்ரம்ப் பால் விடப்படுகின்ற பல நெருக்கடிகள் கத்தி போல கனடாவின் தலை மேலே தொங்கிக்கொண்டு கொண்டிருக்கின்றன மார்க் அணியின் முதலாவது விஷயம் கூட அமெரிக்காவை தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல ஒப்பந்தங்களை செய்திருக் கின்றார். அமெரிக்காங்களை உதாசீனம் செய்தாலும் ரோப் பியர்கள்ங்களுக்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவுக்கு சொல்லும் ஒரு உத்தி தான் .இங்கு இன்னொரு விடயம் என்றால் கனடா ஒரு கொமன்வெல்த் நாடு .

எது இருந்தாலும் வெகு விரைவில் நடைபெறும் தேர்தலிலே தெரிவு செய்யப்படுகிறவர் அமெரிக்காவை எதிர்த்து கனடாவை வழிநடத்த வேண்டும் .கனடாவின் 70 வீதமான உற்பத்திகள் அமெரிக்காவுக்கு போகும் நிலையில் வரி விதிப்பு என்பது இரு பகுதியினருக்குலி . கனடாவில் இங்கே பல அங்காடிகளில் இருந்துமெரிக்க பொருட்களை தூக்கி விட் டார்கள்.இருப்பவையும் மக்களால் வாங்கப்படுவதில்லை .மக்கள் கனேடிய தயாரிப்புகளையே பார்த்துப் பார்த்து வாங்குகின்றனர் .வரி விதிப்புக்கள் வரும் நாட்களில் தான் விளைவுகளை உண்டாக்க தொடங்கும் .புதிதாக தெரிவு செய்யப்படும் அரசு என்ன செய்யப்போகிறது இதுதான் மக்கள் முன்னர் உள்ள கேள்வி ?


Saturday, March 08, 2025

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !

 

உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள் .இந்த நாளை ஒட்டி கூகுள் வெளியிட்டு இருக்கும் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்து .இதனையே மேலே காண்கிறீர்கள் .அறிவியல், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான குறியீடுகள் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.


Sunday, March 02, 2025

எலன் மாஸ்க்கும் கனேடிய குடியுரிமையும் !

 



ஈலன் மாஸ்க்கினை தெரியாதவர்கள் இன்றைய காலத்தில் இருக்க மாட் டார்கள் .டெஸ்ல்லா கார்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல ஸ்ரார் லிங் ,ஸ்பேஸ் எக்ஸ் , எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார் .. இவர் டிரம்புக்குடனான அரசியலுக்கு வரும் வரையில் இவர் ஒரு தீவிர வலதுசாரி என்ற விபரம் பலருக்கும் தெரியாத உண்மை ...

தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் இவரின் தாய் கனடாவை சேர்ந்தவர் என்பதால் இவர் கனடாவின் ஒரு பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதாவது அமெரிக்க,கடா நாடுகளின் குடியுரிமையை இவர் வைத்தது இருக்கிறார் .

பிரச்சனை இங்கு எப்படி வந்தது என்றால் ட்ரம்பின் ஆதரவாளராக இவர் செயற்பட தொடங்கிய பின்னர், கடாவை பற்றி விமர்சனம் செய்த பின்னர்தான் கனேடிய மக்கள் கொதித்துழுந்து இருக்கிறார்கள் .

இவரின் கனேடிய குடியுரிமையை பறிக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருதி அண்ணளவாக 250,000 பேர் பாராளுமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள் .பொதுவாக இப்படியான மனுவை பாராளுமன்றம் பரிசீலிக்க 500பேர் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலையில் இங்கு 250,000 பேர் கையொப்பம் இட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .குற்றச்சாட்டுக்களாக 25% வரி விதிப்பு ,கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைக்க திட்டமிடல் ,கனேடிய தேர்தல்களில் பாதிப்பை ஏற்ப்படுத்த முயற்சித்தது போன்றவை இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது ,

இனி பாராளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் ,குடியுரிமை பறிக்கப்பட போகிறதா ? இது தேச துரோக குற்றசாட்டுக்களில் அல்லது தகவல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கும் போதுதான் ஒருவரின் குடியுரிமையை பறிக்க முடியும் .இலகுவாக அவரது குடியுரிமையை பறிக்க முடியாதுன்றேட்வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள் ..

இருந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது ,கீரியும் பாம்புமான ரஸ்யாவும் ,அமெரிக்காவுமே கைகுலுக்கி கொண்டுஇருக்கின்றன.இப்படி ஒரும்பவம் நடக்கும் என்று சில காலங்களுக்கு முன்னால் நினைத்து தான் பார்த்து இருக்க முடியுமா ?

மாற்றம் ஒன்றே மாறாதது




Saturday, February 22, 2025

பார்த்தது ,படித்தது , கேட்டது !

 பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 


Wednesday, February 19, 2025

படித்ததில் பிடித்தது ! நீங்களும் படித்து பாருங்களேன்.

பார்த்தது ,படித்தது , கேட்டது  

திருமண அழைப்பிதழ்களில் மணமகன் பெயருக்கு முன், திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்றெல்லாம் இருப்பதை, பார்த்து இருப்பீர்கள். இதன் அர்த்தம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருவளர்ச்செல்வன், திருவளர்ச்செல்வி என்றால், அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மூத்த மகளின் திருமணத்தை குறிக்கும். திருமணம் நடக்கும் மகன் அல்லது மகளுக்கு, இளையவர்கள் உள்ளதை இது குறிக்கிறது. இதன் மூலம், தங்கள் வீட்டில் இளைய மகன், மகள் உள்ளதால், திருமண வயது நிரம்பினால் தொடர்பு கொள்ளலாம் என்பதை, மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி என்றால், தங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவு பெற்றன. இனிமேல், மணம் முடிக்க மக்கள் இல்லை என்பதை குறிக்கிறது. நம் முன்னோர், எந்த தகவலையும் எவ்வளவு சுருங்கக்கூறி, தெளிவுபடுத்தினர் என்பதற்கு இந்த வார்த்தைகளும் ஓர் உதாரணம்.

நன்றி -தினமலர் 



Tuesday, February 18, 2025

ரொரண்டோ -சற்று முன்னர் !

 ருடம் பிறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எப்படி காலங்கள் நேரங்கள் நாட்கள் விரைவாக பறக்கின்றன என்பதை நினைத்தால் வியப்புதான் வருகின்றது. கடந்த சில தினங்களாக இங்கு ரொரன்டோவில் காலநிலை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல்கள் ரொரண்ரோவை தாக்கி நிறைய பனியை கொட்டி விட்டு சென்றிருக்கிறது , இன்று நண்பரோடு கதைத்தபோது நண்பர் சொன்னார் இப்பொழுதுதான் ரொறொண்டோவை பழைய மாதிரி பார்க்க முடிகிறது

 அவர் சொன்னதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு 8,9 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் இப்படித்தான் பனி கொட்டும். பூமி  வெப்பம் அடைவதன் காரணமாக இப்பொழுதெல்லாம் கொட்டும் பனியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மதியத்துக்கு பின்னர் அமெரிக்கன் டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மினியாபொலிஸ் நகரிலிருந்து ரொறொன்றோ பியர்சன் விமான நிலையத்த்தில் தரையிறங்க முற்பட்ட  நிலையில் கடும் காற்று , பனி காரணமாக தலைகுப்புற கவிண்டதில் சிலர் காயம். எழுபத்துநாலு பயணிகள் நாலு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது விபரங்கள் பின்னர் தான் தெரியவரும்.